விறலி விண்மீன் அதியனவள்
காலை கடன்கள் முடிந்ததும் முதல் வேலையாக செய்தித்தாள் வாசிப்பது அந்த வீட்டின் பெரியவர் நவநீதம் தான்.
அவர் படித்தப் பிறகு தான் மகன்கள் புரட்டுவார்கள்.
ஆனால் நவநீதம் படிப்பதற்கு முன் ஃபோனில் செய்திகளை வாசித்து விடுவார்கள் மகன்கள் இருந்தாலும் தந்தை பார்க்க ஒரு முறை வாசிப்பார்கள்.
பேரப்பிள்ளைகள் செய்திதாள்கள் பக்கம் வருவதில்லை, அவர்கள் ஃபோனிலே படிப்பது நவநீதம் அறிந்தது...
அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த முதல் ஒவ்வொர் முகங்களையும் ஆராய்ந்தார் அன்னம் பாட்டி.
அனைவர் முகமும் பிரகாசமாக இருந்தது, அதில் இருந்து பெண்ணைப் பிடித்து விட்டது என புரிந்தது அவரிற்கு.
அதியனை தேடினார் அவன் மனமிற்கு பிடித்து இருக்கிறதா என தெரிந்துக் கொள்வதற்காக.
அவன் வெளியில் போன் பேசியபடி நின்றான்.
சங்கவியை அழைத்த பாட்டி"அண்ணன் எங்கடா...?"என்று கேட்டார்.
"வெளியில் நிக்குறாங்க பாட்டி"
"பொண்ணு பிடிச்சு...
கார் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டு இருந்தது.
ஸனா அமைதியாக வர, ராணி தான் பேசியப்படியே இருந்தாள்.
"அக்கா! ஆனாலும் அதியன் சாரும் அந்த பொண்ணும் மேட்சே இல்ல தெரியுமா"
"நீ ஏன் ஃபீல் பண்ற...?"
"இல்லக்கா, மூனாவதா வெளியில் இருந்து பார்க்குற நமக்கே இப்பிடி இருக்குனா அவங்க வீட்டில் யாருக்கும் தோணாத, இல்ல அந்த சாருக்கே தெரியலையா..."என்று ஆதங்கப்பட்டாள்...
விருது நிகழ்ச்சியானது ஆரம்பமாகியது.
ஆடலுடன் தொடங்கினார்கள் முதல் நிகழ்ச்சியை.
விருதானது திரைப்படங்களில் வரும் இதர கதாப்பாத்திரங்கள், பாடல்கள், நடனங்கள் என தொடங்கியது.
"அடுத்த கேட்டகரி சொல்வதற்கு முன் அந்த விருதை வழங்க நம் விழாவின் முக்கிய ஸ்பான்ஸரான நவநீ குரூப்ஸின் மேனெஜிங் டேரக்டர் மிஸ்டர் அதியன் நவநீத ராகவனை மேடைக்கு அழைக்கின்றோம்.." என்றார் பெண் தொகுப்பாளர்.
அதியன் எழுந்து மேடையை...
"ஒரு போட்டோவை பார்த்து என்னைய காய்ச்சி எடுத்துட்டாருடா."என்று புலம்பியப் படி கையில் பிடித்திருந்த கண்ணாடி கோப்பையைப் பார்த்தான் அதியன்.
"அடேய்! இது என்ன புதுசா உனக்கு..? விட்டுத் தள்ளு."என்றான் தீரன்.
"ஆமா, என்னமோ புதுசா வாங்கிங்குற மாறி புலம்புறான்."என்ற மாதவன் அடுத்த ரவுண்டை கிளாஸில் ஊற்றினான்.
"இல்லடா, அவள் எல்லாம் ஒரு ஆளுனு அவளுக்கு அவார்ட் கொடுத்துட்டேனு என்னைய...
"அதியா!" என்ற நவநீதத்தின் குரல் ஓங்கி ஒலித்ததில் அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் நின்றனர்.
"தாத்தா! என்ன ஆச்சு....?" என்று அருகில் வந்தான் அதியன்.
கைகளை தூக்கி தடுத்தவர் அவனை தூரமே நிற்க சொல்லாமல் சொன்னார்.
"தாத்தா!" என்றான் அவன் மறுபடியும்.
"அப்பா! என்ன நடந்தது, ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க...?" என்று கேட்டார் சேரர்.
"அதியா! அந்த கிளைன்ட்டுக்கு...
"இல்ல அதியா, நானே கலைக்கப் போயிட்டு உங்க மனசுக்காக திரும்பிட்டேன் அதுக்காக தான் இந்த தண்டனை எனக்கு.. வேணும் எனக்கு.." என்று கண்களில் நீர் பெருகியது.
"மஸ்து! நான் உன் கூட தானே இருக்கேன். நீ இனிமே எதை பத்தியும் கவலைப்படாத.. இது ஒரு இயற்கையான விஷயம்.. யாரும் பொறுப்பில்லை.. அப்படி பொறுப்புனா நான் தான்...
காலையில்'குட் மார்னிங்'என்ற மெசேஜை பார்த்த ஸனா, 'குட் மார்னிங்'என்று பதில் அனுப்பினாள்.
குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிவிட்டால் லவ் வந்துவிடுமா...?என்று எண்ணிக்கொண்டு.
அதியன்"குட் மார்னிங் கமிங் ப்ரம் குட் மார்னிங்"என்று அனுப்பினான் நக்கலுக்காக.
ஸனா"உனக்கு குட் மார்னிங் அனுப்பியதே தப்பு"என்று வாய் விட்டு சொல்லிட்டு, போனை தூக்கிப் போட்டு குளியலறை நோக்கி சென்றாள்.
***
காலை எட்டு மணி.
ஸனா கிளம்பி டைனிங்...
அதியனின் ஃபோன் அடிக்காமல் இருந்ததால் ஸனாவின் சந்தேகம் பொய்யாகியது.
ஆனால் அடுத்த நொடி அதியன் ஃபோனை எடுத்துப் பார்த்தான், போன் சைலன்ட் மோடில் இருந்தது.
ஸனா, அவன் ஃபோனை எடுத்ததும், 'அப்ப இவன் தானா...?'என்ற கேள்வி எழ, ஒரு நொடி அவளிற்கு எந்த உணர்வும் தோன்றவில்லை.
ஆனால் ஃபோனை பார்த்தவன், எடுத்துப் பேசினான்.
ஸனா புருவத்தைச் நெளித்து தன் ஃபோனை...
காலை ஆறு மணியளவில் ஒரு 'குட் மார்னிங்' இரவு பத்து மணியளவில் ஒரு 'குட் நைட்' இது மட்டுமே மிதந்தது தினசரி செல்பேசியில் குறுஞ்செய்தியாக, ஒரு மாதம் கடந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய நிலையில்.
அதியன் மனதில் ஏதோ ஒரு உந்துதலில் தோன்றியது தான் குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணம்.
ஆனால் முதல் ஒரு மாதம் வரை ஸனா,...
"நீங்க எல்லாம் வந்ததே லேட், பேசிக்கிட்டே இருக்காம சீக்கிரம் கிளப்பி விடுங்கம்மா."என்றார் பரமேஸ்வரி.
"ஓகே ஆன்டி! அதான் பியூட்டிசியன் அக்கா முடிச்சு இதோ ரெடியாகிட்டாளே" என்றனர் தோழிகள்.
பரமு மற்ற வேலைகளை கவனிக்க வெளியில் சென்று விட்டார்.
"ஹேய்! என்னடி திடீருனு பொண்ணு பார்க்க வராங்கனு சொல்லிட்ட, நாங்களும் அதிர்ச்சியாகி வந்தால் நீ கேஷ்வலாக புடவைக் கட்டிக் கிளம்பிட்டு...
தினமும் அதியனின் குறுஞ்செய்திகள் தொடர்ந்தது.
ஸனா கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். 'ஒரு மாதம் தானே, என் மனசில் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு போக வேண்டியது தான்'என்ற எண்ணம் தோன்றியதால்.
ஆனால் அதியன் மெசேஜ் தான் அவளை படுத்தியது தினமும்.
ஸனா ரிப்ளே பண்ண வில்லை என்றால் உடனே அதியன் அவளை வம்பிழுப்பான், "என் மேல ஏதோ மேக்னெட் லுக்...
ஸனா அவசர சிகிக்சைப் பிரிவில் இருந்தாள்..
பீவி ஒரு பக்கம் அழுதுக் கொண்டிருக்க, மல்லிகா ஒரு பக்கம் அழுதப் படியிருந்தார்.
அதியன் என்னவென்றே புரியாத நிலையில் தாத்தா அருகில் அமர்ந்திருந்தான்.
வரு வந்த வேகத்தில் யாரிடம் கேட்பது என தெரியாமல் நேராக மகனிடமே சென்று விட்டார்.
"அதியா! என்ன ஆச்சு ஸனாக்கு, எங்க இருக்கா...?" என்று கண்ணீருடன் கேட்டார்.
வகீம் வருவை...
அதியன் நேராக வாஷ் ரூம் சென்று தன்னை நிதானப்படுத்திவிட்டு தாத்தாவின் அறைக்குள் திரும்பினான்.
ஸனா வெளியேறியதை அங்கு பாரி மூலம் அறிந்தார்கள் நவநீதம் மற்றும் பரணி.
அறைக்குள் நுழைந்த அதியன் சாதரணமாக வந்து அமர்ந்தான், சிஸ்டத்தின் முன்.
ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தொடர ஆரம்பித்தான்.
மற்ற மூவருக்குமே கேள்வி இருந்தது ஸனாவின் வருகையைப் பற்றி அறிவதற்காக.
ஆனால் கேட்க தான்...
"உன்னோட விருப்பம் புரியுதும்மா, ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது உன் அம்மா தான்.." என்றார் அவளின் தந்தை.
"அப்பா! அம்மா என் விருப்பதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்கனு நம்பிக்கை இருக்கு, ஆனா நீங்க தான் சொல்லனும் ப்ளீஸ்பா.."
"ம்ம்ம்! ஒரு பெரிய கம்பேனியை ரன் பண்ற பொண்ணு, இப்படி கெஞ்சினா எப்பிடி..? அம்மா பூஜையில் இருக்கா...
வீட்டை விட்டு வெளியில் வந்த அதியன், வகீம் கையை உதறியவாறு நின்றான்.
அதை கண்ட ஸனா"அதியன்!" என்றாள்.
"நோ! ஐ கான்ட் மஸ்து, இது தான் என் வீடு, இங்க உள்ளவங்க தான் என் சொந்தம், வேற யாரும் எனக்கு வேணாம்.. நான் இங்கிருந்து எங்கும் போக மாட்டேன்" என அந்த வீட்டின் படியில் அமர்ந்தான்.
"அதியன்! நானும்...
வீடு அமைதியாக இருந்தது.. தேவி மட்டும் அடுப்படிற்குள் புலம்பிக் கொண்டு நின்றார்.
"என் பையன் இந்த வீட்டில் எடுப்புடியாவே இருப்பானு எல்லாரும் நினைச்சுட்டாங்க போல, ஏன் அந்த மல்லி எனக்கு முன்னாடி பிள்ளையை பெத்துட்டா உசரத்தில் தான் இருக்கனும், நான் அடுத்து இருக்கனுமா...? நான் தான் இந்த வீட்டுக்கு முதலில் வந்தவள்.." என்று தேவி பேசுவதை...
"எங்கடா கூப்புடுற...? நான் எங்கையும் வரல பாரி நீ போ, ப்ளீஸ் என்னைய அலோனா விடு.." என்று அதிகாரமாக ஆரம்பித்து கிட்டதிட்ட கெஞ்சினான்
அதியன்.
"இல்ல! தனியா எல்லாம் விட்டுப் போக முடியாது, இது தாத்தா ஆர்டர் என் கூட வாங்க, ஒரு முக்கியமான விஷயம் வீட்டுக்குப் போகனும்.."
"வீட்டுக்கா..? ஏன் என்ன ஆச்சு..? அம்மா நல்லா இருக்காங்கள..?...
காலைப்பொழுது அதியன், ஸனா இருவருக்கும் அழகாக விடிந்தது..
வாழ்க்கையில் பல போராட்டாங்களுக்கு பிறகு, சென்ற இரவு தான், சுதந்திர மனதோடு பேசி, அன்பை பரிமாறி தங்களை மறந்து உறங்கினர்.
விடிந்து கண் முழித்த ஸனா, அதியன் மார்பில் சாய்ந்து, "அதியா! நேத்து நினைச்சுப் பாத்து இருப்பமா இப்படி ஒன்னா கட்டிப்பிடிச்சு தூங்குவோமுனு...?" என்று கேட்டாள்.
கண்களை திறவாமல்"ம்ம்ம்! ஆனா...
"நீ வரலைனாலும் நான் போய் என் பொண்ணை பாத்துட்டு தான் வருவேன்" என்றார் பீவி, ஸனாவின் அம்மா.
"என்ன பேசுறீங்க...? அவ எவனோ தாலிக் கட்டிட்டானு போலிஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து வச்சு அவன் வீட்டுக்குள் போய் இருக்கா, அங்க போய் நம்மளும் அசிங்கப்படுனுமா, நீங்க போக கூடாது.." என்றான் அவன் அண்ணன் ஸமர்.
"அவ வாழ்க்கைக்காக தானே...