Advertisement

“ஒரு போட்டோவை பார்த்து என்னைய காய்ச்சி எடுத்துட்டாருடா.”என்று புலம்பியப் படி கையில் பிடித்திருந்த கண்ணாடி கோப்பையைப் பார்த்தான் அதியன்.

“அடேய்! இது என்ன புதுசா உனக்கு..? விட்டுத் தள்ளு.”என்றான் தீரன்.

“ஆமா, என்னமோ புதுசா வாங்கிங்குற மாறி புலம்புறான்.”என்ற மாதவன் அடுத்த ரவுண்டை கிளாஸில் ஊற்றினான்.

“இல்லடா, அவள் எல்லாம் ஒரு ஆளுனு அவளுக்கு அவார்ட் கொடுத்துட்டேனு என்னைய காலையிலே டென்சன் பண்ணிட்டார்.”

“யாரு, யாரை டென்சன் பண்ணா…?”என்று கேட்டப்படி வந்தான் அச்சு.

“வரான் பாரு குடும்பஸ்தன், கோட்டா எல்லாம் முடியப் போது.”என்று தீரன் நக்கலடித்தான்.

“ஆமா, இவனுங்க எல்லாம் முன்னாடி வந்து அப்பிடியே முக்கி குடிச்சுட்டாலும். இப்ப பாரு ஐயா ஸ்பீடை.”என்று ஹாயாக அமர்ந்து கிளாஸில் ஊற்றினான்.

அது ஒரு உயர்ரகம் நட்சத்திர ஹோட்டல்.

பிரைவேசியோடு இருக்கும் பார் என்பதால் யாரையும் யாரும் பார்க்க முடியாது.

வந்த ஸ்பீடில் அரை பாட்டிலை காலி செய்தவன், “இவன் என்னடா கிளாஸை கவுக்காம அதையே பாத்துட்டு இருக்கான்.”

“அச்சு! அவனை தாத்தா திட்டிட்டாராம்.” என்றான் நக்கலாக  மாதவன்..

“என்னது திட்டிட்டார…? வாடா போய் அந்த பெருசை நாலுப் போடு போட்டுட்டு வருவோம்”என உளரினான் அச்சு.

அவன் கன்னத்தில் ஒரு அறையை விழுந்தது, வேற யாரு அதியனே தான்.

கன்னத்தில் கைவைத்தப்படியே அச்சு,
“டேய்!  ஏத்துனது எல்லாம் இறங்கிட்டு, ஊத்துடா அடுத்த ரவுண்டை..”என மூளையை பாட்டிலில் செலுத்தினான்.

“அதான் அவன் நல்லா கொடுப்பானு தெரியுமுல, அப்புறம் என்னதுக்கு தாத்தா பத்தி பேசுற…?”என்று சிரித்த தீரனிடம்,

அச்சு”பாவம் பயப்புள்ள, ஃபீலிங்கில் இருக்கேனு ஆறுதலுக்காக சொன்னேன், அதுக்காக அவரை மேல் போய் கைவைப்பேனா நான், தெய்வம் அவரு, நான் கும்பிடும் தெய்வம்”என்றவன் அதியனிடம்”ஆமா தானேடா அதியா..”என்று உளரினான்.

அவன் முறைக்க, ‘இவன் எதுக்குடா தெய்வமுனு சொன்னாலும் முறைக்குறான்..’என்று குழம்பினான் அச்சு.

“நேத்து அந்த ஸனா கிட்ட என் தாத்தா பத்தி என்னடா சொன்ன…? அப்பிடி நக்கல் பண்ணிட்டுப் போறா…?”

“நானா, அவங்க கிட்ட எதுவும் சொல்லலையே..”என்று யோசித்தவன் நினைவு வர, “ஓ! அதான் முறைச்சீயா..? நான் அஜி கிட்ட தான் சொன்னேன்டா நீ ஹீரோ ஆனாலும் வின் பண்ணுவ அந்தளவு டேலன்ட் பெர்சென் ஆனா தாத்தா மேல் பயமுனு. அதை காதில் வாங்கி இருப்பாங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன் தானேடா..”

“என்னைய நக்கலடிக்குறதா, அது மட்டுமில்லை அவ ஒரு நடிகை அவளை காரணம் காட்டி என்னைய தாத்தா திட்டுறார், நான் அப்பிடியே அவள் அழகில் மயங்கி விழுந்துடுவேனு அட்வைஸ் வேற… ஸ்ப்பாப்பா தாங்க முடியல…”

“டேய்! நீ காதலை சொல்லி மயங்கினாலும் அவங்க  ஏத்துக்க மாட்டாங்க, உன் தாத்தாவைப் பயப்புட வேண்டாமுனு சொல்லு.”

“ஏன் மேடம் அல்ரெடி கமிட்டெடா…?”

“அதான் புட்டுகிட்சே. அல்ரெடி ரெண்டுடா மச்சான். இப்ப மூன்றாவதா…?”என  தீரன் கிண்டல் செய்தான் அவளை.

“டேய்! பாவமுடா அந்த பொண்ணு தப்பா பேசாதீங்க…” அச்சு உடனே பதில் அளித்தான்.

மாதவன்”ஏன்டா! நீ கொடுக்குற பில்டப் தான் முடியல, என்னமோ அந்தம்மா ஆம்பளைங்களே பார்க்காத மாதிரி, அதியன் மயங்கினாலும் ஓத்துக்காதுனு சொல்ற…”

“டேய்! எனக்கு அஜி சொன்னது தான். ரெண்டு பெயிலியர் இருக்கு, ஆனா இப்ப  அவங்க ரொம்ப ஸ்டாங்க். அனுபவம் பாடம் கத்துக் கொடுத்துட்டு போலடா. அந்த பொண்ணு எமோஷனலா வீக்கான பெர்சன். சோ அன்பாக பேசினால் ஈஸியா விழுந்துடுது, ஆனா இப்ப வாழ்க்கையில் அடிப்பட்டதில் அதிக தெளிவு வந்துட்டுப் போல. ஸ்டாங்க் ஹார்ட்டா மாறிட்டாங்கனு அஜி சொன்னாள்..”

“ஓ! அப்ப அதியன் நினைச்சாலும் முடியாதுனு சொல்ற..?”என்ற தீரனிடம்,

“அதைதான்டா முன்னாடியும் சொன்னேன். இவன் ஏன் அவங்க கிட்ட விழப் போறான். தாத்தா ஞாபகம் இருந்தால் பய பியூஸ் ஆகிடுவான்.” என்று சிரித்தான் அச்சு.

மற்ற நண்பர்களும் சிரிக்க, அதியனிற்கு கோபம் வந்தது.

“ஓ! அவ்ளோ பெரிய கனவு கன்னியா அவள். பெரிய நடிகைனு திமிர் அவளுக்கு. பணம் இருக்குனா அதை  தேடிப் போவா. இதில் என்ன முக்காடு தனியாக. சும்மா அவளுக்கு கூஜா தூக்காத. அவ ஃபோன் நம்பர் இருக்கா..?”என்றான் அதியன்.

“எதுக்குடா..?”

“இல்ல நீ ஏதோ ரொம்ப டெரர். ஸ்டாங்க்னு சொல்றீயே. எப்பிடினு பாப்போம்.”

“இருக்கு, ஆனா வேணாமுடா அஜி என்னைய தொலைச்சு எடுத்துடுவா.. நீ போதையில் ஏடாக்கூடமா எதுவும் பேசி என்னைய மாட்டி விட்டுடாத ஆளவிடு..”

“பொண்டாட்டிக்கு எப்பிடி பயப்புடுறான் பாரு…”என்று சிரித்தனர் மற்றவர்கள்.

அதியன் மனதில் ஏனோ ஸனாவை ஏதாவது டிஸ்டர்ப் செய்ய வேண்டுமென்று தோன்றியது.

அச்சு போனை எடுத்து, அவனிற்கு தெரியாமல் நம்பரை தன் போனில் சேவ் செய்துக் கொண்டான்.

நண்பர்கள் பலக்கதைகள் பேசி குடித்து முடித்தனர்.

அந்த இடத்தில் படுக்கையைப் போட்டனர் ஓர் அறை எடுத்து.

விடிந்ததும் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டனர்.

அதியன் தாத்தா எழுவதற்கு முன் நல்லப் பிள்ளை போல் வந்து தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அது அன்னம் பாட்டி மட்டுமே அறியும் ஒன்று, மூன்று மருமகளுக்கு தெரிந்தாலும் அவர்களை அடக்கி வைப்பார் அவர். அவன் விருப்பம் இது, இதை போய் மாமனாரிடம் சொல்லக்  கூடாது என்று கட்டளை போட்டு உள்ளார்.

தேவிபிரியாவிற்கு எப்போது போட்டுக் கொடுப்போம் என மனம் துடிக்கும். ஆனால் மாமியாரிடம் பயந்து இருப்பார்.

அதியன் பெரியம்மா தான் தேவி. அவருக்கு தன் பிள்ளை பாரி முதல் இடத்தில் இல்லை என்ற வருத்தம், பொறாமை இருக்கும் மல்லிகா மீது.

அதியன் அம்மா மல்லிகாவிற்கு தன் பையன் மீதான உரிமையை தனக்கு கொடுக்க மாட்டேனுங்குறாங்க, ‘முதல் வாரிசுனு சொல்லி நவநீதமே அதிகாரம் எடுத்துக் கொள்கிறார்’ என்று குறைப்படுவார்.

ஆனால் தன் மகன் தான் முதல் வாரிசு என்ற பெருமை தலையில் இருந்தது.

மூன்றாவது மருமகள் மாலினி தனக்கு ஆண் வாரிசு இல்லாததால் மதிப்பு இல்லை என்ற கோபம், படித்த தன்னை வீட்டில் அடிமையாக வைத்துள்ளார்கள் என்ற எரிச்சல். இதை  தன் கணவனிடம் தான் காட்டுவார்.

ஆக மொத்தம் குடும்பம்  இதோ  அதோ என  பிய்த்துக் கொள்ளும் நிலையில் நிற்கிறது. ஆனால் நவநீதத்தின் ஆர்மி குணத்தால் மட்டுமே ஒரே கோட்டில் நடப்பதுப் போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதியன் தன் அறையினுள் முடங்க, பெண் வாரிசுகளான சங்கவி, சைந்தவி, சாருமதி முன் கூட்டியே எழுந்து காலை உடற்பயிற்சியில் இருந்தனர்.

அதான் வீட்டை சுற்றி கூட்டுவது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்று.

“கவி அக்கா! நம்ம ராகவி, பார்கவி அக்கா எல்லாம் தப்பிச்சுட்டாங்க இல்லை, நமக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைத்தால் நம்மளும் எஸ்கேப் ஆகிடலாம்.” என்றாள் சாரு.

“அடியேய்! போற இடத்தில் இப்பிடியே ஒரு ஹிட்லர் இருந்தால்…?”என்றாள் சங்கவி.

“நான் எல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தான் கழுத்து நீட்டுவேன்..” என்றாள் சைந்து.

“ஆமா! நீங்க  அப்பிடியே இளவரசி, வரிசையாக மாப்பிள்ளைகள் வந்து சுயவரம் நடக்கப் போகுது இதில் வெளிநாட்டு மாப்பிள்ளையை சூஸ் பண்ண போறா. அடியேய், தாத்தா காட்டுற மாப்பிள்ளை தான் கழுத்து நீட்டப் போறோம்..”என்றாள் சங்கவி.

“ம்ம்ம்!  பேசாம ஆம்பளை பிள்ளையா பொறந்து இருக்கலாம்..”என்ற சாரு செடிகளுக்கு தண்ணீரை பாய்ச்சினாள் பைப்பினை ஆட்டிக் கொண்டே.

“ஏன்! எதுக்குனு கேக்குறேன்.? முட்டாள்! நம்ம பெண்களாக இருப்பதால் தான் எஸ்கேப் ஆக முடியும், இல்லனா அதியன் அண்ணா, பாரி அண்ணா மாதிரி மாட்ட வேண்டியது தான்..”என்று சிரித்தாள் சங்கவி..

சைந்து”அட ஆமா! சரி விடுங்க, அடுத்து அதியன் அண்ணா கல்யாணம் தான். தாத்தா ஜாதகத்தை கையில் தூக்கிட்டார். இனி அண்ணி வீட்டிற்கு வரப் போற நேரம் தான் பாக்கி…”

“ஹஹஹ, நம்மளை விடு, அண்ணன்களை விடு, அந்த அண்ணிகள் நிலை…?”என்ற  ஒரு விஷயத்தை நினைவுப் படுத்தினாள் சங்கவி.

“அண்ணிக்கு ஆப்பு தான்.”என்று சிரித்தாள் சாரு.

‘அண்ணி! அட ஆமா, எனக்கு பொண்டாட்டியா வரப் போறவ இந்த வீட்டில் எப்பிடி சமாளிப்பாள்..’என இதுவரை தங்கச்சிகள் பேசினதை கேட்ட அதியன் மனதில் யோசனை சென்றது.

அவன் அறைப் பக்கத்தில் தான் அவர்கள் நின்றுப் பேசியது.

சங்கவி கடைசி வருடம் காலேஜ். சைந்வி, சாருமதி இரு வருட வித்தியாசத்தில் காலேஜ் என படிக்கிறார்கள் அவன் தங்கைகள்.

அதியனின் யோசனைப் போய் நின்றது ஸனா முகத்தில்.

‘அடச்சே இவள் ஏன் இடையில் வராள்..?’என்று ரிங் வந்த போனை எடுத்தான்.

பேசி முடித்து வைத்தவனிற்கு இரவு அச்சு ஃபோனில் இருந்த எடுத்த ஸனா நம்பர் நினைவு வந்தது.

‘என்னமோ அவளை கரெக்ட் பண்ண முடியாதுனு சொல்றான் அந்த அச்சு அவ்ளோ பெரிய அழகியா அவள்.. ஏன் என்னால முடியாத…?’என்றான் தன் மனமிடம்..

‘முடியும் ஆனா உன் தாத்தா…?’

‘அவளை என்னைய திரும்பி பார்க்க வச்சு, ஏங்க வச்சுட்டு என்னால முடியுமுனு காட்டினால் போதுமுடா. தாத்தாக்கு என்ன தெரியப் போது.’

‘அடேய்! நீ ஒரு அவார்ட் கொடுத்ததுக்கே பேப்பரின் முதல் பக்கம் போட்டுடானுங்க, அவளை நீ நேரில் சந்திச்ச முடிஞ்சுப் போச்சு சோலி. அவள சுத்தி கேமரா தான். எங்குட்டுப் போனாலும் படம் புடிச்சுடும். அப்புறம் உனக்கு நவநீதத்திடம் சங்கு தான்..’என்று சிரித்தது மனம்.

‘ஓ! நடிகைல, நேரில் போனா நானே வழியக்கப் போய் சனியனை பனியனில் போடுற எபெக்ட் தான். எப்பிடி ஆனா நான் அவளை திரும்பி பாக்க வைக்கனுமே…’

‘அவள் என்னடா பண்ணாள், அவளை ஏன் நோண்டுற…?’

‘ம்ம்ம்! நேத்து நக்கல் அடிச்சாளே, தாத்தா வேற அவள் பெரிய ரதினு அவள் கிட்ட மயங்கிடப் போறேனு அலார்ட் பண்ணுறார். இந்த அச்சு சொல்றான், அவள் முன்னாடி பனியில் நனைந்தாளாம் இப்ப நெருப்பாமே..? சும்மா தொட்டுப் பார்க்க ஆசையா இருக்கு பத்திப்போமானு பாக்க தான்…’என்று நக்கலாக சிரித்தான்.

‘உனக்கும் தங்கச்சி இருக்காங்க..’

‘என் தங்கச்சிங்க  ஒன்னும் நடிகை எல்லாம் இல்லை. அவளுக்கு என்ன காதல் எல்லாம் கத்திரிக்காய் மாறி தானே முத்தினா சந்தைக்கு வரும். எத்தனை காதல் அதில் என் காதலும் கணக்கில் சேரட்டும்’ என சில ஆண் வர்க்க சிந்தனையில் யோசித்தான்.

நடிகை தானே அட்ஜெஸ்ட்மென்ட் வாழ்க்கை புதிதா என்ன…?

இப்ப என்ன தான்டா சொல்ல வர…? எனக் கேட்டது மனம்.

‘ஹஹஹஹ! அது பாயிண்ட், லவ் பண்ண போறேன் மிஸ் ஸனா மஸ்தூராவை. ஆனா நான் யாருனு தெரியாமல்.. என் காதலில் விழ வைத்து, பிறகு நேரில் போய் காதல் பண்ணுவோம். அப்புறம் என் கிட்ட மயங்கிட்டானு பெருமையா சொல்வேன்…’

மேலும்’அப்புறம் முடிஞ்சுட்டு, ஸனா மூன்றாவது தோல்வி அது நான் என்று வெளியில் தெரியக் கூடாது ஆனா தெரியனும். ஸனா தான் காதலில் விழுந்தாள்,  தி கிரேட் அதியன் நவநீத ராகவன் விழ வில்லைனு.’

உடனே அடுத்த களத்தில் குதித்தான்.

அவனிடம் ஒரு வாட்ஸ் ஆப் இருந்தது, அதாவது பழைய நம்பர் இப்போது உபயோகமில்லை, ஒன்லி வாட்ஸ் ஆப். அது அவன் பயன்படுத்தாதது. வை பை இருந்தால் போதும்.

ஸனா போட்டோவை வைத்தான் அந்த நம்பர் வாட்ஸ் ஆப்க்கு. அவளுக்கு மட்டுமான உபயோகமில்லாத நம்பர் அது. இப்ப அந்த நம்பருக்கு கால் பண்ணினால் வேறு யாரோ எடுப்பர். அந்த நம்பரில் இருந்து,

“Hi” என்ற ஒரு மெசேஜை தட்டி விட்டு,

அதற்கு பதில் வருமா..? எனக் காத்திருந்தான்.

புளு டிக் வந்தது.

ஆனால் ரிப்ளே இல்லை.

அதியன் மனம் ஆர்வமானது.

‘வாவ்! இன்டர்ஸ்டிங்…’ என்றாலும்அதோடு நிறுத்தினான்.

ஸனா அந்த மெசேஜைப் பார்த்து விட்டு கண்டுக்கொள்ளவில்லை.

யாரோ ஃபேனாக இருக்கும், அவளோட ப்ரொபைல் பிக்சர் வேறு உள்ளது என எண்ணினாள்.

அவள் புகைப்படம் எடுப்பது கஷ்டமா…?

ஸனாவிற்கு  ஒரு சந்தேகம். தன் பெர்சனல் நம்பர் எப்பிடி தெரியும்….? ஓகே ஹாய் மெசேஜ் தானே என லூஸில் விட்டாள்.

***

ஸனா ஷூட்டிங்கில் பிஸியாக, மெசேஜை மறந்தேப் போனாள்.

இரவு “குட் நைட்” என வந்தது.

அதையும் லூஸில் விட்டாள்.

இது தொடர்ந்தது எப்பிடி….? வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல்.

காலையில் குட் மார்னிங், இரவில் குட் நைட், இது மட்டுமே வந்தது.

ஸனாவிற்கு அந்த மெசேஜை தவறாக எடுத்துக்கொள்ள தோன்றவில்லை. வார்த்தைகள் இன்றி மெசேஜ் வருவதால் ஏனோ அது ஸ்வீட் ரிலாக்ஸ் டைம்மாக இருந்தது.

ஒரு மாதம் தொடர்ந்தது இப்பிடியே.

ஸனா நினைத்தால் ஆராயலாம் ஆனால் அவள் தொல்லை இல்லாததால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதியனும் அது தெரிந்து தான் மெதுவாக ஆரம்பித்தது செய்தி அனுப்பு வேலையை.

அதியனிற்கு அது பழகியது குறுஞ்செய்திஅனுப்புவது. ஸனாவிற்கும் அது பழகியது குறுஞ்செய்தியை பார்ப்பது.

விளைவு யாருக்கோ..? இல்லை இருவருக்குமா….? தெரியவில்லை, விதி மட்டுமே அறியும்.?

விறலி அடுத்து….

Advertisement