Advertisement

பணம் இருந்தால் கடவுளே காத்திருப்பார் போல், ஆனால் அவரை காக்க வைத்து சோதிக்காமல் நவநீதம் குடும்பத்தோடு கோவிலிற்குள் சென்றார்.

ஏற்கனவே சொல்லி இருந்தமையால் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவும் சாமிக்கு அபிஷேகம் துவங்கியது.

அதியன் பெயரில் தான் இன்று பூஜை நடைப்பெறவுள்ளது.

பணத்தின் அளவிற்கு ஏற்றவாறு பூஜை நடைப்பெறுவது இப்போது வழக்கத்தில் உள்ளது என்பதினை மறுக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது என்பது போல் சூழ்நிலைகள் நகர்கிறது.

பூஜை இனிதாக முடிந்து, அதியனிற்கு மாலை அணிவித்தார்கள், அவனோ விசேஷப் பூஜையில் தத்தளித்தான்.

வெளியில் வந்து கோவிலை சுற்றி வந்தார்கள்.

நவநீதத்திற்கு நாற்காலிப் போடப்பட்டது, பெண்கள் சென்று தூரமாக தரையில் அமர்ந்தார்கள்.

ஆண்கள் ஒரு பக்கம் சென்று அமர்ந்தார்கள்.

வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில், மூன்றாவது மருமகள் மாலினியின் உறவினர் ஒருவர் குடும்பத்தோடு வந்திருந்தார்.

அவர்களிடம் பேசிய மாலினி, உறவினர்களை அழைத்துச்சென்று மாமனாரிடம் அறிமுகப்படுத்தினார்.

நவநீதம் அவர்களிடம் நலம் விசாரிக்க, அவரின் பெண் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், இன்று அவளுக்கு பிறந்த நாள் என்று கூறினார் மாலினி உறவினர்.

“தர்ஷினி! தாத்தா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க”என்றார் தந்தை.

அந்த பெண் காலில் விழ வரவும், “இருக்கட்டும், வாழ்த்துக்கள்”என நவநீதம் தடுத்தார்.

அவருக்கோ அந்த பெண்ணின் உடை சுத்தமாக பிடிக்கவில்லை.

அவ்வளவு மோசம் இல்லை, சுடிதார் தான் ஆனால் கை இல்லாத மேலங்கி, துப்பட்டா போடவில்லை.

அது அவருக்கு பிடிக்கவில்லை.

சைந்தவி”தர்ஸ்! அதியன் அண்ணனுக்கும் இன்னைக்கு தான் பர்த்டே…”என்றாள்.

“ஓ! இஸ் இட், ஹேப்பி பர்த்டே அதி” என்று கை நீட்டியவள், அவனை ஒரு ஹக் செய்தாள்.

அதை பார்த்தவர்கள் நவநீதத்தைப் பார்க்க, அவரோ பெண்ணின் தந்தையிடம் சொல்லியவாறு, இடத்தில் இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்.

அதியன்”தேங்க்ஸ்”என்று கூறிவிட்டு, தாத்தா பின்னால் நடந்தான்..

அவளோ”என்னம்மா! இந்த பையன் இவ்வளோ ஓல்டு மாடலா இருக்கான்…” என்றாள்..

“தர்ஸ்! இவங்க சாதரண ஆட்கள் இல்லை. Navanee silks, navanee garments, navanee readymades, navanee jewels, navanee marriage halls in one place, இது எல்லாத்துக்கும் சொந்தகாரர்.”

“ஓ!”

“என்ன ஓ! அந்த பையனுக்கு தான் உன்னைய பேசலாமுனு நினைக்குறோம். அதுக்கு தான் மாலினி இந்த நேரத்திற்கு எங்களை வர சொன்னது. அவரு வீட்டுக்குப் போய் பேசுவது எல்லாம் நடக்காது.”

“அந்த பையனா…? அப்டேட் ஆகாத மாறி இருக்கான்.”

“அவங்க ட்ரஸிங் வச்சு எடைப் போடாத. பையன் எம் பி ஏ, லண்டனில் படிச்சு இருக்கார். இங்க எல்லா பிஸ்னஸிலும் அவரு தான் ஹெட். நவநீத ஐயாவுக்கு அப்புறம். அவரு பசங்க ஆளுக்கொரு பிஸ்னஸ் பார்த்தாலும் அதியன் தான் நிர்வாகத்திற்கு ஹெட். ஆனால் தாத்தா பேச்சு கேட்பவர்”என்றார் அவளின் தந்தை.

“ம்ம்ம்! இருந்தாலும் எனக்கு அவரோட தாத்தா பார்த்தால் சரிவராதுனு தோணுது. ஹி இஸ் டிப்பெண்ட் இன் பேமிலி.. திஸ் மச் பேமிலி, எனக்கு செட் ஆகாதுப்பா.”

“நல்லா சொல்லு, உங்க அப்பா தான் பெரிய இடம், பணக்காரக் குடும்பமுனு சொல்றார், ஆனா மாலினி போய் மாட்டிட்டு முழிக்குறா, நம்ம பக்கம் ஏதாவது விசேஷமுனா உடனே வர முடியாது. நீயும் ஒரே பொண்ணு எங்களுக்கு, எப்பிடி இது பொருந்தும் எனக்கு புடிக்கல.”என்றார் தர்ஷினி தாயார்..

“சரி வாங்க போகலாம், அம்மாவும், பொண்ணும் நான் சொல்றதை எங்க கேக்கப் போறீங்க”

*** ***

“ஸனா! பார்லரில் இருந்து ஆள் வந்தாச்சு..”என்றாள் அஜிதா.

“வெயிட்! நான் போன் பேசிட்டு வரேன்” என தன் தாயிடம் பேசியவள், “ஓகே! டிரான்ஸ்பர் பண்றேன்”என்று போனை வைத்தாள்.

தன் ஒப்பனை அறைக்குள் வந்தவள், “அஜி! அம்மா அக்கவுண்ட்க்கு அமௌண்ட் டிரான்ஸ்பர் பண்ணனும்.”

“எவ்வளவு ஸனா…?”

“1சி”

“இவ்வளவு எதுக்கு..?”

“தேவைப்படுது, நீ அனுப்பி விடு பிறகு சொல்றேன்.”

“ம்ம்ம்!”

“மே ஐ கம் இன்..?”

“எஸ்! கம் இன் மை குயின்.”

“ஸனா அக்கா! என் பேரு ராணி, ஆனா இது என்ன பேருனு தோணும் ஏனா நான் வாழுறது அப்பிடியில்லைல. நீங்க என்னைய குயின் சொல்லும் போது, ஒரு மாதிரி கெத்தா இருக்கு” என்று சிரித்தாள் அந்த குயின்.

“ஹஹஹ! பொறக்கும் போது ராணியா பொறக்கலனா, வாழும் போது ராணியாக வாழ்ந்துக்கனும்”என்றாள் ஸனா.

“அதுக்கு உங்களை மாதிரி அழகா பொறக்கனும் அக்கா”என்ற ராணி தன் பார்லர் பொருட்களை எடுத்து அடுக்கி வைத்தாள்.

“நீ ஒருத்தி போதும், இவளுக்கு ரசிகையாக”என்றாள் அஜி.

“அப்புறம் இல்லையா அஜி அக்கா, நான் தான் முதல் ரசிகை அக்காக்கு. சங்கமே உருவாக்கிடுவேன், ஆனா அப்புறம் நம்ம இப்பிடி பேசிக்க முடியாதுல, நான் பிஸியாகிட்டேனா…”என்றவளை பார்த்த ஸனா, அஜி இருவருமே சிரித்தனர்.

உண்மையை சொல்லனும் என்றால் நடிகைகளின் அந்தரங்களை அறிந்தவர்கள் இந்த மாதிரி ஒப்பனையாளர்களோ, கார் ஓட்டுநர்களோ, சமையல்காரர்களோ, உடன் இருக்கும் பி ஏ போன்றவர்கள் தான்.

“ஸனா! சொல்ல முடியாது இவளே நாளைக்கு உனக்கு போட்டி ஹீரோயினா வந்தாலும் வந்துடுவா..?”

“அஜி! வந்தா ஹேப்பி தான் எனக்கு. குயின் கிட்ட இப்பவே ஒரு கால்ஷீட் போட்டு வை. பின்னாடி யூஸ் ஆகும்..” என்று சிரித்தாள் ஸனா..

“அக்கா! கிண்டல் பண்ணாதீங்க.. ஆமா! என்ன ஸ்பெஷல் மேக் அப். என்ன பங்ஷன் அக்கா.?”

ராணி பார்லர் கோர்ட்ஸ் முடித்தவள், ப்ரொப்ஷனலாக…

அதற்கு காரணம் ஸனா தான். தனக்கு டச் அப் பெண்ணாக வந்தவளுக்கு அதிக ஆர்வம் இருந்ததால், அவளை நல்ல கோர்ஸ் சேர்த்து படிக்க வைத்தாள்..

ராணி ஏழ்மை வீட்டில் பிறந்து இருந்தாலும், அவளை நேர்த்தி செய்துக் கொள்வதில் கவனமாக இருப்பாள்.

ஆடம்பரமாக இருக்காது, ஆனால் சாதரணமாக அழகாக தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

அது ஏனோ ஸனாவிற்கு பிடித்துப் போனதால், அவார்ட் பங்ஷன், முக்கிய திருமணங்கள், படத்தின் முக்கிய மீட் என அனைத்திற்கும் ராணியே வீட்டில் வந்து அலங்காரம் செய்து விடுவாள்.

ராணிற்கு தனியாக பார்லரும் வைத்துக் கொடுத்து இருகின்றாள் ஸனா.

ஆனால் ராணி பாவம் காதலித்து கல்யாணம் செய்தவன் குடிப்போதைக்கு அடிமையானவன். ஒரு பெண் குழந்தை வேறு இருக்கிறாள்.

ராணி புருசன் குடிக்காரனாக இருந்தாலும் அவள் மீது பாசம் வைத்திருப்பவன். அதனால் அவனை விட முடியவில்லை அவளால்.

இது அனைத்தும் தெரிந்து இருந்தாலும் ஸனா கண்டுக்கொள்ள மாட்டாள். அவளின் வேலைத் திறனிற்கு ஏற்ற ஊதியத்தைக் கொடுத்து உதவுவாள்.

ராணியும் ஸனா மனதிற்கு ஏற்ற மாதிரி நடந்துக் கொள்வாள். அவள் வாழ்க்கை சுய உழைப்பில் இருப்பதற்கு ஸனா தான் காரணம்..

“ராணி! ஸனாக்கு நாளைக்கு ஒரு அவார்ட் பங்ஷன் இருக்கு.. பெஸ்ட் ஹீரோயின் கேட்டகரி.”

“ஓ! அக்கா, அந்த ஹீரோயின் சப்ஜெட் மூவிக்கா..? சூப்பர் அக்கா. கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கனும். ஆமா என்ன ட்ரஸ் புடவையா, காலையில் சீக்கிரம் வந்துடுறேன். இப்ப மத்தது எல்லாம் முடிச்சுடலாம்”என்று அவளே அடுக்கினாள்.

“குயின்! பொறுமையா ஸ்டார்ட் பண்ணு, டைம் நிறைய இருக்கு. நாளைக்கு ஈவ்னிங் தான் ப்ரோகிராம்.”

“ஸனா! ஒரு படத்துக்கு கால்ஷீட் கேட்டு இருக்காங்க.”

“யாரு டைரக்டர் அஜி….? ஹீரோ செலக்டா..? ஸ்டோரி கேட்டுட்டீயா…?”

“ம்ம்ம்! ஸ்டோரி உனக்கு அனுப்பிட்டேன்.. ரீட் பண்ணு. ஆனா ஹீரோ….?”

“யாரு…?”

“அந்த நிவாஸ் தான்”

“ஓ! நோ ப்ராப்ளம் ஸ்டோரி ஓகேனா வில் ஆக்ட் அஜி.”

“ம்ம்ம்! ஒன்ஸ் டிசைடு பண்ணு. நாட் அர்ஜென்ட்.”

அஜிதா ஸனாவின் அனைத்து காலக்கட்டதிலும் கூடவே இல்லாதவள்.

ஆனால் கூட வந்த நாள் முதல் அனுமன் போன்றவள் ஸனாவிற்கு.

“அந்த நடிகர் கூட எல்லாம் வேணா அக்கா..”என்று ஸனாவின் கால்களை தூக்கி கீழ் இருந்த ரோஸ் ஹாட் வாட்டரில் வைத்தாள் ராணி.

“ஏன் ராணி..?”

“அவர் கூட உங்க பேரே கெட்டுப் போகும். படம் ஓடுதோ இல்லையோ உங்க ஜோடியை தான் பேசுவாங்க.”

“ஹஹஹ! அப்பிடி தான் இருந்தது ஒரு காலத்தில். வரிசையாக படம் ஒன்னா நடிச்சதால் பெர்பெக்ட் மேட்ஜ் கப்புல் ஆனோம். பதினெட்டு வயதில் அது போதையானது, காதல் என்று தோன்றியது. ஆனா அது ஒரு ஈர்ப்புனு புரிஞ்சப்ப விலகினேன். ஆனா அது முதல் அடி.”என்று கண்களை மூடினாள்.

ராணி அஜியைப் பார்த்தாள்.

“அக்கா! உங்களுக்குனு  ஒருத்தன் இனிமேலா பொறக்கப் போறான் வருவான் அக்கா.”என்றாள்.

“எஸ் ஸனா.”என்றாள் அஜி.

“ச்சே! அந்த ஆசை எல்லாம் எனக்கு இல்லை அஜி. முதல் தோல்வியில் ஆறுதல் படுத்த வந்தவர் பிள்ளைகளுக்கு அப்பா என தெரிந்தும் பழகியது என் தப்பு. முழுசா என் தப்பு. நான் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்து இருக்கனும். யோசித்தப் போது நான் சுத்தமா எரிஞ்சுட்டேன் மக்கள் மத்தியில். இரண்டாவது தோல்வி”

“ஹேய்! எதுக்கு இப்போ பழசு எல்லாம் விடு..”

“ஆமா அக்கா! வேணா பாருங்க, உங்க வாழ்க்கைக்கு அர்த்தம் இனிமே தான் கிடைக்கப் போது.”

“ஹஹஹஹ!” என சிரித்தவள். “அர்த்தமா, இங்க எல்லாரும் ஸனாவை மஸ்தூரானு பாக்கவே இல்லை அப்புறம் நான் யாரு கூடவும் அட்ஜெஸ்ட் மென்ட் செய்ததில்லை ஆனா விரும்பி என்னை கொடுத்திருக்கேன். காரணம் ஒரு பொண்ணா எனக்கு உணர்வு இருந்தது அது காதலுனு  நினைத்தது தான் தப்பு.”

“அக்கா! அட்ஜெஸ்ட்மென்ட் செய்றாங்க தானே இந்த துறையில். விரும்பி, விரும்பாம.?”

“ஆமா கண்டிப்பா, ஆனா நான் ஒரு வேளை சான்ஸ்க்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி இருந்தா, ஒரு ஐந்து படம் பண்ணி இருப்பேன் ஐந்துப் பேரோடு அட்ஜெஸ்ட் பண்ணி. ஆனா அந்த ஐந்து படமும் ஓடினா தான் எனக்கு அடுத்த வாய்ப்பு, அதாவது அட்ஜெஸ்ட்மென்டுக்கே வாய்ப்பு, ராசி இல்லாத நடிகைனு பேர் ஆகி, பப்ளிக் பார்க் ஆகிருப்பேன்.”

“ஆனா நான் என்னோட திறமையை நம்பி, முடிந்தளவு டெடிகேஷனைக் கொடுத்தேன். இப்ப நம்பர் ஒன் நடிகை இடம். இப்ப என் கிட்ட அட்ஜெஸ்ட்மென்ட் வார்த்தையே இல்லை ஏனா ஹீரோவே இல்லாம என்னால் படம் பண்ண முடியுமுனு ப்ரூவ் பண்ணிட்டேன்.” என்றாள் பெருமையாக.

ராணி, அஜியும் அவளைப் பார்த்து சிரித்தனர்.

“நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன் ஆனால் வாழ்க்கையில் தோற்ற உணர்வு இருக்கு”என்றாள்.

“அக்கா! இதுவும் மாறும், ஆமா நாளைக்கு என்ன கலர் சாரி, எந்த நெயில் பாலிஷ் போடட்டும்..”என்று பேச்சை மாற்றினாள் ராணி.

“அஜி! என்ன கலர்.?”

“ம்ம்ம்! எல்லோ நெட் சாரி, ப்ளாக் ஸ்லீவ் ப்ளவுஸ்.”

“ஓ! அப்ப இது ஓகே வா அக்கா..?”என்று  சில க்யூட்ஷை காட்டினாள்.

“ம்ம்ம்! இது ஓகே குயின்”என்றவள், அப்போது தான் ராணியின் முகத்தில், கழுத்தில் இருந்த சில காயங்களைப் பார்த்தாள்.

“ஹேய் குயின் என்ன ஆச்சு…? காயம் இவ்ளோ இருக்கு.”

“நானே எப்பயும் இல்லாம இன்னைக்கு அதிகமாக பவுண்டேசன் கொடுத்தும் தெரியுதா..? எல்லாம் என் புருசன் வேலை தான். குடிச்சுட்டாப் போதை ஏறிப் போயிடுது, போட்டு புரண்டி எடுத்துட்டான். நானும் மெதுவாடானு சொன்னாலும் அது எல்லாம் காதில் விழலை..”என்று அழுத்தினாள் வார்த்தையை.

ஸனா”ஓ! உனக்கு விருப்பமில்லையா…?”என்று கேட்டாள்.

“இல்லாமயா ஒரு பொண்ணைப் பெத்தேன் அவன் கூடப் படுத்து. ஆனா எனக்கும் தோணனுமுல அக்கா. உடம்பு அசதி வேற.”

இரு கால்களின் விரல்களை முடித்தவள், கைகளை எடுத்து தொடங்கினாள் மெருகூட்டுவதற்கு.

“லைசென்ஸோடு புடிக்காத உடலுறவை வைத்துக்  கொண்டால் தப்பில்லை. அதாவது தாலி, கல்யாணம் என்ற லைசென்ஸ். ஆனால் மனசுக்குப் புடிச்சு
தாலி இல்லாமல் உடலுறவுக் கொண்டால் அது கற்புக்கே வந்த கேடு. இல்லையா..?”

அஜி”அதுக்காக கல்யாணமே செய்யாமல் மனசுக்குப் புடிச்சு செக்ஸ் வச்சுட்டு ஹேப்பியா இருக்க சொல்றீயா…? அப்புறம் சமூகத்தில் ஒரு முடிவே இல்லாமல், உறவுகள் யாருனு தெரியாம போயிடும் ஸனா…”என்றாள்.

“ச்சே! ச்சே! நான் அப்பிடி சொல்லலை லைசென்ஸ் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொண்டால் கற்பு இல்லாதவள், அதுவே லைசென்ஸோடு புடிக்கலனாலும் உடல் உறவில் இருந்தால் அதுக்கு பேரு பத்தினி. கற்பு என்பது வெறும் ஸ்பெர்மை கருப்பையில் செலுத்தும் செயலில் இல்லைனு சொல்றேன்..”என்றாள் ஸனா.

“அக்கா! அந்த செக்ஸ் வாழ்க்கையில் இப்ப எல்லாம் ஆணுறை, காப்பர் டி இருப்பதால் உடலுறவில் தேவை இல்லாததை தடுக்கும். அப்ப அப்பிடி யூஸ் பண்ணிகிட்டால் கற்பு பாதிக்காதுல.”என்று சிரித்தாள் ராணி.

“மிகச்சரி ராணியாரே!”என்று சிரித்தாள் ஸனா.

“ஏன் ராணி! உன் வீட்டுக்காரரை உனக்குப் புடிக்குமா இல்லையா..?” என்று கேட்டாள் அஜி.

“புடிக்காமயா. ஆனா தண்ணி அடிச்சுட்டு வந்தால் தான் வெறுக்குது.”

“அப்ப தண்ணியே அடிக்காம உன் புருசன் மாதிரி வேறொருத்தன் அழகா வந்தா, உன் படுக்கையை பகிர்ந்திருப்பியா…?”என்று கேட்டாள் அஜி.

“அய்யோ அக்கா! என்ன சொல்றீங்க..? அவரு தண்ணி அடிக்குறது மட்டும் தான் புடிக்காது. மத்தப்படி அவரை ரொம்ப புடிக்கும். இன்னொருத்தன் கூடயா ச்செ! என்னால முடியாது அக்கா…”என்றாள் உண்மையான பதற்றதோடு.

“பாரு ஸனா! இதான் உண்மை. கற்பு என்ற வார்த்தை வெறும் உடலுறவில் மட்டும் பெண்களை சாடுவது இல்லை, இந்த மாதிரி நம்பிக்கையில் தான் இருக்கு உண்மையான கற்பு. நீ படுக்கையை பகிர்ந்து இருக்க அதனால் உனக்கு வெறுப்பு ஆகுது. அது வெறும் மண்ணு திங்குற உடம்பு ஸனா.”

“பிடித்து உறவு நடந்திருந்தாலும், மனதில் காதல், அன்பு என்ற நம்பிக்கை வரும் போது தான் உன்னோட உடலை விட உண்மையான நேசத்தை  பார்க்கும், உன்னை எவன் ஹீரோயின் என்ற உணர்வு இல்லாம ஸனா மஸ்தூரானு பாக்குறானோ அவன் உணருவான்டி நீ கற்புடைய பெண், உயிரானவளுனு. உன் மனசுக்கு நடக்குதா இல்லையானு பாரு. வாழ்க்கையிலும் ஜெயிப்பாய்.. ஏதோ ஒரு வீட்டு மருமகளாக.”என்றாள் அஜி.

“அஜி! நீ என்னைய எப்பிடி எல்லாம் நினைச்சு பெருமைப்படுறனு தெரியுது. ஆனா…? சமூகத்தில் நான் ஒரு நடிகை அது சாகுற வரை மாறாதுடி.”என்றாள் ஸனா.

“ஏங்கக்கா மாறாது மாறும், நீங்க தைரியமாக இருங்க எப்போதும் போல் ஆனா எவனையும் ஈஸியா நம்பாதீங்க.” என்றாள் ராணி.

பாவம் ஸனா மூன்றாவது ஒரு தோல்வியை சந்தித்து, அதன் மூலம் பல திருப்பங்களை அனுபவிக்கப் போகிறாள் என்று தெரியாமல் அவளிடம் இருந்து மறைத்தது விதி.

அதியனவள் அடுத்து…

Advertisement