Advertisement

சில வருடங்கள் கடந்தது…

விருது விழா….

அது வருடா வருடம் நடைப்பெறும் விருது விழா அல்ல, சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுவது..

அரங்கமே நிரம்பி வழிந்தது..

வரிசைகள் கொடுத்திருந்த பட்டியலில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்..

நட்சத்திரங்கள் பலரும் அழைப்பு விடுத்தமையால், ஜொலித்தனர் அவ்விடத்தில்.

“என்னப்பா ஒரே விருதா கொடுத்துட்டு இருக்கீங்க, ஆனா ஒரு என்டர்டைன்மெனட் இல்லையானு கேட்டா, இருக்கே.. இதோ நம்ம சிங்கர்ஸ் உங்களை எல்லாம் பல பாடல்களின் வரிகளால் கட்டிழுக்கப் போகிறார்கள்..” என்று பெண் தொகுப்பாளர் சத்தமாக கூற.. அவரை தொடர்ந்து வந்தனர் ஆண், பெண் இருவர்.

ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி சந்தோஷப்படுத்தினர்.

மறுபடியும் நுழைந்த ஆண், பெண் தொகுப்பாளர்கள்..

“மக்களே! நல்லா என்ஜாய் பண்ணீங்கனு தெரியுது.. இன்னுமே கைதட்டல் அடங்கலை.. அப்படியே கன்டீனிவ் பண்ணுங்க.. ஏனா இப்ப நாங்க அனோனஸ் செய்யப் போறது…” என்று கத்திய ஆண் ஹோஸ்டரை  இடைமறித்த பெண் ஹோஸ்டர்.

“வெயிட்! வெயிட்! இது எங்க ஏரியா உள்ள வராத.. இந்த அவார்டை நானே தான் அனோன்ஸ் செய்வேன்..” என்று மல்லுக்கட்டினாள்.

“சரி! எங்க ஏரியா வருமுல அப்ப பாத்துக்குறேன்.. நீங்களே சொல்லுங்க மேடம்” என்றான் நக்கலாக.

“தட்ஸ் குட்.. மக்களே! இது சிறந்த நடிகைக்கான விருது.. பலர் இந்த போட்டியில் இருந்தாங்க, ஆனால் தேர்வான நடிகையின் படம் பல அவார்ட்களை வாங்கியது, இந்த விருது விழாவிலும் அவங்க படமும் விருதை அள்ளியது. அப்ப அவங்களை மட்டும் விட முடியுமா.. நம் விறலி நாயகி மிஸஸ் ஸனா மஸ்தூரா அதியனை மேடைக்கு அழைக்கின்றோம்..” என்றதும், அதுவரை நடுநிலையாக அமர்ந்திருந்த ஸனா எழுந்து மக்கள் பக்கம் கையை காட்டி சிரித்துவிட்டு, புடவையின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.

ரத்த சிவப்பு நிற காட்டன் சில்க் புடவையை சிங்கிளாக விரித்து ப்லீட் வைத்து, அதற்கேற்ப முட்டி வரை கை வைக்கப்பட்ட கோல்டன் பிளவுஸ் அணிந்து, முடிகளை கலைத்து விடாமல் ஒரு போனிடல் போட்டவாறு.. நடந்து சென்றாள் மேடைப் படிகளில்.

“வெல்கம் மேம்! நீங்க எப்படி ஒரே மாதிரி  அதே அழகில் இருக்கீங்க…?” என்று கேட்டான் ஆண் தொகுப்பாளர்.

மெல்ல சிரித்த ஸனா”வணக்கம் மக்களே! உங்க எல்லாரையும் இந்த மாலைப் பொழுதோடு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..” என்று ஆரம்பித்தாள்.

“மேம்!  நான் கேட்டதுக்கு பதிலே வரலையே…? ஹவ் யு மெயின்டைன்டு யுவர் பியூட்டி, இதோ இந்த பொண்ணு கேக்க சொல்லி நச்சடுக்குறாங்க..” என்றான் பெண் தொகுப்பாளரை போட்டுக் கொடுத்தவாறு.

“நத்திங் சீக்ரெட் இன் தட்.. இட்ஸ் ரீசன் ஆப் மை ஃபேமிலி.. அவங்க என்னைய ஹேப்பியா வச்சு இருக்காங்க…” என்றாள் ஸனா சிரிப்போடு.

“சூப்பர் மேம்! எங்க வீட்டுல எல்லாம் அட்வைஸ் இதான், ஹோஸ்ட் பண்றேனு மாப்பிள்ளை  தர மாட்டுறானுங்க.. ஒழுங்கா அடக்கமா பேசுனு ஒரே தொல்லை மேடம். வந்தது எருமை  மேய்க்க, அப்ப ஹேய்! எடுத்தி! இந்தா! போ! நகருனு சொன்னா தான் வேலை நடக்கும் அது புரியாம பேசுறாங்க மேடம்.. நான் வேணா உங்க வீட்டில் கொஞ்ச நாள் தங்கிக்குறேன்.. நானும் அழகா ஆகிடுவேன்ல..” என்றாள் அப்பெண்.

சிரித்த ஸனா”நீங்க அழகா இருக்கீங்க,  என் வீட்டுக்கு வந்தா எனக்குப் போட்டி ஆகிடுவீங்க.. வேணாம்..” என்றாள்.

“மேடம்! அது அம்புட்டு பூராவும் பெயிண்ட்.. இந்தா வந்து இப்ப பாட்டு பாடிட்டிப் போனாங்களே அந்த கேப்ல போய் கோட்டிங் ஏத்திட்டு வந்த முகம்..” என்றான் ஆண் தொகுப்பாளர்.

“சரி! சரி! மேம் உங்க படம் விறலி பத்தி சொல்லுங்க, அதுக்கு முன்னாடி அவார்ட் சர்ப்ரைஸ் இல்லை ஆனா அவார்டு யாரு கொடுக்கப் போறானு சர்ப்ரைஸ் இருக்கு..” என்றவள்,

“வெல்கம் டு அவர் சர்ஃப்ரைஸ்” என்று நிறுத்த, உள் மேடை அரங்கில் இருந்து அதியன் வந்தான்.

மெரூன் வித் சேண்டல் சர்டில்.. அதே! அதே! ஆரம்ப விருது விழாவில் வந்தது போல்..

ஸனாவிற்கு தெரியாது…

அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் பார்த்தாள்..

“மிஸ்டர் அதியன் வகீம் லாசன்” என்று அழைத்தாள் பெண் தொகுப்பாளர்.

“எப்படி மேடம் எங்க சர்ப்ரைஸ்…?”

ஸனா சிரித்தாள்..

“அய்யோ மேடம் வெக்கப்படுறாங்க..” என்ற ஆண் தொகுப்பாளரிடம் பெண் தொகுப்பாளரோ.. “அவங்க ஹஸ்பேண்டை பார்த்து வெக்கப்படுறாங்க.. ஒய் யு ஆர் கெட்டிங் ஷை மேன்..”

“எப்படியோ மேம் வெட்கத்தை பாக்க நாங்க காத்திட்டு இருக்கோம்.. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்..”

“சரி! சரி! நம்ம சண்டைக் கெடக்கட்டும்.. மேடம்! நீங்க சொல்லுங்க விறலி எக்ஸ்பீரியன்ஸ் பத்தி..?”

“விறலி, என் லைஃபில் பெரிய திருப்பு முனையைக் கொடுத்த மூவி.. பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் மார்க்கெட் இறங்கிடுமுனு சொல்வாங்க ஆனா எனக்கு விறலி அப்ப தான் கல்யாணம் ஆனது, அதன்பிறகு தான் பல படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.. விறலி ஷூட்டிங் டைமில் நான் இழந்தது நிறைய, இந்த விருது எல்லாம் எனக்கு அதை ஈடு செய்யாது.. ஆனாலும் இப்படி ஒரு சேட்டிபிகேசன் கிடைக்க பெறுவது மகிழ்ச்சியா இருக்கு..”

அதியன் தன் கண்களால் அவளை சமாதானம் செய்தான்.

“சார் நீங்க சொல்லுங்க.. மேடம் நடிப்பது உங்களுக்கு பெருமையா…?”

“வணக்கம் எல்லாருக்கும்.. கண்டிப்பா எப்படி இல்லாம போகும். உங்களை மாதிரி நானும் அவங்களை ரசிக்குறேன் ஒவ்வொரு படங்களிலும். என்னோட வேலை மாதிரி அவங்க வேலையை  நான் மதிக்குறேன்..”

“அவங்க தேர்வு செய்ற படம் எல்லாமே பயங்கர சப்ஜெட் மூவியா இருக்கே.. சில படங்களில் ஹீரோவே கிடையாது.. அது உங்களுக்காக தானா…?”

“அது அவங்க சாய்ஸ்.. அவங்க கிட்ட தான் கேக்கனும். நமக்கு ஸ்டோரி கேக்குறது எல்லாம் புடிக்காது.. நடித்ததும் படத்தை தியேட்டரில் அவங்களோட போய் பார்ப்பது தான்..”

“மேடம் நீங்க சொல்லுங்க…? உங்க மூவி சாய்ஸில் ஏன் பெரும்பாலும் ஹீரோக்கு இடமே இல்லை…”

“நான் வேணுங்குற அளவு ஹீரோயிஸம் மூவிஸ். ஹீரோயினா சும்மா, ஆடிப்பாடி லவ் பண்ண மட்டும் தானு பல படங்கள் பண்ணியாச்சு.. இப்ப என்னைய மட்டும் சமூகப் பார்வையோடு காட்டுற படத்தில் நடிக்க விருப்பப்படுறேன்.. அதனால் தான் செலக்ஷன் இப்படி.. கதை கேட்பது  நான் மட்டும் தான், என்னோட முடிவு .. “

“சூப்பர் மேடம்.. சார் மேம்முக்கு அந்த விருதைக் கொடுங்க.. அதுக்கு முன்னாடி, மேம் உங்களுக்காக ஒரு வி ஐ பி வெயிட்டிங்.. வெயிட்” என்ற ஹோஸ்டர் பெண் நடந்துப் போக.

வெளியில் வரும் போது ஒரு மூன்று வயது குட்டிப் பெண்ணோடு வந்தாள்.. சிவப்புக் கலர் ப்ராக்கில் சிலிவ்லெஸ், காலில் அதே சிவப்பு நிற ஷூவோடு அந்த பெண் கையைப்பிடித்து குழந்தை அழகாக நடந்து வந்தது.

“அதியா!” என்று சிரித்தாள் ஸனா.

“சாரி! மஸ்து இட்ஸ் சர்ப்ரைஸ்.. சோ ஒன்லி..” என்றான்.

ஸனா ஓடிப்போய் தூக்கிட்டு வந்தாள்..

“மேம்! உங்க இளவரசியை பத்திச் சொல்லுங்க…”

“விறலி படம் முடிந்ததும் தான் இவங்க பிறந்தாங்க, பல சிக்கல்களில் இவங்க எங்க கைக்கு வந்து இப்ப எங்களை ஆட்சி செய்றாங்க…” என்று சிரித்தாள்.

“ஹாய் பாப்பா, உங்க பேரு என்ன…..?”

“அதிமதுரா” என்றது புரியாத மழலையில்.

அதியன் சிரித்தப்படி
“அதிமதுரா” என்றான்.

“வாவ்! சூப்பர், சரி இப்ப நீங்களும், அப்பாவும், அம்மாவுக்கு அவார்ட் கொடுங்க..” என்றாள் பெண் தொகுப்பாளர்.

அதியன் அதியை வாங்கி, இருவரும் சேர்ந்து ஸனாக்கு தந்தனர்.

அதை வாங்கியவள்”தேங்க்ஸ் சோ மச்.. கிவ்விங் திஸ் வொன்டர்புல் ஆப்பர்ச்னிட்டி.. நாட் ஃபர்கெட்புல்..” என்றாள் பெருமையாக ஸனா.

“மேம்! பெண்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது..”

“உங்க ஹோல் அடைய ஏதாவது ஒரு துடுப்பு வேணும் அது உங்க காதலான வாழ்க்கைத் துணையா இருந்தா அந்த ஹோலை அடைவது எளிதுனு என் வாழ்க்கை மூலம் நான் அறிந்தது.. அதுக்காக துணை இருந்தா தான் முடியுமானு கேட்டா தெரியாது. எனக்கு அதியன் கிடைத்ததால் முடிந்தது இந்த இடத்தில் நிற்கும் தகுதி.. எனக்கு குழந்தைப் பிறந்தும் நான் இன்னும் இந்த ஃபீல்டில் இருக்கேனா.. அதுக்கு முக்கிய காரணம், கணவன், குழந்தை, என் மொத்தக் குடும்பம் தான்..”

“ஒரு நடிகைனா இப்படி தானு பச்சைக்  குத்தி வாழ ஆரம்பித்தவள் தான் நான்.. எத்தனையோ சூழல்கள் கடந்து தான் வந்தேன்.. ஒரு கட்டத்திற்கு மேல் காதல் எனக்கு பக்கபலமாக அதியன் ரூபத்தில் வந்தது, அவர் மூலம் எனக்கு பெரியக் குடும்பமே கிடைத்தது தான் என் வெற்றியே.. ஐ லவ் யூ அதியன்..” என்றாள் மனதார.

தன் மகளை ஒரு பக்கம் தூக்கி வைத்திருந்தவன், மறுபக்கம் ஸனாவை அணைத்து ஆறுதல் செய்தான்.

“சூப்பரா வாழ எங்க பிளஸ்ஸஸ் அன்ட் விஷ்ஸஸ் மேடம்..” என்றனர்.

அதியனோடு கைப்பிடித்து இறங்கினாள் ஸனா.. அதி கூட்டத்தைப் பார்த்து மிரண்டு தன் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அதியன் அங்கு ஆர்கைன்ஸரிடம் கூறிவிட்டு, வேறு மக்கள் இல்லாத வழியில் செல்ல பாதுகாப்பு ஆட்களோடு சென்றான்.

காரில் ஏறுவரை கூட்டம், போட்டோஸ். பத்திரிக்கை, யூ டியூப் சேனல்ஸ் என சூழ, தப்பித்து தான் சென்றனர்..

***

வீட்டில் வரு ஆழாத்தி தட்டோடு தான் நின்றார்..

“நான் சொன்னா யாரு கேக்குறா..? அந்த பிஞ்சுப் பிள்ளையை அழைச்சுட்டுப் போகாதனா அவளை அழைச்சுட்டுப் போயிட்டான் எல்லாம் நீங்க கொடுக்கும் இடம்..” என கணவன் வகீமை முறைத்தார்.

“விடு வரு, அப்படியே வெளியில் காட்டாம வளர்க்க முடியுமா..? ஒரு சர்ப்ரைஸ்னு சொல்லி கேட்டாங்க அதான் அதியன் கூட்டிட்டுப் போனான் இல்லைனா அவன் எப்படி..? நீயே சொன்னாலும் கேக்க மாட்டான். அதி விஷயத்தில் அவன் கூட இருந்தா மட்டுமே தான் இப்படி கூட்டிட்டுப் போவான்..”

“ஆமா வரு! எதுக்கு கத்துற பொறுமையா இரு” என்றார் பாட்டி.

“ஆமா! ஆமா!” என்றார் நவநீ.

“தாத்தா! நீங்க வர வர பாட்டி பேசுறதுக்கு ஆமா போட்டே  தலை ஆட ஆரம்பிச்சுட்டு..” என்று கிண்டல் செய்தாள் ஷர்தா.

“அடுத்து எனக்கும் சீக்கிரம் ஆடிடும் போல..” என்றான் பாரி.

“அப்பா! எனக்கு எப்ப ஆடும்..?” என்று கேட்டான் அவர்களின் நான்கு வயது மகன் விசாகன்.

ஷர்தா- பாரிக்கு பிறகு தான் அதியன்-ஸனா மகள் பிறந்தாள்.

மற்றும் அனைவரும் காத்திருந்தனர்..

சேரர், சோழா, பாண்டியன் குடும்பம் பெண்கள் உட்பட, ராஜி குடும்பம்,  பரணியும் குடும்பத்தோடு வந்திருந்தார்.

அச்சு, அஜி, தீரன், மாது அவரவர் குடும்பங்களோடு, ராணி ஸனாக்காக வந்திருந்தாள்..

பீவி பேத்திக்காக காத்திருந்தார், அவர் தான் வளர்ப்பது.. ஸனா அண்ணனும், அண்ணியும் தேவைனா வருவார்கள்.  அதியன் ஓரளவு  தூரத்திலே வைத்தான் அவர்களின் குணம் அறிந்து..

அதே போல் தேவி, மாலினி குணமும் மாறவில்லை.. ஆனால் எதுவும் சொல்ல முடியாது அதியனிடத்தில்.

இரவு விருந்துக்கு தான் அதியன் ஏற்பாடு செய்திருந்தான், குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மட்டும்..

அதியன்  கார் வந்து நிற்க, அதில் இருந்து இறங்கியவர்களை ஓடி வந்து ஆழாத்தி எடுத்தார் வரு..

பிறகு பேத்தியை வாங்கி, பீவியிடம் கொடுத்து”முதலில் இந்த ட்ரஸை கழட்டிப் போட்டுட்டு ப்ரீயா வேற போட்டு விடுங்க அண்ணி” என்றார்.

ஸனா சிரித்தாள்.. “அத்த! அவ ஜாலியா தான் இருந்தா..” என்றவாறு.

“ஆமா! ஆமா! உள்ள வாங்க..” என முன்னே நடந்தார்.

“அதியை அழைச்சுட்டு வர, இவங்க தான் பெரிய எதிர்ப்பு மஸ்து”

“அப்புறம்”

“வழக்கமா நான் குரலை உயர்த்தினா உன் அத்தை அடங்கிடுவாங்களா அந்த ட்ரிக்கை தான் ஃபாலோ பண்ணினேன். இந்த ட்ரிக்கை சொல்லிக் கொடுத்ததே உன் மாமனார் தானே..” என்று சிரித்தான்.

“இருந்தாலும் ஓவர்.. வாங்க” என்று உள்ளே நுழைந்தனர்.

தாத்தா, பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

தாத்தாக்கு வயது ஆனாலும் அதே கம்பீரம் இருந்தது.

ஆனால் பாட்டி கண்ட்ரோலில் அடக்கமாக இருந்தார் பழைய நவநீதமாக அல்லாமல்.

அனைவரும் பேசி மகிழ்ந்து, அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.. இது மாதத்தில் ஒரு முறை நடக்கும் விருந்து தான் அனைவரும் சந்திப்பதற்காக.

இப்போது சேரர், சோழா, பாண்டியன் குடும்பங்கள் தனி தனியாக வாழ்கிறார்கள்.. சங்கவியை ராஜியின் மகன் ரஞ்சித்தே கல்யாணம் செய்ததால் அவர்கள், சோழாவோடு தங்கியுள்ளனர்.

அதியன் அழைத்தும் வேணாமுனு மறுத்து விட்டனர். கடைசி காலத்தில் வருவதாக கூறி.

சோழா வீட்டில் சில நேரங்களில் பனிப்போராகும் ராஜி கணவருக்கும், ரஞ்சித்துக்கும்..  ஆனால் அவன் இரு வீட்டையும் சமாளித்தான். அதியன் இல்லைனு ஃபீல் பண்ணக் கூடாது என்பதற்காக தான் தாத்தா, பாட்டி இப்படி செய்தது,  சொல்லி தான் செய்தார்கள் அப்ப மண்டையை ஆட்டிய லோகநாதன் அப்பப்ப முகத்தை காட்டுவார்.. ஆனால் ராஜி கிட்ட அது வேலைக்கு ஆகாது.

தாத்தா, பாட்டி அதியன் கூடவே தங்கி விட்டனர்.

அனைத்தும் முடிந்தது சிறப்பாக..

இரவானது நிலாவின் தேடலில் கரைந்துக் கொண்டிருந்தது.

அதியன் தன் மகளை தோளில் போட்டு நடந்தான் தூங்க வைப்பதற்காக.. ஸனா தன் அலங்காரத்தை எல்லாம் களைத்துக் கொண்டிருந்தாள்.

இருவருக்குமே அதியின் பிறப்புக்கு நினைவு சென்றது..

***

ஸனா விறலி படத்தை தொடர்ந்து நடித்து வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாள்.

படம் நன்றாக ஓடி ஹிட் ஆனது.. ஆனால் ஸனாக்கு தன் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை.

அதியனும் அதன்பிறகு குழந்தைப் பிறப்பில் கவனமாக இருந்தான், பாதுகாப்பு முறையை மேற்கொண்டனர்.

ஆனால் ஸனாக்கு குழந்தைப் பெத்துக்க வேண்டும் என்பது ஆசை பேராசையாக மாறியது..

அவளின் உடல்நிலை கருத்தில் கொண்டு அதியன் மறுத்து வந்தான்.

வீட்டில் யாருமே அவர்களை கேள்விக் கேட்கவில்லை… அவர்களின் சூழ்நிலை தெரிந்ததால்.. ஒரு நாள் ஸனா கட்டாயப்படுத்தி கேட்டாள்.

“மஸ்து! டாக்டர் சொன்ன மாதிரி டெக்னால்ஜி முறையில் வேணா முயற்சிப்போம் நீ ரிஸ்க் எடுக்க வேண்டாம்.” என்றான் முடிவாக.

ஆனால் ஸனாக்கு அது ஏனோ மனதில் ஒட்டவே இல்லை, அவளுக்கு அதியனுக்காக தானே தன் வயிற்றில் கருவை சுமக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது..

நாட்கள் சென்றது, அதியன் நம்பியதன் விளைவாக ஒன்று நிகழ்ந்தது.

அனைத்துப் பாதுகாப்பையும் மீறி ஸனா கருவுற்றாள்.. எந்த பாதுகாப்புமே நூறு சதவீதம் அல்ல.. ஆனால் ஸனா கருவுற்று இருக்கிறாள் என்பதே அவளுக்கு மூன்று மாதம் முடிந்தே தெரியும்.. கிட்டதட்ட பதினெட்டு வாரத்தை தொட்டது..

ஸனா அவுட் டோர் ஷூட்டிங் போய் இருந்ததால் கிளைமேட் சேஞ்ச் என மாதம் வரும் பீரியட்ஸை நினைக்கவே இல்லை.

ஏதோ தோன்ற செக் செய்தாள், மகிழ்ச்சி அதிகமாக அதியனிடமே கூறினாள்.

அவனுக்கு பயம் தான் வந்தது.. ஆனால் ஸனா தைரியமாக இருந்தாள்.. இந்த குழந்தை கடவுள் கொடுத்ததாக நம்பினாள்..

அதே போல் டாக்டர்ஸ் அட்வைஸோடு ஸனா ஒன்பது மாதத்தை கடந்தாள்.

வீடே சந்தோஷத்தில் மிதந்தது.. அவர்களின் கனவை நனவாக்க அதிமதுரா பிறந்தாள்..

****

இருவரும் நினைவுக்கு வர, “அதியா! தூங்கிட்டா அதி.. பெட்டில் போடுங்க..” என்றாள்.

“ம்ம்ம்!” என மகளை அலுங்காமல் படுக்க வைத்தவன், நெற்றியில் முத்தம் வைத்தான்.

“ம்ம்ம்! ஆனாலும் இவ வந்ததும் என்னைய நீங்க கொஞ்சம் செகண்டா தள்ளிட்டீங்க அதியா” என கிண்டல் செய்தாள்.

“ஆமா! பெரிய கண்டுப்பிடிப்பு..” என்று அவளை இழுத்து தன் மேல் போட்டவன்.
“ம்ம்ம்! அது எப்படி உன்னைய அப்படி நினைப்பேன் மஸ்து.. என்னோட நாயகியே நீ தானே…” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“அதியா! நான் ஒன்னும் உங்க பொண்ணு இல்லை, இப்படி முத்தம் வைக்க.. ஐ ஆம் யுவர் வைய்ப்” என்றாள் புருவத்தை உயர்த்தி.

“ம்ம்ம்! தெரியுமே.. அது ஸ்டார்ட்டர் மேடம்..” என்று அவளை தள்ளி விட்டு மேல் படந்தான்..

“ஹேய் அதி முழிச்சுடப் போறா..?”

“சோ வாட்!”

“கொழுப்பு தான்..”

“அவ கிட்ட சொல்லிடுறேன்.. உனக்கு விளையாட ஒரு குட்டி பாப்பா ரெடி பண்றமோனு…”

“யாரு நீங்க.. சொல்லப் போறீங்க..? சும்மா கதை விடாதீங்க..”

“ஹஹஹ! இன்னைக்கு ஒரே கண்டுப்பிடிப்பா இருக்கு..” என விலகி அவளை தன்னோடு அணைத்துப் படுத்தவன்.. “நமக்கு அதியே போதும் மஸ்து.. ஏதோ ஒரு தடவை  உன்னை பத்திரமா பாத்துக்கிட்டு இவ பொறந்தா. இன்னொரு தடவை எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது.. வேணவே வேண்டாம்.. அதான் பாரி பையன் இருக்கான்.. இன்னும் குட்டீஸ் நம்ம வீட்டில் இருக்காங்களே.. போதும்மா தாயே.. என்னால அந்த டெலிவெரி வார்ட் முன்னாடி நடக்க முடியாது..” என்றான் சிரித்தவாறு.

அவனை அடித்தவள்.. “நடந்ததுக்கே இப்படினா அப்ப எனக்கு எப்படி இருக்கும்..”

“அதுக்கு தான் சொல்றேன் என் பொண்டாட்டி.. புரியுதா..” என்று அவளின் இதழ் நோக்கி குனிந்தான்.

இருவரின் இதழும் அன்றைய நாள் மகிழ்ச்சியை பகிர்ந்தது.. ஸனாவின் இடுப்பில் கைகளை நுழைத்தவன், இதழின் அழுத்தத்திற்கு ஏற்ப தன்னோடு இறுக்கினான்.

அப்படியே இதழ் பிரியாமல் தன் பக்கம் திருப்பியவன் கைகள் உள் வழியாக  அவளின் முதுகுக்கிற்கு சென்றது.

அவளுக்கு கூச்சமாக, புருவத்தை சுருக்கி கெஞ்சினாள்.

ஆனால் அதியன் விடவில்லை.. கைகள் பின்னால் இருந்து முன்னால் ஏறியது.

ஸனா தன் கைகளை வைத்து அவன் மார்பில் தள்ள, இதழை விடுவித்தவன்..

“மேடம்! இது நல்லதில்லை.. அப்புறம் கைகள் கட்டப்படும்..”

“அதியா!” என்றாள்.. “எஸ்! உன் அதியா தான். பட் டுடே ஐ வான்ட் திஸ் மஸ்து டீப்லி..” என அவள் மேல் படர்ந்தவனை முதுகில் இரு கைகளையும் சுற்றினாள்.

சிரித்த அதியன் அவன் நெற்றியில் முட்டி, புருவத்தை உயர்த்தி அந்த நைட் லேம் வெளிச்சத்தில் அவள் முகத்தைப் பார்த்தான்.

“நீ எதுக்கு மேக் அப் போடுற. போடாமயே மின்னுதுடி..” என அவளின் கன்னங்களில் இதழ் பதித்தான்.. ஜில் என்று ஏறியது அவனுக்கு அவளின் மெருதுவான கன்னம்.

அதையே இதழால் வருடியவன், சட்டுனு லேசாக கடித்தான்.. “அதியா!”

“இப்படிதானே நீ பண்ணுவ.. டுடே என் டர்ன்.. டோன்ட் டிஸ்டர்ப மீ மேடம், இட்ஸ் மை ரிவெஞ்ச்..” என்று அடுத்தடுத்து அவனின் தீண்டல் அவளின் உடலை பதம் பார்த்தது.. வலித்தாலும் ரசித்தாள் மனதார, உச்சத்தில் இருவரும் தங்களை மறந்து இரவை மறைத்தனர் நிலாவிடம் இருந்து.

அவர்கள் வாழ்வு இப்படியே மகிழ்ச்சியாக சிறக்கட்டும் எந்நாளும்.. இன்பமோ துன்பமோ அவர்கள் சேர்ந்தே இருந்து அனுபவிப்பார்கள்..

அவனின் விறலி விண்மீன் அவள்.. ஸனா விண்மீனில் பிராகசிக்க ஒளியாய் துணையாகினான் அதியன்..

“விறலி விண்மீன் அதியனவள்”

……………..முற்றும்…………………..

….சங்கீதா ராஜா.. ….

(ஹாய் ப்ரண்ட்ஸ்….

ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றி காதலோடு எழுத தோன்றியது, இந்த கதை முழுவதும் முழுக்கற்பனையே.. இதுவரை கதைப்படித்தவர்கள் (சைலன்ட் ரீடர்ஸ்) மறக்காமல் கருத்துகளை விமர்சனத்தில் எழுதிட்டு போங்க… தேங்க்ஸ் டு ஆல்… நன்றி… )

Advertisement