Advertisement

கார் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டு இருந்தது.

ஸனா அமைதியாக வர, ராணி தான் பேசியப்படியே இருந்தாள்.

“அக்கா! ஆனாலும் அதியன் சாரும் அந்த பொண்ணும் மேட்சே இல்ல தெரியுமா”

“நீ ஏன் ஃபீல் பண்ற…?”

“இல்லக்கா, மூனாவதா வெளியில் இருந்து பார்க்குற நமக்கே இப்பிடி இருக்குனா அவங்க வீட்டில் யாருக்கும் தோணாத, இல்ல அந்த சாருக்கே தெரியலையா…”என்று ஆதங்கப்பட்டாள் ராணி.

“குயின்! அவங்க சாய்ஸ் அது, நம்ம ஏன் அதப்பத்தி பேசனும்…”என்றாள் ஸனா.

“என்னமோ போங்க, எனக்கு புடிக்கல.. அவ்ளோ பெரிய கடை ஓனர் அவருக்குப் புடிச்ச பொண்ணை பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணா என்ன….?”

ஸனா சிரித்து”ஒரு வேளை அந்த பொண்ணு தான் லவ் பண்ண பொண்ணோ என்னவோ குயின்…”என்றாள்.

“அப்பிடியா இருக்கும்.. இந்த பிள்ளையை பாத்தா லவ் வருமா அக்கா…”என்றாள் நக்கலாக.

அதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டு காரை ஓட்டிய டிரைவர்”யாரும்மா அது…?”என்றார் தங்கப்பன்.

“அங்கிள்! நவநீ சில்க்ஸ் ஓனர் பேரன் பத்தி தான் பேசுறா…”என்றாள் ஸனா.

தங்கப்பன் ஸனாவிற்கு ஆஸ்தான டிரைவர் ரொம்ப வருசம் கூடவே இருப்பவர்.

வயதும் ஐம்பதை தாண்டி அறுபதை தொட்டுவிடும் இன்னும் சற்று நாட்களில்.

“ஓ! அந்த குடும்பமா..? அங்க யாரும் லவ் எல்லாம் பண்ண முடியாது.. பண்ணாலும்  அது சக்ஸஸ் ஆகாதும்மா..”

ஸனாவிற்கு ஆச்சிரியம் ஆக, “எப்பிடி அங்கிள் சொல்றீங்க…?”என்று கேட்டாள்.

“அதானே தங்க்ஸ் நீங்க என்னமோ அவங்க வீட்டில் இருந்த மாதிரி சொல்றீங்க…”என்றாள் ராணி.

“நான் இல்லை, என் அக்கா கணவர் அங்க தான் டிரைவராக இருந்தார். நான் சின்ன வயசு அங்க போனதில்லை. ஆனா மாமா சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.. நவநீ ஐயாக்கு இரு பெண்கள் அதில் மூத்தப் பெண் இறந்துவிட்டது. அதுக்கு காரணம் அந்த பொண்ணோட காதல் விவகாரம் தான். அது கொலையா…? தற்கொலையா..?  தெரியாது, அந்த பொண்ணு காதல் விஷயம் தெரிந்து அந்த வீடே கலவரமானதாம் அன்னைக்கு. அது தான் தெரியும் மாமாக்கு. கொஞ்ச நாளில் மாமா வேலையை நிறுத்தி ஊருக்குப் போயிட்டார் அக்கா நர்ஸ் வேலை வேற ஊரில் கிடைத்ததால். ஆனா பேப்பரில் படித்து தான் தெரிந்தது அந்த பொண்ணு இறந்துவிட்டதுனு. என்ன ஆச்சுனு தெரியல..”என்றார் நீளமாக.

ஸனா அதிர்ச்சியாய் கேட்டுக் கொண்டிருக்க, ராணி”இந்த கௌரவக் கொலைனு சொல்வாங்களே அதுவா..?”
என்றாள்.

“அது சரியா தெரியல ராணிம்மா, எல்லாமே கேள்விப் பட்டது தான். இந்த மாதிரி பெரியக் குடும்பத்தில் வெளியில் தெரியாம மறைச்சுடுவாங்க. ஆனா ஸனாம்மா மாதிரி நடிகைனா பக்கம் பக்கமா எழுதுவாங்க”என்றார் மனதாங்கலோடு.

“ம்ம்ம்! அவங்கப் பொண்ணு லவ் பண்ணிச்சு சரி, அந்த வீட்டில் பையன் லவ் பண்ணா…?” என்றாள் சந்தேகமாக ராணி.

“பையனா இன்னும் கவனமா தான் பாப்பாங்க, வீட்டுக்கு வரப் போற மருமகள் யாரா இருந்தாலும் ஏத்துப்பாங்களா…?”என்றார் டிரைவர்.

“ம்ம்ம்! அதியன் சாருக்கு இப்ப பாத்து இருக்க பொண்ணு அப்பிடியே தங்கம் தான் பாக்க, ஆனா தகரம் உரசினா…”என்றாள் ராணி.

“இந்த பையன் எல்லாம் அப்ப பிறந்தே இருக்காது.. அது நடந்து முப்பது வருசம் இருக்கும். ஆனாலும் காதல் எல்லாம் செய்ய விட மாட்டாங்க, அந்த பெரியவர் பயங்கர ஸ்ரிட்…”என்றார் டிரைவர்.

“அவங்க வீட்டுக் கதை நமக்கு எதுக்கு. ஆமா! குயின் நீ புடவை எடுக்கனும் சொன்னீயே…”

“எங்க அதுக்கு தான் நேரம் இல்லையே அக்கா…”

“ம்ம்ம்! அங்கிள் போற வழியில் ஏஞ்சல் சில்க்ஸ் இருக்குல அங்க நிறுத்துங்க போகலாம்..”என்றாள் ஸனா.

“ஸனாம்மா, அங்க உங்களை பாத்தா கூட்டம் கூடிடுமே…”

“ம்ம்ம்! வழக்கம் போல் நான் என்னோட காஸ்டியூம் போட்டுறேன். மாஸ் போகும் போது பர்தா போடுறதை விட இப்பிடி போடுறது தான் அதிகம்”என்று சிரித்தாள்.

மூவரும் சிரித்து அதே மாதிரி சென்று பர்சேஸ் முடித்து வந்தனர்.

ஸனா முகத்தில் கண்கள் மட்டுமே தெரியும்படி சென்றதால் கண்டறிய முடியவில்லை யாருக்கும்.

***

இரவு உணவு முடித்துக் கொண்டு அஜிற்கு ஃபோன் செய்து அச்சுவிற்கு எப்பிடி இருக்கென விசாரித்தாள்.

அஜியும் ஷூட் பத்தி கேட்டாள். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தனர்.

ஸனாவின் அம்மா கால் செய்தார்.

“ஸமா! எப்பிடிடா இருக்க…?”என்று கேட்டார் பீவி பேகம்.. (அவருக்கு ஸனா ஸமா தான்..)

“ஃபைன் மம்மா, நீங்க எப்பிடி இருக்கீங்க…?”

“எனக்கு என்னடா, நீ தான் அங்க தனியா இருக்க.. உன் கூட வந்து இருக்கவானு கேட்டா வேணாமுனு சொல்ற. இங்க எல்லாரையும் பாக்கனுமுனு. ஆனா எதுமே சரியில்லை. நீ உன் வாழ்க்கையை பாருடா..”என்றார் வருத்தமாக.

“அங்க அண்ணன், அண்ணி, பப்புலு எல்லாம் தனியா இருப்பாங்க, அவங்க வேலைக்குப் போறாங்களம்மா.. பப்புலுவை யாரு பார்ப்பா…?”

“நீ யோசிக்குற ஆனா அவங்க எல்லாம் இயந்திரமா இருக்காங்கடா. நீ யாருக்காக சம்பாரிக்குறனு எனக்கு புரியல. உனக்குனு வாழ்க்கை அமைச்சுக்காம..”

“நம்மளுக்காக தான்மா, இதுக்குள்ள நுழைஞ்சுட்டா வெளியில் வர முடியாது போலம்மா. என்னால முடியல அடுத்தடுத்து சான்ஸ் வரும் போது விட மனசில்லை…”

“அப்ப எப்போ தான் கல்யாணம், குடும்பமுனு செட்டில் ஆகப் போற ஸமா.. உன் வாழ்க்கையை நான் பாக்க வேணாம..”

“அதான் பாத்துட்டீங்களே. தி கிரேட் ஆக்டிரிக்க் பெண் நட்சத்திரம் ஸனா மஸ்தூரா.. கோடி கோடியா சம்பாரிக்குறா இத விட வேற என்ன வேணும்…”

“எனக்கு அத விட உன் புருசன், பிள்ளையை பார்க்கனும் ஸமா.. அது தான் என் சந்தோஷம். பழைய கதையை விடு நான் நல்ல மாப்பிள்ளையை பாக்குறேன்”என்றார்.

“மம்மா! நீங்களும் மாசத்துக்கு ஒரு தடவை இதையே கேக்குறீங்க. ஆனா அதுக்கான தகுதி எனக்கில்லை. புதுசா போய் ஒருத்தன் கிட்ட அவமானப்பட்டு நிக்க முடியாது நான் கெட்டுப் போயிட்டேன். ஒன்னு என் அழகுக்காக வருவான் இல்ல என் பணத்துக்காக, எனக்காக வரவன் இருக்க மாட்டான்.. அது தெரிந்தும் போய் விழ சொல்றீங்களா..? நீங்க, அண்ணன் இருக்கீங்க அது போதும்..”என்றாள் வருத்தமாக.

“நான் இருக்கேனு சொல்லு, அண்ணன் இருக்கானு சொல்லாத அவன் மாறிட்டான் ஸமா பழைய ஸமர் இல்ல.. பொண்டாட்டி பேச்சை கேக்கும் நஸ்ரின் புருசனா இருக்கான்.. பாவம் பப்புலு தான் எனக்கு இங்க ஆதரவு”என்றார்.

“அம்மா அண்ணி பேச்சை கேட்டா தான் என்ன.. அவங்க ஹஸ்பேண்ட் வைய்ப் தானே.. சந்தோஷமா இருக்கட்டும்..”

“நீ இப்பிடியே சொல்லு ஸமா, ஆனா அவங்க உன் கிட்ட நல்லவங்க மாதிரி பேசி நடிக்குறாங்க. நீ இப்ப ஒரு லேண்ட் வாங்க சொல்லி பணம் அனுப்பினல அது நஸ்ரின் பேருக்கு தான் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு..”

“உங்க பேருக்குல செய்ய சொன்னேன்..”

“என் பேருக்கு வேணாம், உன் பேருக்கு செய்யுமா. இது நல்லதுக்கு இல்ல.. அண்ணனா இருந்தாலும் சரி , ஏன் என் பையன் தான், ஆனா கஷ்டப்பட்டு நீ சம்பாரிக்குற.. அது வேற யாருக்கோ போகுதும்மா..”

“சரிம்மா, அண்ணி தானே விடுங்க. நம்ம குடும்பம்”

“அவ சரியில்லைடி, உனக்கு தருவானு நினைக்காத அந்த சொத்து எல்லாம் அவ அம்மா வீட்டுக்கு போகாம இருந்தா சரி. ஒரு நாள் நான் சொல்றதுப் புரியும்..”என்றார்.

“மம்மா! மாமியார்- மருமகள் எதிர் முறைப்பு மாறாது போல நீங்க கவலைப் படாதீங்க. ஒன்னும் ஆகாது நான் அந்தளவு முட்டாள் இல்லை.”

“நீ அறிவாளியா இருந்தா உனக்குனு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடு.. உன் பப்பா நம்மளை விட்டுப் போனப் பிறகு உன்னால தான் குடும்பம் பிழைத்தது. ஆனா உன் வாழ்க்கை மண்ணுக்குப் போயிட்டு இருக்கு ஒரு மம்மாவ என்னால பார்க்க முடியல. இனிமே எனக்கு பொறுமையில்லை ஸமா. நீ சீக்கிரம் முடிவு எடுக்கலனா நாளைக்கு உனக்காக நான் இருக்க மாட்டேன், ஏனா உன்னைய நினைச்சி எனக்கு தூக்கமே இல்லை அதுவே நோயா மாறிட்டு.. இப்ப தூக்க மாத்திரை போட்டா தான் தூங்க முடியுது. புரிஞ்சுக்க என் நிலையை”என்று கூறி ஃபோனை வைத்து விட்டார்.

ஸனா போனை கீழே வைத்துவிட்டு பெட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.

இன்று என்ன ஒரே கல்யாணப் பேச்சாக இருக்கே… என்று யோசிக்க தலையணைக் கீழ் வைத்த தாலி நினைவு வந்தது..

அதை எடுத்தாள் கையில்.

நேராக எதிர் டேபிளில் இருந்த புடவையை எழுந்து எடுத்தாள்.

மீண்டும் வந்து பெட்டில் அமர்ந்தவள் புடவையை வெளியில் எடுத்து அதன் மேல் தாலியை வைத்தாள்.

இது இரண்டும் எதும் தொடர்பு இருக்கா என யோசனையில் ஆழ்ந்தாள்.

தாலி கொடுத்தது ஒருவன். புடவை கொடுக்க சொன்னது ஒருவன்.. ஒரே நாளில்.

தாலியை எடுத்துப் பார்த்தவளுக்கு ஏனோ அதியன் முகம் தான் மனதில் வந்தது. காலை வரை அந்த ராங் நம்பருக்கு ஒரு உருவம் இல்லாமல் இருந்தது..

இன்று ANR  னு அதியன் பெயரை கேட்டதில் இருந்து அவன் உருவம் தான் மனதில் வருகிறது.

எப்பிடி…? அதியன் தான் ANR ஆ…?

ஆனா டிரைவர் அங்கிள் சொன்னதை வைத்து பார்த்தால் அதியன் இதை எல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை.

யோசித்து யோசித்து மூளை வெடிக்காமல் இருந்ததே பெரிது.

சரியாக ஃபோனில் மெசேஜ் வந்தது.

“ஹாய் மஸ்து.. ஹவ் ஆர் யு…?”

ஸனா எடுத்துப் பார்த்து அமைதியாக இருந்தாள்.

“எதுக்கு கால் பண்ணி இருக்க…?”என்று அடுத்து வந்தது.

ஸனா ஒரு முடிவோடு.

“உங்க முழுப்பெயர் என்ன…?”என்று அனுப்பினாள்.

“ANR”

“ஹலோ, அதுக்கு தான் அர்த்தம் கேக்குறேன்…”

அதியன் மனதில்’விட மாட்டா போல..’என்று.

“இப்ப தெரிஞ்சு என்ன ஆகப் போது. கண்டிப்பா சொல்றேன் ஒரு மாத முடிவில்”என்றான்.

“ஏன், நான் நோ சொன்னா ஆள் அட்ரஸ் தெரியாம போயிடலாமுனா. அவ்ளோ பயமா உங்க பெயரை சொல்ல…?”

“பயமா எனக்கா…? நீ ஓகே சொல்லாம இருந்தா நான் யாருனு தெரியாம நீ ஃப்ரீயா இருக்கலாம். இல்லனா என்னைய மிஸ் பண்ணிட்டேனு ஃபீல் பண்ணுவில… அதான்…”

“வாட்! நான் மிஸ் பண்ணிட்டேனு ஃபீல் பண்ணுவேனா.. டோன்ட் ஹேவ் ஓவர் ஹோப்.. இது அதி முட்டாள்தனம்…”

“இருக்கட்டும். ஆமா! உனக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் பெயரில் வந்தது…”

“யாருனே தெரியாம, எந்த ஒரு நேரடி கான்டெக்ட் இல்லாம, நீ கொடுத்த தாலிக்கும், முத்தத்திற்கும் நான் லவ் பண்றேனு சொன்னா, இந்த ஃபீல்டில் இருக்க நான் முட்டாள் இல்லையா.. அதும் அழியாத கெட்ட அனுபவம் இருந்தும்..”என்றாள் கோபமான ஸ்மைலியோடு.

அதியனிற்கு அவளின் இந்த எண்ணம் ரொம்ப பிடித்தது.

சிரித்தான். தெளிவாக யோசிக்கிறாள் என்று மெச்சினான் அவளை.

“நீ சொல்றது எல்லாம் நூறு சதவீதம் சரி தான் ஸனா.. ஆனா நான் யாருனு சொல்லி நீ ஒரு வேளை ஓகே சொல்லிட்டா அது என்னோட உருவத்துக்கும், ப்ரோப்ஸனலுக்கும் கிடைத்த ஓகேவா இருக்காத…?”

“இது ஒன்னும் மூவி இல்லை மிஸ்டர் ANR பார்க்காமல் விரும்பி கடைசியில் கைப்பிடிக்க. ரியலாட்டி இதில் விளையாட எனக்கு விருப்பமில்லை.”

“நேரில் நீ பார்த்து விரும்பிய காதல் என்ன ஆனது மஸ்து. அதுவும் ரியால்டியில் நடந்தது தானே…”

“ஆமா! ரியால்டியே தோத்துப் போச்சு. அப்புறம் எங்க இந்த பார்க்காத காதல்…”என்று விரக்தியாக ஸ்மைலி சோகமாக போட்டாள்.

அதியனிற்கு ஸனாவின் முகம் முன் வந்தது, அந்த ஸ்மைலியோடு உண்மை உருவமாக.

ஏனோ அவளை ஆறுதல் செய்ய  நினைத்தவன்.

“ஹேய் மஸ்து! டோன்ட் ஃபீல் இந்த லைஃப் உனக்கு ஏமாற்றத்தை தராது. பிகாஸ் ஐ ட்ரூலி லவ் யு நாட் யுவர் ஆக்டிங் லைஃப்”

ஸனாவிற்கு ஒரு கேள்வித் தோன்றியது..

“அப்ப நான் ஓகே சொல்லி நம்ம  மேரெஜ் பண்ணிகிட்டா நான் நடிக்க பர்மிசன் கிராண்டடா…?”

அதியன் ஒரு செகண்ட் யோசித்தான், கல்யாணம் என்றதும்.

அவன் மனசாட்சி கேட்டது நீ என்ன பண்ணிட்டு இருக்கனு இப்ப புரியுதா.. ?மஞ்சரி யாரு…? உன் தாத்தா நினைவு இருக்கானு…?

அதியனிற்கு இந்த நிமிடம் ஸனா மட்டுமே தெரிந்தாள் அது தான் அவன் விதி.

“கண்டிப்பா! நீ என் வைய்ப்  ஆனா நடிக்க அலோ பண்ண மாட்டேன். காரணம் பெருசா இல்லை உன்னோட ஃபீல்டு அப்பிடி. அதுக்காக நீ வீட்டில் தான் இருக்கனுமுனு சொல்ல மாட்டேன்.”

“அப்ப உங்க பேமிலி.. அவங்க என்னைய ஏத்துப்பாங்களா…?”

யோசிக்காமல் சொன்னான்.

“கண்டிப்பா இல்லை…”

“அப்புறம்..?”

“அதான் தாலி, புடவை வாங்கிக் கொடுத்துருக்கேன் மஸ்து.”

ஸனாவிற்கு புடவை  என்றதும் அதிர்ச்சியாக.

“அ தி ய ன்…?”என்று ஒவ்வொரு எழுத்தாக அனுப்பினாள்.

“எஸ்.. அதியன் நவநீ ராகவன் தான்..
நீ இந்தளவு கேட்டதால் சொல்லிட்டேன். ஏனா இதுக்கு மேல டீன்  ஏஜ் பசங்க மாதிரி விளையாட விருப்பம் இல்லை.
ஐ லவ் யு மஸ்து ❤❤❤… டிசைடு யுவர்செல்ப்.. ஐ ஆம் ANR… நாளைக்கு மீட் பண்றேன். எப்பனு சொல்ல மாட்டேன்.. நீ யோசி டைம் தரேன்.”என்று ஃபோன் ஆப் லைன் ஆனது.

ஸனாவிற்கு அதிர்ச்சி ஆனதோடு, அவனா….? எப்பிடி…? எதுமே புரியாமல் குழம்பினாள்.

ஆழ்மனது அது அதியன் தான் என்று  மகிழ்ந்தது என்பது தான் முற்றிலும் உண்மை.

அதியனவள் அடுத்து..

Advertisement