Monday, April 29, 2024

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

    கெளரிக்கு போனில் அழைப்பு வர.. பேச தொடங்கிவிட்டான். சஹா, மித்ரனை கவனிக்க சென்றாள். காலை உணவு முடித்துக் கொண்டு, கிளம்பினர் எல்லோரும் கெளரியின் சித்தப்பா வீட்டிற்கு. கௌரி அதிகமாக போனில் பேசிக் கொண்டே இருந்தான். எப்படியோ, அந்த விருந்து நல்ல விதமாக முடிந்தது. புதிதாக திருமணம் முடிந்த தங்கை வந்திருந்தாள்.. சுகுமாரி முறையாக எல்லோரிடமும் சஹாவை, அங்கே...
    கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான். கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.. தன் வாழ்க்கையை நினைவுபடுத்தியது நீண்ட நேரம் அவனால், தங்களின் அறைக்கு வரமுடியவில்லை  அவள் சொன்ன வார்த்தைகளை அசை போடா தொடங்கினான்..’நான்...
    கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே. மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப் செய்ய எழுந்து பின்பக்கம் சென்றாள். பெண். அப்போது, சஹாவின் போனில் அழைப்பு வந்தது. கௌரிதான் என தெரியாமல் அழைப்பை ஏற்ற மித்ரன்...
    ரத்தினம் எழுந்து மனையாளின் அருகில் வந்தார். எல்லா சொந்தங்களும் அமைதியாகி, இவர்கள் முகத்தையே பார்த்தது. பிருந்தாவிற்கு, என்ன நடக்குமோ என பீதிதான். சுகுமாரி “அண்ணா, எங்கள் பையன் கெளரிக்கு உங்க பெண்ணை கொடுங்க.. கூடவே மித்ரனையும் நாங்க பார்த்துக்கிறோம். சாகம்பரியை ரொம்ப பிடிச்சி கேக்கிறோம். நாங்கள் எந்த பேதமும் காட்டாமல் குழந்தையையும் பார்த்துப்போம்.. என்ன சொல்றீங்க” என்றார். எல்லோரும்...
    கௌரி “ம்மா, அதுக்குதான் இந்த ஏற்பாடா, சித்தப்பா.. எனக்கு மேரேஜ் ஐடியா எல்லாம் இல்ல.. நீங்க எங்க அம்மா பேச்சை கேட்டு ஏதும் ப்ளே பண்ணாதீங்க.. “ என்றான். அவனின் சித்தி “எப்படி கௌரி.. நீதான் பெரியவன்” என்றார். கௌரிசங்கர் “இல்லைங்க, எனக்கு இண்டரஸ்ட் இல்லை..” என்றவன் எழுந்து மேலே சென்றுவிட்டான். ரத்தினம் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.. எங்கேனும் மரியாதை...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 2 அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான...
    இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம். அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில்.  சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர். சாகம்பரி கிளம்பும்...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 8 கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு.. தோட்டம் வீடு.. என கையில் வைத்துக் கொண்டு சுற்றினான். சுகுமாரி, என்னமோ முன்பெல்லாம் மகனை பற்றி குறையாக சொல்லுபவர் இப்போது.....
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 18 கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.. என இருந்தவன்.. இப்போது இந்த நொடியிலிருந்து ஏனோ தளர்ந்தான்.. ‘இவளை நான் கயப்படுத்திவிட்டேனோ..’ என வருத்தம் வந்தது. வீடு வந்தனர் மூவரும்....
    சஹா, “நைட் எங்க வீட்டுக்கு போயிடுவோம் அம்மா.. மோர்னிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.. நாளையிலிருந்து மித்து ஸ்கூல் போகணும்.. ஈவ்னிங் பெங்களூர் போயிவிட்டால் சரியா இருக்கும்..” என நீண்ட விளக்கம் கொடுத்தாள். பிருந்தா எல்லாம் கேட்டுக் கொண்டு... பெண்ணுக்கு பொருட்களை பேக் செய்ய தொடங்கினார். இரவு உணவு முடித்து.. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர் கெளரியின் குடும்பம்.  இங்கே கெளரியின்...
    விக்ரம் “நீங்க ஏன் மாமா இந்த நேரத்திற்கு காரெடுத்தீங்க.. நைட் டைம்.. நான் வேணும்ன்னா.. டிரைவ் பண்ணிட்டு வரவா?.. எப்படி போவீங்க” என்றான். சஹாக்கு கோவமாக வந்தது “இல்ல, இல்ல.. ரொம்ப நன்றி விக்ரம் அத்தான்... நாங்க போய்கிறோம். அப்பா சூப்பரா டிரைவ் பண்ணுவார்.. என்ன ப்பா” என்றாள் இறுதியாக தன் தந்தையை பார்த்து. தனபால் சிரித்துக்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 19 மகன் வெளிநாடு செல்லுவதால், ரத்தினம் சுகுமாரி வந்தனர் மருமகளின் துணைக்கு என.. இரண்டுநாள் முன்பே வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு. சுகுமாரிக்கு, மகனின் மாற்றங்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனிக்க கவனிக்க அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. இரவில், மகன் வரும் வரை.. சஹா அமர்ந்திருப்பது. அதற்கெனவே, மகன் நேரமாக வருவது. காலையில்...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 6 தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும் கண்ணில் பட.. முகமும் அகமும் மலர்ந்து.. எதையோ எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டார் அன்னை. அப்போதே தன் மனதில் எதோ...
    கெளரிசங்கர். அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது இவளை பாதிக்க போகுதா.. நானாக இறங்கி வந்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ததால் அப்படி பேசினாளா.. தன் குழந்தை அல்லாத ஒரு...
    சஹா “ஐயோ! எவ்வளோ பெரிய பொய்” என்றாள். கௌரி “ம்கூம்.. இப்படி சட்டுன்னு உண்மையை சொல்லிட கூடாது. இது கவிதை” என்றான் தன் டி-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு. சஹா புன்னகைத்தாள். அடுத்து என்ன என மீண்டும் அமைதிதான் இருவருக்குள்ளும். கௌரி “போலாம் நீ ரொம்ப டயர்டா தெரியுற..” என்றான். சஹா தலையசைத்தாள். சஹா, நிம்மதியாக அந்த புது கட்டிலில் உறங்கினாள். கௌரி...
    அன்றே கெளரிசங்கர் கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தான். ஏனோ அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை அவனால். இப்படி எல்லாம் ஒருவரின் பேச்சிற்கு செவி சாய்த்து எனக்கு பலகாலம் ஆகிற்று,  அதிலும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நான் கல்லூரி சேர்ந்த நாள்தொட்டு.. என் பழக்கம்.. வழக்கம்.. தேவைகள்.. முடிவுகள்.. எல்லாம் என் விருப்படி மட்டுமே. அதில்...
    இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு. மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா. சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு வாரம் ஆகிற்று.. என்ன கோவம்ன்னு தெரியலை.. கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அதனாலதான் அவன் பேசமாட்டேன்கிறான்’ என புலம்பத் தொடங்கிவிட்டார். ரத்தினமும் “என்னமோ...
    சஹா “ஆன்ட்டி பர்ஃப்பில என்ன ரோஸ் எசன்ஸ் போட்டீங்களா, வாசனையா நல்லா இருக்கு” என்றாள். சுகுமாரி “அட கண்டுபிடிச்சிட்ட.. உங்க அங்கிள்க்கு அது தெரியாமல்.. உன் கையில் எதோ இருக்குன்னு கவிதை சொன்னார்” என்றார் வெட்கமும் கிண்டலுமாக தன் கணவனை பார்த்துக் கொண்டே. சஹா, ரத்தினத்தை பார்க்க.. ரத்தினம், தன் மனையாளின் வெட்கத்தை ஆசையாக பார்த்தார்.  பின் ரத்தினம்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 17 கௌரி, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றான்.. அக்கறையாக “ஏன் இன்னும் சாரியிலேயே இருக்க, சேஞ்ச் செய்துக்கலாமில்ல.. வீட்டில் இருக்கும் போது ஏதாவது நைட் டிரஸ் போட்டுக்கலாமில்ல.. ம்..” என்றான். சாகம்பரி “இல்ல, இதுவே எனக்கு, கம்போர்ட்டாகத்தான் இருக்கு” என்றாள். கௌரி “நான் ஹெல்ப் பண்ணவா” என்றான் கொஞ்சம் தயங்கிய குரலில். சிங்க்...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 7 மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து தர வேண்டும்.. அவள்தான் உடை மாற்றிவிட வேண்டும்.. என புதிதாக அழ கற்றுக் கொண்டான்.  பிக்ஸ் வந்து தளர்ந்து கிடக்கும்...
    error: Content is protected !!