Monday, April 29, 2024

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

    சஹா “ஐயோ! எவ்வளோ பெரிய பொய்” என்றாள். கௌரி “ம்கூம்.. இப்படி சட்டுன்னு உண்மையை சொல்லிட கூடாது. இது கவிதை” என்றான் தன் டி-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு. சஹா புன்னகைத்தாள். அடுத்து என்ன என மீண்டும் அமைதிதான் இருவருக்குள்ளும். கௌரி “போலாம் நீ ரொம்ப டயர்டா தெரியுற..” என்றான். சஹா தலையசைத்தாள். சஹா, நிம்மதியாக அந்த புது கட்டிலில் உறங்கினாள். கௌரி...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 9 கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ‘ஏன்! இந்த முகம் என்னை தாக்குகிறது’ என அதையே மீண்டும் எண்ணிக் கொள்வான்.. ‘நான் அன்னிக்கு பேசியிருக்க கூடாது.. யாரின் வாழ்க்கை...
    வரம் கொடு தவம் காண்கிறேன்!.. 14 மித்ரனை உறங்க வைக்க சொல்லினர் பெரியவர்கள். அதனால், ரத்தினத்தின் அறையில் குழந்தையை உறங்க வைத்துவிட்டாள், சஹா. பின் தயாராகினாள் பெண்.  சாகம்பரிக்கும், தயக்கம் பதைபதைப்பு என எல்லாம் இருந்தாலும் மனதை முடிந்த அளவு தயார் செய்துக் கொண்டே.. மேலே கௌரிசங்கரை சந்திக்க  வந்தாள். கௌரி, அறையில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தான்.  கெளரியின்...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 6 தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும் கண்ணில் பட.. முகமும் அகமும் மலர்ந்து.. எதையோ எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டார் அன்னை. அப்போதே தன் மனதில் எதோ...
    விக்ரம் “நீங்க ஏன் மாமா இந்த நேரத்திற்கு காரெடுத்தீங்க.. நைட் டைம்.. நான் வேணும்ன்னா.. டிரைவ் பண்ணிட்டு வரவா?.. எப்படி போவீங்க” என்றான். சஹாக்கு கோவமாக வந்தது “இல்ல, இல்ல.. ரொம்ப நன்றி விக்ரம் அத்தான்... நாங்க போய்கிறோம். அப்பா சூப்பரா டிரைவ் பண்ணுவார்.. என்ன ப்பா” என்றாள் இறுதியாக தன் தந்தையை பார்த்து. தனபால் சிரித்துக்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13 சுகுமாரி “கௌரி, இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்.. நாள் பார்த்தாச்சு” என சொல்லிக் கொண்டேதான் வீட்டினுள் வந்தார் அவனின் அன்னை. அதன்பின் அங்கு நடந்தவைகளை எல்லாம் கெளரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், சுகுமாரி.  ரத்தினம், எப்போதும் போல.. தோட்டம் சென்றுவிட்டார். கெளரிக்கு, ‘சஹாவின் பயம்.. அவளின் முகமே சரியில்லை..’ என அன்னை சொல்லவும்.. கெளரியின் முகமும்...
    இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம். அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில்.  சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர். சாகம்பரி கிளம்பும்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 18 கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.. என இருந்தவன்.. இப்போது இந்த நொடியிலிருந்து ஏனோ தளர்ந்தான்.. ‘இவளை நான் கயப்படுத்திவிட்டேனோ..’ என வருத்தம் வந்தது. வீடு வந்தனர் மூவரும்....
    சஹா, “நைட் எங்க வீட்டுக்கு போயிடுவோம் அம்மா.. மோர்னிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.. நாளையிலிருந்து மித்து ஸ்கூல் போகணும்.. ஈவ்னிங் பெங்களூர் போயிவிட்டால் சரியா இருக்கும்..” என நீண்ட விளக்கம் கொடுத்தாள். பிருந்தா எல்லாம் கேட்டுக் கொண்டு... பெண்ணுக்கு பொருட்களை பேக் செய்ய தொடங்கினார். இரவு உணவு முடித்து.. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர் கெளரியின் குடும்பம்.  இங்கே கெளரியின்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 3 சாகம்பரி, அமர்ந்து ரத்தினத்தோடு பேச தொடங்கினாள்.. ம், சோபாவில் அப்படியே உறங்கியிருந்தான் மித்ரன். எனவே, சற்று நேரம் பொறுத்து போகுமாறு ரத்தினம் சொல்ல.. சஹா அமர்ந்துக் கொண்டிருந்தாள். கெளரிசங்கரும் சுகுமாரியும் உண்டனர். அன்னை எதோ மகனிடம் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், மறுபக்கம் எந்த ஆமோதிப்பும் பதிலும் வரவில்லை போல.. எதிர்குரல்...
    கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே. மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப் செய்ய எழுந்து பின்பக்கம் சென்றாள். பெண். அப்போது, சஹாவின் போனில் அழைப்பு வந்தது. கௌரிதான் என தெரியாமல் அழைப்பை ஏற்ற மித்ரன்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 2 அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 7 மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து தர வேண்டும்.. அவள்தான் உடை மாற்றிவிட வேண்டும்.. என புதிதாக அழ கற்றுக் கொண்டான்.  பிக்ஸ் வந்து தளர்ந்து கிடக்கும்...
    HARE KRISHNA வரம் கொடு.. தவம் காண்கிறேன்! ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன கிராமம். ஆனாலும் இன்னும் பசுமை மாறாத கிராமம். அழகாக காலை சூரியன்.. இப்போதுதான் மேலெழுகிறான் போல.. சிவந்தபடி வானில் மின்னத் தொடங்கினான்....
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 16 இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக. இரவு உணவு...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 19 மகன் வெளிநாடு செல்லுவதால், ரத்தினம் சுகுமாரி வந்தனர் மருமகளின் துணைக்கு என.. இரண்டுநாள் முன்பே வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு. சுகுமாரிக்கு, மகனின் மாற்றங்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனிக்க கவனிக்க அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. இரவில், மகன் வரும் வரை.. சஹா அமர்ந்திருப்பது. அதற்கெனவே, மகன் நேரமாக வருவது. காலையில்...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 12 கெளரிசங்கர்க்கு, ஒன்றும் புரியவில்லை. சஹா, சாரி சொல்லியது.. கூடவே காம்பர்மைஸ் பற்றி பேசியது எல்லாம் சேர்ந்து.. அவனுக்கு, ஒரு சோர்வை ஏற்படுத்தியது. ‘அவள் தனக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை’ என தோன்றியது. மனம் தவிக்கிறது. ‘கேளு.. என்ன ஆச்சுன்னு கேளு..’ என மனம் தவிக்கிறது. அவள்தான் கூப்பிடாதீங்க நான் நிம்மதியாக...
    இப்போது மித்ரன் ஒருகையில் தன் உணவை உண்டு கொண்டு.. ப்ரக்யாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு.. அவளுக்கு நெய் ஊற்றி.. சின்ன இட்லி துண்டுகளை ஊட்டினான் அண்ணன். சஹா “டேய்.. பிரசன்னா...” என மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள். பிரசன்னா காதிலே வாங்கவில்லை. இன்னும் இரண்டு சத்தம் போடவும்தான் “வரேன்ன்ம்மா” என்றான் அன்னையிடம். கௌரி டைனின் டேபிள் அருகில்...
    மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில்  இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 5 மாலையில் பண்ணாரியம்மன் கோவில் சென்றனர்.. சாகம்பரி மித்ரன் தனபால் மூவரும். பிருந்தா வரவில்லை என்றுவிட்டார். அவர் இப்போதெல்லாம் அதாவது, தன் பெரியமகள்.. தங்களைவிட்டு போனதிலிருந்து... அதைவிட கொடுமையாக தங்கள் மாப்பிள்ளையும்  தங்களை விட்டு போனதிலிருந்து வீட்டு படி இறங்குவதில்லை.. அதிலும் தெய்வத்தை தொழ கண்டிப்பாக வருவதில்லை அவர். தனபால் தங்களுடைய ப்ளாக்...
    error: Content is protected !!