Thursday, May 16, 2024

    மோனகீதம்

    *13* “எதுக்கு இங்க வந்திருக்கோம்? யாருக்கு என்ன ஆச்சு?” குழப்ப ரேகைகள் அவள் முகத்தினில் படிய, அவளை கலவரப்படுத்த விரும்பாதவன், “நீங்க ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க. மனசுல இருக்குற குழப்பத்தை இறக்கி வச்சா தெளிவு கிடைக்கும். டாக்டர் கிட்ட பேசி பாருங்க.” என்ற அருணை விழி விரித்து பார்த்தாள் கல்பனா. அவர்கள் வர வேண்டிய இடமும் வந்துவிட, அங்கிருந்த...
    பின்னோடே வழியனுப்ப வந்த சுசீலா அன்னை கையை இறுகப் பிடித்து நிறுத்தி, “என்னமா இப்படி பேசிட்ட?” “பின்ன உன்னை மாதிரி யோசிச்சிட்டே இருந்தா ஆச்சா? ஒழுங்கா பொழைக்க கத்துக்கோ. அந்த பொண்ணு எவ்வளவு நாள் இப்படியே இங்கேயே இருக்க முடியும்?” “இருந்தாலும் நீ இப்படி ஒடச்சி பேசியிருக்க கூடாது.” “கூறுகெட்டவளே, நான் பேசாம வேற யார் பேசுவா? கடைசி...
    *12* மூன்றாம் மாதம் முடிவடைந்த நிலையில் மசக்கை சற்று மட்டுப்பட்டு உடல் தெம்பாக உணர்ந்தது. ஆனால் மனமோ ஆறாத காயமாய் ஓரத்தில் எரிந்து கொண்டிருந்தது. சிகாவின் இழப்பு பூதாகரமாய் தெரியவில்லை என்றாலும் செய்யும் செயல்கள் யாவிலும் அவன் இல்லாக்குறை உணர்ந்தாள்.  குழந்தை வளர வளர அவள் எதிர்கொள்ளும் உபாதைகள் அதை மீகி குழந்தையை உணரும் போது வெளிப்படும்...
    “வாழ்த்துக்கள்.” என்று புன்னகை முகமாய் வரவேற்றான் அருண். நேற்றைக்கு முந்திய தினம் வேலைக்கு சேர்ந்து நேற்றே விடுப்பு எடுத்ததில் சங்கடம் கல்பனாவுக்கு. அதுவும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பினாள். இருந்த மனநிலையில் அழைத்து விடுப்பு சொல்லவெல்லாம்  தோன்றவில்லை. “சாரிங்க, நேத்தி ஹாஸ்பிடல் போயிட்டோம், லீவ் போட வேண்டிய சூழ்நிலை. இனி கரெக்டா வந்துடுறேன்.” “பரவாயில்லைங்க. சிகாவே திரும்ப கிடைச்சிருக்கான். அவன்...
    *11* இனிப்புகள் பரிமாறி கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியை இருகுடும்பமும் அத்தனை உவப்பாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிர்ச்சி, அறியாமை, கலக்கம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் கல்பனா கருவுற்றிருக்கிறாள் என்றதும். காயத்ரி விஷயத்தை வீட்டில் பகிர, கபிலன் தேவிக்கு அழைத்து சொன்னார். உடனே சேகரையும் சுசீயையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவருக்கு கல்பனா என்ன நினைப்பில் இருக்கிறாள், எங்கு தங்க விரும்புகிறாள்,...
    காலை அவன் சொல்லி சென்ற டீ கடை இரண்டாவதாய் தெரிந்தது. அங்கே சென்றவள் தனக்கென்று பன் மற்றும் டீ வாங்கிக்கொள்ள, “இனிமே ஏதாவது வேணும்னா உங்க கடை வாசல்லேந்து வாசுனு குரல் கொடுங்க, நானே எடுத்துட்டு வரேன்.” என்று புன்னகை முகமாய் அவன் சொல்ல, சரியென்று தலையாட்டினாள் கல்பனா. “அப்புறம் தினம் டீ, பன்னுக்கு காசு கொடுக்க...
    *10* “அந்த அரிசி கடையில வேலை பார்த்தா காலத்தை ஓட்ட முடியாதுனு சிகாவே வேற இடத்துக்கு மாறுனான். நீ திரும்ப அங்கேயே போக போறேன்னு நிக்குற.” எதிர்ப்புக் குரல் இரு குடும்பத்திலிருந்தும் வந்தது. அவளே கூட அருண் கடையிலிருந்து வேலையை மாற்றிக்கொள்ளும்படி சிகாவிடம் சொல்லி இருக்கிறாள் தான் ஆனால் இன்று அவள் எண்ணம் வேறு. அலைந்து திரிந்து வேலை...
    “நீ பட்டதெல்லாம் போதும்டி, நடந்த எல்லாத்தையும் மறந்துடு. அப்பாவை நல்ல இடமா பாக்க சொல்றேன், வேற கல்யாணம் கட்டிக்க. என் கண் குளிர நீ சந்தோஷமா வாழ்றதை பார்த்துட்டு கண் மூடிடுறேன்.” “ம்மா!” அழுத்தமாய், அமைதியாய் அதே சமயம் ஆக்ரோஷமான அழைப்பு.  “கஷ்டமா தான் இருக்கும். ஆனா நாளைக்கு நீ மட்டும் தனியா நிப்படி. புருஷன் இருந்தாதான்...
    *9* தன் மடியில் படுத்திருக்கும் மகளின் தலையை வருடியபடி இருந்தார் சரளா. காயத்ரி இருவருக்கும் டீ எடுத்து வந்து கொடுக்க, அதை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை இருவரும். “கல்ப்ஸ், டீ குடிடி.” காயத்ரி உசுப்ப,  “அத்தானும் இப்பிடித்தான் கூப்பிடுவாங்க காயு.” எனும்போதே உடைந்தது கல்பனாவின் குரல். வலியும் நடுக்கமுமாய் மனம் சிகாமணியின் நினைவுகளில் திண்டாடியது.  வேந்தன் மனைவியை அழுத்தமாய் பார்த்து...
    “என்கிட்ட தான் கடைசியா பேசினான். உங்களை எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு கண் மூடினான். அப்போ அவன் கண்ல பயம் தெரில,  எல்லாத்தையும் நான் பொறுப்பா பாத்து சரி பண்ணிடுவேன்னு நம்பிக்கை தெரிஞ்சுச்சு. என்னையும் உங்கள்ல ஒருத்தனா சேர்த்துக்கோங்க. அவன் இடத்தை கண்டிப்பா என்னால நிரப்ப முடியாது. ஆனா என் வாழ்க்கையில இருக்கிற வெற்றிடத்தை உங்களால...
    *8* மடிந்ததின் வலியை அனுபவித்தவன் அதையெல்லாம் தாண்டி முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவன் மூச்சை முடக்கியிருந்தது அந்த விபத்து. எல்லாம் முடிந்தது என்று நினைக்கையிலேயே அருணின் கை நடுங்க, அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சிகாவிடமிருந்து அருணை பிரித்து தனியாக அமர வைத்தனர்.  தன் உடல் முழுதும் ஈஷியிருந்த சிகாவின் இரத்தம் அருணின்...
    “சாப்பாடு எடுத்து வை கல்ப்ஸ் வந்துடுறேன்.” என்ற சிகா வாயிற்கதவு அருகே நின்று அன்னையை பார்த்துவிட்டு பின்பக்கம் கடைசியில் உள்ள மாடிப்படி வழியே மாடி ஏற, தேவியும் பின்னோடு சென்றார். “என்னடா?” “பணம் ஏதாவது சேர்த்து வச்சிருக்கியா அம்மா?” சிகா நேரடியாய் கேட்டிட, புருவம் இரண்டையும் நெறித்து யோசனையாய் பார்த்தார் தேவி. “இதுக்கு மேலையும் இந்த வீட்லயே இருக்குறது...
    *7* காலை யார் சமைக்க என்று சுசீலா கல்பனா முகம் பார்க்க, கல்பனா சுசீலா முகம் பார்த்து நின்றாள். அப்பொழுது தான் குளித்து வந்த தேவி இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் கட்டில் நுழைந்து அவர் பாட்டிற்கு சமைக்க ஆரம்பித்து விட்டார்.  இரண்டு நாள் அம்மாவுடன் இருந்துவிட்டு அச்சமயம் தான் வீடு வந்திருந்தாள் கல்பனா.  சரளாவை வீட்டிற்கு...
    சுசீலாவுக்கு இத்தனை நாள் உரிமையாய் தான் வளைய வந்த அறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஒப்பவில்லை. சேகருக்கு தங்களை ஒதுக்கி வைத்த மாமன் மகள் தம்பியின் மனைவியாய் வந்திருப்பதில் அத்தனை உவப்பு இல்லை. இவ்வளவு நாள் இல்லாது இன்று அண்ணன் குடும்பம் ஹாலில் உறங்க, தான் மனைவியுடன் அறையிலா என்ற சங்கடம் சிகாவுக்கு. தங்களுக்கான...
    *6* மூன்று வருடங்களுக்கு முன் இரவோடு இரவாய் பேருந்தேறி விடியும் வேளையில் வந்திறங்கிய போது திகிலூட்டிய சென்னை மாநகர் அன்று போல் இன்றும் வாய்ப்பளித்து நம்பிக்கை கொடுத்தது சிகாவுக்கு. ஒரு வாரமாய் பிரபல பல்பொருள் அங்காடியில் உதவி ஊழியன் பணிக்கு சென்று கொண்டிருக்கிறான். முன்பை விட இரட்டிப்பு ஊதியம். இரட்டிப்பு வேலை. ஆனால் அதற்கான மாறுதல்...
    வேந்தன் சொன்னபடி இரண்டாம் நாளும் சரளாவுக்கு வலி இருக்க, அன்று காலையே மருத்துவமனை கிளம்பி விட்டனர். கபிலன் வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாததால் கடைக்கு சென்றுவிட வேந்தனும் கல்பனாவும் உடன் சென்றனர். முன்பு சென்ற மருத்துவமனை விட சற்று பெரிய மருத்துவமனை சென்றனர். பெரிதாய் ஒன்றும் இருக்காது என்ற தைரியத்துடன் சென்றவர்களுக்கு முதல் இடியாய்...
    *5* அலைபேசி பறிக்கப்பட்டிருக்க எந்நேரமும் தன்னைத் தொடரும் கண்காணிப்புப் பார்வையில் இந்த நான்கு நாட்களில் மனதளவில் சுணங்கிவிட்டாள் கல்பனா. படிப்பும் முடிந்திருக்க அனுதினமும் வீட்டுவேலை அவளை சூழுந்துகொண்டது. சிகாவிடம் பேச நேரமும் இல்லை வழியும் இல்லை. அன்று இரவும் அப்படி தோசை ஊற்றிக்கொண்டிருக்க ஒவ்வொருவராய் உண்ண அமர்ந்தனர். கபிலனும் வேந்தனும் காலை முதல் இரவு வரை...
    காலை பத்து மணி போல வந்து சரளாவை பரிசோதித்த சிறப்பு மருத்துவர் வாயுத்தொல்லையால் ஏற்பட்ட வலிதான் என்றார். “வாயு தொல்லையா அம்மா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்களே…” வேந்தன் விவரம் கேட்க,  “சிலருக்கு இதுபோல வாயுத்தொந்தரவால் மேல் வயிற்றில் வர்ற வலியை நெஞ்சு வலின்னு தப்பா புரிஞ்சிப்பாங்க. எதுக்கும் பார்த்துடலாம்னு எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. ஹார்ட்ல எந்த ப்ராப்லமும்...
    *4* யாரும் இப்படி ஆகும் என்று எண்ணி இருக்கவில்லை. நிசப்தமான அந்த அடர் இருள் வேளையில் கண்ணீரும் கம்பலையுமாய் கல்பனா இருக்கையில் சாய்ந்தமர்ந்திருக்க, அருகில் சிகாமணி. அவள் கரம் பிடித்து தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல மனம் துறுதுறுத்தாலும் மாமனும் மச்சினனும் வந்துவிட்டபடியால் சற்று தள்ளி நின்றிருந்தான். போனை எடுத்து மணி பார்க்க நள்ளிரவை தாண்டியிருந்தது. அவசர...
    மனம் முழுக்க பாரமேறி இருக்க, கால்கள் தன்னால் இரண்டு மாடி ஏறி மொட்டை மாடி கூட்டிச் சென்றது. கல்பனாவுக்கு ஒரு வணக்கத்தை தட்டிவிட்டவன் இருளை விரட்டும் நிலவை இலக்கின்றி வெறித்தான். சற்று நேரத்திலேயே கல்பனாவிடமிருந்து அழைப்பு வந்தது. “நானே போன் பண்ணி இருக்கேன். பாசமா ஒரு ஹலோ கூட கிடைக்காதா?” சிகா அழைப்பை ஏற்று அமைதியாய்...
    error: Content is protected !!