காதல் அலை
அலை 17 ( 1 )
காதலை பாடாமல்
காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் …சாபம்
திருமணமாகிச் சென்ற அனீஸ் கணவனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினாள். அவள் புகுந்த வீட்டாரும் அவளை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். ஆதவன் போலவே மேற்படிப்புக்காக அவள் கணவன் ரஃபியும் திருமணம் முடிந்த மறுமாதமே வெளிநாடு சென்று விட, நடந்துப் போகும் தூரத்திலேயே இருந்த...
அலை 16 (2)
எப்போதும் மாலையானால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் தாமரையைக் கண்டதும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் கலகலவெனப் பேசிக் கொண்டே வரும் தில்லை அன்று அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினாலும் அதிகம் பேசாமல் யோசனையிலயே இருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் செண்பகாவிடம் இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை எடுத்து வைக்கச் சொன்னவள் தான் வந்து அனைத்தும் செய்வதாகக்...
அலை 16 ( 1 )
உடல் என்ன…உயிர் என்ன…
உறவென்ன…உலகென்ன….
விதியென்ன…விடையென்ன மனமே…
தாமரையைக் காட்டிலும் தில்லை கல்லூரிக்கு சென்று வருவதில் மிகவும் சோர்ந்து போனாள். ஆனால் அதனை தாமரையிடம் காட்டிக் கொள்ளாமல் இருந்தவள், அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன்,
"செண்பா மதினி.. எனக்கு கொஞ்சம் காஃபி.. " என்றவாறு சமையலறைக்குள் நுழைய.. செண்பகா அவர்களது மதிய உணவுப் பாத்திரங்களை...
அலை15 ( 2 )
"ஹேய் தில்லை.. நீ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட… ஆமா எனக்கு பிளஸ் டூ முடிக்கவும் கல்யாணம் ஆகிருச்சு.. ஆனா உன் கேள்வி தான் புரியல… உங்களுக்கும்னா வேற யாருக்கு கல்யாணமாச்சு … உங்க ஊருலருந்து வருவாளே காமர்ஸ் குரூப் இந்துமதி அவளுக்கும் கல்யாணமாகிருச்சா…"
"இல்ல அனீஸக்கா.. அவங்க ஃபாத்திமா காலேஜ்ல பி.காம் செகன்ட்...
அலை 15 ( 1 )
அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே…
"இது என்ன ஃபீல் … செல்வி அண்ணன... என நினைத்தவள் , ம்ஹூம் என் மாமாவ நான் காதலிக்கிறேன்…" என யோசிக்க ஆரம்பிக்கையில் தாமரையின் அழுகை சத்தம் , அதை தடைசெய்ய தொலைக்காட்சி பெட்டியின்...
அலை 14 (2)
இப்படி தில்லைக்கு ஆதவனை நினைத்தாலே மனதும் உடலும் பரவசமைடய செய்தது என்றால் ஆதவனின் நிலையோ வேறாக இருந்தது.
தொலைப்பேசியை எடுத்ததும் படபடவென பேச ஆரம்பித்தது தில்லைதான் என உணர்ந்தவன், அவள் யாரிடம் பேசுவதாக நினைத்துப் பேசினாளோ.. ஆனால் பேசிய வார்த்தைகள் தன்னைச் சுட்டுவதாகவேத் தோன்றியது. அதிலும் அவள் சுயநலவாதி என்றது… அவன் அவளிடம்...
அலை14 (1)
அதற்குள் பேப்பர்வெய்ட் விழுந்த சத்தத்தில் தாமரையும் செண்பகாவும் அங்கு வந்திருந்தனர்.
ஊருக்கு சென்றதிலிருந்து தேவகி மகள் சாப்பிட்டாளா… உறங்கினாளா என்ன செய்கிறாள் , விறகடுப்பு… மண்ணென்னை அடுப்பில் மட்டுமே சமைத்து பழகியிருந்த தேவகிக்கே புதிதாக அறிமுகமான எரிவாயு அடுப்பு பயத்தைக் கொடுக்க பார்த்து பார்த்து சமைக்க துவங்கியிருந்தவர் , இப்போது அங்கும் அதே கேஸ்...
அலை 13 (2)
தில்லையின் தந்தை சொக்கலிங்கத்திற்கு மகளை விட்டுக் கிளம்புவது மனதிற்கு என்னவோ செய்தது.தில்லை அவருக்கு அவ்வளவு செல்ல மகள்.. அவரைப் பொறுத்தவரை இன்னும் குழந்தை தான் அவள் . மகளை படிக்க வைக்கவே விரும்பினார்.அருணாச்சலத்தின் தாய் மாமன் மகனே சொக்கலிங்கம்.. எனவே தான் மகளை ஆதவனிற்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டிய...
அலை 13 (1)
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு இருந்து அமெரிக்காவில் ஆதவன் தங்கி இருக்கும் இடத்திற்கும் வர முழுதாக இரண்டரை நாட்கள் ஆகிவிட்டது. நேரடியாக விமானமும் கிடையாது… மிகவும் அலுத்துப் போயிருந்தான். இந்தியாவில் அது இரவு நேரம்.. உறங்குபவர்களை தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்தவன் அவனும் பயணக் களைப்பு நீங்க ஓய்வு எடுத்த...
அலை 12 ( 2 )
இரவில் மனைவிக் கொடுத்த அந்த இனிய உணர்வுகளை எண்ணிக் கொண்டே குளித்து உடையணிந்து அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க… அறைக் கதவு தட்டப்பட்டது. தேவராஜன் தயாராகி வந்தவன்,
"மச்சான் கிளம்பலாமா..." என நின்றுக் கொண்டிருந்தான். 'தயார்' என்றவனுக்கு மனைவி கண்ணில் படுவாளா என்றிருந்தது. ஆனாலும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே...
அலை 12 ( 1 )
ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. "மா..மா..." என்றாள் தில்லைநாயகி.
அந்த இரவில் ஆதவனுக்கு " மாமா" என்ற மெல்லிய அழைப்புக்கூட அவனது தாபத்தை அதிகமாக்க.. " ம் " என்றவாறு இப்போது...
அலை 11 (2)
வேகமாக கீழே இறங்கி வந்த தேவாவின் கண்களில் இரவு விளக்கின் ஒளியில் கையில் முகம் புதைத்து முழங்காலில் கவிழ்ந்திருந்த தாவணிப் பெண் தெரியவும் ,
"என்ன பாப்பா இருட்டுல தலைல கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்க.. தலை வலிக்குதா காஃபி போட்டுத் தர வா" என்றவாறே அருகில் வந்தான். அந்த சத்தத்தில் நிமிர்ந்ததோடு எழவும்...
அலை 11 (1)
ஆதவன் வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் தனது பொருட்களை வைத்து விட்டு தேவராஜன் கூறியது போல் மொட்டை மாடியில் உறங்க தேவாவோடு வந்தான் விஜய்.ஆதவன் அவர்களிடம் பேசிவிட்டு அவனறைக்குச் செல்வதை வீட்டிற்குள் இருந்து இரண்டாம் தளம் வரும் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் நின்று கவனித்த தேவராஜன் அந்த கம்பிக் கதவினை மூடாமல் விஜயிடம் வந்து...
"நீ முதல்ல அவர் அறைகுப் போ.. உன் துணிமணி எல்லாம் செண்பாட்ட கொடுத்து அங்க வச்சுட்டேன்.. வெள்ளனே எழுந்து குளிச்சிரணும் சரியா…"
"என்ன வெள்ளனே எந்திரிக்கணுமா அதெல்லாம் முடியாது.. அப்படியே எழுந்தாலும் நான் வந்து காபி குடிச்சுட்டுத் தான் குளிக்க போவேன்."
"முருகா இவளுக்கு என்னத்த புரிய வைக்கிறது.. " என நினைத்தவர் , "அது பாப்பா...
அலை 10
உறவினர்கள் அனைவரையும் வழியனுப்பிய தேவகி உதவியாளர்கள் கொண்டு வீட்டையும் ஒதுக்கி விட்டு , தனது கணவர் மகன் , அருணாச்சலம் என அனைவருக்கும் தேவையானவற்றை செய்து விட்டு , மகளும் மருமகளும் மீனாட்சியின் அறையிலயே இருந்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர் அவர்களுக்கும் குடிப்பதற்கு பால் எடுத்து வந்தார்.
ஆவுடையாச்சி மறுநாள் தான் அவர்கள் வீட்டிற்கு...
ஆதவன் அருகே நின்ற தில்லைக்கோ ஓரளவிற்கு மேல் பொறுமையாக நிற்க முடியவில்லை. எனவே ஆதவன் அருகில் வந்து நின்றவள் ,
"என்ன வேணும்.. " என , அவள் மட்டுமே நினைவில் நின்றதால் அவனிடம் தான் பேசுகிறாள் என்பதும் ஆதவனுக்கு மயக்கத்தைக் கொடுக்க அவன் கேட்டதொனியோ அவன் மீது ஈர்ப்பைக் கொடுக்க .. அவனும் விளையாட்டாக…
"நீதான்...
அலை.9
தில்லையைத் தேடிச் சென்ற தேவகி , அவள் தாமரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்து அருகில் வந்தவர் ,
"பாப்பா அழாதமா... உங்கத்தை தெய்வமா இருந்து அவுக பிள்ளைகள பார்த்துக் கிடுவாக.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்ப மருமவனுக்கு ஏதோ வேணுமாம் உன்னையத் தேடுதாகளாம்… போம்மா போய் என்னனுக் கேளு..." எனவும் , கண்ணீரைத்...
விஜயானந்த் மேல் அருணாச்சலம் கொண்ட நம்பிக்கை விஜயிற்கும் உத்வேகத்தைக் கொடுக்க … நண்பனின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்ட விஜய் ஆதவனிடம் ,
"ஆதவ் ஆன்ட்டி சொல்றதும் சரிதானே... கூடவே மாமாவுக்கு பிஸ்னஸ் ல நான் ஹெல்ப் பண்றேன்.. உன் அப்பாவையும் தங்கையையும் பார்த்துக்க இவங்க எல்லாரும் இருக்கிறாங்க.." என்றவன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த...
அலை 8
இன்றோடு பதினாறு நாட்கள் ஆகிற்று மீனாட்சி உலகை விட்டுச் சென்று … இன்று மாலை மீனாட்சிக்கு காரியம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, வீடு முழுவதும் உறவுகள் குழுமியிருந்தனர். மறைந்த அன்றிலிருந்தே வீட்டில் நிறைய உறவுகள் தங்கியிருக்க .. தேவகி இப்போது முழுப்பொறுப்பையும் எடுத்திருந்தார். அவர் இப்போது அருணாச்சலத்தின் தங்கை மட்டுமல்லவே.. இவ்வீட்டின்...
" என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும் பார்த்துக்குவாங்க தங்கம் ... நீ எவ்வளவு படிக்கணுமோ படி... படிப்புக்கு எந்தக் குறைவும் வராது. என் பொறந்த வீட்டார் பொட்டப்புள்ள...