Advertisement
“நீ முதல்ல அவர் அறைகுப் போ.. உன் துணிமணி எல்லாம் செண்பாட்ட கொடுத்து அங்க வச்சுட்டேன்.. வெள்ளனே எழுந்து குளிச்சிரணும் சரியா…”
“என்ன வெள்ளனே எந்திரிக்கணுமா அதெல்லாம் முடியாது.. அப்படியே எழுந்தாலும் நான் வந்து காபி குடிச்சுட்டுத் தான் குளிக்க போவேன்.”
“முருகா இவளுக்கு என்னத்த புரிய வைக்கிறது.. ” என நினைத்தவர் , “அது பாப்பா புருஷன் வெளிய கிளம்புனதுக்கு அப்புறம் தலைக்கு குளிக்க கூடாது… “அவர் சொல்லி முடிக்கவில்லை.
” என்ன தலைக்கா… இன்னைக்கு நீ தானம்மா தலைய அலசி விட்ட.. நாளைக்குமா… எனக்கு தலைவலி வந்துரும்..” என்றவளிடம் என்ன சொல்லி புரிய வைக்க என குழம்பியவர் ,
“சரிக் எழுந்து வா.. நானே அலசி விடுறேன்…”
“காபி குடிச்சுட்டுத்தான்…” என்றவளிடம்’ சரி ‘ என்றாலும் அவள் தாடையைப் பிடித்து,
“பாப்பா மருமவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும் சரியா.. எங்க கிட்ட வாயக் கொடுக்கிற மாதிரி அவர்கிட்ட கொடுக்காத… ” என்றவரும் மாடியேறப் பார்க்க..
“போம்மா.. கல்யாணம் பண்ணினா இப்படியெல்லாம் இருக்கணுமா… நான் நானாதான் இருப்பேன்.” என்றவள், “ஆமா நீ ஏன் மாடியேறுற .. எனக்குப் போகத் தெரியாதா… அப்புறம் கால் வலிக்குது இடுப்பு வவிக்குதுனு சொல்லி.. என்னைய மருந்து தடவ சொல்லுவ..” என்றவள் அவள் மட்டுமாக ஆதவனறைக்குள் நுழைந்தாள்.