காதல் அலை
அத்தியாயம் 7
எப்போதும் மீனாட்சியின் நினைவிலேயே இருந்த தாமரைசெல்விக்கு தன் காதுகள் கேட்ட செய்தியை நம்பவே முடியவில்லை. மீனாட்சி எப்போதும் திருமணம் திருமணம் எனப் பேசுவார்தான். ஆனால் இந்த நிலையில் பேசினால்... அம்மாவிற்கு ஏதோ மிகப் பெரிய அளவில் பாதிப்போ… அதனால் தான் இந்தப் பேச்செல்லாம் பேசுகிறாரோ.." இப்படி தான் தாமரையின் நினைவுகள் ஓடியது. ஆனால்...
அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை ... ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை.
ஒரு வாரம் சென்று இருக்கும்… ஒரு நாள் அதிகாலையில் மீனாட்சிக்கு உடல்நிலை சரியில்லாது போகவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவும் அவசர சிகிச்சைப்...
அலை 6
மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்…
"பாப்பா..." என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப் பார்க்க விடாமல் குற்றவுணர்வு உருவாகி கண்களில் நீரை தேக்கியது.ஆதவனோ தங்கையின் கண்ணீரில் பதற்றமானவன் ,
" என்ன.. என்ன பாப்பா…" எனவும்...
விஜயிற்கு இதெல்லாம் புதிதே… தாமரை தூக்கி வைத்திருந்தாள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆட்டுக்குட்டியை அவனும் கையில் அள்ளிக் கொண்டது.மொத்தத்தில் தாமரை… தாமரை… தாமரை மட்டுமே அவனது எண்ணங்களில்.. அவள் ஒருவளால் மட்டுமே இங்கேயே இருக்கும் முடிவை எடுத்திருந்தான்.
கையேந்தும் ஆட்டுக் குட்டி
கன்னிப் பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணைக் காட்டி
மையல் தீரப் பேசாதோ…
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு…
வெளியே...
அத்தியாயம் 5
அவ்வார இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்க .. தாமரை தில்லை என இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஏற்கனவே தாமரை எழுதியிருந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவும் வந்திருக்க அடுத்த வாரத்தில் சென்னைக்கு கவுன்சிலிங் செல்வதாக இருந்தாள் தாமரை.
தில்லையோ விவசாயக் கல்லூரியில் இளங்கலை பயில விண்ணப்பித்திருந்தாள். தன் தோழியிடமும் ,
"தாமரை...
தாமரையின் திராட்சை விழிகள் இங்கும் அங்கு மாக ஓடி இறுதியில் தன் விழிகளில் வந்து நின்றதும்.. விஜய்க்கு ஆதவனிடம் காரை நிற்பாட்ட சொல்லி .. ஒரு துள்ளல் போட வேண்டும் போல் உள்ளுக்குள் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது…
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்…
அவளும் என்னைப் பார்க்கிறாள்.. அவளுக்கும் என்னைப்...
அலை 4
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்
" சா... சாரி.. பாப் … அது தங்கச்சினு நினைச்சிட்டேன்..." என்ற தேவராஜிடம் ,
"பரவாயில்ல தேவாத்தான் .. " என்றவாறு புன்னகைத்தவளைக் கண்டு உலகையே மறந்தான் தேவராஜன். இத்தனை நேரம் இளம் பெண்கள் பலரைக் கண்டு அவர்களை நண்பர்களோடு இணைந்து...
தாமரை நிலையும் வேறாக தான் இருந்தது ... காலை முதல் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அந்நிய ஆடவனது அருகிலே நிற்பது அந்த சித்திரை மாத இரவில் உடலில் வியர்வை முத்துக்களை அதிகம் பூக்கச் செய்தது. அதுவரை அவனைக் காண முடியாது விழிகளை அலையவிட்டவள் காதுகளில் ..
பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்..
தோள் சேர...
அலை 3
கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்…
பெண்களை முன்னால் செல்ல விட்டு ஆதவனும் விஜயும் வண்டியை நிறுத்திவிட்டு பொருட்காட்சி திடலுக்குள் நுழைந்தனர்.தேவகியும் மீனாவும் மெல்ல நடக்க இளம் பெண்கள் இருவரும் அங்குள்ள கடைகளை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நடந்தனர். மீனாவின் முகம் பார்த்த தேவகி…
"மதினி...
"ஆமா இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... என்னையப் பார்த்து இந்த ஆளு என்ன சொல்லிச்சு.. என்னம்மா குச்சிமிட்டாய் மாதிரி இருக்கிறவளுக்கு புடவையசுத்தி வச்சுருக்காங்கனு கேட்டுச்சுல்ல ... ம் இதுவும் சிலம்பு சுத்துற குச்சிகணக்கா தான…" என யோசித்துக் கொண்டிருந்தவள் இப்போது ஆதவனின் முழு உயரமும் கம்பீரத் தோற்றமும்.. அதுவும் அவன் காரில் சாய்ந்து...
அலை 2
மாலை நான்கு மணியளவில் ஒரு டீ ஷர்ட்டும் ஜீன்ஸூம் அணிந்து அன்றைய புதிய வகை வாகனமான மாருதி எஸ்டீமில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் ஆதவன்.விஜயும் தன் பையோடு வர ,
"என்னடா பையெல்லாம் எடுத்துட்டு வந்துட்ட... இன்னைக்கு இங்க தங்க சொன்னேனே.."
"இல்ல ஆதவ் ... மதியம் அப்பா ஊருல இருக்கிற ஒரு அங்கிளுக்கு...
"ஓ... கூடப் பிறந்தவங்க..." என்ற மீனாட்சியிடம் ,
" இல்லமா... இவன் மட்டும் தான்...அவங்க அம்மாவோட அப்பாவும் ராணுவத்துல இருந்தப்பதான் விஜய் அப்பா அவங்க அம்மாவ பார்த்து விருப்பட்டு கல்யாணம் பண்ணியிருக்கார். ஆனா அவங்க அப்பா தாத்தா அவங்க கல்யாணத்த ஏத்துக்காததால வடக்கையே செட்டில் ஆகிட்டாங்க... சமீபத்துல அப்பா அம்மானு ரெண்டு பேரையும் இழந்துட்டான். என்னவோ...
அலை 1
தொண்ணூறுகளின் ஆரம்பகாலங்கள்…
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி..
மதுரைக்கும் தேனிக்கும் இடையில் அமைந்துள்ள நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத சிற்றூரில் அமைந்துள்ள அந்த பெரிய வீட்டினுள்ளிருந்து தான் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கூடத்திலுள்ள படியில் மெதுவாக ஏறிக் கொண்டிருந்த மீனாட்சி,கீழே இருந்த பெரிய கூடத்தில் அமர்ந்து நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த...