காதல் அலை
அலை 35(final)
மதுரையிலும் இருக்கும் ஆதவனது வீட்டில் தான் இப்போது மனைவி மகனோடு தங்கியிருந்தான் ஆதவன். , அங்கிருந்து தான் உதகைக்கு கிளம்புவதாக இருந்தார்கள். பெண் குழந்தை உடை உடுத்திய பொம்மையை தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவளிடம் ,
"திலோ ... மாமா என்ன சொல்றேனோ அதெல்லாம் இப்ப சொல்லணும் சரியா... பாப்பாவுக்கு ஸ்வெட்டர் அப்புறம் நீ...
அலை 3
கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்…
பெண்களை முன்னால் செல்ல விட்டு ஆதவனும் விஜயும் வண்டியை நிறுத்திவிட்டு பொருட்காட்சி திடலுக்குள் நுழைந்தனர்.தேவகியும் மீனாவும் மெல்ல நடக்க இளம் பெண்கள் இருவரும் அங்குள்ள கடைகளை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நடந்தனர். மீனாவின் முகம் பார்த்த தேவகி…
"மதினி...
தாமரை நிலையும் வேறாக தான் இருந்தது ... காலை முதல் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அந்நிய ஆடவனது அருகிலே நிற்பது அந்த சித்திரை மாத இரவில் உடலில் வியர்வை முத்துக்களை அதிகம் பூக்கச் செய்தது. அதுவரை அவனைக் காண முடியாது விழிகளை அலையவிட்டவள் காதுகளில் ..
பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்..
தோள் சேர...
அலை 4
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்
" சா... சாரி.. பாப் … அது தங்கச்சினு நினைச்சிட்டேன்..." என்ற தேவராஜிடம் ,
"பரவாயில்ல தேவாத்தான் .. " என்றவாறு புன்னகைத்தவளைக் கண்டு உலகையே மறந்தான் தேவராஜன். இத்தனை நேரம் இளம் பெண்கள் பலரைக் கண்டு அவர்களை நண்பர்களோடு இணைந்து...
தாமரையின் திராட்சை விழிகள் இங்கும் அங்கு மாக ஓடி இறுதியில் தன் விழிகளில் வந்து நின்றதும்.. விஜய்க்கு ஆதவனிடம் காரை நிற்பாட்ட சொல்லி .. ஒரு துள்ளல் போட வேண்டும் போல் உள்ளுக்குள் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது…
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்…
அவளும் என்னைப் பார்க்கிறாள்.. அவளுக்கும் என்னைப்...
அலை 6
மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்…
"பாப்பா..." என்ற ஆதவனின் அழைப்பு தாமரையை நிகழ்வுக்கு கொண்டு வர… ஒரு வித பதற்றம் உருவாகி சகோதரனைக் கூட நிமிர்ந்துப் பார்க்க விடாமல் குற்றவுணர்வு உருவாகி கண்களில் நீரை தேக்கியது.ஆதவனோ தங்கையின் கண்ணீரில் பதற்றமானவன் ,
" என்ன.. என்ன பாப்பா…" எனவும்...
அலை 8
இன்றோடு பதினாறு நாட்கள் ஆகிற்று மீனாட்சி உலகை விட்டுச் சென்று … இன்று மாலை மீனாட்சிக்கு காரியம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, வீடு முழுவதும் உறவுகள் குழுமியிருந்தனர். மறைந்த அன்றிலிருந்தே வீட்டில் நிறைய உறவுகள் தங்கியிருக்க .. தேவகி இப்போது முழுப்பொறுப்பையும் எடுத்திருந்தார். அவர் இப்போது அருணாச்சலத்தின் தங்கை மட்டுமல்லவே.. இவ்வீட்டின்...
அலை 12 ( 2 )
இரவில் மனைவிக் கொடுத்த அந்த இனிய உணர்வுகளை எண்ணிக் கொண்டே குளித்து உடையணிந்து அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க… அறைக் கதவு தட்டப்பட்டது. தேவராஜன் தயாராகி வந்தவன்,
"மச்சான் கிளம்பலாமா..." என நின்றுக் கொண்டிருந்தான். 'தயார்' என்றவனுக்கு மனைவி கண்ணில் படுவாளா என்றிருந்தது. ஆனாலும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே...
விஜயானந்த் மேல் அருணாச்சலம் கொண்ட நம்பிக்கை விஜயிற்கும் உத்வேகத்தைக் கொடுக்க … நண்பனின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்ட விஜய் ஆதவனிடம் ,
"ஆதவ் ஆன்ட்டி சொல்றதும் சரிதானே... கூடவே மாமாவுக்கு பிஸ்னஸ் ல நான் ஹெல்ப் பண்றேன்.. உன் அப்பாவையும் தங்கையையும் பார்த்துக்க இவங்க எல்லாரும் இருக்கிறாங்க.." என்றவன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த...
"நீ முதல்ல அவர் அறைகுப் போ.. உன் துணிமணி எல்லாம் செண்பாட்ட கொடுத்து அங்க வச்சுட்டேன்.. வெள்ளனே எழுந்து குளிச்சிரணும் சரியா…"
"என்ன வெள்ளனே எந்திரிக்கணுமா அதெல்லாம் முடியாது.. அப்படியே எழுந்தாலும் நான் வந்து காபி குடிச்சுட்டுத் தான் குளிக்க போவேன்."
"முருகா இவளுக்கு என்னத்த புரிய வைக்கிறது.. " என நினைத்தவர் , "அது பாப்பா...
அத்தியாயம் 5
அவ்வார இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்க .. தாமரை தில்லை என இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஏற்கனவே தாமரை எழுதியிருந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவும் வந்திருக்க அடுத்த வாரத்தில் சென்னைக்கு கவுன்சிலிங் செல்வதாக இருந்தாள் தாமரை.
தில்லையோ விவசாயக் கல்லூரியில் இளங்கலை பயில விண்ணப்பித்திருந்தாள். தன் தோழியிடமும் ,
"தாமரை...
விஜயிற்கு இதெல்லாம் புதிதே… தாமரை தூக்கி வைத்திருந்தாள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆட்டுக்குட்டியை அவனும் கையில் அள்ளிக் கொண்டது.மொத்தத்தில் தாமரை… தாமரை… தாமரை மட்டுமே அவனது எண்ணங்களில்.. அவள் ஒருவளால் மட்டுமே இங்கேயே இருக்கும் முடிவை எடுத்திருந்தான்.
கையேந்தும் ஆட்டுக் குட்டி
கன்னிப் பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணைக் காட்டி
மையல் தீரப் பேசாதோ…
உன்னாலே தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ ஆயாச்சு…
வெளியே...
" என் தங்கமே… என் பொறந்த வீட்டுக் குலம் உன்னால தான் வளரணும்ங்கிறது அந்த ஆண்டவனோட முடிவா இருக்கும் போது அதை யாராலயும் மாத்த முடியாது. உன்னைய கண்ணு போல அங்க எல்லாரும் பார்த்துக்குவாங்க தங்கம் ... நீ எவ்வளவு படிக்கணுமோ படி... படிப்புக்கு எந்தக் குறைவும் வராது. என் பொறந்த வீட்டார் பொட்டப்புள்ள...
அலை 10
உறவினர்கள் அனைவரையும் வழியனுப்பிய தேவகி உதவியாளர்கள் கொண்டு வீட்டையும் ஒதுக்கி விட்டு , தனது கணவர் மகன் , அருணாச்சலம் என அனைவருக்கும் தேவையானவற்றை செய்து விட்டு , மகளும் மருமகளும் மீனாட்சியின் அறையிலயே இருந்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர் அவர்களுக்கும் குடிப்பதற்கு பால் எடுத்து வந்தார்.
ஆவுடையாச்சி மறுநாள் தான் அவர்கள் வீட்டிற்கு...
அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை ... ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை.
ஒரு வாரம் சென்று இருக்கும்… ஒரு நாள் அதிகாலையில் மீனாட்சிக்கு உடல்நிலை சரியில்லாது போகவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவும் அவசர சிகிச்சைப்...
அலை 12 ( 1 )
ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. "மா..மா..." என்றாள் தில்லைநாயகி.
அந்த இரவில் ஆதவனுக்கு " மாமா" என்ற மெல்லிய அழைப்புக்கூட அவனது தாபத்தை அதிகமாக்க.. " ம் " என்றவாறு இப்போது...
அத்தியாயம் 7
எப்போதும் மீனாட்சியின் நினைவிலேயே இருந்த தாமரைசெல்விக்கு தன் காதுகள் கேட்ட செய்தியை நம்பவே முடியவில்லை. மீனாட்சி எப்போதும் திருமணம் திருமணம் எனப் பேசுவார்தான். ஆனால் இந்த நிலையில் பேசினால்... அம்மாவிற்கு ஏதோ மிகப் பெரிய அளவில் பாதிப்போ… அதனால் தான் இந்தப் பேச்செல்லாம் பேசுகிறாரோ.." இப்படி தான் தாமரையின் நினைவுகள் ஓடியது. ஆனால்...
அலை15 ( 2 )
"ஹேய் தில்லை.. நீ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்ட… ஆமா எனக்கு பிளஸ் டூ முடிக்கவும் கல்யாணம் ஆகிருச்சு.. ஆனா உன் கேள்வி தான் புரியல… உங்களுக்கும்னா வேற யாருக்கு கல்யாணமாச்சு … உங்க ஊருலருந்து வருவாளே காமர்ஸ் குரூப் இந்துமதி அவளுக்கும் கல்யாணமாகிருச்சா…"
"இல்ல அனீஸக்கா.. அவங்க ஃபாத்திமா காலேஜ்ல பி.காம் செகன்ட்...
அலை 11 (1)
ஆதவன் வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் தனது பொருட்களை வைத்து விட்டு தேவராஜன் கூறியது போல் மொட்டை மாடியில் உறங்க தேவாவோடு வந்தான் விஜய்.ஆதவன் அவர்களிடம் பேசிவிட்டு அவனறைக்குச் செல்வதை வீட்டிற்குள் இருந்து இரண்டாம் தளம் வரும் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் நின்று கவனித்த தேவராஜன் அந்த கம்பிக் கதவினை மூடாமல் விஜயிடம் வந்து...
அலை 11 (2)
வேகமாக கீழே இறங்கி வந்த தேவாவின் கண்களில் இரவு விளக்கின் ஒளியில் கையில் முகம் புதைத்து முழங்காலில் கவிழ்ந்திருந்த தாவணிப் பெண் தெரியவும் ,
"என்ன பாப்பா இருட்டுல தலைல கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்க.. தலை வலிக்குதா காஃபி போட்டுத் தர வா" என்றவாறே அருகில் வந்தான். அந்த சத்தத்தில் நிமிர்ந்ததோடு எழவும்...