Monday, July 27, 2026

    Viswakarma 42 2

    0

    Viswakarma 42 1

    0

    Viswakarma 41

    0

    Viswakarma 40 2

    0

    Viswakarma 40 1

    0

    Viswakarma

    Viswakarma 15

    0
    15 காலையில் திருமணம் முடிந்து மாலையில் ரிசப்ஷனில் நின்றிருந்தனர் அமுதனும் ரேகாவும். ரேகா புது மணப்பெண்ணுக்கு உரிய எந்த பொலிவும் இல்லாமல் கடமையாய் நின்றிருந்தாள். மனதை அடைக்கும் உணர்வு அவளுக்கு. கண்கள் எந்நேரமும் கசிந்துவிடுவேன் என்றிருந்தது அவளுக்கு. “எதுக்கு இப்படி இருக்கே?? முகத்தை ஒழுங்கா வைச்சுக்கோ??” என்றான் அமுதன். “என்னால அப்படிலாம் இருக்க முடியாது...” “இப்போ என்ன பிரச்சனை உனக்கு??” “எப்படி உங்களால...

    Viswakarma 14

    0
    14 அமுதன் அன்றே ஊருக்கு கிளம்பிவிட்டான். விஸ்வின் குடும்பத்தினர் அவனை அங்கு தங்க சொல்லி சொல்லியிருக்க அவன் அதை மறுத்து கிளம்பியிருந்தான். விஸ்வா இரவு அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் நிறைந்திருந்த பொருட்களை கண்டான். ஒன்றும் பேசும் மனநிலையில் அவன் இல்லை. அவன் தாத்தா, பெரியப்பாவின் செயல் அவனை யோசிக்க வைத்தது. அமுதனிடம் அவர்கள் இப்படி பேசியிருக்க தேவையில்லை...

    Viswakarma 13 2

    0
    “உங்க அப்பா தான் என்னை இங்க இருக்கச் சொன்னார். சோ நீங்க என்னை அதிகாரம் பண்ணாதீங்க. அன்பா சொன்னா கேட்டாலும் கேப்பேன், இப்படி என்னை மிரட்டி உருட்டி செய்ய வைக்கணும்ன்னு நினைச்சா, காபியில உப்பு அள்ளி போடுவேனோ, எலி மருந்தை கலக்குவேனோ அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...” என்று அவர் அடுத்து அவளிடம் பேசா...

    Viswakarma 13 1

    0
    13 ஒரு வாரம் சென்றிருக்கும் வீட்டில் சில மாற்றங்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் சிறியவர்களிடத்தில். விஸ்வாவுக்கும் காஞ்சனாவிற்கும் திருமணம் முடிந்த மறுநாள் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைக்கு பின்னே ஆண்கள் அனைவருமே வெளியேறி சென்றுவிட்டனர். காஞ்சனாவிற்கு உடனே தங்கள் வீட்டிற்கு செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்ற ரீதியில் அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்திருந்தாள். அங்கயற்கண்ணி அவர் தங்கியிருந்த...

    Viswakarma 12 2

    0
    “ஆமாடி இப்போ என்னங்கறே??” சொன்னது சரவணன். “அதைச் சொல்ல நீ யாருடா??” என்றவள் அவன் கொடுக்காத மரியாதையை அவளும் அவனுக்கு கொடுக்கவில்லை... “ஏய் என்ன மரியாதை இல்லாம பேசறே??” “நீ கொடுத்தியா எனக்கு... உன் தம்பி பொண்டாட்டின்னு மரியாதை இல்லாம நீ பேசினா நானும் பேசுவேன்...” “காஞ்சனா...” என்று அதட்டினான் விஸ்வா. அவன் குரலுக்கு தான் அவள் சற்று பணிந்தாள். “என்ன??”...

    Viswakarma 12 1

    0
    12 வெறும் தரையில் அப்படியே படுத்துக் கொண்டிருந்தான் விஸ்வகர்மா. கடல்காற்று தொலைவில் எங்கோ கேட்டுக் கொண்டிருந்தது. இது போல் சாதாரண நாட்களில் படுத்துக் கொண்டிருப்பவனின் செவிகளுக்கு ஒவ்வொரு விஷயமும் உவப்பானதாய் ரசிக்கும் படியாகவே இருந்திருந்தது. இன்றோ சுற்றுப்புறம் மறந்து ஏன் தன்னையே மறந்து தான் உழன்றிருந்தான். ஊதக்காற்று கூட அவன் மனதின் வெம்மையை குளுமைப்படுத்தவில்லை. இலக்கின்றி வான் வெளியை வெறித்தவாறே...

    Viswakarma 11

    0
    11 திருவனந்தபுரத்தில் இறங்கி இதோ கன்னியாகுமரிக்கும் வந்தாயிற்று. வீட்டில் எப்படிச் சொல்வது என்று இவ்வளவு நேரமும் அதே தான் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். “அண்ணா...” “என்ன??” என்று சிடுசிடுப்பாய் சொன்னேன். “வீடு வந்திடுச்சு...” என்று ரேகா சொன்னப் பிறகு அவன் வீட்டின் முன் வண்டி நிற்பதை உணர்ந்தான். அவன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த போது இல்லாத எண்ணமெல்லாம் இப்போது தோன்றியது....

    Viswakarma 10

    0
    10 சென்னை வடபழனி முருகன் கோவில் அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமிருந்தது கோவிலில். மனிதத்தலைகள் மட்டுமே தெரிந்தது. எந்த எண் தூணின் அருகில் யாருக்கு திருமணம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. உறவினர்கள் தேடி தேடி சென்றுக் கொண்டிருந்தார்கள். அந்த தூணின் அருகே மட்டும் கூட்டம் அதிகமிருக்கவில்லை. விஸ்வா, காஞ்சனா, பாட்டி, அமுதன், விஸ்வாவின் தங்கை ரேகா...

    Viswakarma 9

    0
    9 காஞ்சனாவின் பாட்டிக்கு அவர்கள் வாழ்ந்த ஊரைவிட்டு போக விருப்பமில்லை தான். ஆனாலும் மகனுக்காகவும் அவனின் சுயமரியாதைக்காகவும் அவரும் அவர்களுடன் புலம் பெயர்ந்தார். காஞ்சனாவின் தந்தைக்கு அவர் உதவி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கவில்லை என்றதுமே எடுத்த முடிவு தான். பணத்திற்கு தான் மதிப்பு என்று அப்போது தான் புரிந்து கொண்டார். பிச்சை போட்டது போட்டதாவே இருக்கட்டும், இனி...

    Viswakarma 8

    0
    8 “காஞ்சனா...” “சொல்லுங்க சார்...” “விஸ்வா உங்களை ரூம்ல வந்து பார்க்கச் சொன்னான்...” “எதுக்கு??” “எல்லாமே என்கிட்ட தான் கேட்பீங்களா?? உள்ள போய் பாருங்க, நான் உங்களை எதுவும் சொல்லிட்டா அவன் என்னை என்னமோ வில்லன் மாதிரி பார்க்குறான்...” என்றுவிட்டு போனான் டேவிட். காஞ்சனா விஸ்வாவின் அறைக்கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றாள். “வரச்சொன்னீங்கலாமே சார்...” “ஆமா உட்காருங்க...” “சொல்லுங்க சார்...” “நாம டிசைன்ஸ் பத்தி பேசினோம்ல” “ஹ்ம்ம்...” “அதைப்பத்தி...

    Viswakarma 7

    0
    7 அவள் கரம் கூப்பிய போது தான் கவனித்தான் அவளின் வலக்கரம் சற்றே கூம்பியிருப்பதை. அதை பார்த்தும் பார்க்காததும் போல இருந்து கொண்டான். அழகான பெண் ஏன் கடவுள் இவளுக்கு இப்படி ஒரு குறையை வைத்தான் என்று தான் தோன்றியது அவனுக்கு. “நீங்க போகலாம்...” என்று சொல்லவும் அவள் திரும்பிச் செல்ல அவள் நடையில் கூட ஒரு சிறு...

    Viswakarma 6

    0
    6 “என்ன மாப்பிள்ளை சந்தோசம் தானே” சொன்னது குமரன். “அய்யோ என்ன மாமா நீங்க, என்னைப்போய் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுகிட்டு. எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க...” “இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை பேர் சொல்லி கூப்பிட்டா என் பொண்டாட்டி என்னைத் திட்டுவா” என்றார் அவர். “அத்தை முன்னாடி வேணா அப்படி கூப்பிடுங்க. நான் எப்பவும் உங்களுக்கு வேலு தான்...

    Viswakarma 5

    0
    5 நாற்பது வருடங்களுக்கு முன் கனகு நெல்லை நிரப்பி நெருப்பு கங்குகளை தயார் செய்துக் கொண்டிருந்தார். ஒரு சிறு குப்பி போன்ற ஒன்றில் வெள்ளியை போட்டு ஊதுகுழல் கொண்டு ஊதினார். பின் உருகிய வெள்ளியை எடுத்து அடித்து தகடாக்கி கொஞ்சம் கொஞ்சமாய் அதை வேண்டும் வடிவம் கொண்டு வடித்துக் கொண்டிருந்தார் அவர். அடுத்த அறையில் கதிர் இதே போன்று தங்கத்தை...

    Viswakarma 4

    0
    4 “ஐ லவ் யூ காஞ்ச்சு” என்ற அவனின் குரல் இன்னமும் அவளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘இவன் இன்னும் என்னை மறக்கலையா’ என்று தான் தோன்றியது அவளுக்கு. ‘போன்ல இவ்வளவு திமிரா பேசறான்னா என்னவோ இருக்கே... ஏதோ தப்பா இருக்கே, என்னவா இருக்கும்” என்று காஞ்சனா யோசனையில் இருக்க அங்கு அமுதன் வந்து சேர்ந்தான். “மாலு நீ அனுப்பின டிசைன்ஸ்...

    Viswakarma 3

    0
    3 காலையில் வந்திருந்த செய்தித்தாளை பார்த்துவிட்டு வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்களுக்குள் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியாய் இருந்த போதும் அனைவருக்கும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் சமையல். பெரிய வீட்டில் அனைவருமே சமைக்கக் கூடுவர், உணவருந்துவதும் அங்கே தான். விஸ்வாவும் காலை உணவு உண்ண அங்கே வந்தான். விஸ்வா முதல் நாள் தாமதமாய் வீட்டிற்கு...

    Viswakarma 2

    0
    2 தலையை மெல்ல உலுக்கிக் கொண்டு நிகழ்வுக்கு வந்தான் விஸ்வா. மதிய உணவு வேளை நெருங்கியிருக்க டேவிட் அவன் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான். “மச்சான் பசிக்குதுடா... எவ்வளோ நேரமா நீ கூப்பிடுவ கூப்பிடுவன்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கறது... கொலைப்பசிடா...” “சாரி டேவிட் கொஞ்சம் யோசனையா இருந்திட்டேன்” “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!! நண்பனே!!”...

    Viswakarma 1 2

    0
    “சார் மார்னிங் சார்...” “மார்னிங்... என்ன பண்ணிட்டு இருக்கீங்க டேவிட், வெளிய இருக்க சாமிக்கு பூ மாத்தலை, தண்ணி மாத்தி அதுல வேற பூப்போடலை. அப்புறம் என்ன பூஜை பண்ணீங்க நீங்க. இந்த ரூம்ல இருக்க சாமிக்கு மட்டும் பூஜை பண்ணா போதுமா” “சார் வந்து...” “எனக்கு தெரியும் டேவிட் இதெல்லாம் உங்களுக்கு பரிட்சயம் இல்லைன்னு. உங்களுக்கு தெரியலைன்னா...

    Viswakarma 1 1

    0
    1 சில வருடங்களுக்கு முன் -------------------------------------------------- “இவருக்கு கோபம் அதிகம் வரும், இவர் வளர வளர தான் உங்க குடும்பத்துல முன்னேற்றமே ஏற்படும்... இந்த குழந்தை தேவசிற்பி விஸ்வகர்மாவோட அம்சம்...” “உங்க குடும்பத்துல ஏழு தலைமுறைக்கு பிறகு அதே அம்சத்துல பிறக்கறது இவரா தான் இருக்கும். இவர் செய்யற தொழில்ல அவ்வளவு சுத்தமிருக்கும், நேர்த்தியிருக்கும், இவருக்கு கைத்தொழில் நல்லா வரும்,...
    error: Content is protected !!