Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum
காதலை அவளிடம் சொல்ல முடிய வில்லை என்றும் அந்த ஓனர் என்ன சொல்வார் என்றும் குழப்பத்தில் ஆழ்ந்தான் செழியன்.
அடுத்த நாள் அங்கு எப்படிச் செல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி. அவள் இத்தனை நாளும் எங்கேயும் வெளியே சென்றதில்லை. செழியனின் சொந்த ஹோட்டலுக்கு கூட அவன் சென்றதில்லை.
அவள் தான் அவனுடன் மீட்டிங் நடக்கும் போது...
அத்தியாயம் 9
ஆர்பாட்டம் இல்லாத
உந்தன் அழகுக்கு நான்
என்றுமே அடிமை தான்!!!
“அப்படின்னா, அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிக்கோ பா. அவளுக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசு ஆகிருச்சு. இப்ப தான் அவ வீட்ல கல்யாணம் பத்தி முடிவு எடுப்பாங்க. அவங்க வேற மாப்பிள்ளை பாத்து சிக்கல் ஆகுறதுக்குள்ள நீ அவ மனசை தெரிஞ்சிக்கிட்டு வந்து சொல்லு. நான்...
“அப்படி மட்டும் செஞ்சிறாத தம்பி”
“அப்ப என்னை தொந்தரவு செய்யுறதை விட்டுரு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த போனும் அவருக்கு வரவில்லை.
ஷாலினியின் கணவன் நியாயமானவன். மனைவியின் தாய் தந்தை என்று கூட பாராமல் தன்னுடைய பெற்றோர்கள் போல கவனித்துக் கொள்பவன். அப்படிப் பட்டவனுக்கு இவர்களின்...
அவள் பார்வையை அவனும் உணர்ந்தது தான் அதிசயம். ஆனால் அது காதலா ஆசையா என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னை ஆர்வமாக பார்க்கிறாளா, இல்லை நான் என்ன செய்கிறேன்னு பாக்குறாளா என்று மட்டும் தெரியாமல் குழம்பினான். அவள் மனது தனது பக்கம் லேசாக திரும்பினால் கூட காதலைச் சொல்லலாம் என்று காத்திருந்தான்.
மாலினி தெளிவாக இருந்தாள்....
“வா டா அண்ணா, சூடான வெயிலுக்கு ஜூஸ் குடிக்க வந்தியா? ஜூஸ் குடிச்சும் நீ கூலா ஆன மாதிரி தெரியலையே? உள்ளுக்குள்ள தக தகன்னு எறியுற மாதிரி இருக்கு?”, என்று நக்கலாக கேட்டான்.
“எனக்கு எரியுறது இருக்கட்டும்? உனக்கு மாலினி கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு?”, என்று கேட்டான்.
“அடப்பாவி, இது உனக்கு தெரியாதா? உன்...
“என்னது பெரியம்மாவா?”
“கடவுளே, அதுவும் உனக்கு தெரியாதா? செழியன் என் அண்ணன்”
“என்ன?”
“ஆமா, அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் ஒண்ணாப் பிறந்தவங்க. எங்க சொத்தை எல்லாம் அவன் பிடுங்கிக் கிட்டான். எனக்கு நல்லது நடந்தா அவனுக்கும் சரி அவனோட அம்மாவுக்கும் சரி பிடிக்காது. அதான் என்னை மிரட்டி இங்க இருந்து ஓட வச்சான். ஆனா அவன் ஏன்...
“இந்த நேரத்துல யார் கூப்பிடுறா?”, என்று தனக்குள் பேசிய படி தன்னுடைய போனை எடுத்த கனகராஜ் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.
“ஹலோ கனகராஜ் சாரா?”, என்று கேட்டார் மதியழகன்.
“ஆமா நான் கனகராஜ் தான் பேசுறேன். நீங்க யாரு சார்?”
“என்னோட பேர் மதியழகன். நான் கல்யாண விஷயம் பேச தான் கால் பண்ணுனேன். உங்க பொண்ணோட...
அத்தியாயம் 19
உந்தன் மேனியின் இனிமையை
தினமும் உணரக் காத்திருக்கிறது
எந்தன் இதழ்கள்!!!
ஹோட்டலை சுற்றிப் பார்த்த படி சில மாறுதல்களைச் சொன்னாள் மாலினி. அதை நல்ல விஷயம் என்று மனதார பாராட்டினான் தினகர். செழியனிடம் சொல்லி விட்டு உடனடியாக செய்வதாக சொன்னான். பின் ஹோட்டலை சுற்றி முடித்ததும் ஆபீஸ் ரூம் வந்தார்கள்.
உள்ளே சென்றதும் “மீனா”, என்று அழைத்தான் தினகர்....
“அம்மா”
“என்ன சொன்ன நீ? உன் மாலினியா? எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வார்த்தையை என் கிட்டயே சொல்லுவ? அப்ப மீனா யார் டா? அவளுக்கு நீ என்ன பதிலைச் சொல்லப் போற? உன் கிட்ட கேட்டுட்டு தானே முடிவு பண்ணினேன்? பெரிய இவனாட்டம் டயலாக் பேசின. இப்ப வாய் கூசாம என் மாலினின்னு சொல்ற?”
“அம்மா...
“நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சுன்னு நினைச்சு அந்த பையன் அந்த பொண்ணுக்கு சரின்னு சொல்லிருக்கலாம். இப்ப நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நின்னுருச்சுன்னு தெரிஞ்சா கண்டிப்பா அந்த பையன் மாலினியை விட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ண மாட்டான்”
“என்னங்க சொல்றீங்க?”
“எனக்கு தோனினதைச் சொன்னேன். என்ன வேணும்னாலும் நடக்கலாம். பாக்கலாம், கடவுள் என்ன வச்சிருக்கார்னு. சரி...
அத்தியாயம் 18
காயப் படுத்துவாய் என்று
தெரிந்தே உன்னைக்
காதலிக்கிறது என் இதயம்!!!
“இதோ வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு செழியனை அழைக்க வந்த மாலினியின் காதில் விழுந்த வார்த்தைகள். “இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”, என்பது தான்.
அதைக் கேட்டு புசுபுசுவென்று கோபம் மேலே எழும்பியது. கோபத்துடன் கீழே வந்து விட்டாள். “ஆக இவன் கெட்டவன் தான்....
அத்தியாயம் 13
நீ சண்டையிடும் போது வரும்
வலியை விட நீ பேசாமல்
இருக்கும் போது வரும்
வலி பெரியது பெண்ணே!!!
“யார் மாலினி கால் பண்ணுறா?”, என்று கேட்டாள் வசந்தா.
அவளுக்கு அழைப்பது ஒரு வேளை அருணாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.
“எங்க கம்பெனி எம்.டி தான் மா கூப்பிடுறார். இரு என்னன்னு கேட்டுக்குறேன்”, என்று சொல்லி அதை எடுத்து காதில்...
....
“அதுக்காக என்னோட காதலை நீயும் ஏத்துகிட்டு தான் ஆகணும்னு நான் கட்டாயப் படுத்தலை. ஆனா என் மனசுல இருக்குறதை சொல்லணும்னு தோணுச்சு. உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா சொல்லு. எங்க அம்மா உங்க வீட்ல வந்து பேசுவாங்க”
…..
“பிடிக்கலைன்னாலும் சொல்லிரு. உன்னை எந்த விதத்துலயும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ எப்பவும் போல வேலைக்கு வரலாம்....
“அப்படி எல்லாம் விட்டுருவேனா அண்ணாமலை? என் தம்பி ஒரு ஏமாளி. உன் கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் கண்ணைக் கசக்குனா எல்லாத்தையும் என் கிட்ட கொடுத்துருவான். இந்த வீடு, நிலம் எல்லாம் எங்க அப்பா பேர்ல தான் இருக்கு. அதை என் தம்பி வெள்ளைப் பேப்பர்ல வேண்டாம்னு எனக்கு எழுதிக் கொடுத்துருக்கான். அதை நான்...
அவளுக்கு வேலைக்குச் செல்லும் ஆசை இருந்தாலும் அவர்களாக அதைப் பற்றி பேசாததால் அமைதியாக இருந்தாள். அவனுக்கும் அவளை ஆஃபிஸ்க்கு அழைக்க ஆசை தான். ஆனால் அங்கே நடந்ததை நினைத்து எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளை அழைப்பது என்று எண்ணி மௌனமாக இருந்தான்.
அடிக்கடி மாலினி அவளுடைய வீட்டுக்கும் சென்று வருவாள். காலையில் கிளம்பும் போது...
அத்தியாயம் 1
உந்தன் கண்களை தழுவும்
உறக்கம் என்னை மட்டும் நெருங்காமல்
தள்ளி நிற்பது ஏனோ?!!!
“ஏய் என்னை விடு டா. விடு. ஆ வலிக்குது விடு. எருமை மாடே, முடியை விடு டா”, என்று கத்திக் கொண்டிருந்தாள் மாலினி.
“முடியாது, நான் கிரிக்கட் விளையாட போனதை அப்பா கிட்ட போட்டுக் கொடுத்த தானே? நீயெல்லாம் ஒரு அக்காவா? உன்னை இன்னைக்கு...
“அதெல்லாம் இல்லை மாலினி. சில பேரோட குண நலன்கள் என்ன நடந்தாலும் மாறாது. நீங்க எப்பவும் நீங்களா தான் இருப்பீங்க. பிளீஸ் ட்ரீட்க்கு சரின்னு சொல்லுங்க”, என்று அவன் கெஞ்ச அவள் அவனை வியப்பாக பார்த்தாள். ஒரு எம்.டி தன்னிடம் கெஞ்சுவதா என்று எண்ணிக் கொண்டு “சரி சார், நான் வெளிய வரேன்”, என்றாள்.
அவள்...
“நீங்க சொல்ற பொய்யான நியாயத்தை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. நீங்க செஞ்ச எதையும் என்னால மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. உங்க இஷ்டத்துக்கு உங்களுக்கு பிடிச்ச காதல் மனைவியா மாற என்னால இந்த ஜென்மத்துல முடியாது. நீங்க அப்படி எல்லாம் நான் இருக்கணும்னு ஆசைப் பட்டா அது உங்க பேராசை. உங்க அம்மா...
மோகனச் சிலை போல இருந்த தோற்றம் சாதாரணமான அவனைக் கவிஞனாக மாற்ற ஆரம்பித்தது. லேசாக ஈரப் பதத்துடன் இருந்த அவளது உதடுகளைக் கண்டவன் “வாயா டி இது? இந்த பேச்சு பேசுற?”, என்று புன்னகைத்துக் கொண்டான்.
அவள் சற்று அசைந்து நேராக படுக்க, உணர்வு வந்தவன் அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்து முடித்து...
“வாட்? அது நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மீனா.
“யெஸ். நான் தான். நான் தான் அவங்களை வேண்டாம்னு சொன்னேன். அது குடும்பத்துக்காக. அப்புறம் வேற ஒரு பிரச்சனை”, என்றவள் அவனுக்கும் அவளுக்குமாக நடந்த அந்த விஷயத்தை சொல்ல விரும்ப வில்லை.
“நிஜமாவே அது நீங்களா மாலினி? அவன் சரியான பிராடு மாலினி. உங்க கல்யாணம் நின்னதும்...