Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum
அடுத்த நாளே மகனை அழைத்து திருமணத்துக்கு அரை மனதாக சம்மதம் சொன்னார். அவன் முகம் அப்படியே மலர்ந்து போனது.
“செழியா எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணுறோமோன்னு தோணுது டா. ஒரு பக்கம் மீனா வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு. இன்னொரு பக்கம் மாலினி உன் முகத்தைக் கூட பாக்க விரும்பலை. அவ எப்படி உன்...
அத்தியாயம் 16
மூச்சுப் பேச்சில்லாமல்
தவிக்கும் எந்தன் காதலுக்கு
உயிர்க் கொடு பெண்ணே!!!
அவள் கத்தினாலும் அவன் அமைதியாக இருந்தது அவளை அதிகம் பாதித்தது. அவன் எதிர்த்து சண்டை போட்டால் அவள் நிச்சயம் பதிலுக்கு பதில் பேசியிருப்பாள். அவன் அமைதியாக இருப்பது அவளுக்கு இயலாமையைச் தந்தது. அதனால் தன்னை நினைத்தே அவளுக்கு அழுகை வந்தது.
அழுது கொண்டே “எனக்கு கடவுள் கொடுத்த...
அதற்குள் வெட்டிய முட்டைக் கோஸை கூட்டு செய்ய ஆரம்பித்தாள் வசந்தா. வசந்தா அடுப்பு வேலையை முடித்து விட்டு அம்மியில் சட்னி அரைக்க பின் பக்கம் செல்ல ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து தக்காளி சாதம் செய்ய ஆரம்பித்தாள் மாலினி.
மற்றவர்களுக்கு மதிய சாப்பாடு சாம்பார், முட்டைக்கோஸ் பொரியல் என்றால் பாலாவுக்கு மட்டும் காலேஜ் முடித்ததில்...
அத்தியாயம் 15
நிலையில்லாத உலகில்
நிரந்தரமாக நிற்கிறது நம்
காதல் என்னும் நங்கூரம்!!!
“என்ன விஷயம் மேடம்?”, என்று கேட்டாள் மாலினி.
“உன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும் மா”
“மேடம், நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேக்குறதா?”
“அப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்”, என்று சாரதா சொன்னதும் தலை குனிந்து கொண்டாள் மாலினி. “இவன் அதை...
“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு சிறு சிரிப்புடன் அவனைக் கடந்து சென்றாள். அவனை நோக்கி அவள் சிந்திய ஒற்றைப் புன்னகை அவன் மனதைக் கவர்ந்தது. பியூன் என்ற நினைவோடு அவனை மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் அவனை நோக்கி அவள் சிந்திய அந்த ஒற்றைப் புன்னகை அவனுக்கு விலை மதிப்பானது அல்லவா?
“இந்த அண்ணா எம்.டி சாருக்கு...
“இது அவனோடதாச்சே? இதை நாம யூஸ் பண்ணலாமா கூடாதா?”, என்ற குழப்பம் வந்தது.
“வேண்டாம், ஏதாவது சொல்லிட்டா அசிங்கமா போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மற்ற ஸ்டாப்க்கு இருக்கும் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். பின் வெளியே வந்தவள் அங்கு வந்து கொண்டிருந்த வானதியைப் பார்த்தாள்.
சில சந்தேகங்கள் இருப்பதால் அவளிடம் தெளிவு...
அத்தியாயம் 18
காயப் படுத்துவாய் என்று
தெரிந்தே உன்னைக்
காதலிக்கிறது என் இதயம்!!!
“இதோ வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு செழியனை அழைக்க வந்த மாலினியின் காதில் விழுந்த வார்த்தைகள். “இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”, என்பது தான்.
அதைக் கேட்டு புசுபுசுவென்று கோபம் மேலே எழும்பியது. கோபத்துடன் கீழே வந்து விட்டாள். “ஆக இவன் கெட்டவன் தான்....
அத்தியாயம் 13
நீ சண்டையிடும் போது வரும்
வலியை விட நீ பேசாமல்
இருக்கும் போது வரும்
வலி பெரியது பெண்ணே!!!
“யார் மாலினி கால் பண்ணுறா?”, என்று கேட்டாள் வசந்தா.
அவளுக்கு அழைப்பது ஒரு வேளை அருணாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.
“எங்க கம்பெனி எம்.டி தான் மா கூப்பிடுறார். இரு என்னன்னு கேட்டுக்குறேன்”, என்று சொல்லி அதை எடுத்து காதில்...
அத்தியாயம் 3
விரும்பியே உயிருக்குள்
சுமக்கிறேன் அழகான
சுமையான உன்னை!!!
அன்று ஞாயிறு தாமதமாக எழுந்த மாலினி பாலாவை எழுப்பாமல் அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கு விடுமுறை என்பதால் ஒன்பது மணி வரை அவனைத் தூங்க விட்டாள்.
பின் அவனுக்கு உணவு கொடுத்து படிக்க வைத்தாள். வசந்தாவும் கனகராஜும் ஊருக்கு சென்றதும் அவர்களுக்கு அங்கே கிடைத்தது அதிர்ச்சி தான். புஷ்பா...
“வாட்? அது நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மீனா.
“யெஸ். நான் தான். நான் தான் அவங்களை வேண்டாம்னு சொன்னேன். அது குடும்பத்துக்காக. அப்புறம் வேற ஒரு பிரச்சனை”, என்றவள் அவனுக்கும் அவளுக்குமாக நடந்த அந்த விஷயத்தை சொல்ல விரும்ப வில்லை.
“நிஜமாவே அது நீங்களா மாலினி? அவன் சரியான பிராடு மாலினி. உங்க கல்யாணம் நின்னதும்...
அத்தியாயம் 4
நரகத்துக்கே நீ
சென்றாலும் உன்னைத்
தொடர ஆசை கொண்டேன்!!!
“நீ எழுதிக் கொடுத்ததை வாங்குறன்னு கேஸ் போடுவேன்“, என்று காட்டமான குரலில் பேசினாள் புஷ்பா.
“அடங்க மாட்டல்ல நீ? நான் இப்ப வீட்டு பூட்டை உடைச்சு பத்திரத்தை பத்திரமா எடுத்துட்டு நான் எழுதிக் கொடுத்த வெள்ளைப் பேப்பரை கிழிக்கிறேனா இல்லையான்னு பாரு. அது தான் என் முதல் வேலை”,...
“சொல்லு டி, உள்ள போகலாமா?”, என்று மீண்டும் கேட்டான் அவன்.
“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க “போகவே மனசில்லை டி?”, என்றான்.
“ஏன்?”
“உள்ள போனா இதெல்லாம் கனவா போயிருமோன்னு பயமா இருக்கு”, என்று ஏக்கக் குரலில் சொன்னதும் தனக்காக அவன் பட்ட கஷ்டம் அவள் மனதை கசக்கிப் பிழிந்தது.
“சாரி, என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம்”
“விடு மாலு”
“நிஜமாவே...
அத்தியாயம் 2
மேல் மாடி முற்றத்திலே, உன்னுடன்
அமர்ந்து நிலவைக் கண்ட
போது வேணுகானம் கேட்டேன் நான்!!!
“எனக்கு புரியலைங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. சின்னவன் பத்து முடிக்க போறான். ரெண்டு வருசத்துல அவன் ஸ்கூல் முடிச்சு அவனுக்கு காலேஜ் பீஸ் கட்டனும். எல்.ஐ.சி எல்லாம் முடிய இன்னும் பல வருஷம் இருக்கு....
அத்தியாயம் 5
உன் இதயம் தொட
ஆவலாக காத்திருக்கிறேன்
உந்தன் அனுமதி வேண்டி!!!
செழியனின் கேள்வியிலே அவனுடைய ஆவல் புரிந்தது. ஆனாலும் அந்த பெண் தன்னுடைய மகனின் மனதில் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறாள் என்பதை காணவே அவர் பத்து நாள் கெடு வைத்தது. அவன் என்னடாவென்றால் ஒரு மணி நேரத்திலே வந்து கேட்கவும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது.
“செழியா,...
....
“அதுக்காக என்னோட காதலை நீயும் ஏத்துகிட்டு தான் ஆகணும்னு நான் கட்டாயப் படுத்தலை. ஆனா என் மனசுல இருக்குறதை சொல்லணும்னு தோணுச்சு. உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா சொல்லு. எங்க அம்மா உங்க வீட்ல வந்து பேசுவாங்க”
…..
“பிடிக்கலைன்னாலும் சொல்லிரு. உன்னை எந்த விதத்துலயும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ எப்பவும் போல வேலைக்கு வரலாம்....
மோகனச் சிலை போல இருந்த தோற்றம் சாதாரணமான அவனைக் கவிஞனாக மாற்ற ஆரம்பித்தது. லேசாக ஈரப் பதத்துடன் இருந்த அவளது உதடுகளைக் கண்டவன் “வாயா டி இது? இந்த பேச்சு பேசுற?”, என்று புன்னகைத்துக் கொண்டான்.
அவள் சற்று அசைந்து நேராக படுக்க, உணர்வு வந்தவன் அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்து முடித்து...
அத்தியாயம் 10
உன்னையே தேடுகிறது
எந்தன் கண்கள், அதை அழ
வைப்பது நீ என்று தெரிந்தும்!!!
சரியாக பதினொரு மணிக்கு அருண் வீட்டினர் வந்தனர். அருணின் அப்பா, அம்மா, அத்தை, மாமா மட்டும் வந்திருந்தார்கள். வசந்தா சொல் படி தயாராக இருந்தாள் மாலினி.
முதலில் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தாள் மாலினி. சிறிது நேரம் கழித்து...
அத்தியாயம் 7
என்னை வார்த்தையால்
சுட்டெரிப்பதால் நீ கூட
சூரியன் தான்!!!
அவன் போன பின்பும் அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இருந்து வெளியே வர மாலினிக்கு வெகு நேரம் ஆனது.
தன்னுடைய வேலையைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு அவளது தடுமாற்றம் மனதுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. தான் ஏதோ ஒரு விதத்தில் அவளை பாதிக்கிறோம். அதுவும் முதல் நாளிலே...
சாரதா வேறு ஜாதி என்று பாராமல் சண்முகம் காதலித்து மணந்து கொண்டார். அதனால் அவரது சொந்தங்கள் அடிக்கடி முதுகுக்கு பின் இப்படிச் சொல்வார்கள் தான். ஆனால் சண்முகம் முன்னால் சொல்ல மாட்டார்கள். அவருக்கு முன்னால் அப்படிச் சொல்லி விட்டால் அவர்கள் உறவையே அறுத்து விடுவார்.
இன்று மதியழகன் அப்படிச் சொன்னதும் “நீங்க இருந்திருந்தா இவங்களை இப்படி...
“இந்த நேரத்துல யார் கூப்பிடுறா?”, என்று தனக்குள் பேசிய படி தன்னுடைய போனை எடுத்த கனகராஜ் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.
“ஹலோ கனகராஜ் சாரா?”, என்று கேட்டார் மதியழகன்.
“ஆமா நான் கனகராஜ் தான் பேசுறேன். நீங்க யாரு சார்?”
“என்னோட பேர் மதியழகன். நான் கல்யாண விஷயம் பேச தான் கால் பண்ணுனேன். உங்க பொண்ணோட...