Arumpani
30
ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய்
பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
“வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது”
“இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங் இருக்குப்பா சக்தி. ஆமா உனக்கு எப்படி போய்கிட்டு இருக்கு”
“எங்கப்பா நமக்கெல்லாம் ஒரே சில்லறை கேசா தான் வருது. பெரிய பெரிய...
11
ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல்
பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார்.
அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து...
1
ஆத்திசூடி – ஆறுவது சினம்
பொருள் – கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
அழகான காலைப்பொழுது அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக சுற்றிலும் இருந்தனர்.
காக்கி உடை அணிந்த காவலர்கள், கருப்பு கோட்டு அணிந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என்று அனைவருமே கலந்திருந்தனர்.
முதல் மாடியில் இருந்த அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றவர்களுடன் நாமும் நுழைவோம்....
28
ஆத்திசூடி – கெளவை அகற்று
பொருள் – வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
இந்திரசேனா சென்னையில் இருந்து கிளம்பும் போதே அவள் அன்னையிடமும் நாயகியிடமும் கேட்டுத்தான் கிளம்பியிருந்தாள் சிவகாசிக்கு. அப்பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன வாங்க வேண்டும் என்று ஒவ்வொன்றாய் கேட்டு வாங்கியும் இருந்தாள்.
தன் மாமனாரிடமும், அகல்யாவிடமும் கூட கேட்டிருந்தாள் என்னெல்லாம் செய்ய வேண்டும்...
19
ஆத்திசூடி – கெடுப்ப தொழி
பொருள் – பிறருக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்யாதே
இரவு தான் மாணிக்கவாசகம் வீட்டிற்கு வந்தார். அபராஜிதன் வீட்டிலிருந்த மற்ற அனைவரிடமும் நன்றாகவே பேசினான். மாணிக்கவாசகம் அவனிடம் பேச என்னவென்றால் என்ன என்பது போல இருந்தது அவன் பேச்சு.
அவரும் அவன் ஏதோ கவனிக்காது விட்டிருப்பான் என்று எண்ணி மீண்டும் ஏதோ பேச...
35
ஆத்திசூடி – பீடு பெற நில்
பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே. சாயங்காலம் தானே வருவாங்க’ என்ற யோசனை ஓட கதவை திறந்த அகல்யா எதிரில் நின்றிருந்தவனை கண்டதும் ஒன்றும் சொல்லாது கதவை...
34
ஆத்திசூடி – நைவினை நணுகேல்
பொருள் – பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே
நீதிமன்ற வளாகம்
அபராஜிதனால் நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பெண் சித்திரலேகாவை அவன் சாதாரணமாய் எடைப் போட்டுவிட்டான்.
அன்று அவள் அவனை தவறாக பேசிய அன்று கூட அவள் ஏதோ மனரீதியாக பாதிக்கப் பட்டிருக்கிறாளோ அவள் வீட்டினரை அழைத்து பேசலாம் என்ற முடிவோடு தான்...
27
ஆத்திசூடி – அறனை மறவேல்
பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும்
இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது.
தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு தலை வலிக்குது எனக்கு. இவர் இங்க என்ன பண்றாரு’ என்று யோசித்தவள் அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள்.
“என்னாச்சு எதுக்கு இப்படி...
32
ஆத்திசூடி – பழிப்பன பகரேல்
பொருள் – பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை சொல்லாதே.
அயர்ந்த உறக்கமில்லாது போனாலும் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து மெல்ல விழி திறந்து திறந்து மூடியவன் அறையில் இன்னமும் எரிந்து கொண்டிருந்த விளக்கை கண்டதும் அருகே திரும்பி பார்த்தான்.
இந்திரசேனா இன்னமும் வந்து படுத்திருக்கவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அருகே இருந்த தன்...
9
ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய்
பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.
அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி ஒருவர்.
“அபி... அபி...” என்று செல்லும் அவனை அழைக்க நின்று திரும்பி பார்த்தான் அவரை.
“சொல்லுங்க சித்தி”
“மாப்பிள்ளை பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு...
21
ஆத்திசூடி – நேர்பட ஒழுகு
பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட
கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும் பச்சைமிளகாயை கடிப்பது போன்று காரசாரமானதாகவே இருக்கும்.
அபராஜிதனை பொருத்த வரை அவனுக்கு தான் செய்வது சரியே என்ற எண்ணம் எப்போதும். அவன்...
29
ஆத்திசூடி – சையெனத் திரியேல்
பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.
பள்ளி ஆண்டு விழா வருவதாக ஒரு வாரம் முன்பே கூறியிருந்தான். ஆண்டு விழா அன்று இந்திரசேனா தன்னுடன் கட்டாயம் வர...
22
ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல்
பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே
நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர்.
தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின் மீது யாரோ சாய்வது போலிருக்க அவருக்கு புரிந்து போனது அது இந்திரசேனா என்று. யாரும் அறியாது அவள் தோளை தட்டினார்...
38
ஆத்திசூடி – மேன்மக்கள் சொற்கேள்
பொருள் – நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
“யோவ் எதுக்குய்யா என்னய அடிச்சே?? ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது??” என்று அந்த ஆள் தாம்தூம் என்று குதிக்க “இப்போ நீ உண்மையை சொல்லலை நான் போலீசை இங்க வரவழைப்பேன் அவங்க கேட்கிற விதத்துல கேட்பாங்க”
“அப்போ நீ...
10
ஆத்திசூடி – ஞயம்பட உரை
பொருள் – கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி பேசு
மகளின் திருமணம் முடிந்து அவள் மறுவீட்டிற்கும் வந்து சென்றிருந்தாள். இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது. வீடே வெறிச்சென்று ஆகிப்போனது. ஆண்கள் இருவர் மட்டுமே என்றானது அவ்வீட்டில். கரிகாலனும் ஓரிரு மாதத்தில் தன் மூத்தப்பெண் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்.
அவருக்கு மகனை குறித்த கவலை...
7
ஆத்திசூடி – நிலையிற் பிரியேல்
பொருள் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
இந்திரசேனாவிற்கு புரிந்தது மாணிக்கவாசகத்தின் கூற்று என்னவென்று. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் அவளுக்கு மனதில்லை. அதற்கு காரணம் அபராஜிதன் தான்.
இதே விஷயம் தன்னால் நடந்திருந்து அதை பிறகு மாணிக்கவாசகம் அவளிடத்தில் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது போல....
36
ஆத்திசூடி – மனந்தடு மாறேல்
பொருள் – எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே.
“என்ன தம்பி எப்படியிருக்கீங்க??” என்றவாறே அபராஜிதனின் அருகே வந்து நின்றார் விநாயகம் நக்கலான சிரிப்புடன்.
“உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றான் அவன்.
“அப்புறம் என்ன விஷயமா இந்தப்பக்கம் உங்க பொண்டாட்டியை பார்க்க வந்தீங்களா??”
“என் பொண்டாட்டியை கோர்ட்டுக்கு வந்து பார்க்க என்ன இருக்கு. அவளை வீட்டில...
2
ஆத்திசூடி – ஓரஞ் சொல்லேல்
பொருள் – எந்த வழக்கிலும் ஒரு பக்கம் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
இந்திரசேனா இரவு படுக்க வெகு நேரமாகியது. காலையில் மிகத்தாமதமாகவே எழுந்திருந்தாள். கண்கள் எரிந்தது இன்னமும். அன்று முக்கியமான வழக்கின் அடுத்த கட்டம் அதற்கு தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
குளித்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் நேரே சமையலறை செல்ல...
31
ஆத்திசூடி – நொய்ய உரையேல்
பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே.
“இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான்.
அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம்...
6
ஆத்திசூடி – தூக்கி வினை செய்
பொருள் – உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.
இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம் வாடியிருப்பது பொறுக்கவில்லை அவருக்கு.
“என்னாச்சு உன் பொண்ணுக்கு??” என்றார் தன் மனைவியினிடத்தில் மெல்ல.
“தெரியலை வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கா??”
“கேட்கலை நீ??”
“கேட்டேன் உங்க...