கொடிச்சி
“மெல்லினா கிளம்பு போகலாம்”
“எங்கே??”
“துணிக்கடைக்கு”
“இப்போவே என்ன அவசரம்??”
“பொறுமையா நம்ம ரிஷப்சன் முடிஞ்சதும் டிரஸ் எடுத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றியா??”
“இல்லைங்க அது வந்து”
“என்ன வந்து வான்னு தானே சொல்றேன். உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா??”
“ஹ்ம்ம்”
“அப்போ நீ போயிட்டு வந்ததும் கிளம்பலாமே??”
“இல்லைங்க நீங்களே போயிட்டு வந்திடுங்க”
“ஏதே நானா?? எனக்கென்ன தெரியும்”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்?? அம்மா செலக்ட் பண்றதை...
18
“ஆதவா மெல்லினா வீட்டுக்கு சொல்லியாச்சா??” என்று மருமகனிடம் கேள்வியை வைத்து பார்வையை தங்கையும் அவள் மருமகளும் சென்ற திசையில் வைத்திருந்தார்.
“சொல்லியாச்சு மாமா... அவங்க மதுரைக்கு ஏதோ விசேஷத்துக்கு போயிருப்பாங்க போல, உடனே கிளம்பி வர்றேன்னு சொன்னாங்க...”
“நல்ல வேளை மாமா நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லவும் நான் நேரா வீட்டுக்கு தான் போனேன். மெல்லினாவுக்கு...
24
“இங்க தனியா உட்கார்ந்திட்டு நேத்து நடந்ததை யோசிச்சுட்டு இருக்கியா”
ஆத்திரேயன் குரல் கேட்டதும் சட்டென்று இருந்த இடத்தில் இருந்து அவள் எழப் போக சோபாவில் சென்று அமர்ந்தவன் அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“ஹ்ம்ம் சொல்லு”
“சொல்ல என்ன இருக்கு பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க. நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லும் போது அப்படியொரு பெருமிதம் அவள் கண்களில்.
“நீ...
26
கோவிலுக்கு சென்றுவிட்டு மெல்லினாவின் வீட்டு வாயிலில் ஆதவன் வண்டியை நிறுத்த “எல்லாரும் உள்ள வந்திட்டு போங்க” என்றாள் மெல்லினா.
“இன்னொரு நாள் வர்றோம்மா” என்றான் அவன்.
“ஏன் மாமா நீங்க கூட வர மாட்டீங்களா??” என்றாள் தன் மாமனாரை வருத்தத்துடன் பார்த்தவாறே.
வாசவிக்கு உள்ளூர புகைந்தது. ‘இங்க நான் ஒருத்தி இருக்கேன் என்னைய ஒரு வார்த்தை வான்னு கூப்பிடலை’...
மகேஸ்வரியின் கிடுக்குபிடிக்கு பதில் சொல்லாது மெல்லினா நின்றிருக்க “அம்மாக்காக சரின்னு சொல்ல மாட்டியாம்மா” என்றார் அவர்.
“அம்மா உங்களுக்காக தான் சரின்னு சொல்லணும் அதைப்பத்தி தான்ம்மா யோசிக்கறேன்” என்றாள் மகள்.
“கல்யாணத்தைப் பத்தி பேசினா சரின்னு சொல்ல வேண்டியது தானே. ஒரு வேளை உனக்கு யாரையும் பிடிச்சிருக்கா... சொல்லும்மா போய் பேசுவோம்” என்றவரை பார்த்து முகம் மலர்ந்தது...
“இது எப்படி??”
“பிளட் டெஸ்ட் ரிசல்ட்ல அந்த பிளட் ஓ பாசிடிவ்ன்னு தெரிஞ்சது. உன்னோட ஆபீஸ்ல யாருக்கெல்லாம் அந்த குருப் இருக்குன்னு பார்த்தேன். அதுல தேறினது சிலர் தான்”
“உன்னோட ஸ்டாப் மேல எல்லாம் எனக்கு பெரிசா எந்த சந்தேகமும் வரலை. இந்த ரூமை யூஸ் பண்ணுற லிஸ்ட்ல இருந்த ரெண்டு பேருக்கு ஒரே ரத்தம். ஒண்ணு...
“இது முதல் தரம் அதனால விட்டிருவோம்”
“புரியலை எனக்கு”
“நம்ம வீடுன்னு தான் இனி சொல்லணும்” என்று அவன் சொல்ல இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது அவளுக்கு.
“சரி சொல்லுங்க”
“நம்ம வீடுன்னு சொல்லு” என்று பிடிவாதமாய் அதிலேயே நின்றான் அவன்.
“சரி நம்ம வீடு எங்க இருக்கு??”
அவன் பதில் சொல்லும் முன் “மைலாப்பூர்ல தான் இருக்கீங்களா இன்னும்” என்று அவள்...
16
மெல்லினா வரும் போதே அங்கு கூட்டமாக இருந்தது. பத்திரிகையாளர்களை வரவழைத்திருக்கிறார்கள் போல என்றெண்ணிக் கொண்டே இவள் மேலே செல்லப் போக இவளை சூழப் பார்த்த கூட்டத்தை சில காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.
மனதிற்கு எதுவோ சரியாக தோன்றவில்லை அவளுக்கு. மேலே ஏறும் முன் ஒரு முறை அவர்களை திரும்பி பார்க்க “மேடம் எங்க தப்பிச்சு போறீங்க...
“நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவங்க சொல்லைன்னா நீயே சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. நான் முதல் முதல்ல அவங்களை பார்க்க இங்க வந்ததுமே என்கிட்ட சொல்லிட்டாங்க நீ யாருன்னு”
“நான் ஒரு மலைஜாதி பொண்ணுன்னு சொன்னாங்களா”
“அதான் சொன்னேனே அவங்க எல்லாமே சொல்லிட்டாங்கன்னு. அவ என்ன சொன்னாலும் அவ என் பொண்ணு இல்லைன்னு ஆகிடாது. நான் அவளை...
14
ஆத்திரேயனின் பார்வை இப்போது தன் மனைவி மீதிருந்து திரும்பி விக்ரமை நோக்கியது. அவன் கண்களில் கண நேரத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தவனுக்கு உள்ளுக்குள் லேசாய் ஒரு அதிர்வு ஓடியது.
விக்ரமை அதுநாள் வரை நண்பனாக மட்டுமே அவன் பார்த்திருந்தான். இந்த நொடி அவனின் மற்றுமொரு முகத்தைத் தான் கண்டிருந்தான். மேலே எதுவும் பேசாது அவன் அமைதியாய்...
6
அன்று
மெல்லினா தன் கணினியில் அவளுக்கென்று தனியாக ஒரு போல்டரை மறைத்து வைத்திருந்தாள். அவளின் பொக்கிஷங்கள் எல்லாம் அதில் தானிருக்கின்றன. அவள் நினைக்கும் போதெல்லாம் அதைத்தான் எடுத்து பார்த்துக் கொள்வாள்.
தந்தையின் ஆசைக்காகவும், அன்னையின் விருப்பத்திற்காக மட்டுமின்றி அவள் தனக்காகவும் தான் காவல்துறையை தேர்ந்தெடுத்தாள் அப்போது. வேலைக்கு சென்ற புதிதில் பிடிக்காது போனாலும் அவள் மனதிற்கு பிடித்தவன்...
17
ஆத்திரேயன் மெல்லினாவிடம் எங்கிருக்கிறாள் என்று கேட்டிருக்க அவளோ “வெளிய இருக்கேன்” என்றாள் மொட்டையாய்.
“எங்கே குவார்ட்டஸ்ஸா??”
“இல்லை அதான் காலி பண்ணியாச்சே போன வாரமே”
“எங்க இருக்க சொல்லு முதல்ல”
“பீச்ல”
“நான் வர்றேன்”
“வேணாம் நானே வீட்டுக்கு வந்திடுவேன்”
“மெல்லினா நான் உன்னை உடனே பார்க்கணும்”
“எனக்கு மனசு சரியில்லை கொஞ்ச நேரத்துல நானே வீட்டுக்கு வர்றேன்” என்றுவிட்டு அவள் போனை வைத்துவிட ஆத்திரேயனுக்கு...
“சொல்லுங்க அமைதியாகிட்டீங்க??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??” என்றான்.
“உங்களை குற்றம் சொல்றதுக்காக இதை நான் சொல்லலை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது”
“இங்க அப்படியா நடக்குது. சட்டத்தை காப்பாத்த வேண்டியவங்களே அதை செய்ய வேண்டியதா இருக்கு தானே. சோ நல்லதுக்காக தப்பு பண்ணலாம் அது தப்பில்லை. அதனால...
“ஏன்க்கா இப்படி பண்ணுறே?? பயப்படுறியா நீ??எனக்கே ஆறுதல் சொல்றவ நீ இப்படி பயப்படலாமா??”
“இல்லை கவி பயப்படலை என்னோட வீடியோவை ஊரே பார்க்கும் கவி அதை நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு கவி”
“அக்கா ஊரே பார்க்கும்ன்னு பயப்படுற, அப்போ அந்த பரதேசி பார்த்ததுக்கு என்ன பண்ணுவே”
“அதனால தான் நான் செத்து போகணும்ன்னு நினைச்சேன்”
“நீ செத்திட்டா எதுவும்...
21
“பிரச்சனை எனக்கில்லை”
“என்ன உங்களுக்கு இல்லையா?? அப்போ யாருக்கு??” என்று ஒரு நொடி யோசித்தவள் சட்டென்று “அப்போ உங்க சம்மந்தப்பட்ட யாருக்கோ தான் பிரச்சனை சரி தானேக்கா??” என்று சரியாய் கணித்து கேட்க பார்கவி ஆமென்றாள். மேலே சொல்லுங்க என்பதாய் அவள் கையசைக்க பார்கவி தொடர்ந்தாள்.
-------------------
அது ஒரு அழகிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதி, புதிதாய்...
25
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க மெல்லினா சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்தாள். அங்கு நின்றிருந்தவர்களை கண்டதும் முகம் மலர்ந்தவள் “என்ன அங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க. ஏன் பார்கவி அக்கா நீங்க நேரே உள்ள வரவேண்டியது தானே. நீங்க என்ன வேற ஆளா” என்று செல்லமாய் கோபித்துக் கொண்டாள்.
அப்போது தான் அவள் கவனித்தாள் பார்கவியின் முகம்...
19
ஆத்திரேயனும் மெல்லினாவும் ஒரு வழியாய் வீட்டிற்கு வந்திருந்தனர். கீழே இருந்த ஒரு அறையில் தான் மெல்லினாவின் தான் தங்கியிருந்தார். மகளும் மருமகனும் மருத்துவமனையில் இருக்கும் சேதி அறிந்து அன்றே கிளம்பி வந்திருந்தார் அவர்.
வாசவிக்கு தான் அவரை எதிர்க்கொள்ள அப்படியொரு தயக்கம். மகேஸ்வரி அதற்கு நேர்மாறாய் இருந்தார், வாசவியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் எதையும் கேட்கவில்லை...
7
“நீ தூங்கலையா??”
“எனக்கு தூக்கம் வரலை. நானும் தூங்கிட்டா நீங்க எப்படி வண்டி ஓட்டுவீங்க??”
“இப்போ ஓட்டுற மாதிரி தான்”
“எல்லாரும் தூங்கிட்டா உங்களுக்கும் தூக்கம் வரும்ல, போரடிக்கும் தானே”
“அப்போ என்ன செய்யலாம்” என்றான் அவள் வாயில் இருந்தே என்ன சொல்கிறாள் என்று பார்க்க.
“பேசிட்டு இருப்போம்”
“நாம ரெண்டு பேரும் பேசணுமா எனக்கு இப்போ பேசுற மூடே இல்லை” என்றவனது...
3
அன்று
“என்னை வரச்சொன்னீங்களாமே சார், சொல்லுங்க என்ன விஷயம்??” என்று முறைப்போடே தயாளனின் முன் வந்து நின்றாள் மெல்லினா.
“என்னடி திமிரா??” என்றார் அவர் எடுத்த எடுப்பிலே.
“மரியாதையா பேசுங்க, இல்லைன்னா...”
“இல்லைன்னா என்னடி செய்வே??” என்றார் அவர் இன்னும் எகத்தாளமாய்.
“உங்ககிட்ட நான் பேசுறது வேஸ்ட்” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க “ஹேய் நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு...
இன்று
“டேய் இவ எதுக்குடா இப்போ என்னை திட்டினா??” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் அவன்.
நித்தேஷோ “அடேய் அவ திட்டினது மட்டும் தான் உன் மண்டையில இருக்கா?? வேற ஒண்ணும் கவனிக்க மாட்டியா நீ??”
“நித்தேஷ் நீ சொன்னது நிஜமா??”
“எதை நிஜமான்னு கேட்கறே நீ??”
“அவ மனசுல நான் இருக்கேன்னா சொன்னா அவ”
“அதை சொல்லி தான் இம்புட்டு...