Saturday, August 1, 2026

    கொடிச்சி

    விழா நிறைவாய் முடிந்திருக்க மகேஸ்வரி தயாராய் நின்றிருந்தார். ஆத்திரேயன் முகம் இன்னமும் தெளியவே இல்லை. திருவாரூர் தேர் போல மெல்ல அசைந்து வந்த மெல்லினாவை நோக்கி வேகமாய் வந்தான் அவன், “என்னைக் கூப்பிட்டா வரமாட்டேனா, நடக்க முடியாம நீ ஏன் நடந்து வர்றே??” “உங்க முகத்தை பார்க்கவே முடியலை. ப்ளீஸ் சிரிங்களேன்” “முடியலை பேபி” “நீ இங்கவே இருக்கலாம்ல” “அம்மாவை யோசிச்சு...
    “இது முதல் தரம் அதனால விட்டிருவோம்” “புரியலை எனக்கு” “நம்ம வீடுன்னு தான் இனி சொல்லணும்” என்று அவன் சொல்ல இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது அவளுக்கு. “சரி சொல்லுங்க” “நம்ம வீடுன்னு சொல்லு” என்று பிடிவாதமாய் அதிலேயே நின்றான் அவன். “சரி நம்ம வீடு எங்க இருக்கு??” அவன் பதில் சொல்லும் முன் “மைலாப்பூர்ல தான் இருக்கீங்களா இன்னும்” என்று அவள்...
    ‘அவர் இருந்தா என்னை காப்பாத்துவார்ல’ என்று குருட்டு தைரியத்தை மனதில் வைத்து அவள் அங்கு செல்ல அந்தோ பரிதாபம் அவன் அங்கில்லை. இது போல திட்டமிட்டு காரியம் செய்பவர்கள் உடனிருப்பவர்களை அப்புறப்படுத்தி தான் காரியம் நிகழ்த்துவர் என்பதை அவள் யோசித்திருக்கவில்லை. அவள் அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருக்க கதவை திறந்த ராஜன் போதையுடன் கதவை திறந்தான்....
    “ஹ்ம்ம் பண்ணலாம் பண்ணலாம்” “உனக்கு முப்பது வயசாக போகுது ஆதி. ரெட்டையில கல்யாணம் பண்ண மாட்டாங்க. இந்த வருஷம் உனக்கு எப்படியும் கல்யாணம் பண்ணிடணும்” “உனக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னா ஒண்ணு ஜாதகம் செட் ஆக மாட்டேங்குது இல்லை பொண்ணு பிடிக்கலை, அதுவும் இல்லைன்னா அவங்க வீடு பிடிக்கலைன்னு இதுவரை இருபது பேரை தள்ளி வைச்சாச்சு”  “எனக்கு தெரியாம இவ்வளவு...
    “வேணாம்” என்றவன் “உன்னோட திங்க்ஸ் எல்லாம் எங்க இருக்கு” “ஏன்??” “சொல்லு” “குவாட்டர்ஸ்ல இருக்கு” “சீக்கிரம் போய் ரெடியாகு போயிட்டு வந்திடுவோம்” “ஏங்க நான் அவன்கிட்ட கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன் அவன் என்னடான்னா அவ பின்னாடியே போறேன்கறான்” என்று தன் கணவரிடம் புலம்பினார் வாசவி. “நீ ஏன் இப்படி ஆகிட்டே வாசவி??” “நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்றவன் கண்ணைக் கசக்கிக்கொண்டு சென்றுவிட்டார். ஆத்திரேயன்...
    “எங்க போயிட்டு வர்றே??” “எதுக்கு கேட்கறீங்க??” “போகும் போது ஒரு டிரெஸ் வரும் போது டிரெஸ்” “என்னோட டிரெஸ் எப்பவும் ஆபீஸ்ல ஒரு செட் இருக்கும். இன்னைக்கு என்னோட பழைய குவார்ட்டஸ் போயிட்டு வந்தேன், அங்கவே டிரெஸ் மாத்திட்டு வந்திட்டேன்” “எங்கயாச்சும் போனா சொல்லிட்டு போக மாட்டியா. உன்னை தேடிட்டு என் புள்ளை பின்னாடியே வரணுமா” பேசப்பேச பேச்சு வளரும் என்று...
    3 அன்று “என்னை வரச்சொன்னீங்களாமே சார், சொல்லுங்க என்ன விஷயம்??” என்று முறைப்போடே தயாளனின் முன் வந்து நின்றாள் மெல்லினா. “என்னடி திமிரா??” என்றார் அவர் எடுத்த எடுப்பிலே. “மரியாதையா பேசுங்க, இல்லைன்னா...” “இல்லைன்னா என்னடி செய்வே??” என்றார் அவர் இன்னும் எகத்தாளமாய். “உங்ககிட்ட நான் பேசுறது வேஸ்ட்” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க “ஹேய் நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு...
    இன்று “டேய் இவ எதுக்குடா இப்போ என்னை திட்டினா??” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் அவன். நித்தேஷோ “அடேய் அவ திட்டினது மட்டும் தான் உன் மண்டையில இருக்கா?? வேற ஒண்ணும் கவனிக்க மாட்டியா நீ??” “நித்தேஷ் நீ சொன்னது நிஜமா??” “எதை நிஜமான்னு கேட்கறே நீ??” “அவ மனசுல நான் இருக்கேன்னா சொன்னா அவ” “அதை சொல்லி தான் இம்புட்டு...
    “சொல்லுங்க அமைதியாகிட்டீங்க??” “நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??” என்றான். “உங்களை குற்றம் சொல்றதுக்காக இதை நான் சொல்லலை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது” “இங்க அப்படியா நடக்குது. சட்டத்தை காப்பாத்த வேண்டியவங்களே அதை செய்ய வேண்டியதா இருக்கு தானே. சோ நல்லதுக்காக தப்பு பண்ணலாம் அது தப்பில்லை. அதனால...
    27 “என்ன யோசனை??” என்றவாறே ஆத்திரேயன் தன் மனைவியின் அருகில் அமர்ந்தான். “யோசனைன்னு இல்லை கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு...” “அதுக்கென்ன அவசியம் இப்போ??” “அப்பா வந்து உடனே கிளம்பிட்டாங்களே??” “அது மட்டும் தானா??” “அதைப்பத்தி பேசி இனி என்னாகப் போகுது. வந்தாங்க பார்த்தாங்க கிளம்பிட்டாங்க” என்றவளை கூர்ந்து நோக்கினான். “சரி அதைப்பத்தி பேசலை போதுமா??” “நான் ரொம்ப லக்கி தெரியுமா??” என்றவள் அவன் தோளில் நன்றாய்...
    “மெல்லினா கிளம்பு போகலாம்” “எங்கே??” “துணிக்கடைக்கு” “இப்போவே என்ன அவசரம்??” “பொறுமையா நம்ம ரிஷப்சன் முடிஞ்சதும் டிரஸ் எடுத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றியா??” “இல்லைங்க அது வந்து” “என்ன வந்து வான்னு தானே சொல்றேன். உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா??” “ஹ்ம்ம்” “அப்போ நீ போயிட்டு வந்ததும் கிளம்பலாமே??” “இல்லைங்க நீங்களே போயிட்டு வந்திடுங்க” “ஏதே நானா?? எனக்கென்ன தெரியும்” “எனக்கு மட்டும் என்ன தெரியும்?? அம்மா செலக்ட் பண்றதை...
    “என்னாச்சு அத்தை??” “உங்க மாமா நெறைய பேப்பர்ஸ் வைச்சிருக்காங்க. இங்க இருக்க மலைக்கிராமம் மலைவாசி மக்கள்பத்தி தகவல் எல்லாம் எடுத்து வைச்சிருக்காங்க. அது உங்களுக்கு உதவுமான்னு பாருங்களேன். அப்புறம் ஒரு போட்டோ கூட இருக்கு, எனக்கே இப்போ தான் தெரியும்” “அதுல மெல்லினாவோட” என்றுவிட்டு நிறுத்திவிட்டான் அவன். “அம்மாவோட போட்டோ தான். இவங்க பைலிங் பண்ணுறதுக்காக எடுத்திருப்பாங்க போல....
    அவன் இம்முறை சற்று நிதானமாகவே இருந்தான். போனை எடுத்தவன் ஆர்ப்பாட்டமில்லாமல் “ஹலோ” என்றிருந்தான். “ஐ வில் கேட்ச் யூ சூன்” “ஓகே” “என்ன சுரத்தேயில்லை உன் குரல்ல. நான் சொன்னது உனக்கு புரியலையா இல்லை இங்கிலீஷ் தெரியலையா. வேணா தமிழ்ல சொல்லட்டுமா” என்று அவள் நக்கல் குரலில் சொல்லவும் இவன் பொறுமை சிறிது சிறிதாய் குறைந்துக் கொண்டிருந்தது. “எனக்கு புரிஞ்சது...
    “ஏன்க்கா இப்படி பண்ணுறே?? பயப்படுறியா நீ??எனக்கே ஆறுதல் சொல்றவ நீ இப்படி பயப்படலாமா??” “இல்லை கவி பயப்படலை என்னோட வீடியோவை ஊரே பார்க்கும் கவி அதை நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு கவி” “அக்கா ஊரே பார்க்கும்ன்னு பயப்படுற, அப்போ அந்த பரதேசி பார்த்ததுக்கு என்ன பண்ணுவே” “அதனால தான் நான் செத்து போகணும்ன்னு நினைச்சேன்” “நீ செத்திட்டா எதுவும்...
    4 அன்று “டேய் ஆதி உனக்கென்ன தலையெழுத்தாடா இப்படி கான்ஸ்டபிள் வேலை பார்க்கறேன்னு எங்க உயிரையும் சேர்த்து எடுக்கறே. ஒழுங்கா வீட்டில இரேன்டா ரிசல்ட் வர்ற வரைக்கும்” என்று அங்கலாய்த்தது ஆத்திரேயனின் அன்னை வாசவி. “அம்மா உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது இனிமே இப்படி சொல்லாதீங்க. எதையும் ஆதியில இருந்து படிக்கணும்மா அடி மட்டத்துல இருந்து மேல வந்தா...
    “ஆரம்பத்துல அந்த அக்கா அப்படி ஆனதும் அவங்க வீட்டில எல்லாரும் அவங்களை ஒதுக்கி வைச்சாங்க. அதுனால தான் அவங்க அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டாங்க” “இப்போ அதே அக்கா தான் அந்த குடும்பத்தை தாங்கி நிக்கறாங்க. கூட பிறந்த தம்பிக்காக அப்படியொரு காரியமும் செஞ்ச அவங்களை அவங்க குடும்பம் இப்போ கடவுளா தான் பார்க்குது. அவங்களோட மனசை...
    5 அன்று மெல்லினாவிற்கு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்போது. அவள் தந்தை ஸ்டேஷனுக்கு சென்றிருந்தார். தங்கை பள்ளிக்கு சென்றிருந்தாள். மெல்லினாவிற்கு பன்னிரண்டாவது என்பதால் படிப்பதற்கு அவளுக்கு விடுமுறை இருந்தது. மெல்லினாவும் படித்து முடிந்து அமர்ந்திருந்தாள். அப்போது தான் மகேஸ்வரி சமையல் முடித்து அவளருகே வந்து அமர்ந்தார். “மெல்லினா டிவி போடுடா” என்றவாறே. “என்னம்மா சீரியலா??” “நானெங்கே சீரியல் பாக்குறேன், இன்னைக்கு எனக்கு...
    அடுத்த சில மணி நேரங்களில் விக்ரம் புதிதாய் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு அவினாஷிற்கு அழைத்தான். “அவினாஷ் நான் வந்திட்டேன்” “பிப்த் ப்ளோர்” “ஓகே வர்றேன்” என்றவன் உள்ளே நுழைந்தான். இவனை கண்டவர்கள் அவனுக்கு வணக்கம் வைக்க தலையசைத்து லிப்ட் இருக்குமிடம் நோக்கி விரைந்தான். உள்ளே நுழைந்து ஐந்தாம் எண் பொத்தானை அழுத்த...
    7 “நீ தூங்கலையா??” “எனக்கு தூக்கம் வரலை. நானும் தூங்கிட்டா நீங்க எப்படி வண்டி ஓட்டுவீங்க??” “இப்போ ஓட்டுற மாதிரி தான்” “எல்லாரும் தூங்கிட்டா உங்களுக்கும் தூக்கம் வரும்ல, போரடிக்கும் தானே” “அப்போ என்ன செய்யலாம்” என்றான் அவள் வாயில் இருந்தே என்ன சொல்கிறாள் என்று பார்க்க. “பேசிட்டு இருப்போம்” “நாம ரெண்டு பேரும் பேசணுமா எனக்கு இப்போ பேசுற மூடே இல்லை” என்றவனது...
    6 அன்று மெல்லினா தன் கணினியில் அவளுக்கென்று தனியாக ஒரு போல்டரை மறைத்து வைத்திருந்தாள். அவளின் பொக்கிஷங்கள் எல்லாம் அதில் தானிருக்கின்றன. அவள் நினைக்கும் போதெல்லாம் அதைத்தான் எடுத்து பார்த்துக் கொள்வாள். தந்தையின் ஆசைக்காகவும், அன்னையின் விருப்பத்திற்காக மட்டுமின்றி அவள் தனக்காகவும் தான் காவல்துறையை தேர்ந்தெடுத்தாள் அப்போது. வேலைக்கு சென்ற புதிதில் பிடிக்காது போனாலும் அவள் மனதிற்கு பிடித்தவன்...
    error: Content is protected !!