Un tholil saayum tharunam
"அவ பக்கம் திரும்பின உன்னை கொன்னுருவேன்", என்று மனதுக்கு கட்டளை கொடுத்து விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் அர்ஜுன்.
தியேட்டருக்கு அவளை அழைத்து சென்றவன், டிக்கட் எடுத்து விட்டு அவளை உள்ளே அழைத்து சென்றான்.
அருகருகே அமர்ந்தவுடன் அணு வாய் ஓயாமல் பேசி கொண்டே இருந்தாள். அவனும் அவளுக்கு சந்தோசமாகவே பதில் கொடுத்து கொண்டிருந்தான்.
படமும் ஆரம்பித்தது. அவன் சோதனையும் ஆரம்பித்தது.
பம்பரமாக சீட்டில்...
அத்தியாயம் 11
வரமாக நீ
கிடைத்த பின்னால்
கடவுளிடம் எனக்கென
வேண்டுதல் தான் ஏது?!!!
போனை வைத்து விட்டு தூக்கத்தை தொடர்ந்தாள் அணு.
அர்ஜுனும் படுத்தான். அப்போது தான் அறை கதவை பூட்டியது நினைவு வந்தது. "அம்மா ஏதாவது சத்தம் கொடுத்தா கூட கேக்காதே", என்று நினைத்து கொண்டு கதவை திறந்து வைத்து விட்டு படுக்கையில் விழுந்தான்.
காலையில் வீட்டுக்கு வந்த அணுவை பார்த்து சிரித்தான் செக்யூரிட்டி சிவபாலன்.
பதிலுக்கு...
அத்தியாயம் 10
உன் அருகாமைக்காக
காத்திருக்கின்றன என்
விழிகள் கண்ணீருடன்!!!
"இது என்ன சோதனை?", என்று மனதுக்குள் அலறினான் அர்ஜுன்.
"அணு"
"என்ன அர்ஜுன்?"
"ஒரு சைடா கால் போட்டு உக்காறேன்"
"இது தான் வசதியா இருக்கு. அன்னைக்கு இப்படி தான உக்காந்தேன்"
"அன்னைக்கு இதெல்லாம் நான் யோசிக்கலையே?"
"என்னது யோசிக்கலையே?"
"ஒன்னும் இல்லை பிடிச்சுக்கோ. கிளம்பலாம்"
"சரி டா", என்று சொல்லி அவன் தோளில் ஒரு கையும் அவன் இடுப்பில்...
அத்தியாயம் 9
வாசிக்க நீயின்றி வாடிக்
கிடக்கின்றன, உன்னை
நினைத்து நான்
எழுதிய கவிதை துளிகள்!!!
அவரை பார்த்து சிரித்தவன் "அணு…", என்று இழுத்தான்.
"இதோ மேல தான் இருக்கா. அணு மா. அர்ஜுன் வந்திருக்கான் பாரு. இங்க வா"
"இதோ பா", என்ற படியே மாடியில் இருந்து இறங்கி வந்தவளை சத்தியமாக அப்படி ஒரு கோலத்தில் அவன் எதிர் பார்க்க வில்லை. தலையை...
"எதுக்கு வைக்க போற?"
"நீ தானே அணு தூக்கம் வருதுன்னு சொன்ன? அதான் போன் வைக்கிறேன்"
"லூசு தூக்கம் வருதுன்னா, அணுவுக்கு இப்ப கதை சொல்லணும்னு அர்த்தம். கதை சொல்லு", என்று குண்டை தூக்கி போட்டாள்.
"என்னது பத்து மணிக்கு கதையா?", என்று திகைத்தான் அர்ஜுன்.
"எதுக்கு அதிர்ச்சியாகுற? எனக்கு அப்ப தான் தூக்கம் வரும்"
"எனக்கு அதெல்லாம் சொல்ல தெரியாது...
அத்தியாயம் 8
என் மரணம் உன் மடியில்
நிகழுமென்றால் அதை
மகிழ்வுடனே ஏற்பேன் நான்!!!
காலேஜ் முடிந்ததுமே வீட்டுக்கு சென்று விட்டான் அர்ஜுன். அணு இருக்க சொன்னது நினைவில் வந்தது தான். ஆனால் அதை விட முக்கியமான வேலை இருக்கே என்று நினைத்து கொண்டே சென்று விட்டான்.
வீட்டுக்கு போனவன் தன் அம்மாவின் முன்பு அமர்ந்தான்.
"என்ன பா இன்னைக்கு பிராக்டிஸ் இல்லையா? சீக்கிரமா...
"நல்லவர் மட்டுமா? இந்த காலேஜ் பொண்ணுங்க நம்மளை பாக்குதுங்களோ இல்லையோ அவரை தான ஹீரோ மாதிரி சைட் அடிக்கிறாங்க. அவரை போய் எதுக்கு இப்படி சொல்றாங்கன்னு தெரியலையே. மாஸ் ஹீரோ மச்சி அவர். அவர் கிளாஸ்ல மட்டும் தான் நான் தூங்கவே மாட்டேன். நானே சைட் அடிச்சிருக்கேன்னா பாத்துக்கோயேன்", என்றான் ராகுல்.
"வாங்க டா என்னனு...
அத்தியாயம் 7
அமாவாசை அன்று நிலவுக்கு
கூட விடுதலை உண்டு,
உன் நினைவுகளைச் சுமக்கும்
என் மனதுக்கு விடுதலை உண்டோ?!!!
"ஹ்ம்ம் நீ எழுதுனதை மறந்து வச்சிட்டு வந்துறாத அர்ஜுன்"
"இப்பவே எடுத்து பேக்ல வச்சிட்டேன். டோன்ட் ஒரி அணு"
"ஹ்ம்ம் ஓகே அர்ஜுன். குட் நைட்"
"அணு", என்று அழைத்து அவளை நிறுத்தினான் அர்ஜுன்.
"என்ன அர்ஜுன்?"
"தேங்க்ஸ். அம்மா கிட்ட பைக் வாங்கி கொடுங்கன்னு பேசுனதுக்காக"
"தேங்க்ஸ் எல்லாம்...
அத்தியாயம் 6
எந்த எழுதுகோலும் இன்றி
உன்னைப் பற்றிய கவிதைகளை
எழுதுகிறது என் மனம்!!!
வெளியே இருவரும் வந்தார்கள். சிவா அவர்களை பார்த்து சிரித்தான்.
தன்னுடைய வண்டியை எடுத்த அணு சுற்றி முற்றி பார்த்து விட்டு அர்ஜுன் முகத்தை பார்த்தாள்.
"எதுக்கு இப்படி முழிக்கிறா?", என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான் அர்ஜுன்.
"அர்ஜுன்...."
"என்ன அணு?"
"இருட்டிருச்சு"
"ஆமா இருட்டிட்டு"
"இல்லை நீ கொஞ்சம் என் வீட்டுக்கு வந்து...
அவர்களை பார்த்து சிரித்த அணு "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை", என்று காலில் விழுந்தாள்.
"அத்தையா?", என்று அதிர்ச்சியாக பார்த்தாள் சந்திரிகா. அர்ஜுனை பார்த்து "என்ன டா இது? எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்ச", என்று கேட்டாள்.
"ஆண்ட்டி அப்படிங்குறதை தான் அவ இந்த அழகில் சொல்றா மா. நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க", என்றான்.
"அதானே பாத்தேன். இவனாவது லவ்...
அத்தியாயம் 5
உன்னுடன் கழிக்கும்
பொழுதுகளில் என் துன்பங்கள்
கரையும் மாயம் என்னவோ?!!!
அவன் பின்னே அமர்ந்தவள் சும்மா கிடக்காமல், அவன் முதுகில் ஒட்டி அமர்ந்தாள்.
முன்னே நகர்ந்து அமர்ந்தான் அர்ஜுன்.
மறுபடியும் அதே தொடர, “கொஞ்சம் நகர்ந்து உக்காரு அணு", என்றான் அர்ஜுன்.
“இன்னும் நகர்ந்து உக்காந்தா நீ எப்படி அர்ஜுன் ஓட்டுவ?"
இவளை என்று பல்லை கடித்தவன், “இந்த பக்கம் சொல்லலை. கொஞ்சம்...
"எங்க காணும்? கண்டிப்பா வெளிய போயிருக்க வாய்ப்பில்லை", என்று நினைத்து "அணு", என்று அழைத்தான் அர்ஜுன்.
அவன் குரலே எக்கோ அடித்து மறுபடி மறுபடி கேட்டது.
ஆனால் அவளுடைய சத்தமே அங்கு இல்லை.
"எங்கயாவது மயங்கி விழுந்துட்டாளோ?", என்று நினைத்து டென்னிஸ் செல்ப் அருகே போனான்.
அப்போது தான் அவன் கண்ணில் பட்டாள் அணு. அதுவும் சுவரில் பல்லி போல...
அத்தியாயம் 4
என்னைப் காணாதே என்று
கண்ணுக்கு தடை போட்ட நீ
என்னை நினைக்காதே என்று
என் மனதுக்கும் தடை போடு!!!
"அப்பாடி வந்துட்டா", என்று நினைத்து கொண்டவனின் கைகளும் அவளை அணைத்து கொண்டது.
என்னமோ அவளுக்கே ஆபத்து போல அவனை ஒண்டி கொண்டு படுத்திருந்தாள் அணுராதா.
"அப்புறம் அந்த மான் திரும்பி பாத்துச்சாம். பின்னாடி யாருமே இல்லையாம். மறுபடியும் சத்தம் கேட்டுச்சாம். அப்பவும்...
அத்தியாயம் 3
மணப்பெண்ணாக அலங்கரித்த
பின்னும் களை இழந்து
இருக்கிறேன் உன் பார்வை
என் மீது படாததால்!!!
"நானே கேக்கணும்னு நினைச்சேன். தேங்க்ஸ் அணு", என்று வாங்கி கொண்டவன் "சரி நான் ரூம்க்கு போய் டிரெஸ் மாத்திட்டு வரேன்", என்று சொன்னான்.
"பொறு அர்ஜுன். எப்படியும் மேகலா அம்மாவையும், பிரியாவையும் கொண்டு போய் பஸ் ஏத்தி விடணும். அப்புறம் வந்து மாத்திக்கோ", என்றாள் அணு.
"அவனே...
"டேய் உனக்கு பிடிச்ச ரெட் சட்னி தான் வச்சிருக்கா. ஒழுங்கா தின்னு"
"இத்தனை நாள் பட்டினி போட்டுட்ட. இன்னைக்கு விருந்தே இருக்கும்னு பாத்தா இப்படி சொதப்புறியே அணு டார்லிங்", என்று கொஞ்சினான் அர்ஜுன்.
"படுத்தாம தின்னு தொலையேன் டா"
"அப்ப ஊட்டி விடு. அப்ப தான் சாப்பிடுவேன். இல்லைனா வேண்டாம்"
"நீ அடங்க மாட்டியா அர்ஜுன்?"
"நீ தான் அடக்கேன்"
"விவகாரமா பேசாத....
"அப்ப சரி இந்த வாரம் வெள்ளி கிழமை உங்க ரெண்டு பேருக்கும் அத்தை தலைமைல கல்யாணம். நான் சொல்றது சரிதானே அத்தை?", என்று கேட்டாள் அணு.
"நீ என்னைக்கு டா தப்பா சொல்லிருக்க? அப்படியே செஞ்சிறலாம்", என்று சொன்னாள் சந்திரிகா.
"அத்தையே சொல்லிட்டாங்க. அப்ப எல்லா பிளானும் நாளைல இருந்து செய்ய ஆரம்பிச்சிரலாம் பார்வதி"
"சரிங்க அம்மா"
"அப்புறம் பார்வதி,...
அத்தியாயம் 2
எப்போதுமே உன்னை
நினைத்துக் கொண்டிருக்கும்
மனதுக்கு ஓய்வு கிடைப்பது
என் மரணத்திலா?!!!
உள்ளே பூனை போல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றான் அர்ஜுன்.
அங்கே பார்த்த காட்சியில் இமைக்க மறந்து பார்த்து கொண்டே அதே இடத்தில் நின்றான்.
அவன் அம்மா அங்கே அவளுடன் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
"அட பாவி அம்மா, இத்தனை நாள் படுத்த படுக்கையா கிடந்துட்டு, ஒழுங்கா...
"நான் அவங்களை கேக்கலை. உன் பக்கத்துல இருக்குற பொண்ணை கேட்டேன்"
"மன்னிச்சிக்கோங்க மா. இவ பேரு பொன்னி மா. நம்ம மாணிக்கம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. இங்க கூட்டிட்டு வந்தான். ஐயா தான் வேலை கொடுத்தாங்க"
"சரி அத்தை எங்க?"
"ரூமில் இருக்காங்க மா"
"சரி மதியம் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்தாச்சா? காலைல சாப்பிட்டாங்களா?"
"ஐயாவோட அத்தை, பெரியம்மாவுக்கு காலைல...
உன் தோளில் சாயும் தருணம்
அத்தியாயம் 1
மூச்சு முட்டும் தூரத்தில்
நீ இல்லாமல் போனாலும்
என் கண்ணில் படும் தூரத்திலாவது இரு,
வாழ்ந்துவிடுவேன் ஒரு யுகம்!!!
மாடி படியில் இருந்து இறங்கி வந்தாள் பிரியா. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருந்தது. ஒயிலாக இறங்கி வந்தவள் அங்கு கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த மேகலா அருகில் சென்று "என்ன மா காலைலே கன்னத்துல...