Thithikkum Puthu Kaathalae
பொதுவாக சூர்யா மங்களத்திடம் மட்டும் தான் தன் கோபத்தை காட்டுவான். வேறு யார் மனதும் புண்படும் படி பேச மாட்டான். இன்று அனைவரையும் எடுத்தெறிந்து பேசியதில் அவன் மனது எந்த அளவுக்கு பாதிக்க பட்டிருக்கிறது என்று மங்களத்துக்கு புரிந்தது.
அது மட்டும் இல்லாமல், தன்னுடைய பொண்டாட்டியை இந்த அளவுக்கு அவன் தாங்குவதே மங்களத்துக்கு நிம்மதியாக இருந்தது....
அத்தியாயம் 7
நான் கனவில் கூட
ரசிக்க தூண்டும் அழகான
ஓவியம் நீ அன்பே!!!
சூர்யாவின் சத்தத்தில் அனைவருமே திகைத்தார்கள். பத்திரிகை கொடுக்க போன சண்முகமும், சுப்ரமணியமும் கூட அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.
மதியை திட்டி கொண்டிருந்த வள்ளி, அவனுடைய சத்தத்தில் மிரண்டே போனாள். "ஐயோ எப்ப இருந்து கேட்டான்னு தெரியலையே", என்று நினைத்து அப்பவும் மதியை தான் முறைத்தாள்.
ஆனால் மதியோ யாரையும்...
மெதுவாக அவள் முகத்தில் இருந்து விலகியவன் "சே நான் என்ன செய்ய பாத்தேன்? இப்ப அங்க அங்க எல்லாம் கை வச்சிருந்தா என்னை பத்தி கலை என்ன நினைச்சிருப்பா? அது எல்லாம் அவளுக்கு தெரியுமோ என்னவோ? படிச்சிட்டு இருக்குற சின்ன பொண்ணை போய்? அதுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கே", என்று தன்னையே திட்டினான்.
இப்போது அவன் கை கன்னத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது.
முத்தம்...
அத்தியாயம் 6
குழம்பித்தான் போகிறேன்
உன்னை எப்படி நேசிக்க
செய்வது என்ற தவிப்பில்!!!
கலைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை சூர்யா கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.
ரூம் வெளியே போன பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது.
"எதனால இப்படி இருக்கிறா? வீட்ல சொந்தகாரங்க இருக்குறதுனால...
"என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?"
"ஆன். அத்தான். எந்திச்சுடீங்களா? நானும் இப்ப தான் எழுந்தேன். காபி தரவா?"
"ஹ்ம்ம் சரி. ஆனா கஷ்டமா இருந்தா சமையல் செய்ய வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்"
"இல்லை இல்லை. கஷ்டம் எல்லாம் இல்லை. நான் செய்றேனே ப்ளீஸ்"
நேற்று போட்டிருந்த நைட்டியை மாற்றி விட்டு, வேறு ஒன்றை அணிந்திருந்தாள். குளித்ததுக்கு அடையாளமாக தலையை சுற்றி...
அத்தியாயம் 5
எதை எழுத சொன்னாலும்
உன் பெயரையே எழுதுகிறது
என் விரல் என்னும் எழுதுகோல்!!!
"இங்க கிளைமேட் செமையா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?", என்று பேச்சை ஆரம்பித்தான் சூர்யா.
அவனை பார்க்காமல், எங்கோ பார்த்த படி நின்றிருந்தவள் "ம்ம்", என்றாள்.
அப்போது தான் அவளை திரும்பி பார்த்த சூர்யா "கலை", என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
"ஹ்ம்ம்", என்ற படி அவன் முகம்...
அத்தியாயம் 4
உன் செல்ல சிணுங்கல்களில்
நான் என் சித்தத்தையே
தொலைக்கிறேன் அன்பே!!!
அன்று கடைசி பீரியட் வரை படித்து படித்து மதியிடம் சொன்னாள் காவ்யா.
"இங்க பாரு மதி, சாயங்காலம் அண்ணா, என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டா, ஒழுங்கா ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்ற. அப்புறம் அந்த ஓடி போன பொண்ணை விரும்புறீங்களான்னு கேட்டுரு சரியா?", என்றாள் காவ்யா.
"அவளை பத்தி எதுக்கு டி...
"இவன் என்ன இப்படி கேக்குறான்?", என்று நினைத்து கொண்டு "பிடிச்சிருக்கு. ஆனா ஏன் வேற மாதிரி?", என்று கேட்டாள்.
"இந்த உலகத்துல, எல்லாரையும் விட உனக்கு நான் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன் கலை. அதனால நான் கலைன்னு கூப்பிடுறேன்", என்றான்.
அவன் குரலில், அவன் வார்த்தைகளில் திகைத்து போய் அவனை பார்த்தாள் கலை மதி.
அவள் பார்வையை உணர்ந்து, "நான்...
அத்தியாயம் 3
முகிலினங்கள் சுற்றி
அலைவது போல
உந்தன் வாசனையை
தேடுகிறேன் அன்பே!!!
"எதுக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா?", என்று நினைத்து பதட்டமாக அவளை பார்த்தான் சூர்யா.
மங்களம் "சூர்யா எதாவது சொன்னானா மா?", என்று கேப்பது அவன் காதில் விழுந்தது.
"ஐயோ கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவை நைட் என்கூட தங்கிருக்கா. அடுத்த நாள் எங்க அம்மாவுக்கு என்ன என்னவோ...
வீட்டுக்குள்ளே போன பின்னரும், அதே போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் மதி.
"உக்காரு மா. அண்ணா நீங்களும் உக்காருங்க", என்று அங்கு இருந்த சோபாவில் அமர சொன்னாள் மங்களம்.
அப்பாவும், பொண்ணும் அமர்ந்த பின்னர் அவர்கள் எதிரே சுப்ரமணியம் அமர்ந்து அவர்களுடன் பேச துடங்கினார்.
அமைதியாக இருந்தவளை காலேஜ், படிப்பு பற்றி பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
சூர்யா...
அத்தியாயம் 2
எந்தன் உயிரையே
வருடிச் செல்கிறது
உன் மீது வரும் சுகந்தம்!!!
தன்னுடைய பெரிய கண்களை விரித்து கொண்டு சூர்யாவை பார்த்து கொண்டிருந்த கலை மதியை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.
அவன் தன்னையே பார்ப்பதை அறிந்து முகத்தை திருப்பி கொண்டாள் மதி.
காவ்யாவின் நிலையோ கொடுமையாக இருந்தது. "இது தான் சனியனை தூக்கி பனியனில் போடுவது போல? சே இப்படியா...
தித்திக்கும் புது காதலே!!!
அத்தியாயம் 1
உன் இதழ் தீண்டிய
ஒவ்வொரு நீர்த் துளியும்
என்னுள் தித்திப்பாய் இறங்குகிறது!!!
"மணி எட்டரை ஆக போகுது. இவளை இன்னும் காணும்", என்று நினைத்து கொண்டு அந்த பொறியியல் கல்லூரி மரத்தடியில் அமர்ந்திருந்தாள் காவ்யா.
அப்போது ஹாஸ்டலில் இருந்து கையில் ஒரு நோட்டுடன் ஓடி வந்தாள் கலைமதி.
"எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? ஊருல இருந்து...
"ஆமா காவ்யா மாட்டிகிட்டேன் தான். மொத்தமா மாட்டிகிட்டேன். எல்லாம் போச்சு. இனி என்ன செய்யன்னே தெரியலை"
"சரி கவலை படாத. என்ன நடந்துச்சுன்னு சொல்லு?"
"அன்னைக்கு ஊருக்கு போகும் போது எப்பவும் போல தான் போனேன். ஆனா போன பிறகு தான் தெரிஞ்சது எங்க சித்தியோட அண்ணன் பையனுக்கு கல்யாணம்னு. அதனால சித்தி அப்புறம் தேன், ரகு...