Sunday, April 28, 2024

    Saththamindri Muththamidu

    வீடு வந்து போது எட்டரை மணி, ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கிய போது வீடே அதிசயமாய் பார்த்தது. சாரதா, சித்ரா, ராதா என்று அந்த வீட்டின் பெண்கள் எல்லாம் வந்திருக்க, “வாங்க சித்தி, வாங்க அண்ணி” என்றாள் எதுவும் முகத்தினில் காண்பித்தது கொள்ளாமல். மேகநாதன் வீடு சென்று அழைக்கவில்லை என்றாலும், தொலைபேசியில் சொல்லியிருக்க, அவர்களும் உடனே வந்து...
    அத்தியாயம் பதினொன்று : அணைத்து இருந்தவளை மெதுவாக விளக்கியவன், “உங்க வீட்ல வேற இதுக்கு ஒரு டாக்டர் இருக்குறா? உங்கம்மாக்கும் தெரியலை?” என்று குறைபட்டான்.   “ரெண்டு மாசமா அவ வீட்ல இல்லை, எங்கயோ திருநெல்வேலி பக்கம் அவளுக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க, இதோட அவளுக்கு படிப்பும் முடியுது! எனக்கே தெரியலை அம்மாக்கு எப்படி தெரியும்!”    “நான் யாரையும்...
    “என்ன அண்ணா பதிலே காணோம்” என்ற நிருபமாவின் குரல் ஓங்கி ஒலிக்க, இப்படியாக வீடு களை கட்டியது.  இந்த சப்தத்தில் பாதிக்கப்படாத இரு ஜீவன்கள் திருவும் துளசியும்! துளசியின் கவனம் முழுவதும் மகளிடம் இருக்க, திருவின் கவனம் முழுவதும் துளசியிடம். எல்லோரும் இருப்பதால் மீனாக்ஷியின் வாய் பூட்டுடைத்து பேசிக் கொண்டிருந்தது.  மேகநாதன் அகிலாண்டேஸ்வரி மூலமாக திருவிடம் எதோ கேட்க வர,...
    அத்தியாயம் பத்து : துளசி வரும் போது காலை பத்து மணி, அதுவரையிலும் திரு மகளை பார்ப்பதும் பின் வந்து சோபாவில் அமர்வதுமாக இருக்க, “என்ன இது, இந்த அண்ணன் என்ன பண்றாரு? குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தறாரு!” என்று தனம் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். வெங்கடேஷ் வெளியே கிளம்பியிருந்தான், அவனுக்கு தெரியவில்லை, திருவும் சொல்லவில்லை!...
    பிரசன்னாவின் கைபேசியில் இருந்து தான் அழைத்தால். பிரசன்னாவின் நம்பர் திருவிடம் இருந்தது. மனைவியின் நினைவில் வெகு நேரம் உறங்காமல் இருந்தவன், மூன்று மணிக்கு மேல் தான் உறங்கியிருந்தான். அதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடாமல் இரண்டு மூன்று முறை அடித்த பிறகு தான் எடுத்தான். “ஹல்லோ” என்ற குரலிலேயே அவன் உறக்கம் தெளியவில்லை என்று துளசிக்கு...
    அத்தியாயம் ஒன்பது : “என்னவாகிற்று எனக்கு?” என்று துளசி நினைக்காத நாளே இல்லை. ஆம்! அந்த நிமிடம் என்னவாகிற்று என்று தெரியவில்லை வீட்டை விட்டு வந்து விட்டாள். வந்து இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது. வெங்கடேஷ் பின்னோடு வந்து அழைத்த போது கையினில் காசில்லாததால் “என்னை பஸ் வெச்சி விடுங்க” என்று மட்டும் சொல்ல, “சரி வாங்க” என்று...
    புகழ் உண்ண வரவுமே, மங்கை ஒதுங்கிக்கொள்ள, பொன்னி பரிமாற, அவனோ உண்பதற்கு மட்டுமே வாய் திறந்தான்..  எதுவும் பேசவில்லை.. உண்டுவிட்டு எழுந்து போய்விட, அதற்குமேல் பொன்னியும் மங்கையும் சாப்பிட, மங்கையோ “நீ போ பொன்னி.. நான் முன்னாடி ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்..” என்றுவிட, பொன்னி திரும்பவும் அறைக்கு வர, அப்போதும் புகழேந்தியின் எண்ணம் எல்லாம்...
                          தோற்றம் – 26 “என்னங்க..... இதெல்லாம் சரியே இல்லை....” என்று பொன்னி சிணுங்க..., “நீ கட்டல.. சோ நான் கட்டி விடுறேன்...” என்று அவளுக்கு மும்முரமாய் சேலை கட்டிவிடும் பணியில் இருந்தான் புகழேந்தி.. “ஐயோ.. ப்ளீஸ்.. நானே கட்டிக்கிறேன்....” என்று கையை காலை பொன்னி உதற, அவளுக்கோ வெட்கமும் கூச்சமும் பிடுங்கியது... “நீ எங்க கட்டின...?? சோ இதான்...
    “என்ன மாப்பிள சந்தோசம்ன்னு ஒரு வார்த்தைல முடிச்சிட்ட, உன் பொண்டாட்டி அந்த ஒண்ணுமில்லாதவ எனக்கு பணம் குடுக்க கூடாது சொன்னாலாமே” என்றும் பேச, திரு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். விட்டால் அவரை அடித்து விடும் கோபம் பொங்கியது. மிக முயன்று கட்டுக்குள் வந்தான். அவனின் முகம் அதனை நன்கு பிரதிபலித்தது. பணம் ஏற்பாடு செய்து கொடுத்த...
    அத்தியாயம் எட்டு : திருவின் முகத்தினில் ஒரு கோபமும் ஒரு இறுக்கமும் எப்போதும் தங்கி விட்டது. துளசியுமே முகத்தை தூக்கி வைத்து சுற்ற, அவர்களின் வீடே களையிழந்துவிட்டது. மேகநாதனிற்கும் சற்று உடல் நலம் குறைய, அது இன்னும் சூழலை கணப்படுத்தியது. எப்போதும் போல வேலைகளை துளசி பார்த்துக் கொண்டாலும், செய்து கொண்டாலும் திருவிடம் ஒரு பாராமுகத்தை காண்பிக்க...
    “தெரியலை, மாமா ஒரு மாதிரி இருக்குன்னு போய் படுத்துக்கிட்டார்” என்று வசுமதி சொல்லவும்,   “ஏன், என்ன ஆச்சு?” என்றனர் இருவரும். நடந்தவைகளை சொல்ல “நேத்து தானே சொன்னோம் இவளுக்கு அறிவிருக்குதா இல்லையா” என்று எல்லோரும் நேரடியாக ஷோபனாவை திட்டினர். அதற்குள் நாகேந்திரன் சாரதாவோடு வந்திருந்தார், வந்தவரிடம் அகிலாண்டேஸ்வரி சண்டைக்கு கிளம்ப, திருவும் வெங்கடேஷும் அப்பாவிற்கு உடல் நிலை...
      “எதுக்கு துளசி இவ்வளவு பிடிவாதம்” என்று அகிலாண்டேஸ்வரி பேச, “அதுதானே எப்பவும் வாங்கற பேச்சு தானே, இப்போ மட்டும் புதுசா என்ன வீராப்பு!” என்று ஷோபனா வெளியே வந்து வாயை விட்டாள். “நீ உள்ள போ முதல்ல” என்று அகிலாண்டேஸ்வரி பொறுக்க முடியாமல் அதட்டினர். ஃபோன் பேசி வந்த திருவிடம் அவனின் முகம் பார்த்தாள். அவன் கோபமாக எங்கோ...
    அத்தியாயம் ஏழு : சரியாக அந்த நேரம் மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் வர, இவர்களை பார்த்ததும் “வா வேலா” என்றவர், “வாம்மா” என்றார் ரத்னாவையும் பார்த்து. அகிலாண்டேஸ்வரியும் “வாங்க” என்றார், இல்லையென்றால் மேகநாதன் தொலைத்து விடுவார், அதையும் விட துளசி பின்னே அவருக்கு எந்த வேலையும் செய்து கொடுக்க மாட்டாள். அவர்கள் உண்டு கொண்டிருப்பதில் இருந்து எழுந்து நின்று கொண்டிருக்க,...
    பின் மகளை பார்த்து முறைக்க, மீனாக்ஷி வாய் மேல் சிரிக்க மாட்டேன் என்பது போல கைவைத்து அப்போதும் சிரித்துக் கொண்டிருக்க, அவளின் சிரிப்பு துளசியையும் தொற்ற, “போடி” என்று சலிப்பவள் போல அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் புன்னகை முகத்தோடு. அவள் நடக்க, “மா, நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க” என்று மீனாக்ஷி...
    அத்தியாயம் ஆறு : காலையில் துளசி விழித்த போது அவள் மீனாட்சியின் அருகில் படுத்திருந்தாள். அவளாக இங்கே வரவில்லை. அனேகமாக களைப்பில் உறங்கியிருக்கக் கூடும் என்று அனுமானித்தவள், அவன் தூக்கி இங்கே வந்து படுக்க வைத்திருப்பான் என்பதே அவளின் காலையை வண்ணமயமாக்கியது. நேரம் ஏழு மணியை தொட்டு இருந்தது. இவ்வளவு நேரம் அவள் உறங்குவது என்பது அரிது....
    “அப்பா சொல்றாங்க, ஒரு ரெண்டு நாள் நீ உங்க வீட்ல இருந்துட்டு வர்றதாம்” என்று வெங்கடேஷ் ஷோபனாவிடம் சொன்னான். “சொன்னா, நான் போகணுமா? யார் சொன்னாலும் போக மாட்டேன். முடிஞ்சா என்னை வெளில அனுப்பி பாருங்க” என்று அவள் கத்திய கத்தல் அங்கிருந்த அனைவருக்கும் கேட்க மேகநாதனால் தங்கையிடம் கடிந்து கொள்வதை தவிர வேறு முடியவில்லை. எல்லோரும்...
    அத்தியாயம் ஐந்து :   ஆம்! திருவை இன்னும் அது துரத்துகின்றது.  அவனின் கடந்த கால காதல். இப்போது நிச்சயம் அவனுக்கு காதல் இல்லை. ஆனால் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கிறது.    மேகநாதனை பார்த்து திருவிற்கு தான் பயம். அவளுக்கு இல்லை, ஷெரினா, அவளின் பெயர். அவளுடைய குடும்பத்தில் அப்பா, அவள், தம்பி மட்டுமே! மேகநாதன் மூன்று பேரையும்...
    ஏனோ அன்று மனதே சரியில்லை. துளசி மீனாட்சியை எழுப்பி நிறுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, விரைந்து வந்து மகளை நிறுத்தியவன். அவளின் இரண்டு முட்டியிலும் பெரிய கட்டை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டான். திரும்பவும் அவளை திட்டினான், “நீ பார்த்து வராமா பாரு எவ்வளவு காயம்னு” என்று அதட்டினான். துளசி அவளின் இன்னொரு பக்கம் பிடித்திருப்பதை பார்த்து...
    அத்தியாயம் நான்கு : திருவின் மாமா நாகேந்திரன் எந்த வேகத்தில் வந்தாரோ மேகநாதன் கிளம்பும் முன் அவரை பிடித்திருந்தார். “வாங்க மாப்பிள்ளை” என்ற மேகநாதனின் அழைப்புக்கு கூட செவி சாய்க்காமல் “திரு இல்லீங்களா மச்சான்” என்றார் அவசரமாக. “இப்போ தான் கிளம்பினான்” என்று மேகநாதன் சொல்ல, அவர் தளர்வாக சோஃபாவில் அமர, எல்லோரும் அவரைத் தான் பார்த்திருந்தனர். ஒன்றுமே பேசாமல்...
    Tamil Novel வேகமாக சட்னி ஆட்டி, தோசைகளை வார்த்து டைனிங் டேபிளில் வைக்க, மேகநாதன் வந்தவர் உண்டு முடிக்க, பின்னே திருவும் வந்தவன் உண்டு முடிக்க, பின்பு அடுப்பை அணைத்து, “இப்போ என்னவோ செஞ்சிக்கோ” என்று துளசி நகரப் போக, ‘உங்களுக்குக்கா” என்று தனம் கேட்க, “இல்லை பசிக்கலை” என்று சொல்லி நகர்ந்தாள். அதுவரையிலும் தனம் துளசியின் முகத்தை தான்...
    error: Content is protected !!