Muththa Kavithai Nee
முத்தக் கவிதை நீ
அந்த ஜுலை மாதத்துக் காலை நேரம் பெங்களூர் நகரத்தை தனது குளிரினால் குளிப்பாட்டியது. ஜே.பி.நகரின் மையப்பகுதியில் இருந்த வாசவி எஜுகேஷன் ட்ரஸ்ட்டின் கல்லூரி வளாகம் ஒன்பது மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எம்.சீ.ஏ பிரிவின் முதலாம் வருட வகுப்புகள் ஆரம்பித்திருக்க அனைவரும் மும்முரமாய் கவனித்துக் கொண்டிருந்தனர். நாலாவது வரிசையில்...
11 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கையில் சிலது நடக்கும் என்று நினைப்போம். ஆனால் தட்டிப் போகும். நம் கைவிட்டுப் போனதென்று சிலவற்றை ஒதுக்கி நம்பிக்கை இழந்திருப்போம். ஆனால் எதிர்பாராத வேளையில் எதிர்பாராத விதமாக நமக்கு நம்பிக்கை பொய்த்த விஷயங்கள் நடந்து நம்மைத் திக்குமுக்காட வைத்து விடும். மைக்கேலுக்கு இப்போது அப்படித்தான் இருந்தது. அவனுக்கிருந்த சந்தோஷத்தில்...
25 - முத்தக் கவிதை நீ
சில மனிதர்களைப் பார்த்தால் "ப்பா!!! இப்படியும் இருப்பார்களா?" என்று தோன்றும். தன் முன் இருந்து தனது முகத்தையே பார்த்திருக்கும் மைக்கேலைக் காணும் போது கீர்த்திக்கு அப்படி ஒரு எண்ணமே தோன்றியது. 'என்னடா மனிதன் இவன். இவ்வளவு காதலா? காதலுக்காக வாழ்க்கையில் இப்படியா எல்லாவற்றையும் விட்டு விட்டு வருவான்? நாடு,...
14 – முத்தக் கவிதை நீ
பொதுவாகவே நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் தான். காதல் என்று வரும் போது அந்த எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும் தானே. நேத்ரா தன்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து காதல் வசனம் பேசுவாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை தான் மைக்கேலுக்கு....
முத்தக் கவிதை நீ – 5
மெல்போர்னில் ஒரு இளங்காலை நேரம். தனது விசா இன்டர்வ்யூவை முடித்துக் கொண்டு அருகிலிருந்த சப்வேயில் நுழைந்தவன் தனக்கான ஆர்டரைக் கொடுத்து விட்டுக் காத்திருக்கையில் விசா இன்டர்வ்யூவில் கேட்கப்பட்ட கேள்விகளை அசைபோட்டான். இன்டர்வ்யூ எடுத்த பெண்மணிக்கு நடுத்தர வயதிருக்கும். தனது கண்ணாடியை நாசியில் கீழிறக்கி அவனை ஏதோ கொலைக்குற்றவாளியைப் பார்ப்பது...
2 முத்தக் கவிதை நீ
மெல்பெர்ன் நகரம் தனது காலை நேரக் குளிர் காற்றில் ஊரையே பனிக்குள் போர்த்தியிருந்தது. இந்தக் குளிரிலும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை செவ்வனே செய்து முடித்து வியர்த்துப் போய் நின்றான் மைக்கேல். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றம். ஆஸ்திரேலிய மண்ணுக்கே உரித்தான நிறம். அந்நாட்டில் வெகு சிலருக்கே அமைந்த கருமையான கேசம்....
21 – முத்தக் கவிதை நீ
சிலர் பேசியே கொல்லும் ரகம். சிலர் பேசுவதற்கு காசு கேட்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தேவைக்கு அளவாகப் பேசும் திறம் படைத்தவர்கள். கீர்த்தி அப்படித்தான். தன் தங்கையின் படிக்கும் ஆசையை மதித்தவனாய் அவளை தன்னுடன் அழைத்து வந்து அவளுக்கு நல்ல கல்லூரியில் இடம் வாங்கி பாதுகாப்பான இடத்தில் தங்க...
முத்தக் கவிதை நீ 3
அழைப்பின் மறுபுறம் இருந்தவர் ஹலோ ஹலோ என்று அலற இங்குச் சிலையாகிப் போனவளோ என்ன செய்கிறோம் என்றே தெரியாத நிலையில் இருந்தாள். இதற்குள் டெட்டி என்றழைக்கப்படும் ஹரிணியும் வந்து சேர்ந்தாள். சிலையாக நின்ற நேத்ராவை ஓரிரு முறை உலுக்கிப் பார்த்தவள் அவளிடம் அசைவின்றிப் போகவே கீழே தொங்கிய தொலைபேசி ரிசீவரை...
22- முத்தக் கவிதை நீ
தனக்குப் பிடித்த விஷயங்களை பொதுவாக அழகுபடுத்தி பார்ப்பது தான் மனித இயல்பு. ஆனால் ஏனோ சிலரின் இயல்பு வேறாய் இருக்கிறது. மைக்கேலை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணித்தான் வெகு காலமாக அவனை பின்தொடர்ந்து அவனது இந்திய வருகையை தானும் பின்பற்றி ஸாஷா இந்தியா வந்தது. இங்கு...
13 – முத்தக் கவிதை நீ
சிலருக்கு அவர்கள் வேண்டும் விஷயம் எல்லாம் கஷ்டப்பட்டு தான் கிடைக்கும். சிலருக்கோ தானாக எல்லாம் வந்தமையும். ஆனால் அது நீடிக்குமா என்பது தான் கேள்வி. மைக்கேல் இந்தியா வந்ததுமே எப்படி தனது பேபியை கண்டுபிடிக்க என்று திணறிய போது மாமியின் வடிவில் பதில் கிடைத்தது. இப்போது பெங்களூரில் எங்கே...
20 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாய் செல்வதில்லை. அவ்வப்போது ஒரு சில திருப்பங்களுடன் இருந்தால் தான் நமக்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தியா வந்து தனது ஸ்பிரிங் பேபியை சந்தித்ததுமல்லாமல் அவளுடன் ஓரளவு சுமூகமாக பழகவும் தொடங்கியாயிற்று. அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்த போதும் ஏனோ அவளுடன் கழிக்கும்...
17 – முத்தக் கவிதை நீ
ஒருவருக்கு வாய்க்கும் நண்பர்கள் அவர்களது வாழ்வின் வரமாகவோ சாபமாகவோ அமைந்து போகின்றார்கள். சில நண்பர்கள் நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடும். ஹரிணியும் அப்படித்தான் நேத்ராவிற்கு. அவளுக்கு நன்கு புரிந்தது நேத்ராவிற்கு மைக்கேலின் மீது காதல் இருந்தது என்று. ஆனால் சாதாரணமாக சொன்னால் கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டாள்....
10 – முத்தக் கவிதை நீ
பெங்களூரில் ஜெயா நகரில் மிகவும் பரபரப்பான காலை நேரமது. தனது வழக்கமான சோம்பேறித்த்தை மூட்டை கட்டி வைத்தவளாய் நேத்ரா கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். ஏனோ காலை எழுந்தது முதலே அவளுக்கு மனதுக்குள் ஏதோ சரியாகப்படவில்லை. தான் என்ன மாதிரியாக உணர்கிறோம் என்றும் புரியவில்லை. ஏதோ இனிம் புரியா...
16 – முத்தக் கவிதை நீ
சிலரைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதாய் அவ்வளவு சாந்த சொரூபியாக இருப்பார்கள். ஆனால் கோபம் என்று வந்துவிட்டால் அவர்கள் எல்லாம் துர்வாசர் பரம்பரை தான். நேத்ராவை பொதுவாக பார்ப்பவர்கள் ரொம்ப அமைதி என்று தான் எண்ணியிருப்பார்கள். மைக்கேல் முதல்முறையே வாஷ்ரூம் அருகே இவள் யாருடனோ தகராறு...
முத்தக் கவிதை நீ – 6
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.’ உண்மை தானே. விசாலம் நினைத்தது போல் அவளது மகனுக்கும் நேத்ராவிற்கும் திருமணம் முடித்து விட்டால் எப்படியும் சென்னையின் மெயின் ஏரியாவான மயிலாப்பூரில் இவ்வளவு பெரிய வீட்டைக் கைப்பற்றலாம். மன்னியின் பிறந்த வீட்டுச் சீர் நகைகள் அத்துனையையும் ஆட்டையைப் போடலாம். நேத்ராவிற்கு உடன்பிறப்பென்று இருப்பது...
23 – முத்தக் கவிதை நீ
ப்ரதீப் தன் தங்கையைப் பார்க்கும் வரைக்கும் கூட ஏதேதோ காரணம் சொல்லி தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு தங்கைக்கு மணமுடிப்பதைப் பற்றி யோசித்திருந்தான் கீர்த்தி. ஆனால் பெண் பார்க்க என்று வந்து விட்டு அதுவரை போட்டிருந்த அப்பாவி வேஷம் கலைந்து அவளை தன் முன்னேயே விழுங்கி விடுவது போல...
முத்தக் கவிதை நீ – 7
நல்ல இனிமையான பாடல் திடீரென நடுவில் ஸ்வரம் தப்பினால் எப்படி இருக்குமோ, குளிர்காலத்து காலை நேர தூக்கத்தின் இடையே தடங்கல் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கோபம் உண்டானது மைக்கேலுக்கு. அவன் தனது பேபியின் நினைவில் மூழ்கி இருக்கும் போது யார் இடையிட்டாலும் அவனால் ஏற்றுக் கொள்ள...
15 – முத்தக் கவிதை நீ
சில சமயம் நம் உயிர் நண்பர்கள் தான் உயிர் வாங்கும் நண்பர்களாக மாறிப் போவார்கள். நேத்ராவிற்கு கொஞ்சம் கூட தனது நட்புக்களின் மீது சந்தேகமே எழவில்லை. தான் ஒன்று சொன்னால் தன் பேபீஸ் அதை தவறாமல் கேட்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது அவளுக்கு. ஹரிணிக்கு தனது உயிர் நட்பு...
முத்தக் கவிதை நீ – 4
வாழ்க்கை எப்போதுமே ஒரே விதமாகச் செல்வதில்லை. நாம் எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத விதமான திருப்பங்களோடு நமக்கு எப்போதும் வித்தியாசமான அனுபவங்களை தருவதே வாழ்வின் சுவாரஸ்யம். தனது வாழ்வின் கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் தனக்கான ஒரு சந்தோஷக் கூட்டை அமைத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏன்...
24 - முத்தக் கவிதை நீ
சிலரைப் பற்றிய நினைவு வந்தாலே எரிமலை வெடிக்கத் துடிக்கும் உள்ளுக்குள். சிலரது நினைவுகள் நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும். அப்படியான உணர்வுகள் தான் மைக்கேலுக்கு அவனது ஸ்பிரிங்கின் நினைவலைகள் ஏற்படுத்தும். பாலைவனமாக இருந்த வாழ்க்கையில் ஒரு மாறுபட்ட கோணத்தைக் காட்டியவள் அவள். எவரிடமும் குறை சொல்ல மாட்டாள். மைக்கேல்...