Thursday, April 25, 2024

    Manjal Vaanam Konjam Megam

                                                                        உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 33   அலைபேசியை எடுத்து யுகாவிற்கு அழைக்க.. அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் தூரிகா.   யாருக்கு அழைக்க.. என்ன கேட்க.. எதுவுமே புரியவில்லை.. விக்ரமிற்கு அழைப்பு விடுக்க.. சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்து அவளது சிந்தையை...
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 32   குளித்துவிட்டு தூரிகாவை எழுப்பலாம் என தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.. அவனது செவியைத் தொட்ட செய்தி அப்படி ! “ பக்கத்திலேயே பையனை வெச்சிட்டு எங்கெங்கோ தேடி இருந்திருக்கோம் பாருங்க அண்ணி.. ” தூரிகாவின் அம்மா யுகாவின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. “ ஆனா நமக்கு தெரியாதது என்...
                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 31 இரு கைகளையும் பின்பக்கமாய் தலைக்குக் கொடுத்து வானத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த அந்திக் காவலனைப் பார்த்திருந்தான் அதுல். மெல்லிய கொலுசொலி கேட்க.. அதற்குச் சொந்தமானவளை நினைத்து இதழ்களில் இதமாய் புன்னகை அரும்பியது அவளுக்குச் சொந்தமானவனுக்கு..! கொலுசொலி அருகே கேட்க விழிகளை மூடிக் கொண்டான் சட்டென்று.. வந்தவள் வழக்கமாக...
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 30 யுகா தூரிகா இருவரையும் மேல் மாடத்தில் உள்ள அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தாத்தாவிடம் வந்தார் தூரிகாவின் அம்மா லட்சுமி. அவருடைய கணவரும் அங்கிருக்க அருகிலேயே அமர்ந்தார் “ யாருமே எதிர்பார்க்கலைப்பா.. அத்தை மாமா இறந்தப்புறம் விட்டுப் போன நம்ம உறவு உங்க பேத்தி கல்யாணத்தில மறுபடியும் தொடரும்னு.. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...
                                                                        உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 29   கதவு தட்டும் சத்தம் கேட்டது. பைரவி எழுந்து சென்று கதவைத் திறக்க.. அதுல் நின்றிருந்தான். அவள் விட்டுவிட்டு வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். ‘ ஸ்ஸ்.. ’ என அவள் தலையில் தட்டிக் கொண்டு “ ஏதோ நியாபகம்.. அதான் விட்டு... ” என அவள்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 28   “ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பைரவி.. உன் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்.. ” என்றான் அத்துவின் அக்மார்க் புன்னகையுடன். அகமும் முகமும் மலர்ந்து மணம் பரப்ப.. மலர்ச்சியுடன் மன்னவனைப் பார்த்தாள். இதே போலத்தான் சென்ற வருடமும் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஏன் இவளும் எதிர்பார்த்திருக்கவில்லை அவளுடைய அம்மாவையும்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 27   சிங்கப்பூர்..   “ வாழ்ந்தா இங்க தான் வாழனும் ” என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் சூர்யா.. உண்மையில் அங்கிருந்து தூய்மையிலும் அதனை கடைபிடிக்கும் மக்களின் ஒழுக்கத்திலும் வியந்துதான் போயினர்.. முதல் வாரம் முழுக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் சார்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. உண்மையில் சூர்யா,...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 26   அகத்தியன் சூர்யா பைரவி இருவரையும் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.. “ இவரு எதுக்கு பைரவி கூப்பிட்டு அனுப்பினாரு ?? ” “ யாருக்குத் தெரியும் ! ஒருவேளை நீ டெஸ்ட் பேப்பர் ல உன் கையெழுத்தை இங்கிலீஷ்ல போட்டதை பற்றி கேட்க கூட இருக்கலாம் ” என்றவள் விளையாட்டாக...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 25   நிச்சயம் அவன் தூரிகாவை எதிர்பார்க்கவில்லை.. இப்பொழுது என்ன செய்வது? தூரிகாவைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அவன் முடிவு மறுப்பாகத்தான் இருந்திருக்கும்.. ஆனால் இப்பொழுது ?? மனம் மொத்தமும் முடங்கி போய்விட்டிருந்தது.. யோசிக்க வேண்டும்.. யோசித்து தான் இதில் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்.. முடிவு செய்திருந்தான்.....
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 24   அலுவலகம் முடிந்து வீட்டினுள் நுழைந்தான் அதுல். சட்டென ஜெயா “ நான் அப்புறமா பேசுறேன்.. ” என அழைப்பைத் துண்டிக்க குழப்பமாக பார்த்திருந்தான் அன்னையை. இது எதேச்சையாக நடக்கிறது என்றால் சரி ஆனால் அது என்ன ஒவ்வொரு முறையும் அவன் வரும் பொழுது மட்டும்.. இதே போல் நான்கைந்து முறைகளுக்கு...
                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 23 “ மாமா.... ” அவள் அதரங்கள் மென்மையாக உச்சரித்தன. மனதின் ஓரம் ஒரு சந்தேகக் கீற்று.. மாமாவா அது ?? அவனுடைய மாமா என்றால் எப்பொழுதும் அவன் முகத்தில் அடம்பிடித்து இடம் பிடித்திருக்கும் அந்த குறும்பு புன்னகையும்.. துரு துரு கண்களும் எங்கே..? ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவளது சிந்தனைக்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 22   இருபது வருடக் கதை தொடர்ந்து திரைக்கதையாக தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் இடையே அரங்கேறிக் கொண்டிருந்தது.. சாப்பிட மட்டும் வீட்டுப்பக்கம் மற்ற நேரத்தில் எல்லாம் தோட்டப் பக்கம்.. அவர்களுக்கிடையே வேறொருவர் அத்துமீறி நுழைய அனுமதியில்லை. காலையில் ஜெயாவை சமயலறையில் சந்தித்த பிறகு அங்கிருந்து நழுவிய பைரவி அதன்பிறகு அந்தப் பக்கமே எட்டிப்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 21 ஆ   அதிகாலை வேளையில் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர் அதுலும் பைரவியும். இவர்களுடைய பேருந்து மட்டும் தான் வந்து சேர்ந்திருந்தது. மிதுனை அழைத்தவன் அவன் வருவதற்கு இன்னும் நேரம் ஆகும் என்றவுடன் “ பைரவி... ட்ரெயின் ஏதோ ஸ்டேஷன்ல டிலே போல.. அவங்க வர நேரம்  ஆகுமாம் நாம போவோமா...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 21 அ   “ மிதுன் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ? ” “ வெச்சுட்டேன் மா ” “ ஸ்வெட்டர் ” “ ம்ம்... ” “ உனக்கு இல்லடா தாத்தாவுக்கு வாங்கினது ” “ வெச்சுட்டேன் மா ” “ அத்து எத்தனை மணிக்கு வரான்னு கேளு ” “ அம்மா ஏன்மா ஏன் ”...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 20   “ தூரிகா.. ஒரு இடத்துக்கு வரச்சொன்னா அஞ்சு நிமிஷம் லேட்டா போகலாம்.. பத்து நிமிஷம் லேட்டா போகலாம்.. அவ்வளவு ஏன் அரை மணி நேரம் கூட லேட்டா போகலாம்.. ஆனா நீ அஞ்சு மணி நேரம் கழிச்சு போற டி. எல்லாரும் கொலை வெறியில இருக்கப் போறாங்க.....
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 19 “ என்ன பண்ணிட்டு இருக்க பைரவி ? ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. அத்து அறை வாயிலில் நிற்பது கண்டு அவள் ஆசுவாசம் அடைந்தாள் என்றால் அவளைக் கண்டு அவன் திகைத்து நின்றான். பைரவியின் விழிகள் கலங்கியிருக்க.. கன்னங்கள் இரண்டும் பன்னீர் ரோஜாவின் நிறத்தில்.....
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 18   “ கண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தெம்பா படி கண்ணு.. படிப்பு படிப்புன்னு அதையே பார்த்துட்டு சாப்பிடாம இருக்காத.. ஊருக்கு வரணும்னா ஒரு கடுதாசி போடு நானும் ஐயாவும் கிளம்பி வந்து கூட்டிட்டு போறோம்.. நீ மட்டும் தனியா கிளம்பி வந்திராத ” என்ற அன்னையிடம் என்ன சொல்வதென்று...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 17 “ இத்தனை நாளா எங்கப்பா போயிட்டே ? ஒரு தகவலும் இல்ல.. பாவம் பைரவி ஒவ்வொருநாளும் உன்ன எதிர்பார்த்து காத்திருந்துது... ” என்று தாத்தா அவனது தாமதத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வினவினார். அதுலிடம் பதிலில்லாமல் ஒரு அமைதி குடிகொண்டிருக்க அவன் பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான். அவன் குஜராத் சென்றிருந்ததை...
       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 16   “ தாத்தா.. ” தாத்தாவிடம் கேட்போமா வேண்டாமா என தனக்குள்ளேயே பலமுறை யோசித்துவிட்டு சரி ஆனது ஆகட்டும் கேட்டேவிடலாம் என முடிவெடுத்து அவரின் முன்பு நின்றிருந்தாள் பைரவி. பின்பக்கத் தோட்டத்தில் வேலை ஆட்கள் வேலை பார்த்து இருக்க அங்கே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சின்னு தாத்தா. இவள் அழைத்திட திரும்பியவர்...
                                மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 15   “ தூரிகா உங்கள ஹெட் வர சொன்னாரு..” என்ற சக ஆர் ஜே வின் தகவலுக்கு ஒரு குட்டி தம்ஸ் அப்  அனுப்பிவிட்டு அவளுடைய ப்ரோக்ராம் ஹெட்டின் அறை நோக்கி சென்றாள் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவள் “ குட் ஈவினிங் சார்..” என்றதுதான் தாமதம் “ உன்...
    error: Content is protected !!