Friday, April 19, 2024

    Kalyaana Conditions Apply

    UD:29 (2) "அது எல்லாம் தேவை இல்ல பாப்பா... நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்..." என்றவர் பின், "சரி நேரம் ஆச்சு பாப்பா... வா கீழ போலாம்..."என்று எழப் போக,   "நீங்க போங்க அத்தை... நான் கொஞ்ச நேரம் கிழிச்சு வரேன்..." அவளுக்கு சிறிது யோசிக்க வேண்டும் என்று எண்ணினாள்.   "இல்ல பாப்பா... ஏற்கனவே ரொம்ப...
    Ep: 4 காலை 7.45...... வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள். நேரம் ஆவதை உணர்ந்து ஜெயராமன் தன் மனைவியிடம் அனைவரையும் அழைத்துவருமாறு கூற. "இதோ..... எல்லாரையும் கூட்டிட்டு வரேங்க..... " என வசந்தா அனைவரையும் அழைக்க...
    UD:7 வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து," என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா க்காக தான் ஒத்துக்கிட்டியா?" என கேட்ட நண்பனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி வானத்தை வெறித்த படி...
    UD:10 என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது.  தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று எதிர் பார்க்க, அவன் ஏன் என்ற தோரணையிலேயே தெரிந்தது அவன் தன்னை விட்டு விடுவதாக இல்லை என்று. தான் இன்னும்...
    UD:25 அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா...  இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு...  அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவனின் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க மஹாவிற்கு...
    UD:14(2) "ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."   "ம்ம்ம்.... ரம்யா இருந்து இருந்தா ஒரு பிடி பிடிச்சு இருப்பா... அவங்களுக்கு லீவு இல்லாமல் போச்சு இல்லாட்டி இரண்டு பேரும் கரெக்டா வந்து...
    அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு  படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று, "இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத... மரியாதை கெட்டுட்டும்...." கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள்...
    Ep: 3 சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.    அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, " நந்தா ..........
    UD:12 உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில்  நடக்கவிருந்தது. கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
    ஒரு சின்ன சிரிப்புடன் அவனது அணைப்பை லேசாக தளர்த்த... அதில் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அவனை விட்டு விலக நினைக்கும் தருணம்... அவன் மஹாவின் இடையில் கையிட்டு பக்கம் இழுத்து அணைத்த வாக்கிலே பால்கனியின் தடுப்பு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்...   அவளும் அவனுக்கு வாகாக அவன் மீதே சாய்ந்து அமர்ந்து, அவனது சட்டை பொத்தனை...
    UD:21 ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன். காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,'இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு... அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை...
    "எதுக்கு டி கடிச்ச...?" கையை தேய்த்துக் கொண்டே கோபத்தில் கேட்க,  "நீ ரிமோட்டை தரல அதான்..." அசால்ட்டாக கூறியவளை,  "ராட்சசி... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உனக்கு எல்லாம்... லூசு..." தன் மனைவியே ஆயினும் அவளை நெருங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் தன்னை இம்சை செய்யும் அவளின் மீது கோபம் வர, அதை வார்த்தைகளால்...
    UD:13 சந்தியாவும் ரம்யாவும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க, மஹா உதட்டை பிதுக்கி முகத்தை பாவமாக வைத்து கொண்டு முன்தினம் நந்தனிடம் போட்ட கண்டிஷனுக்கான அவர்களின் பதிலுக்காக காத்து இருந்தாள். "ஏன்டி.... இப்படி பார்க்குறீங்க? ஏதாச்சும் தப்பா பேசிடேனா.....? " குழப்பத்தில் முகத்தை தொங்க போட்டு கொண்டு கேட்டவளை பார்த்து தோழிகளுக்கு இரக்கம் வர,  சந்தியா,...
    UD:8 தன் முன் இருந்த கதவை யோசனையாகப் பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தவள், “எப்படியும் ஓவரா சீன் போடுவான் அந்த GM, அதுக்கு பேசி பல்ப் வாங்குறதுக்கு பதில் திரும்பி போயிறலாமா ..” என முடிவெடுத்து கதவிற்கு முதுகு காட்டி நின்றவள் அந்த யோசனையிலேயே கதவின் மேல் சாயப் போனாள்...... சரியாக அந்நேரம் அறை கதவும்...
    UD:11 விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.   வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும், ரம்யாவும் தங்களுக்குள் ஓர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து என்னவென்று கேட்கவில்லை....    மேலும் அரை மணி நேரம்...
    UD-5: "அதோ..... அண்ணா வந்துட்டான்..." என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க,  மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது,  சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து நடுங்க தொடங்கின......  குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆறடி உயரத்தில், இளம் ரோஜா லெனின் சட்டையும் சந்தன நிற...
    UD:14(1) தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.   அவன் பட்டும் படாமல் அளித்த  இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
    UD:9 மங்கிய இருட்டில் மிதமான பாடல் ஒலிக்க ,பூவின் நறுமணம் சுழ்ந்து இருந்த அந்த ரம்மியமான இடத்திற்கு,  சற்றும் பொருந்தாமல் திருத்திருவென முழித்த வாரே தன் விரல் நகத்தை கடித்து படி இருந்தாள் மஹா.....   "ஹே..... எல்லாரும் ஒரு மாதிரி பார்க்குறாங்க டி..... ஏன்டி இப்படி பண்ணுற?? அட்லீஸ்ட் சாப்பிடுறத்துக்கு ஏதோச்சும் வாங்கி குடு டி..... வந்து...
    "நான் என் விருப்படிதான் இருப்பேன்.... என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா   இருக்கணும் நினைப்பேன் சோ இப்படிதான் இருப்பேன் என்னோட கேரக்டரை மாத்த சொல்ல கூடாது, அப்புறம்......" தயங்கியவள்  அவனை விழி உயர்த்தி பார்த்து,...
    UD:22 நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.  காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...  'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
    error: Content is protected !!