Advertisement

பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ,” யாது… ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா…?” என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை நோக்கி கேட்க
அவளையே சிறு நொடிகள் பார்த்தவன் இறுகிய முகத்துடன் எழுந்து அவளை விட்டு விலகி அமர்ந்தவன், “நீ தாண்டி காரணம்…என்க
அவனது பதில் குழம்பி எழுந்து அமர்ந்தவள் மெல்லிய குரலில், “நான் தான் காரணம்னா… நான் போட்ட கண்டி…அவளது வார்த்தைகள் முடியும் முன் அவனது பதில் இடைபுகுந்தது,
இல்ல…” 
அதில் குழம்பியவள், “இல்லன்னா…. அப்புறம் வேற என்ன காரணம்… ?”அவன் தோள் மேல் கை வைக்க அதை நந்தன் கோபத்துடன் தட்டி விட, அதிர்ந்தாள் மஹா… 
யாது….என்று மெல்லிய குரலில் ஏக்கத்தோடு அழைக்க,
பேசாத டி… அதை நினைச்சா அப்படி ஒரு கோவம் வருது…. வர கோவத்திற்கு நாலு கன்னத்திலே போடணும் போல இருக்கு….அவள் புறம் கையை ஓங்குவது போல் காட்டியவனின் சைகையில் முகத்தை சுருக்கிக் கொண்டு உதட்டை பிதுக்கி சிணுங்க
அவளது முகத்தை பார்த்து வழக்கம் போல் கோபம் பஸ் பிடித்து ஓடவும்,.. கையை காற்றில் குத்தியவன்,”நீ வேலைக்கு போக ஆர்ம்பிச்ச பின்னாடி மூன்னு வேலையும் என்னடி சாப்பிட்ட..?” அடக்கப்பட்ட கோபத்தில் கேட்பவனை பார்த்து அதிர்ந்தவள்,
யாது….அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டி மெல்லிய குரலில் அழைக்க,
பேசாத டி…. அப்படி என்னடி ஈகோ உனக்கு… வெறும் பிரெட்டு பால், மதியம் தயிர்சாதம், நைட் பட்டினி …. எதுக்கு டி இந்த வீம்பு…. நான் கோடியா கோடியா சம்மாதிக்குறேன் ஆனா என் பொண்டாட்டி ஒரு வாரம் மூன்னு வேலையும் ஒழுங்கா சாப்பிடாம இருந்து இருக்கா…. அது கூட தெரியாம நான் நல்லா சாப்பிட்டு இருக்கேன்… ஒரு வார்த்தை சொல்லுறதுக்கென்ன உனக்கு… உனக்கு அதுல தயக்கமா இருந்து இருந்தா… என் கிட்ட சண்டைப்போட்டு சொல்லி இருக்கலாமே காசு வேண்ணும்ன்னு… அதான் சமைக்க தெரியாதுல அப்புறம் எதுக்கு அந்த வீணா போன வீம்பும், ஈகோவும்… சை… நீ பண்ணதை நினைச்சா உன் மேல அப்படி ஒரு கோவம் வருது எங்க அடிச்சுருவேனோனு பயமா இருக்கு… ஒரு ஆம்பளையா என் மனைவி ஒழுங்கா சாப்பிட்டாளா இல்லையான்னு கூட கவனிக்காம இருந்து இருக்கேன் நான் எல்லாம்…ஆவேசமாய் பேசியவனின் வாய் மீது தன் கை வைத்து தடுத்தவள்,
பிளீஸ் யாதவ்…. அப்படி எல்லாம் பேசாத… சாதாரண விஷயத்துக்கு ஆம்பளை அது இதுன்னு… வேண்டாம்…என்று கண்களில் கண்ணீர் வழிய தலையை மறுப்பாக ஆடியவளை கண்டு சற்று நிதானித்தவன், அவள் கரங்களை தன் கரங்களுக்குள் பொதித்துக் கொண்டு,
ஸ்ரீ…. ஆம்பிளைன்னா  கட்டில்ல மட்டும் அவன் வீரத்தை காட்டுறது இல்ல… தன் மனைவியோட தேவை அறிஞ்சு மடி தாங்குறதும் ஆண்மை தான்… அந்த விஷயத்தில நான் தப்பு பண்ணிட்டேன் ஸ்ரீ… நீ பசியோட இருக்கும் போது நான் மட்டும் நல்லா சமைச்சு சாப்பிட்டு இருக்கேன்… சை….ஆழ பெருமூச்சு விட்டவன் தன் தலையை கோதி தன்னை சமன் செய்ய முயற்சித்தவன்,
அப்புறம் உனக்காக தான்டி நான் அன்னைக்கு ராத்திரி ப்ரிண்ட்ஸ் கூட்டிட்டு வந்து டின்னர் ரெடி பண்ணினேன்…. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே ஸ்ரீ….நீ பசி தாங்க பண்ணிட்டியே…. ஏன் இப்படி பண்ணுன….?” குற்றச்சாட்டும் பார்வை ஒன்றை அவள் மீது விச, அவனது கேள்வியில் தன்னை இழந்தவள் அவன் மீது பாய்ந்து அணைத்துக் கொண்டு கதறி அழுந்தாள்… 
தன்னை அணைப்த்துக் கொண்டு அழுபவளை சமாதானம் செய்யும் பொருட்டு…. அவள் முதுகை தடவிக் கொடுத்தவன், “சரி விடு ஸ்ரீ… இனி அத பத்தி பேச வேண்டாம்… அழாத மா…என்றவனின் வார்த்தைக்கு அங்கு மதிப்பில்லை என்று தெரிந்ததும்… 
அவளை சீண்டும் பொருட்டு, “ஏய் கொசுக்குட்டி…. போதும் டி… சும்மா அழுது அழுது என் ஷர்டை நாசம் பண்ணாத….என்றதும் அவனை விட்டு வேகமாக பிரிந்தவள் கண்கள் சிவப்பேரி கண்ணீர் வழிந்துக் கொண்டு இருக்க அதை தொடைக்கவும் தோன்றாமல் அவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்…
ஏன்டி முன்னாடி எல்லாம் வாய்ல தான் வாட்டர் டேப்பை திறந்து விடுவ…. இப்ப என்ன டி கண்ணுல திறந்து விட்டு இருக்க… பாரு ஷர்ட் எல்லாம் நினைஞ்சு போச்சு…என்று தன் சட்டையை உதறிக் கொள்ள, அவனை அடிக்க கையை ஓங்கியவள் அவனை அடிக்காமல் அவன் சட்டையை பிடித்து தன் அருகில் இழுத்து அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டு, “சாரி டா…. நீ சொன்ன மாதிரி எனக்கு அப்ப ஈகோ பிரச்சினை தான் டா… அதன் என் கிட்ட காசு இல்லைன்னு சொல்லலை… சமைக்க தெரியாதுன்னு சொன்னா கிண்டல் பண்ணுவியேன்னு சொல்லல டா… சாரி டா…என்றவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன்,
சரி விடு… இனி எதையும் மறைக்காத… நானும்  மறைக்க மாட்டேன்….இனி நமக்குள்ள எந்த ஈகோவும் வேண்டாம் … எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசிறலாம்… பிராப்ளம் சால்வ்டு…. இனி ஒழுங்கா என் கிட்ட சமைக்க கத்துக்கோ… அப்புறம் உனக்கு பிடிக்குறவரை வேலைக்கு போ… அது உன் இஷ்டம்….என்று அவளுக்கு கட்டளையிட்டவன், அவளுக்கு வாக்குறுதியும் அளித்தான்…. 
அதற்கு அவன் தோளில் சாய்ந்தவாரே தலையை ஆட்டி வைத்தாள்…
பின்,”ஆமா… நான் சாப்பிடாம இருக்குறது… காசு இல்லாம இருக்கேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது? ” என்று கேட்டவளை ஒருமுறை குனிந்து பார்த்தவன் , தொடர்ந்தான்….
ஒரு நாள் பாலும் பிரெட்டும் கீழ சிந்தி இருந்ததை பார்த்து பெருமூச்சு விட்டியே அன்னைக்கு சந்தேகம் வந்துச்சு… மீட்டீங் அப்ப தான் இடிச்சுது…. நீ உன்னோட ஸ்கூட்டில போகாம பஸ்ல போறத இரண்டு நாள் பார்த்து இருக்கேன்… அதுல இன்னும் சந்தேகம் அதிகம் ஆக… மாமாக்கு ஃபோன் பண்ணி சும்மா போட்டு வாங்கினேன் உன் பேங்க் பெலன்ஸ் பத்தி… அப்ப தெரிஞ்சுது உன் கைல இருக்குற பணம் மட்டும் தான் ஏடிஎம் கார்டு மாமா கிட்ட தான் இருக்குன்னு…. சரி கைல காசு வச்சு இருப்பியோன்னு நப்பாசைல நீ குளிக்க போன்ன கேப்ல உன் ரூம்க்குள்ள வந்து பாக்யை செக் பண்ணி பார்த்தேன் அமௌன்ட் எவ்வளவு இருக்குன்னு…..கூறி அவளை ஒருமுறை முறைத்தவன்
அப்புறம் நீ வொர்க் பண்ணுறது என் பிரண்டோட கம்பெனில தான்… அவனை பார்க்க வரதா சொல்லி அந்த சாக்குல நீ மதியம் கான்டீன்ல தயிர் சாதம் சாப்பிட்டு இருந்ததை பார்த்தேன்… நைட் நீ சாப்பிடுறதே இல்லைன்னு நீ நேரமா வீட்டுக்கு வரதும் ரூம்லையே அடைஞ்சு இருக்குறதையும் வைச்சு ஈஸியா தெரிஞ்சுருச்சு…. என்றவனை ஆர்வமாக பார்த்து
அப்ப நீங்க என் ஆஃபீஸ்க்கு வந்தீங்களா…. நான் பார்க்கவே இல்ல….கேட்டவளை முறைத்து பார்த்தவன்… 
நான் உள்ளே வந்தப்ப நீ என் எதிர்ல என்னை தாண்டி தான் போன நானும் அப்ப இருந்த கோவத்துக்கு உன்னை முறைச்சுட்டே தான் போனேன்…. ஆனா மேடம் ஏதோ யோசனையில் என்னை கண்டுக்காம போயிட்டீங்க..என்றவனை பார்த்து அவள், “ஓஓஓ….என்று உதட்டை குவித்து அவள் கதை கேட்க, நந்தனின் பார்வை அவள் அதரங்களின் மேல் பதிந்தது…. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தான்….
அப்புறம் அந்த கடுப்பில் வீட்டிக்கு வர வழியில உன்னை பார்த்ததும் கோபம் கண்ணா பிண்ணான்னு எகிரிருச்சு…. அதான் ஸ்பீடா போய்ட்டேன்… பட் உன்னை கிராஸ் பண்ணும் போது தான் உன் முகத்தில் தெரிஞ்ச அதிர்ச்சியை பார்த்து ஏதோ சரியில்லைன்னு புரிஞ்சிக்கிட்டேன்….. அப்புறம் தான் திரும்பவும் ரிட்டர்ன் வந்தேன்… பார்த்தா அவன் உன் கையை பிடிச்சு இழுத்துட்டு இருந்தான்… ராஸ்கல்… அதல இன்னும் கோவம் வர, அவன் கையை உடைச்சுட்டேன்….என்று கைமுஷ்டியை இறுகி தன் கோவத்தை கட்டு படுத்த எண்ணினான்….. 
ஆனால் அவன் கோபத்தை தணிக்கும் மருந்தாக அவள் இருந்தாள்… அவன் கூறி முடித்ததும் அவனை இறுக அனைத்துக் கொள்ள, கோபத்தில் இருந்தவன் இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்க்காததால் நிலை தடுமாறி பின்னோடு சாய்ந்து தரையில் வீழ்ந்தான்…. 
சாரி டா….” தரையில் அவன் மேல் இருந்தவளின் முகம் அவனது நெஞ்சில் புதைந்து இருக்க…. அவனது பறந்த விரிந்த மார்பில் மஹா தன் அதரங்களைக் கொண்டு முத்திரை பதிக்க, உணர்ச்சி வசப்பட்ட நந்தன், அவளை தரையில் தள்ளி அவள் முகம் பார்க்க…
அவளும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறாள் என்று எடுத்துரைப்பது போல், கண்கள் கிறங்கி, உதடுகள் துடிக்க, ஒரு கரம் அவனது ஷர்டு காலரை இறுக பற்றி இருக்க மற்றோரு கரம் அவனது கழுத்தை சுற்றி வளைத்து  இருந்தது…. 
அவளது மதி முகத்தை ஒரு விரலால் கோலமிட்டு கொண்டே வந்தவன், அவளது இதழ்களில் இளைப்பாறிய தனது கைகளை விடுத்து, மெல்ல குனிந்து தன் இதழ்க் கொண்டு இளைப்பாறினான்… 
அவனது மென்மையான  முத்தத்தில் தன்னை சிறுக சிறுக இழந்துக் கொண்டே இருக்கும் சமயம் மஹாவிடம் இருந்து தன்னை பிரித்துக் கொண்டவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, இதுவரை இருந்த அழகிய மயக்கம் கலைந்ததில் முகத்தில் லேசாக அதிருப்தி தோன்றினாலும் அதில் தெரிந்த மயக்கமே அதிகம் ஆட்சி புரிந்தது…. 
பின் அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்ததை பதித்து, “அடியேய் கொசுக்குட்டி….என்று அவள் காது மடலில் கிசுகிசுப்பாக அழைக்க,
அந்த அழைப்பில் காது மடலில் கூச, உடல் சிலிர்த்தவளை கண்டு புன்னகை புரிந்தவன்… அவளது இடையோடு சேர்த்தணைத்து,
என் ராட்சசி கொசுக்குட்டி….என்று மீண்டும் அழைக்க,
இப்பொழுது அவளிடம் இருந்து மிகவும் நெளிந்த குரலில், “ம்ம்ம்…என்று பதில் வர,
ஷேல் ஐ டேக் யூ டியர்….என்று அவளிடம் அனுமதி கேட்டு நின்றவனை கண் திறந்து பார்த்தவள் அவன் விழியோடு விழி பேச, ஷர்டு காலரை விடுத்து அவன் கன்னங்களை இரு கரம் கொண்டு தாங்கியவள் முதலில் அவன் நெற்றியில் இதழ் பதித்து அவனை நேர்பார்வை பார்த்து, “ஐ லவ் யூ யாதவ்….என்று கண்களில் காதல் பொங்க கூறியவள் அடுத்த நொடி அவன் அடர் மீசைக்குள் புகுந்து இருந்த உதடுகளில் தன் உதட்டை பொருத்தினாள்… 
அவன் கையில் மயங்கி கிடக்கும் சமயத்தில் தன் உணர்வுகளுக்கு மதிபளித்து தன்னிடம் அனுமதி வேண்டி நின்றவனை கண்டு காதல் பெருகியது மஹாவிற்கு….
அடுத்த சில நொடிகளிலே அவன் வசமானது அவளது அதரங்கள்… நீண்ட நேரம் நீடித்த அந்த முத்த யுத்ததில் மூச்சுக்காக இருவரும் சிறிது இடைவெளி விட… நந்தன் கைகள் அத்து மீற தொடங்க அதை தடை செய்தாள் மஹா… 
ஏன்என்பது போல் பார்த்தவனை கண்டு வெட்கம் வர, மெல்லிய குரலில்உள்ள போய்றலாம்… இங்க வேண்டாம்… ரொம்ப குளிருது….என்றவளை பார்த்து , “ஏய்… மறந்துட்டேன் டி… இப்ப ஃபீவர் சரியாயிருச்சா… தாங்குவியா டி…என்று ஒரு புருவம் உயர்த்தி கண் சிமிட்டி கேட்வனை கண்டு வெட்கம் பிடிங்கி திண்ண
சரி ஆயிருச்சு…என்றவள் அதன் பின் தன் உதட்டை கடித்துக் கொள்ள…. 
பெருசாக வாய் விட்டு சிரித்தவன், எழுந்து அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைய
அவள் அவனது கைகளில் தவழ்ந்துக் கொண்டு இருக்க, இரு கால்களையும் ஆட்டியபடி  அவன் மீசையை திருகி விளையாடிக் கொண்டே, “ஆமா உனக்கு எப்படி டா எனக்கு ஃபீவர்ன்னு தெரியும்….என்று கேட்க
அவளை கண்டு சிரித்தவன், “இன்னைக்கு நீ எனக்கு சட்டினி வைக்க கை நீட்டும் போது நானும் நீட்டி ரெண்டு பேரோட கையும் உரசுச்சே… அப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்… அப்புறம் அம்மா கிட்ட சொல்லி உனக்கு மாத்திரை தர சொல்லிட்டு போனேன்….என்று அவளை பார்த்து கொண்டே விளக்க…
அவளோ, “அதான் அத்தை மாத்திரை குடுத்து கஞ்சி சாப்பிட வச்சாங்களா…என்று மீசையுடன் விளையாடிய படி கேட்க,
ஆமா டி என் கொசுக்குட்டி…. இன்னைக்கு உன் கூட பேசியே ஆகணும்னு தான் அவசரமா வொர்க் இருக்குன்னு சொல்லி உன்னை அங்க இருந்து இங்க இழுத்துட்டு வந்தேன்…என்றவன் அவளை படுக்கையில் கிடத்த மஹா அவனை பார்த்து ,
ஓஓஓஓ…..என்று இழுக்க அடுத்த நொடி அங்கு எந்த சப்தமும் இன்றி காதலின் சப்தங்களே நிறைந்தன… 
கல்யாணத்திற்கு கண்டிஷனிட்டு ஆரம்பித்த இவர்கள் பயணம் காதல் கொண்டு இதயங்கள் இணைந்து,திருமண  வாழ்க்கையின் அடிப்படையை உணர்ந்து காதலால் கண்டிஷன்ஸ் அமைத்து வாழ போகும் இவர்கள் இன்று போல் என்றும் அடிதடி காதலுடன் நிறைவாக வாழ கடவுளை பிரார்த்தித்து நாம் விடை பெருவோமாக… 
****முற்றும்****
 

Advertisement