Advertisement

UD:15
மூவரும் பாடலின் வரிக்கு ஏற்ப ஆடிக் கொண்டு இருக்க, 
ரம்யா வாயில் போட்டு அரைக்க சிப்ஸை எடுக்க பக்க வாட்டில் திரும்பவும், ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து வாயற்கதவின் பக்கம் பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்று புரியாமல் தன் தோழிகளை பார்த்தவள், இன்னும் வெறியுடன் ஆடிக் கொண்டு இருந்தவர்களை பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்க….. மயக்கம் வருவது போல் உணர்ந்தாள் ரம்யா. 
“ஹே….. ஏன்டி அமைதியா இருக்க? வாடி ஒரு குத்து போடு மச்சி….” என மஹா ஆடாமல் இருக்கும் ரம்யா பார்த்து அழைக்க…
அப்பொழுதும் அசையாமல் எங்கோ பார்ப்பதை உணர்ந்தவர்கள், தங்கள் பார்வையையும் அங்கு செல்லுத, சந்தியா விக்கித்து போனாள். அப்பொழுது பாட்டிலை வாயில் சரித்த மஹா கதவின் அருகில் நின்று இருந்தவர்களை பார்த்து அதிர்ந்து பாட்டிலை கீழே இறக்கியவள். வாயில் இருந்ததை முழுங்குவதா இல்லை துப்புவதா என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.
“அதான் குடிக்கணும் முடிவு பண்ணிதானே  வாய்க்குள் பாட்டிலை சரிச்ச? அப்புறம் ஏன் முழிக்குற?” வார்த்தைகள் நக்கலாக வந்து விழுந்தது அப்பெண்மணியிடம் இருந்து. 
கதவின் மீது சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு நக்கல் சிரிப்பை உதிர்த்தவரை கண்டு கடுப்பானவள்….. 
‘டேய் காண்டாமிருகம் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் டா பன்னி…..’மனதில் சூழுரைத்தவள்  வெளியே அவனை முறைத்து வைத்தாள்.
அவள் முறைப்பதை பார்த்து, “இப்ப எதுக்கு இவனை பார்த்து முறைக்குற? நீங்க பண்ணுற வேலைக்கு நாங்க தான் முறைக்கணும்…. ” என்று நந்தனுக்கு சாதகமாக பேசியவர், 
மேலும், “நாங்க வந்தது கூட தெரியாமல் இவ்வளவு நேரம் ஆட்டம் போட்டீங்க…. இப்ப மரியாதைக்கு கூட வாங்கனு சொல்ல தோணலையோ….” என்று நக்கலாக கேட்க,
“ஐயோ… அப்படி எல்லாம் இல்லை…. வாங்க… உள்ள வாங்க….ஏதோ நினைப்புல நின்னுட்டேன்…. ” அவசரமாக வரவேற்றவள் பின் இழுக்க,
“எப்படி நினைவிருக்கும் இப்படி ஆட்டம் போட்டா….” அங்கு சிதறி இருந்த சிப்ஸும், இரண்டு பாட்டிலையும் சுட்டி காட்டி அவர் கூற,
அதற்கு பதில் அளிக்க வாய் திறந்த சந்தியாவை ஒற்றை பார்வையில் அடக்கிவிட, அதை கண்ட மஹாவிற்கு ஏனோ வயிற் வலிப்பது போல் உணர்ந்தாள். அவர்களை சமாளிக்கும் பொருட்டு, 
“உட்காருங்க… ” என்று சோஃபாவை கைக் காட்ட, அதில் இருந்த சிப்ஸை பார்த்து நெற்றியில் அறைந்து கொண்டவள், 
அவர்களை பார்த்து அசடு வழிந்த படி சிப்ஸை தட்டிவிட்டு, அவர்களை பார்த்து நெளிந்தபடி நின்றாள்.
அவர்கள் அமர்ந்ததும் என்ன செய்வது என்று புரியாமல் கையை கட்டிக் கொண்டு நிற்க, மஹாவை  விட்டு சற்று விலகி சந்தியாவும், ரம்யாவும் நின்று இருந்தனர். 
“இப்ப என்னடி பண்றது? வீட்டுல தெரிஞ்சா 1 வாரத்துக்கு சாப்பாடு போட மாட்டாங்க. சாப்பாடு இல்லாமல் இந்த ரம்யா இல்ல. சோறு தான்டி முக்கியம்” என ரம்யா மற்ற இருவரிடமும் புலம்ப, இருவரும் ஒருசேர  அவளை முறைத்தனர்….
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பாசமா பார்க்குறாங்க?”என முணுமுணுத்தவளுக்கு, “நீ ஒன்னும் பண்ணவில்லை அதுதான் பிரச்சினையே, சொன்ன மாதிரி பண்ணி இருந்தா நம்ம இப்ப இப்படி  நின்னுட்டு இருந்திருக்க மாட்டோம்” என பல்லை கடித்துக்கொண்டு மெல்லிய குரலில் ரம்யாவை கடிந்துக் கொண்டு இருந்தாள் சந்தியா.
தன் தோழிகளை விட்டு சற்றே விலகி நின்று கொண்டு இருந்த மஹா வின் காதில் அவர்களது பேச்சு தெளிவாக விழுந்தும், எதுவும் கூற இயலாத நிலையில்  சோஃபாவில் அமர்ந்து இருந்த இருவர் முன்னிலையிலும் தலை குனிந்து, இரு கைகளையும் கட்டிக் கொண்டு நின்று இருந்தாள். 
‘சே…. இப்படி  மாட்டிக்கிட்டோமே…. எல்லாம் இந்த ரம்யா பக்கியால் வந்தது. இருடி மவளே உன்னை பீஸ் பீஸா கட் பண்ணி பிக்கில்ஸ் போடல நான் மஹா இல்லடி’ என மனதில் கருவிக் கொண்டிருந்தவள் முக பாவனையை ஒரு ஜோடி விழிகள் ரசனையுடனும், மற்றொன்று துளைக்கும் பார்வையுடனும் அளந்துக் கொண்டு இருந்தனர்….
“என்னமா இது எல்லாம்….. ? நந்தனோட அப்பா உன்னை பத்தி என்னவோ சொன்னாங்க…. இங்க என்னடான்னா வேற மாதிரி இருக்க….” குரலில் ஏற்ற இரக்கத்தோடு பேச, நின்று இருந்த மூவரும் பயத்தில் திருதிருவென விழித்தனர்.
“என்னமா பதில் சொல்லாமா நின்னா என்ன அர்த்தம்……” அதட்டலாக கேட்க, 
“இல்ல…….” யார் இந்த பெண்மணி என்ற மஹாவிற்கு தெரியவில்லை. இதற்கு முன்னர் பார்த்ததாகவும் தெரியவில்லை அதனால் எவ்வாறு அழைக்க என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள்.
அதை புரிந்து கொண்டு அந்த பெண்மணி, “நான் நந்தனுக்கு சித்தி. உன் சின்ன மாமியார்….” கெத்தாக  கூறி கால் மேல் கால் போட்டு வித்யா அமர, சர்வமும் இடிந்து போனது போல் உணர்ந்தாள் மஹா.
‘ஆஹா….. சின்ன மாமியாரே  இப்படின்னா அப்ப என் மாமியாரும்,பெரிய மாமியாரும்…..?’மனதில் எண்ணி பார்த்தவளின் விழிகள் பெரிதாக விரிந்து, சிலையாகி போனாள்.
“செத்தான் சேகரு….” ரம்யா மெல்லிய குரலில் கவுன்ட்டர் கொடுக்க, அதை சந்தியா ஆமோதிப்பது போல் தலை ஆட்ட,
“பாவம் டி மஹா…. இப்ப என்ன பண்ணுறது? ” ரம்யா கேட்க,
“என்னனு சொல்லாம்ன்னு பார்த்தா அந்த அம்மா கண்ணாளையே எரிக்குறாங்க…. என்ன பண்ணுறதுன்னு எனக்கும் தெரியல டி…..”தோழியை தப்பிக்க வைக்கும் வழி தெரியாமல் திண்டாட, எதர்ச்சையாக நந்தனை கண்ட ரம்யா குழம்பி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள், காரணம் அவன் மஹாவையும் அவனது சித்தியையும் கண்டு நக்கலாக சிரித்துகொண்டு இருந்தான்….
“என்ன மா…. இப்படி நின்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் என்னனு கேட்டேன்…” மிரட்டும் குரலில் கேட்க, முதலில் அதிர்ந்த மஹா பின்,
“இல்ல அத்தை…. படிப்பு முடிஞ்சுது…. ஒரு மாசத்துல கல்யாணம் வேற…. அதான்…. ” இழுத்து இழுத்து பேசியவள் நிமிர்ந்து  அவர் முகத்தை பார்க்க, மேலே சொல் என்பது போல் அவர் முக பாவனை கண்டு மேலே தொடர்ந்தாள்.
“அதான் சின்னதா ஒரு பார்ட்டி பண்ணலாம்ன்னு…. ” என்று தயங்கி முடிப்பதற்குள், 
“ஓஓஓ…. வெளிய பப், டிஸ்கோ ன்னு போனா மாட்டிப்போம்னு வீட்டுலையே பண்ணுறீங்களா…. ” வித்யா இடைபுக,
“அதான் பார்த்தாளே தெரியுதே…. குடியும் கும்மாளமுமாக இருக்குறத பார்த்தும் கூடவா உங்களுக்கு சந்தேகம் வருதா சித்தி…?” நந்தன் வித்யாவிற்கு சாம்பிராணி போட,
‘டேய் காண்டாமிருகம்….என் கையில சிக்குன நீ செத்தடா மவனே    … என்னை இப்படி நிக்க வச்சுட்டுல உன்னை பழி வாங்கமால் விட மாட்டேன்டா….’ மனதில் சூழ்  உறைத்தவள் வெளியே அவனை முடிந்த மட்டும் முறைத்து  விட்டு , வித்யாவின் புறம் திரும்பி,
“அத்தை நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் இல்ல…. நாங்க சும்மா தான் ஆடிட்டு இருந்தோம்… நாங்க…” அவளை பேச விடாது இடை புகுந்த நந்தன், “அப்ப நீ பாட்டிலை அப்படியே உன் வாயில் சரிச்சதை பார்த்த என் சித்தி என்ன லூசா… இல்ல இங்க இருக்கிற பாட்டிலை பார்த்தும் இது என்னனு தெரியாத அளவுக்கு அவங்க கண் என்ன குருடா…” ஆவேசமாக கேட்க,
வித்யாவும், “அதானே…..” என்று மஹாவை பார்த்து கோபமாக கேட்க, 
தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் தோன்றியது மஹாவிற்கு…. இருந்தும் அமைதி காத்தவள், நிதானமாக வித்யாவை பார்த்து, 
“அத்தை நீங்க நினைக்குற மாதிரி அது பீயர் இல்ல… வேறும் மாங்கோ ஜூஸ் தான்…. வேண்ணும்னா நீங்களே பாருங்க…. ” தனியாக யாரும் குடிக்காத பாட்டிலை எடுத்து வித்யாவிடம் பவ்வியமாக நீட்டியவள் , நந்தனிடம் திமிராக நீட்டினாள். 
ஆனால் நந்தன் அதை வாங்காமல் டேபிளின் மேல் இருந்த பாட்டிலை எடுத்து கொள்ள, ‘திமிரு பிடித்தவன்….. காண்டாமிருகம்…. பன்னி…. எருமை மாடு…’ மனதில் தன் வருங்கால மணாளனுக்கு அர்ச்சனை செய்ய, 
அவனது செயலை பார்த்து ரம்யாவும், சந்தியாவும் ‘ஙே..’ என் விழித்து ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொள்ள, வித்யா நந்தன், மஹாவின் செய்யலை கண்டு மனதிற்குள் குறித்துக் கொண்டார். 
ஏனினில் அந்த பாட்டில் மஹா பருகும் போது அவர்களை கண்டு அதிர்த்து அதை டேபிளின் மேல் வைத்தது….. அதை மற்றவர்கள் கவனித்து விட, கவனிக்க வேண்டிய நபரோ அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.
பாட்டில் இருந்ததை இருவரும் பாருக. அது அவள் கூறியது போல் ஜூஸாகவே இருந்தது. இருந்தும் தங்கள் கெத்தை  விடாமல், 
“அது சரி இந்த பாட்டில் எங்க இருந்து வாங்குனீங்க…. அப்புறம் இந்த காஸ்டீயும்…. ???” அவளை மேல் இருந்து கீழ் வரை சுட்டிக் காட்ட,
“வாங்கல ஆன்டி இது எல்லாம் சுட்டது…. ” தாங்கள் திருடியதை பெருமையாக ரம்யா கூற, “என்னது…?” வித்யா அதிர, மஹாவை பார்த்து கொண்டே குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு சட்டென புறை ஏறியது.
இருமி கொண்டு இருந்தவன் தன்னை சமன் செய்து மஹாவை பார்க்க அவளும் நந்தனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் எந்த உணர்ச்சியும் காட்டாது. 
“என்னமா சொல்லுற நீ…..?” என்று வித்யா ரம்யாவிடம் கேட்க, 
“ஆமா அத்தை…. அது பின்னாடி வீட்டுல ஒரு மிளிட்டரி அங்கிள் இருக்காங்க… அவங்க ஆன்டிக்கு தெரியாமல் தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு பின்னாடி தோட்டத்தில் பாட்டிலை ஒளிச்சு வைச்சுருவாங்க…. அதுல இருந்து அவருக்கு தெரியாமல் 5 பாட்டிலை சுட்டுட்டோம்….. ” கர்மசிரத்தையாக தாங்கள் பாட்டிலை திருடிய கதையை கூறி முடித்தாள். 
அவள் கூறியதில் வித்யா அந்த பாட்டிலையும், மஹாவையும், நந்தனையும் பார்த்து பாவமாக விழிக்க, அதே நிலையில் தான் நந்தனும் இருந்தான். 
அவர்களது மனநிலையை புரிந்து கொண்ட மஹா அவசரமாக, “அத்தை நீங்க நினைக்கிற மாதிரி இல்ல… அந்த அங்கிள் ஒரு பாட்டில் ஒரு வாரம்னு கணக்கு வச்சு தான் குடிப்பார். அதும் மைசூர்ல அவர் வாங்குன கிலாஸில் விட்டு தான் குடிப்பார். குடிக்குறது முன்னாடி அந்த கிலாஸ்க்கு கிஸ் பண்ணிட்டு தான் குடிப்பார்…. டைரக்டா சிப் பண்ண மாட்டார்….. அதுவும் இல்லாமல் நாங்க நேத்தே இந்த பாட்டிலை எடுத்துட்டோம். நல்லா தண்ணில ஊர வச்சு வாஷ் பண்ணி, ஸ்மெல் வாராம இருக்க ஜூஸ் ஊத்தி ஊர வச்சு திரும்பவும் வாஷ் பண்ணி தான் யூஸ் பண்ணுறோம் அத்தை…..” வேகமாக நீலமாக பேசி முடித்தவளை இமைக்காமல் பார்த்தனர் இருவரும்.
மெதுவாக நந்தனின் பக்கம் சரிந்த வித்யா, “டேய் நீ தான் பிராடுன்னு நினைச்சா….. நீ கட்டிக்க போறவ உனக்கு மேல பிராடா இருப்பா போல….”என கிசுகிசுக்க, நந்தன் லேசாக வெட்க பட அதை கண்டு முகம் சுளித்து, “இது தேராது…..” என்க,
“ஆமா இத எப்படி நம்புவது….” வித்யா எதார்த்தமாக கேட்கவும், 
“எங்க கிட்ட ஆதாரமா வீடியோ இருக்கு ஆன்டி…” தங்களை நம்பாத கடுப்பில் உணர்ச்சி வசப்பட்டு ரம்யா கூற, சந்தியா அவள் கையை பிடித்து இழுத்து தடுக்க, மஹா அவளை பார்த்து முறைத்து வைத்தாள். 
“என்ன வீடியோ….” என்று வித்யா கேட்க,
திரும்பி ரம்யாவை பார்த்து முறைத்த மஹா, “இருடி உன்னை இன்னைக்கு பிரியாணி போடுறேன்…. பக்கி…” பல்லை கடித்து அடக்கப்பட்ட கோபத்தில் அவளிடம் எகுரியவள் வித்யாவின் புறம் திரும்பி மெல்லிய குரலில், 
“எதுக்காச்சும் யூஸ் ஆகும்னு அந்த அங்கிள் தண்ணி அடிக்குறதை வீடியோ எடுத்து வச்சு இருக்கோம்… அதை தான் சொல்லுறா….” தயங்கியவாறே சொல்லி முடிக்க, அவள் கூறுவது உண்மையா என்பது போல் தோழிகளை பார்க்க. வேகமாக அவர்களது மண்டை ஆம் என்று ஆடியது. 
மூவரின் நிலையை கண்டு சிரிப்பு வந்தாலும் கஷ்டப் பட்டு தன்னை சமாளித்து கொண்டு, “இந்த காஸ்டியூம் எல்லாம்…. இதுவும் சுட்டதா…?” 
“ஐயோ அத்தை பாட்டில் மட்டும் தான் சுட்டோம்…  ஷர்ட் அண்ணாவோடது, லுங்கி அப்பாது, பிரேஸ்லெட் அண்ணாது, கூலிங்கிளாஸ் எங்களுது, காசு போட்டு வாங்குனோம் டூர் போகும் போது….” அவசரமாக பதில் அளித்தவள் கடைசியாக ​உதட்டை பிதுக்கி, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.
“சித்தி போதும் பிளீஸ்….” நந்தன் மஹாவிற்காக வித்யா விடம் கெஞ்ச, 
“என்னடா உன் ஆளானதும் சப்போர்டுக்கு வரியா….” என்க, 
“இவ்வளவு நேரம் ஏதாச்சும் சொன்னேனா…. பிளீஸ் சித்தி போதும் பார்க்க பாவமா இருக்கு….” மெல்லிய குரலில் தன்னவளுக்காக கெஞ்ச, 
“யார் இவ பாவமா? குடிக்குறது ஜூஸ் அதுக்கு எவ்வளவு எஃபெக்ட்….” கண்களால் அவ்விடத்தை சுட்டி காட்ட , அசடு வழிந்தான் நந்தன்.
“இங்க   வா….” அமர்த்தலாக அழைத்தவரை பார்த்து நகராது அங்கேயே நின்றவளை கண்டு புன்னகைத்து, எழுந்து சென்று அவள் முகத்தை வாஞ்சையுடன் வழித்து நெற்றியில் முத்தம் இட்டவர், 
“எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு…. அவனுக்கு நீ தான் சரியான ஆளு…. நிச்சயம் அப்ப என்னால வர முடியாம போச்சு…. அதான் இப்ப உன்னை பார்க்கலாம்ன்னு கூட்டிக்கிட்டு வர சொன்னேன். நாளைக்கு முகுர்த்த பட்டு எடுக்க கடைல பார்ப்போம் தான். ஆனா என்னால அது வரைக்கும் வெயிட் பண்ண முடியாதுனு சொல்லி இப்பவே கிளம்பினோம்…. ” அன்பாக பேசியவரை கண்டு நிம்மதி அடைந்த மஹா அவரை பார்த்து புன்னகை பூக்க, 
“ஐயோ ஆன்டி நாங்க எப்படி பயந்துட்டோம் தெரியுமா….. பிபி ஏறி இறங்கி…. ஷப்ப்ப்பா…. அப்ப கூட நீங்க நடுவுல சிரிப்பதை பார்த்து சந்தேகம் வந்தது. ஆனா செம்ம ஆக்டிங் ஆன்டி…. நாங்க ஏமார்ந்து போய்ட்டோம்……” ரம்யா பெருமூச்சு விட, 
அவளது கண்ணம் தட்டி சிரித்தவர், ” மஹா கொஞ்சம் வாலுனு நந்து சொல்லி இருக்கான்…. வீட்டுக்குள்ள நுழையும் போது செம்ம சத்தம்…. லேசா கதவை தள்ளுனா இரண்டு பேருக்கும் எப்படி ரியாக்ட் பண்ணுறதுனு தெரியல…. நாங்க நிக்குறது கூட தெரியாமல் ஓரே ஆட்டம் வேற. சரி கொஞ்ச நேரம் நாம ஆடி பார்க்கலாம்னு இப்படி பண்ணினேன்….” சிரித்தப்படியே வித்யா கூற, தோழிகள் இருவரும் ரம்யாவை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தனர்….

Advertisement