Kaathal Noozhilai
காதல் நூலிழை
அத்தியாயம் 16
முகிலினை
தூது விட்டேன்
உன் இதயத்தை திருட அல்ல,
உன்னையே திருட!!!
சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”, என்று தான் துரத்தியது நினைவில் வந்தது.
கோபத்தை எல்லாம் வெளியே கொட்டி, அழுது தூங்கி என்று மனதும் சமன் பட்டது போல...
பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது.
சித்தார்த் கூட சண்டை வருவது, அவனை பிரிந்து இருப்பது அனைத்துமே தாயம்மாவால் தான் என்று அவள் மீது கொலை வெறியே வந்தது...
கோயிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிட அமரும் போது “இன்னைக்கு எதுக்கு மா வீட்டுக்கு வெளிய விளக்கு வைக்கலை?”, என்று கேட்டார் சுந்தரம்.
“அத்தை தானே வைப்பாங்க”, என்றாள் சிந்து.
“ஆமாப்பா, அவ மாடில வச்சிட்டாளே”, என்றான் சித்தார்த்.
“மேல வைக்கிறது முக்கியம் இல்லை. கீழ வைக்கணும். உங்க அம்மா இன்னைக்கு சோம்பேறியா இருக்குன்னு குளிக்கலைல. இவ வச்சிருக்க...
காதல் நூலிழை
அத்தியாயம் 20
கற்பனையில் கூட
என் காதல் தாகம்
தீர்க்க நீ வருவாயெனில்
அதுவே என் வாழ்வின் வசந்தம்!!!
இந்த நிலைமை மாறுமா என்று குழம்பினாள் சிந்து. அவள் தான் தனி வீடு வேண்டும் என்று அடம் பிடித்தது. தனியே சென்றால் தாயம்மா சுந்தரம் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்று சிந்து நினைத்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரக் கூடும்...
அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.
அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.
“எல்லாரும் போய்ட்டாங்களா?”
“எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்”
“யாரெல்லாம்?”
“அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா...
அத்தியாயம் 7
இரு துருவமாய் இருந்தாலும்
நாம் இருவரையும்
ஒரே புள்ளியில்
இணைக்கிறது காதல்!!!
நான்கு மணிக்கே சிந்துவை எழுப்பி விட்டாள் ராணி. எழுந்ததும் குளித்து முடித்தாள். முந்தின நாள் இரவே அனைவருக்கும் சொல்லி விட்டதால் ஒருவர் ஒருவராக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு சேலையை கட்டி விட்டாள் அவளின் அண்ணி சௌமியா. சிந்துவுக்கு தலை சீவி பூவை வைத்து...
அத்தியாயம் 4
புரிந்து கொள்ள முடியாமல்
தத்தளிக்கும் போது
தான் புரிந்தது
நீ அழகிய புதிரென்று!!!
அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து.
“சொல்லு சிந்து”
“உங்க அண்ணி எதுக்கு பொண்ணு பாக்க வரலை? உங்க அம்மா அப்பா வந்தப்பவும் வரலை. நீங்க எல்லாரும் வரும் போதும் வரலை? எதுக்கு?”
“அது அவ அம்மா...
ராணி வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்து போய் பார்த்த சித்தார்த் “வாங்க அத்தை”, என்றான்.
“உங்களுக்கு என்ன மா பிரச்சனை? நான் என்ன பண்ணுனா அவ கூட நிம்மதியா இருப்பீங்க? உங்க கிட்ட பணம் வாங்கினதுனால இப்படி பண்ணுறீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லை அத்த. நான் ஒண்ணும் பண்ணலை”
“கல்யாணம் பண்ணி நான் நிம்மதியா இருந்ததே இல்லை. அதனால இவளை...
சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான்.
“அப்ப அவங்களை கூப்பிடுங்க”
“இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு விட்டு சென்றும் விட்டான். பின் கால் மணி நேரத்துக்கும் மேலே அவள் அவளுடைய தோழிகளுடன் தான் இருந்தாள்.
பின் அவனுடைய ஐந்து...
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது.
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம்...
அவனுக்கு தெரியும் சிந்து அவனுக்கு கிடைத்த வரம். அவன் இளைப்பாற அவனுக்கு கிடைத்த நிழல். தன்னுடைய அக்கா, குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்க, அண்ணன் வெளிநாட்டில் இருந்தாலும் குடும்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்க, கல்யாணம் முடிக்க வேண்டிய வயதில் தாயம்மாவால் சித்தார்த் மட்டும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருந்தான்.
அவளுக்கு ஹாஸ்பிட்டலுக்கு அலைந்தே அவனுக்கு திருமண வயது...
அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் துணுக்குற்றாலும், “சரி”, என்று சொல்லி பேச்சை முடித்தாள். அதற்கு மேல் அவளால் பேசவும் முடியவில்லை. சித்தார்த்தை நினைத்து கொஞ்சம் அவளுக்கு குழப்பம் வந்தது.
அவனும் வேலை இருக்கிறது என்று சொல்லி வைத்து விட்டான்.
அன்று மாலை அவள் முகத்தை வைத்தே ஏதோ குழப்பம் என்று கண்டு கொண்டாள் ராணி.
“என்ன ஆச்சு? எதுக்கு...
அத்தியாயம் 10
உன்னுடனான பயணம்
நீண்டு கொண்டே
இருக்க ஆசை
உடலுக்கும் மனதுக்கும்
ஓய்வில்லை என்றால் கூட!!!
அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே...
இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள் மாரி.
“அக்கா, எனக்கு மனசே ஆறலைக்கா, சொந்த வீட்ல சாவுன்னா கூட இப்படி தானா க்கா?”
“இவங்க இப்படி தான் சிந்து. தாத்தா...
அவர் இறந்தது வலி தரக் கூடியதாக தான் இருந்தது. அப்போது அழுதவளை தேற்றியது சித்தார்த் தான். அவருடைய அடக்கம் முடிந்து அடுத்த நாளில் விஸேஷம் வைத்திருந்தார்கள். சமந்தாருக்கு செய்ய வேண்டும் என்பதால் அங்கு வந்தார் சித்தார்த்தின் அப்பா சுந்தரம்.
சிந்துவின் அப்பா சுந்தரம் அன்று கொஞ்சம் குடித்திருந்தார். ஆனால் ஒரு நொடி கூட நிதானம் தவற...
அத்தியாயம் 9
பனித்துளி என்று
தீண்ட நினைத்தேன்
பின் தான் தெரிந்தது
நீ என்னைச் சுடும்
தீப்பொறி என்று!!!
அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள்.
அது காலியாகும்...
காதல் நூலிழை
அத்தியாயம் 17
காயம் தரும் கத்தி
நீ என்று எண்ணினேன்
அந்த காயத்துக்கு
மருந்தும் நீயே
என்று உணர்த்தி விட்டாய்!!!
பங்சனுக்கு வந்த தாயம்மா சுந்தரம் இருவரும், சிந்துவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவளும் அவர்களை பாக்க கூட விரும்பாதவள் போல இருந்தாள்.
கிளம்பும் போது சித்தார்த் மட்டும் அவர்களிடம் கிளம்புறோம் என்று சொல்லி விட்டு வந்தான். ஒரு மணிக்கு...
காதல் நூலிழை
அத்தியாயம் 19
கனவோ கற்பனையோ
நிஜமோ நிழலோ
அனைத்தும் நீயாகினாய்!!!
ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட கேட்காத சித்தார்த்தைப் பார்த்து எரிச்சல் வந்தது சிந்துவுக்கு.
“உன் அத்தையை பால் காய்க்க சொல்லு சிந்து. பின்ன எதுவும் சொல்ல போறாங்க”,...
காதல் நூலிழை
அத்தியாயம் 18
மண்ணில் புதைந்த விதை
போல என்னுள் விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது
உன் மீதான காதல்!!!
காதல் நூலிழை
ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த்.
அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து “என்ன ஆச்சு?”,. என்று கேட்டாள்.
“இன்னைக்கு மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுனேன். எல்லாருக்கும் வீடு ஆளாட் பண்ணிட்டோம். வேற வீடு...
காதல் நூலிழை
அத்தியாயம் 14
அழகிய வர்ணங்களை
என்னுள் உருவாக்கி
சென்ற வானவில்லே
இப்போது கருமையை
மட்டும் பூசிவிட்டு
சென்றது ஏனோ?!!!
பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து.
“இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா?
“சரி”
“சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?”
“சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?”
“உங்க அண்ணன்...