Kaathal Noozhilai
அத்தியாயம் 15
அழகான உன் பிறை
முகம் கண்டு
என்னுள் மலர்கிறது
பலவண்ண மலர்கள்!!!
பணம் கட்டி முடித்து வந்த சித்தார்த் “வா சிந்து கிளம்பலாம்”, என்று அழைத்தான்.
அவனுடன் கிளம்பி சென்றவள் அமைதியாக சென்றாள். வீட்டுக்கு செல்லும் வரை இருவருக்குள்ளும் மௌனம் தொடர்ந்தது.
இறங்கும் போது “இனி யாருக்கும் பட்ட பேர் வச்சு கூப்பிட மாட்டேன் போதுமா? பிளீஸ் டி. சிரி”, என்றான்...
அத்தியாயம் 5
கனவென்று எண்ணி
ஒதுங்கி போன நான்
நிஜமென்று எண்ணி
உன் கரம் பிடித்தேன்!!!
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.
வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.
அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.
“எல்லாரும் போய்ட்டாங்களா?”
“எங்க வீட்ல உள்ளவங்க மட்டும் இருக்கோம்”
“யாரெல்லாம்?”
“அத்தை மாமா இருக்காங்க, என் அண்ணன் அக்கா குடும்பம், பெரியம்மா...
அதை புரிந்து கொண்ட சித்தார்த் “இன்னைக்கு குழம்பு நல்லா இருந்துச்சுன்னு அப்பா சொன்னாரு. எங்க பெரியம்மா போன் பண்ணி உன்னைப் பத்தி கேட்டாங்களாம்ம். அவ தான் எல்லா வேலையும் செய்றான்னு அம்மா சொல்லிருக்காங்க”,என்று சொல்லி தாயம்மா மற்றும் சுந்தரத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க முயன்றான்.
மனதில் இருந்த வலி அவர்கள் பேச்சை எடுத்தாலே அவளை...
அத்தியாயம் 2
உன்னிலே பிறந்து
உன்னிலே அழியும்
காதல் வரம் ஒன்று
கிடைக்குமா அன்பே?!!!
பெண்ணைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அன்றே “குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தெரியுது. பொண்ணோட அம்மா அப்பாவும் நல்ல மாதிரியா இருக்காங்க”, என்று தாயம்மா சொன்னதும் அவளைக் காண ஆசையாக காத்திருந்தான்.
இப்போது யாரோ இறந்த செய்தி கேட்டு “இன்னைக்கு தான் அவங்க சாகணுமா?”, என்று எண்ணிக்...
இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள் மாரி.
“அக்கா, எனக்கு மனசே ஆறலைக்கா, சொந்த வீட்ல சாவுன்னா கூட இப்படி தானா க்கா?”
“இவங்க இப்படி தான் சிந்து. தாத்தா...
“இப்ப வாங்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பிரிட்ஜ் இருந்தா நாமளும் உள்ள வச்சு வச்சு கெட்டு போனதை திம்போம். இப்ப நிறைய செலவு இருக்கு. அடுப்பு, பெருக்குமாறு, குப்பை கூடை இன்னும் நிறைய இருக்கு வாங்க வேண்டியது. கேஸ் சிலிண்டர்க்கு என்ன செய்ய போறீங்க?”
“எங்க பாட்டி வீட்ல உள்ளது சும்மா தானே இருக்குது....
அத்தியாயம் 10
உன்னுடனான பயணம்
நீண்டு கொண்டே
இருக்க ஆசை
உடலுக்கும் மனதுக்கும்
ஓய்வில்லை என்றால் கூட!!!
அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே...
அத்தியாயம் 3
காற்றில் கூட வீணையுண்டு
என்று உணர்ந்தேன்,
உன் கை விரல்
அங்கே இங்கே அசையும் போது!!!
அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள் என்று அவளுக்கு தெரியும்.
இருந்தாலும் சித்தார்த்திடம் பேச அவள் மனது அதிக ஆவல் கொண்டது. அவள் நிலை புரிந்ததோ என்னவோ, ராணி...
அத்தியாயம் 9
பனித்துளி என்று
தீண்ட நினைத்தேன்
பின் தான் தெரிந்தது
நீ என்னைச் சுடும்
தீப்பொறி என்று!!!
அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள்.
அது காலியாகும்...
சரி என்று வெளியவே குளிக்கவும் துவைக்கவும் பழகி கொண்டாள் சிந்து. அப்போதும் தாயம்மா சும்மா இருக்க வில்லை. அவள் ஒவ்வொரு முறை மாடியில் இருந்து காய்ந்த துணியை எடுத்து வரும் போதும் “எப்படி தான் பாத்ரூம்ல துவைக்கிறியோ, அந்த
வீட்ல கல்லு இருக்கு. அங்க போய் துவைக்க வேண்டியது தான? டைல்ஸ்ல எப்படி அழுக்கு போகும்?”,...
அத்தியாயம் 6
உயிர் பிரியும்
தருணத்தில் கூட
உன் ஒற்றைப் புன்னகையை
காண ஆசை அன்பே!!!
திருமணத்துக்கு ஐம்பது நாட்கள் இருந்தது. சிந்து சித்தார்த் இருவருக்கும் நாட்கள் மெதுவாக நகர்ந்தது போல் இருந்தது. ராணிக்கோ நாள் நெருங்க நெருங்க பணத்துக்கு என்ன செய்வது என்று எண்ணி பய பந்து உருண்டது.
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் மண்டையைப் போட்டு உருட்டினாள். சுந்தரத்திடம்...