ennai vittu
அத்தியாயம் - 2
மகளின் பள்ளியிலிருந்து கிளம்பி நேராக அரிசி மண்டிக்கு சென்றான் கோகுல்.
தந்தை காலத்திற்கு முன்பே குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த தொழிலை தான் தலையிட்ட பின்னர் விரிவுபடுத்தினான். தரமான நெல் மூட்டைகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்தே மொத்தமாக வாங்கி¸ அவற்றை அவித்து¸ காயப் போட்டு¸ அரைத்தபின் அதிலிருக்கும் தவிடு¸ உமி நீக்கி... சிறுகல் கூட இல்லாத அளவுக்கு...
அத்தியாயம் - 16
அளவெடுத்துத் தைத்ததுபோல பிளவுஸ் கச்சிதமாக இருந்தது. வெங்காய நிற பட்டுப்புடவையை நேர்த்தியாக அணிந்து அறையிலிருந்த கண்ணாடி முன் சென்று நின்றாள் வித்யா. சுடிதாரை விட சேலையில் சற்று பெரியவளாக தெரிவதாகத் தோன்றியது.
ஹாலுக்கு வந்து பார்த்தபோது நிவேதாவும் புது உடையிலிருந்தாள்.
காஃபி கொண்டு வந்து கொடுத்த வசுமதி “சேலை உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்க...
அத்தியாயம் - 19
பள்ளி விடுமுறை முடிந்து நாளை நிவேதாவுக்கு வகுப்பு தொடங்கிவிடும் என்ற நிலையில் மகளுக்குத் தேவையானவற்றை கணவனும் மனைவியும் சென்று வாங்கிவந்தனர். நிவேதாவும் ஒன்றாம் வகுப்பு செல்லத் தொடங்கினாள்.
வித்யாவுக்குத் திருமணமாகி ஒரு மாதத்திற்கும் அதிகமாகவே ஆகிவிட்டது. நிவேதா மற்றும் மாமியாருடன் ரொம்பவே ஒன்றிப் போனாள்.
நிவேதாவிற்கு இவள் மீதான பாசம் அதிகரித்துக் கொண்டே போனது....
அத்தியாயம் - 1
“அம்மா நான் அரிசி மண்டியை பார்த்துவிட்டு அப்படியே மில்லுக்குப் போயிடுவேன்” என்றபடி கிளம்பினான் கோகுல கிருஷ்ணன்.
“சரிப்பா போயிட்டு வா…” என்று விடையளித்தவர்¸ திடீரென நினைவு வந்தவராக மகனை அழைத்தார்.
“என்னம்மா?” என்று திரும்பியவனிடம் “நம்ம நிவேதாவை ஸ்கூல்ல விட்டுட்டுப் போயேன்” என்றார்.
“ஏன்மா? தினமும் அவள் ஸ்கூல் வேன்ல தானே போவாள். இன்றைக்கு என்னாச்சு?”...
அத்தியாயம் - 14
மூவராக வீட்டை அடைந்தபோது கனகம் ஆரத்தியுடன் காத்திருந்தார்.
காரிலிருந்து இறங்கிய மருமகளையே பார்த்திருந்தவர் மகனிடம் திரும்பி ‘எப்படி?’ என்பது போல பார்க்க¸ அவன் லேசாக தலையசைத்தான்.
“வா போகலாம்...” என்று மனைவியின் கைபிடித்து நடந்தான். வித்யாவின் மற்றொரு கரம் நிவேதாவின் பிடியிலிருந்தது.
தகப்பனும் மகளும் இருபுறமும் நடக்க... வீட்டு வாசலை அடைந்தவளுக்கு இருவரோடும் சேர்த்து ஆரத்தி...
அத்தியாயம் - 17
புதன்கிழமை காலையில் “வித்யா சீக்கிரம் கிளம்பு! மித்ரா நிச்சயத்திற்கு நாம்தான் மண்டபத்தில் எல்லா வேலையும் பார்க்கணும்” என்ற கோகுலிடம் “நான் வரவில்லை” என்றாள் அவள்.
“ஏன் வரவில்லை?”
“ஏனா..¸ அன்றைக்கு அந்த மண்டபத்தில் வைத்து அத்தனைபேர் முன்னிலையில் என்னை அசிங்கப்பட வைத்தீர்களே..! அது போதாதென்று மீண்டும் இந்த மண்டபத்தில் வைத்து அவமானப்படுவதற்கு நான் வர...
அத்தியாயம் - 23
பதிலை அறிய ஆவலாக தன் முகம் நோக்கியவளைப் பார்த்து சிறு புன்னகையொன்றை உதிர்த்த கோகுல் “வித்யாவோட பெரியம்மா மகன் சரவணன்தான் இவளைக் கடத்தி வைத்திருக்குமிடம் பற்றி தகவல் சொன்னார்...” என்றதும்¸ வித்யா “அண்ணனா..! அண்ணனுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாளென்றால் “வித்யாவுக்குத்தான் சொந்தத்தில்கூட அண்ணனே கிடையாதே!” என்று கேட்டார் கனகம்.
“உங்களுக்கு நான்...
அத்தியாயம் - 8
ஆட்டோவில் போகும்போது தன் எண்ணத்திற்காகத் தன்னைத் திட்டிக் கொண்டவள்¸ அம்மா சொல்பேச்சுக் கேட்டு சேலை கட்டப் பழகியிருந்தால் இந்தப் பேச்சுக்களை கேட்க வேண்டியிருந்திருக்காதே என்றும் எண்ணாமலில்லை. பள்ளி வளாகத்தை நெருங்கியதும் தன் எண்ணங்களுக்குத் தடைபோட்டாள்.
ஆட்டோ நுழைவுவாசலைத் தாண்டி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சென்று நின்றது. அவள் இறங்கியதும் “அத்தை...!” என்று ஓடிவந்து அவளது...
அத்தியாயம் - 9
வீடு வந்து சேர்ந்த வித்யாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வருணை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது எந்நாளையும் விட சற்று அதிகத் தாமதமாகிவிடவே பெரியம்மாவிடம் திட்டு வாங்க வேண்டுமே என்று பயந்து கொண்டேதான் வந்தாள்.
ஆனால்.... அன்றைக்கு அவளுக்கு பெரியம்மாவிடமிருந்து பேச்சு கிடைக்கவில்லை. பதிலாக ஒரு அதிர்ச்சி செய்திதான் கிடைத்தது.
வீட்டு வாசலையடைந்ததுமே அவளருகில்...
அத்தியாயம் - 15
அவளது பதிலே தற்போது அவள் தன்னை கணவனாகத்தான் நினைக்கிறாள் என்று உணர்த்த புன்னகைத்தவன் பிரபாகரனைப் பற்றி பேசினான்.
“அந்த பிரபாகரனைப் பற்றி படித்தாயல்லவா..? அவனுடன் திருமணம் நடந்திருந்தால் நாளை நீ எங்கு இருந்திருப்பாய் தெரியுமா..? சவுதியோ... துபாயோ... ஏதோ ஒரு அரபு நாட்டில்... ஏதோ ஒரு சேக்கிடம் அடிமையாக இருந்திருப்பாய். அவன் உனக்கு...
அத்தியாயம் - 4
வீட்டிற்கு வந்து தாயாரிடம் விஷயத்தைக் கூறியதும்¸ “அவங்க நமக்கு செய்ததெல்லாம் மறந்து போச்சா?” என்றார் கோபத்துடன்.
“இல்லைம்மா! மித்ரா பாவம்... போன் செய்து அழுதாள். அத்தோட நாமளும் அவர்களைப் போலவே நடந்துக்கிட்டா நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போயிடும். அவருக்கு நான் உதவி பண்ணாமலிருந்து அவர் உயிர் போய்விட்டால் நாம இழந்ததெல்லாம்...
அத்தியாயம் - 12
இரண்டு வாரங்கள் மின்னல் வேகத்தில் கடந்தன.
நிவேதாவுக்கு வாய்மொழித் தேர்வு¸ எழுத்துத் தேர்வு என ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை தொடங்கிவிடும்.
“அப்பா... அம்மா ஏன் இப்பெல்லாம் என்னைப் பார்க்க வரமாட்டேன்கிறாங்க?” என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள் மகள்.
கடைசியாக வழிமறித்துப் பேசிய அன்றுதான் அவளைப் பார்த்தது... அதன்பின்னர்...
அத்தியாயம் - 6
“ம்கூம்...” என்று ஒரு நெடுமூச்சுடன் தன் நினைவுகளிலிருந்து மீண்ட வெங்கட்ராமன் அண்ணன் மகனை சாப்பிடச் செல்லுமாறு கூறினார்.
“இல்லை சித்தப்பா நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன் எனக்காக அம்மாவும் நிவேதாவும் காத்திருப்பார்கள்” என்றதும்¸ “நிவேதா யாருப்பா?” என்று கேட்டார் அவர்.
“என் மகள்¸ நான்கு வயதாகிறது...” என்றவுடன்¸ “ஓ...! உனக்குதான் அப்போதே கல்யாணம் ஆகிவிட்டதே......
அத்தியாயம் - 11
அருகிலிருந்த மரத்தடியை நோக்கி இழுத்துச் சென்றவனுடன் போராடாமல் சென்ற வித்யா¸ அவன் நின்றதும் “விடுங்க என் கையை... விடுங்க... நீங்க என்ன நினைச்சிட்டிருக்குறீங்க உங்க மனதில்..? என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றா..? எதுக்காக என் கையைப் பிடித்து இழுக்குறீங்க..? விடுங்க...” என்று கையை இழுக்க முயன்றவாறே கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க¸ “நீ...
அத்தியாயம் - 7
“அத்தை!” என்று சிறுவனின் குரல் கேட்டு நடப்புக்கு வந்தவள்¸ “என்ன வருண் தூங்கலையா?” என்று கேட்டு சிறுவனிடம் சென்றாள்.
“பேய் கனவா வருது¸ எனக்கு பயமா இருக்கு. என்னை கட்டிப்பிடிச்சிக்கோ அத்தை” என்று அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டான்.
தானும் சிறுவனை நன்றாக அணைத்தவாறு “பேயெல்லாம் கிடையவே கிடையாது. கனவு வந்ததற்கே இப்படி பயந்தால்¸...
அத்தியாயம் - 22
உறவினர் கூட்டம் முழுவதாக மறைந்ததும் பேத்தியுடன் அமர்ந்து மகனை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயாரிடம் சென்று “அம்மா வித்யாவை எல்லா இடத்திலும் தேடிவிட்டேன் காணவில்லை..! யாரும் கடத்தியிருப்பார்களோ..!” என்றான் பயத்தை வெளிக்காட்டிவிடாதவாறு.
“என்னப்பா சொல்றே!!” என்று அதிர்ந்தவர் “அப்படியெல்லாம் இருக்காது... நானும் தேடினேன்... எதுக்கும் இன்னொரு முறை தேடிவிடலாம்” என்று தாயார் சொல்ல¸ சரி...
அத்தியாயம் - 25
கோகுலின் முகத்தில் பிரதிபலித்த வருத்தத்தைக் கண்டவள் “சொல்ல கஷ்டமாக இருந்தால் விட்டுவிடுங்கள்” என்றாள் ஆறுதலாக கணவனின் தோளை வருடியபடி.
“இல்லை.. சொல்கிறேன். கொடைக்கானலை நன்றாக சுற்றிப் பார்த்தோம்¸ அவள் அமைதியாகவே தான் வந்தாள். கார்டனில் ஒவ்வொரு இடமாக போட்டோ எடுப்பதற்காக அவள் சென்றுவிட¸ ஒரு மரத்தில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தபோது ‘வித்யா இந்த...
அத்தியாயம் - 20
ஓய்வில்லாமல் திருமண வேலையையும் தன் அலுவலையும் பார்த்துக் கொண்டிருந்தவன்¸ சற்று ஓய்வாக அமர்ந்திருந்த மாலை வேளையில்... பள்ளிவிட்டு வந்ததும் தன் தாயாரிடம் சென்ற நிவேதா “அம்மா எனக்கு எப்போ தம்பி பாப்பா பிறக்கும்?” என்று கேட்டாள்.
மகள் கேட்டதும் சட்டெனத் திரும்பி கணவனை நோக்கிவிட்டவளுக்கு கணவனும் மாமியாரும் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் கூச்சமுண்டாகிவிட...
அத்தியாயம் - 21
சின்னதாய் தங்க மணிகள் கோர்த்த பிரேஸ்லெட் ஒன்றை எடுத்து இது மகளுக்கு என்று தாயாரிடம் காட்டியவன்¸ ‘மற்றதெல்லாம் வித்யாவுக்குத்தான்’ என்றான்.
“எனக்கு இவ்வளவு நகை எதற்கு? நிவேதாவுக்கு சேர்த்து வையுங்கள்” என்றாள் அவள் உடனே.
“இந்த வயசில் அவளுக்கு இந்த நகைகளை அணிந்தால் நன்றாக இருக்காது” என்றவன்¸ சிறுவர்களுக்கு அதிக நகை அணிவதால் ஏற்படும்...
அத்தியாயம் - 5
“யாரை... யாரைப் பார்த்தாய்?” என்று பதற்றத்துடன் கேட்டான் கோகுல்.
தந்தையின் மடியிலிருந்து இறங்கி துள்ளியாவாறே “அம்மாவை...!” என்று குதித்தாள் நிவேதா.
“என்ன... அம்மாவையா!!” என்றவாறே எழுந்தனர் இருவரும்.
“ஆமா அம்மாவைத்தான். ஆனால்¸ நான் அம்மாகிட்ட போறதுக்கு முன்னால ஆட்டோல ஏறிப்போயிட்டாங்க” என்றாள் சோகத்துடன்.
விஷயம் என்னவோ அதிர்ச்சி தரக்கூடியதுதான். ‘ஆனால் அது எப்படி சாத்தியம்! ம்கூம்... இருக்கவே...