Monday, May 20, 2024

    மௌனமாய் எரிகிறேன்

    மௌனமாய் எரிகிறேன் 20 சேஷாவின் பண்ணை வீட்டின் பின்னே இருந்த அவுட் ஹவுசில் சுயநினைவின்றி கிடந்தான் ஆத்மநாதன். வாயிலும், முகத்திலும் ஆங்காங்கே ரத்தம் வடிந்து கொண்டிருக்க, உடல் முழுவதுமே அடிபட்ட காயங்கள். தன் வாழ்விலும் இப்படி ஒருநாள் வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான் அவன். ஆனால், அதை நடத்தி முடித்திருந்தான் சேஷா. நேற்று இரவிலிருந்து கேட்பாராற்று...
    மௌனமாய் எரிகிறேன் 17 சத்யதேவின் மகன் தோட்டத்தில் அன்னநடை போட்டுக் கொண்டிருக்க, அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷாவின் வீட்டை நீங்கி வந்தது முதலே அவளின் ஒரே பொழுதுபோக்காக மாறிப் போனான் ஸ்கந்தா. "டேவா..." என்று அழைத்தபடி, திராட்சை விழிகளை சுழற்றிக்கொண்டு அவன் தேடுவதைக் காண்பதே அத்தனை அழகாக இருக்க, இயல்பாக அவனுடன் பொருந்திக் கொண்டாள்...
    மௌனமாய் எரிகிறேன் 23 தேவா மருந்துகளின் தயவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் கையைப் பிடித்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கலையரசி. மலர் அழைக்கும்போது பல்லவியின் அருகில் தான் அமர்ந்திருந்தார் கலையரசி. தேவாவின் நிலையைக் கேட்டபின்பு அவரால் வீட்டில் இருக்க முடியாமல் பல்லவியுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார் அவர். பல்லவி தேவ்வுக்கும் தகவல் கொடுத்திருக்க, இவர்களுக்கு முன்பே மருத்துவமனையை...
    "அச்சோ... என்னண்ணா பேசறீங்க நீங்க. என்கிட்டே ஏன்" என்றவர் வார்த்தை வராமல் கலங்கி நிற்க, "தாயில்லாத குறையே தெரியாம என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினதுக்கு உனக்கும், என் அத்தைக்கும் நான் காலத்துக்கும் நன்றியோடு இருக்கணும் கலை. அவன் தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதையோ பேசிட்டு போறான். நீ வளர்த்த பிள்ளைதான, அவனை மன்னிச்சிடும்மா" என்றார்...
    மௌனமாய் எரிகிறேன் 10 ஆதிசேஷன்- தேவசேனாவின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகளிலும் அவ்வபோது செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருந்தது. அதிலும் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே மௌனம் சாதித்ததில், ஊடகம் சொல்வது அனைத்தும் உண்மை என்றே நம்பப்பட்டது. அவரவரின் ஊகங்கள் அடிப்படையில், இப்படி நடந்திருக்கலாம், இதற்காக இருக்கலாம் என்று ஆயிரம்...
    மௌனமாய் எரிகிறேன் 22 சேனாவின் இரவு அந்த ஊஞ்சலில் கழிந்துவிட, காலை சூரியனின் வரவில் தான் எழுந்து அறைக்குள் வந்தாள் அவள். அந்த அறையின் நடுவில் இருந்த மெத்தைக்கு அருகில் தரையில் கைகளை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான் சேஷன். "இவன் ரூம்க்கு போகவே இல்லையா" என்று பெருமூச்சை வெளியேற்றி, அந்த அறையில் இருந்து...
    மௌனமாய் எரிகிறேன் 04 வளைகாப்பு வீட்டில் இருந்து கிளம்பிய தேவசேனா அலுவலகத்தில் முக்கிய வேலைகள் ஏதுமில்லாததால், மலரை அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டை வந்தடைந்தாள். நேரம் மாலை ஐந்தை கடந்திருக்க, கலையரசி அவரின் வழக்கமாக ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். அது இன்னும் வசதியாக யாரையும் பார்க்கவேண்டிய தேவையிராமல் தனது பாட்டியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் தேவசேனா. மீண்டும்...
    நிச்சயம் அந்த கணங்களில் அவள் மனதில் சேஷன் இல்லை. பொய்யாகிப் போன தனது வாழ்வு தான் பெரிதாக தெரிந்தது. அதுவும் பெற்ற தந்தையாக அவளிடம் பாசம் காட்டி வந்த ஆத்மநாதன் அவளை அனாதை என்றதை ஏற்கமுடியவில்லை அந்த பூஞ்சை மனம் கொண்டவளால். "செத்துப் போ..." என்ற அந்த அரக்கனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில்...
    மௌனமாய் எரிகிறேன் 07 நேற்று இரவு சேஷாவிடம் சண்டையிட்டு முடித்தபின்பும் கூட, வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் அவளின் ஊஞ்சலில் கண்விழித்தபடியே தான் படுத்து கிடந்தாள் தேவா. ரணமாய் கழிந்த சில கணங்களுக்குப் பின் கிட்டத்தட்ட நடுஇரவில் தான் உறக்கத்தை தழுவியிருப்பாள் அவள். ஆனால், அதையும் கெடுப்பதுபோல ஏதேதோ கனவுகள் அவளைத் துரத்தியதில் அரைகுறையாகத் தான் உறங்கி எழுந்தாள்...
    தேவாவின் மனம் ஆதிசேஷனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் அவள் தந்தை மீண்டும் ஒருமுறை அவளிடம் வந்து நின்றது. இப்போது துணைக்கு தன் மகன் சத்யதேவையும் அழைத்து வந்திருந்தார் அவர். "என்ன முடிவு செய்திருக்க தேவா?" என்று மகளை அவர் விசாரிக்க, "எதைப்பத்தி டாட்?" "சேஷன் கேட்ட விவாகரத்தைப் பத்தி?" என்று அழுத்தமாக தந்தை அறிவுறுத்த, "சேஷனே அப்பாகிட்ட...
    மௌனமாய் எரிகிறேன் 21 நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்திருக்க, சேஷாவுக்கு அப்போதுதான் லேசாக உறக்கம் களைய தொடங்கியது. படுக்கையில் புரண்டு அவன் எழுந்து அமர, கண்கள் இப்போது தேவசேனாவைத் தேடியது. அந்த அறையில் அவள் இல்லாமல் போக, தானாகவே எழுந்து தேடலைத் தொடங்கிவிட்டான் சேஷன். அவன் தனது அறையிலிருந்து வெளியே வந்த நேரம், சத்யதேவ் மாடியின்...
    மௌனமாய் எரிகிறேன் 11 அந்த பெரிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கலையரசி. ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பால் அவர் அவதிப்பட்டு, தேவாவின் கவனிப்பில் தான் மீண்டு வந்திருந்தார். இதோ இப்போது இரண்டாவது முறையாக மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவர்கள் இன்னும் உறுதியாக எதையும் கூறாததால், பதட்டமாகத் தான் அமர்ந்திருந்தான் சேஷா. அன்னையை அங்கே அனுமதித்து ஒரு மணி...
    மௌனமாய் எரிகிறேன் 24 நேரம் இரவு பத்து மணியைக் கடந்து விட்டிருக்க, மலர்விழியின் வீட்டிலிருந்து கிளம்பி தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. அவளே காரை எடுத்து வந்திருக்க, சற்றுத் தள்ளி அவளின் பாதுகாப்பு வாகனம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது அவளை. இரவு நேர தனிமைக்கு மருந்தாக இளையராஜாவும், சித்ராவும் உருகிக் கொண்டிருக்க, "இனி எனக்காக அழ...
    மௌனமாய் எரிகிறேன் 16 சேஷன் அலுவலக பொறுப்பேற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. நிர்வாகம் அவன் பொறுப்பில் இருந்தாலும், அலுவல் விஷயம் அத்தனையும் மலரின் கைகளில் தான் இருந்தது. முதல்நாள் அவள் அலுவலகம் வந்தபோதே, "எனக்கு இதையெல்லாம் பார்க்க நேரமில்ல மலர். உன் பிரெண்ட் இடத்துல இருந்து இதை நீ கவனிச்சுக்கோ." என்று மொத்தமாக அவளை நம்பி...
    மௌனமாய் எரிகிறேன் 25 தேவசேனா கலையரசியுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருக்க, கண்ணெடுக்காமல் அவளைப் பார்த்தபடி சற்றுத்தள்ளி உணவுமேசையில் அமர்ந்திருந்தான் சேஷன். கலையரசியிடம் பேசியபடியே எதேச்சையாக திரும்பிய தேவாவின் கண்களில் அவன் அமர்ந்திருந்த காட்சிப் பதிய, வேண்டாத நினைவாக மேலெழுந்தது என்றோ ஒருநாள் நடந்த ஆத்மீயின் வருகை. இன்று அவன் அமர்ந்திருந்த இடத்தில் அன்று தான் அமர்ந்திருந்ததும், அன்றைய...
    மௌனமாய் எரிகிறேன் 19-2 ஆத்மீயும், அவள் அன்னை ராதாவும் இளமாறனின் வீட்டில் இருக்க, தனது கணவரின் செயலை பொறுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ராதா. அமிர்தா இறப்பை தற்கொலை என்று நம்பிக் கொண்டிருந்தவர் தானே அவரும். கணவன் மீது அவருக்கும் வருத்தம் இருந்தது தான். அவள் விருப்பப்படியே விட்டிருந்தால் கூட, எங்கேனும் உயிருடன் இருந்திருப்பாளே என்று...
    மௌனமாய் எரிகிறேன் 08 சேஷன் குரூப்ஸ் நடத்தவிருந்த விருது விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்திருந்தது. துறை ரீதியாக வாங்க வேண்டிய அனுமதிகள், அரங்கம் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள், அழைக்கவேண்டிய விருந்தினர்களின் பட்டியல், விழாவுக்கான விளம்பரங்கள் என்று நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் தேவா. அவளும் மலர்விழியும்...
    மௌனமாய் எரிகிறேன் 18 வெகுநேரம் ஆதிசேஷனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த தேவசேனா ஏதோ முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து இளமாறனை அழைத்தாள். சில நிமிடங்களில் எதிர்முனை அழைப்பை ஏற்றுவிட, "சேஷாகிட்ட என்ன சொன்ன இளா?" என்றாள் சேனா. "அவர்கிட்ட நான் ஏன் பேசப் போறேன் சேனா? நான் எதுவும் சொல்லலையே?" என்று ஒன்றுமறியாதவனாக மழுப்பினான் இளமாறன். "உன்னைத்...
    மௌனமாய் எரிகிறேன் 12 கலையரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையில்தான் இன்னும் அமர்ந்திருந்தான் ஆதிசேஷன். கலையரசியின் புறக்கணிப்பு அவனை துண்டு துண்டாக சிதறடித்திருந்தது. அவன் மீதான கலையரசியின் பாசத்தை அறியாதவனா அவன். அவன் மீது கொண்ட அன்பினால் தானே அவர் தேவசேனாவை காயப்படுத்தியது. உலகம் அறியாத அப்பாவி அவன் அன்னை. ஒருவகையில் தேவசேனா கூறியது மொத்தமும்...
    மௌனமாய் எரிகிறேன் 09 அழகான கருமை நிறத்தில் ஓரடி உயரத்தில் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த பெண் சிலைகள். ஒவ்வொரு சிலையின் கீழும் சேஷா என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் பொறித்திருக்க, அந்த பெண் சிலையின் கைகளில் ஒரு மூன்றாம் பிறை நிலவு. தனக்கு முன்னே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளை ரசனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...
    error: Content is protected !!