Tuesday, June 9, 2026

    மௌனமாய் எரிகிறேன்

    மௌனமாய் எரிகிறேன் 18 வெகுநேரம் ஆதிசேஷனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த தேவசேனா ஏதோ முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து இளமாறனை அழைத்தாள். சில நிமிடங்களில் எதிர்முனை அழைப்பை ஏற்றுவிட, "சேஷாகிட்ட என்ன சொன்ன இளா?" என்றாள் சேனா. "அவர்கிட்ட நான் ஏன் பேசப் போறேன் சேனா? நான் எதுவும் சொல்லலையே?" என்று ஒன்றுமறியாதவனாக மழுப்பினான் இளமாறன். "உன்னைத்...
    மௌனமாய் எரிகிறேன் 11 அந்த பெரிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கலையரசி. ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பால் அவர் அவதிப்பட்டு, தேவாவின் கவனிப்பில் தான் மீண்டு வந்திருந்தார். இதோ இப்போது இரண்டாவது முறையாக மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவர்கள் இன்னும் உறுதியாக எதையும் கூறாததால், பதட்டமாகத் தான் அமர்ந்திருந்தான் சேஷா. அன்னையை அங்கே அனுமதித்து ஒரு மணி...
    மௌனமாய் எரிகிறேன் 09 அழகான கருமை நிறத்தில் ஓரடி உயரத்தில் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த பெண் சிலைகள். ஒவ்வொரு சிலையின் கீழும் சேஷா என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் பொறித்திருக்க, அந்த பெண் சிலையின் கைகளில் ஒரு மூன்றாம் பிறை நிலவு. தனக்கு முன்னே அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளை ரசனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்...
    மௌனமாய் எரிகிறேன் 22 சேனாவின் இரவு அந்த ஊஞ்சலில் கழிந்துவிட, காலை சூரியனின் வரவில் தான் எழுந்து அறைக்குள் வந்தாள் அவள். அந்த அறையின் நடுவில் இருந்த மெத்தைக்கு அருகில் தரையில் கைகளை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான் சேஷன். "இவன் ரூம்க்கு போகவே இல்லையா" என்று பெருமூச்சை வெளியேற்றி, அந்த அறையில் இருந்து...
    மௌனமாய் எரிகிறேன் 02 தேவசேனா அரைமயக்கத்தில் கிடந்த சேஷாவின் ஆடைகளை சரிசெய்தவள் வெளியே இருந்த தனது பாதுகாவலர்களை அழைக்க, அவர்கள் சேஷாவை எழுப்பி நிறுத்த முயன்றனர். கைத்தாங்கலாக அவனை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அவனை காரில் ஏற்றியிருந்தனர். அந்த ஹோட்டலில் இருந்து சேஷாவின் வீட்டை அடைய அரைமணி நேரத்திற்கும் மேலாக, அதுவரையிலும்...
    தேவாவின் மனம் ஆதிசேஷனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் அவள் தந்தை மீண்டும் ஒருமுறை அவளிடம் வந்து நின்றது. இப்போது துணைக்கு தன் மகன் சத்யதேவையும் அழைத்து வந்திருந்தார் அவர். "என்ன முடிவு செய்திருக்க தேவா?" என்று மகளை அவர் விசாரிக்க, "எதைப்பத்தி டாட்?" "சேஷன் கேட்ட விவாகரத்தைப் பத்தி?" என்று அழுத்தமாக தந்தை அறிவுறுத்த, "சேஷனே அப்பாகிட்ட...
    நிச்சயம் அந்த கணங்களில் அவள் மனதில் சேஷன் இல்லை. பொய்யாகிப் போன தனது வாழ்வு தான் பெரிதாக தெரிந்தது. அதுவும் பெற்ற தந்தையாக அவளிடம் பாசம் காட்டி வந்த ஆத்மநாதன் அவளை அனாதை என்றதை ஏற்கமுடியவில்லை அந்த பூஞ்சை மனம் கொண்டவளால். "செத்துப் போ..." என்ற அந்த அரக்கனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில்...
    "அச்சோ... என்னண்ணா பேசறீங்க நீங்க. என்கிட்டே ஏன்" என்றவர் வார்த்தை வராமல் கலங்கி நிற்க, "தாயில்லாத குறையே தெரியாம என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினதுக்கு உனக்கும், என் அத்தைக்கும் நான் காலத்துக்கும் நன்றியோடு இருக்கணும் கலை. அவன் தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதையோ பேசிட்டு போறான். நீ வளர்த்த பிள்ளைதான, அவனை மன்னிச்சிடும்மா" என்றார்...
    மௌனமாய் எரிகிறேன் 13 சேஷன் தனது திரைப்பயணத்தை தொடங்கிவிட்ட விஷயம் தெரிந்தும் தெரியாதவர் போல் தான் இருந்தார் பிரகதீஸ்வரி. அவருக்கு பேரனின் கவனம் எப்படியோ ஒரு வகையில் திசை திரும்பினால், அதுவே போதும் என்றுதான் இருந்தது. அவருக்கு அமிர்தா மீது எந்த வன்மமும் கிடையாது. மற்றவர்களைப் போல் சாதி, அந்தஸ்து என்று அதெல்லாம் பார்ப்பவரும் கிடையாது. ஆனால்,...
    மௌனமாய் எரிகிறேன் 07 நேற்று இரவு சேஷாவிடம் சண்டையிட்டு முடித்தபின்பும் கூட, வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் அவளின் ஊஞ்சலில் கண்விழித்தபடியே தான் படுத்து கிடந்தாள் தேவா. ரணமாய் கழிந்த சில கணங்களுக்குப் பின் கிட்டத்தட்ட நடுஇரவில் தான் உறக்கத்தை தழுவியிருப்பாள் அவள். ஆனால், அதையும் கெடுப்பதுபோல ஏதேதோ கனவுகள் அவளைத் துரத்தியதில் அரைகுறையாகத் தான் உறங்கி எழுந்தாள்...
    மௌனமாய் எரிகிறேன் 05 சேஷன் குழுமம் நடத்தவிருந்த விருது வழங்கும் விழாவிற்கான வேலைகளால் நிற்கக்கூட நேரமில்லாதவளாக, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷன் அவளிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்திருக்க, இதற்குள் பாதி வேலைகளை முடித்திருந்தாள் அவள். என்னவோ, அவன் 'செய்யாதே...' என்ற நிமிடமே, 'செய்தால் என்ன...' என்று தோன்றிவிட்டது அவளுக்கு. அந்த...
    மௌனமாய் எரிகிறேன் 08 சேஷன் குரூப்ஸ் நடத்தவிருந்த விருது விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்திருந்தது. துறை ரீதியாக வாங்க வேண்டிய அனுமதிகள், அரங்கம் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள், அழைக்கவேண்டிய விருந்தினர்களின் பட்டியல், விழாவுக்கான விளம்பரங்கள் என்று நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் தேவா. அவளும் மலர்விழியும்...
    மௌனமாய் எரிகிறேன் 19 சேஷன் அவனது படப்பிடிப்புத் தளத்தில் இருக்க, ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது அங்கே. இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சேஷன் மற்றவர்களுடன் சண்டையிடுவது போல் காட்சியில் இருக்க, இயல்பாகவே அசாத்தியமாக இருசக்கர வாகனங்களை அசாத்தியமாக கையாளுபவன் என்பதால், டூப் போடவிருந்த  நபரை மறுத்துவிட்டு, தானே இருசக்கர வாகனத்தை முறுக்கிக் கொண்டிருந்தான் சேஷன். அப்படியொன்றும் அதிக...
    மௌனமாய் எரிகிறேன் 23 தேவா மருந்துகளின் தயவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் கையைப் பிடித்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கலையரசி. மலர் அழைக்கும்போது பல்லவியின் அருகில் தான் அமர்ந்திருந்தார் கலையரசி. தேவாவின் நிலையைக் கேட்டபின்பு அவரால் வீட்டில் இருக்க முடியாமல் பல்லவியுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார் அவர். பல்லவி தேவ்வுக்கும் தகவல் கொடுத்திருக்க, இவர்களுக்கு முன்பே மருத்துவமனையை...
    மௌனமாய் எரிகிறேன் 06 ஸ்ரீனிவாஸ் பேசியதில் அன்று முழு நாளும் கடுகடுவெனவே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. மலர்விழியால் கூட அவளை நெருங்க முடியவில்லை. அன்று இரவு பத்துமணி வரையிலும் அலுவலகத்தில் தான் அமர்ந்திருந்தாள் தேவசேனா. இதுவரை கலையரசி இரண்டு முறை அழைத்து விட்டிருக்க, அவருக்கும் பதில் எதுவும் சொல்லியிருக்கவில்லை. வேலை வேலை என்று மொத்தமாக தனது கணினியின்...
    மௌனமாய் எரிகிறேன் 20 சேஷாவின் பண்ணை வீட்டின் பின்னே இருந்த அவுட் ஹவுசில் சுயநினைவின்றி கிடந்தான் ஆத்மநாதன். வாயிலும், முகத்திலும் ஆங்காங்கே ரத்தம் வடிந்து கொண்டிருக்க, உடல் முழுவதுமே அடிபட்ட காயங்கள். தன் வாழ்விலும் இப்படி ஒருநாள் வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான் அவன். ஆனால், அதை நடத்தி முடித்திருந்தான் சேஷா. நேற்று இரவிலிருந்து கேட்பாராற்று...
    மௌனமாய் எரிகிறேன் 01 அந்த பிரம்மாண்டமான திரையரங்கத்தின் முன்னே திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டிருக்க, விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பிரபலமான கதாநாயகனின் திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி அந்த திரையரங்கில் அன்று திரையிடப்படுவதாக இருந்தது. அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று அத்தனைப் பேருமே தமிழ் திரையுலகின்...
    மீட்டிங் நடைபெறும் ஹாலுக்கு பக்கவாட்டில் இருந்த அவளது தனிப்பட்ட அறையில் சென்று கண்களை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தவள் மனம் தன் கட்டுக்குள் வரவும், கையில் இருந்த கோப்புகளில் கவனம் செலுத்தினாள். அடுத்த இரண்டு மணிநேரம் பேச வேண்டியதையும், செய்ய வேண்டியதையும் முறைப்படி மனதில் வரிசைப்படுத்திக் கொண்டவள் முகம் கழுவி, லேசாக ஒப்பனை செய்துகொண்டு கண்ணாடியைப்...
    மௌனமாய் எரிகிறேன் 04 வளைகாப்பு வீட்டில் இருந்து கிளம்பிய தேவசேனா அலுவலகத்தில் முக்கிய வேலைகள் ஏதுமில்லாததால், மலரை அனுப்பிவிட்டு தானும் தனது வீட்டை வந்தடைந்தாள். நேரம் மாலை ஐந்தை கடந்திருக்க, கலையரசி அவரின் வழக்கமாக ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். அது இன்னும் வசதியாக யாரையும் பார்க்கவேண்டிய தேவையிராமல் தனது பாட்டியின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் தேவசேனா. மீண்டும்...
    மௌனமாய் எரிகிறேன் 14 பிரகதீஸ்வரியின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்திருக்க, எந்நேரமும் அழுகையில் கரைவதையே முழுநேர வேலையாக்கிக் கொண்டிருந்தாள் தேவசேனா. கலையரசி அதட்டி, மிரட்டி ஊட்டிவிடும் இரண்டு வாய் உணவுதான் அவளின் ஆகாரமாக இருந்தது அந்த நாட்களில். ஆதிசேஷன் பேரனாக பாட்டிக்கு கொள்ளி வைத்து இறுதிக் கடமையை செய்ததோடு சரி. அதன்பின் அவள் கண்களில் படவே இல்லை...
    error: Content is protected !!