thooram
திருமணம் முடிந்து அனைவரும் களைய தொடங்கினர்.அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.நேற்று சந்தோஷமாக இருந்த திருமண வீடு இன்று கலையிழந்து காணப்பட்டது.இதில் மஞ்சுளாவுக்கு தான் மனது ஆரவே இல்லை மகன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.வள்ளி பாட்டிக்கோ மதியழகியை கண்டது ஒரு அதிர்ச்சி என்றால் பேரன் அவளை திருமணம் செய்தது...
தன் கையில் உள்ள தட்டில் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள் மதியழகி.அது அவளது சிறுவயது பழக்கம் இன்று வரை தொடர்கிறது.அதே கலையான முகம் இன்று அழுக்கு படிந்து காணப்பட்டது.தன் வாழ்க்கை இந்தளவுக்கு கீழ் இறங்கும் என்று ஒரு வருடத்திற்கு முன்பு கூறியிருந்தால் சிரித்திருப்பாள்,ஆனால் இன்று அனைவரும் இவளைக் கண்டு அல்வா சிரிக்கிறார்கள் என்று நினைத்தவளுக்கு விரக்கிதி புன்னகை...
அருள்வேந்தனக்கும்,அழகிக்கும் மனசு ஒத்த பிறகு முதல் பயணம் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர் அவனது புல்லட்டில்.ராமலிங்கம் கார் புக் செய்து வர சொல்லியிருந்தார் ஆனால் வேந்தன் பிடிவாதமாக மறுத்துவிட்டான் அதில் சிறிய வருத்தம் மகன் மேல்.முதன் முதலில் மருமகள் உடன் வருகிறான் யார் கண்ணும் விழக் கூடாது என்று அந்த தந்தையின் எண்ணம்.ஆனால்...
தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.மதிய உணவு உண்டுவிட்டு அனைவரும் கலைய கடைசி பந்தியில் அருள்வேந்னும்,அழகியும் அமர்ந்தனர்.வேந்தன் வேண்டும் என்றே அழகியுடன் நெருங்கி அமர்ந்தான்.அவனது நெருக்கத்தில் அழகிக்கு மனது,உடலும் பதறத் துவங்கியது.அவளது கை வெளிப்படையாகவே நடுங்க அதைக் கண்ட வேந்தனோ,
"நெருங்கி உட்கார்ந்ததுக்கே இப்படி நடுங்கினா மத்ததெல்லாம்..."என்று குனிந்து விஷமமாக கூற.அழகிக்கோ...
தன் தாயிடம் பேசிவிட்டு கடைக்கு வந்த அருள்வேந்தனின் நினைவுகள் முழுவதும் மதியழகியே ஆக்கரமித்தாள்.சின்னவயசுல கொஞ்சம் கன்னம் எல்லாம் பூசுபூசு இருக்கும்ல அவளுக்கு இப்ப என்னடான ஒள்ளியா நல்லாவே இல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தவன்,ச்ச என்ன இது அவள பத்தியே யோசிச்சிட்டு இருக்கேன்..நியாமா பார்த்தா அவள் மேல எனக்கு கோபம் தான் வரனும் ஆனா ஏன் நான்...
அந்த தனியார் மருத்துவமனை வரவேற்பறையில் நடைபயின்று கொண்டிருந்தான் வேந்தன்.அவனது கண்கள் சிவந்து ஒருவித இறுக்கத்துடன் தான் இருந்தான்.அப்போது வந்த மருத்துவர் அவனிடம்,
"சின்ன காயம் தான் பயப்பட ஒண்ணுமில்ல...கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க டிரிப்ஸ் பொட்டுருக்கேன்...ஒரு மூணு மணி நேரம் கழிச்சு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்..."என்றார்.அழகிக்கு தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.மருத்துவர் கூறிய அனைத்திர்கும் தலையாட்டல்...
அருள்வேந்தன் கடையை விரிவாக்கம் செய்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு அதில் சில பிரச்சனைகள் அதை பற்றி யோசிக்கவே நேரம் சரியாக இருந்தது.இதில் நேற்று வீட்டில் தாலி பிரித்துக்கோர்பதை பற்றி பேசிக்கொண்டிருக்க ஏற்கனவே கடை வேலைகள் சரிவர நடக்காததால் கோபத்தில் இருந்தவனுக்கு இந்த பேச்சு மேலும் கோபம் மூட்டியது அதனால் கத்திவிட்டான்.ஆனால் இப்போது தவறு செய்துவிட்டோமோ என்று மனது...
அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்கள் கிளம்பியவுடன் அருள்வேந்தனும் கிளம்பிவிட்டான்.அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்ததால் அவனை யாரும் கவனிக்கவில்லை.இரவு கவிழும் நேரம் வீடு வந்தவன் யாரும் தன்னை கேள்வி கேட்கும் முன் வேகமாக தனது அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டவன் கண்களை மூடி அதன் மீது சாய்ந்திருந்தான்.ஏதோ கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் கண்களை திறந்தவன்...
அருள்வேந்தனின் வீடே கலையிழந்து காணப்பட்டது.முதல் நாள் இருந்த மகிழ்ச்சி இப்போது யாரிடமும் இல்லை.திருமணம் முடிந்த கையோடு முக்கால்வாசி உறவுகள் சென்றுவிட்டன இப்போது மிக நெருக்கமானவர்கள் மட்டுமே.மஞ்சுளாவோ மகனின் இந்த முடிவில் மிகவும் ஒடிந்துவிட்டார் அவருக்கு அழகியை தன் மருமகளாக நினைக்கக்கூட முடியவில்லை காரணம் அவளை பார்க்கும் போதெல்லாம் அன்று மகன் அனைவரும் முன்னும் தலைகுனிந்து...
அருள்வேந்தனின் வீடு விழா கோலம் பூண்டு இருந்தது.இன்று மதியழகிக்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபோகம்.அதையே சிறிய விழா போல ஏற்பாடு செய்திருந்தார் ராமலிங்கம்.அவருக்கு மகனின் திருமணத்தில் ஏற்பட்ட குலர்படியால் மனதில் வருத்தம் இருந்தது.அதிலும் மகன் யார் பேச்சை கேட்காமல் அழகியை திருமணம் செய்ததில் அவருக்கு மகன் அழகியை பழிவாங்க தன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டானோ என்ற...
தூரம் போகாதே வெண்ணிலவே...13
அழகி வாசலை அடைத்துக் கோலம் போட அவளையேப் பார்த்துக் கொண்டு வீட்டின் உள்ளிருந்து வந்தார் வள்ளியம்மை.சிரித்த முகத்தோடு கோலத்தை ரசித்து போட்டுக்கொண்டிருந்தாள் அழகி அதனால் வள்ளி வந்ததை அவள் கவனிக்கவில்லை.வள்ளிக்கு அழகியின் இந்த சிரித்த முகம் வேலை செய்யும் பாங்கும் வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும்.சிறிய வயதில் அனைவரையும் ஏளனமாக...
அன்று,
அருள்வேந்தன் வெகு நாட்களுக்கு பிறகு வீடு வந்திருந்தான்.அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து இருந்தது.அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி செல்லவே வந்திருந்தான்.மகன் வந்த சந்தோஷத்தில் அவனுக்கு பிடித்த அனைத்தும் சமைத்து அமர்கள படுத்தியிருந்தார் மஞ்சுளா.ராமலிங்கமோ,
"உன் மவன் வந்திருக்கானு எல்லா வேலையும் ஓரே நாள்ல செஞ்சிட்டு அப்புறம் முடியல படுத்துகுகாத மஞ்சு...நாளைக்கு வேற பக்கத்துவீட்டுல விசேஷம் இருக்கு..."என்று...
ராமலிங்கம் அந்த அறையின் மூளையில் ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தார்.அருள்வேந்தனோ அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.அண்ணாமலையிடம் பேச சென்றவனை கையை பிடித்து இழுத்து வந்திருந்தார் ராமலிங்கம்.அவனுக்கு தந்தையின் செயல் புரியவில்லை இருந்தாலும் பேசாமல் அமைதிகாத்தான் அவரே கூறட்டும் என்று ஆனால் அவரோ ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கவும் கடுப்பானவன்,
"என்னப்பா...ஏன் இப்படி என்ன இழுத்துட்டு வந்து...
தூரம் போகாதே வெண்ணிலவே...5
காலை வேளையில் சமையலறையில் பம்பரம் சுழன்று கொண்டு இருந்தாள் அழகி.அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு அடுத்த வேலை செய்ய ஆரம்பித்தாள். சாரதாவிற்கு மகளை பார்க்க பார்க்க தான் எடுத்த முடிவு சரியனவேபட்டது.அதை செயல்படுத்த தக்க சமயத்தை எதிர் நோக்கி இருந்தார்.கலையரசனும்,கேசவனும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.வசுந்திராவும் அவள் தோழி ஒருவளை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தாள்.இது தான்...
தன் உறவினரை மண்டபத்தில் விட வந்த வேந்தனுக்கு அப்போது தான் மாலை அண்ணாமலை சமையல் எண்ணெய் இன்னும் இரண்டு டின் தேவைபடுகிறது என்று கூறியது நியாபகம் வந்தது.தன் கடையில் வேலை செய்யும் மணியிடம் வந்தவன் இரண்டு டின் எடுத்து வருமாறு பணிந்துவிட்டு ஸ்டோர் ரூம் சாவியை கேட்டான்.அதற்கு மணி அண்ணாமலை வாங்கி சென்றதாக கூறவும்...
தூரம் போகாதே வெண்ணிலவே...16
ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் இருந்தனர் அருள்வேந்தனும்,அழகியும்.வள்ளி செய்த கலகத்தின் வெளிபாடு தான் இது.அழகிக்கோ வள்ளி ஏன் அவ்வாறு பேசினார் என்திபலேயே மனது உழன்றது.இவ்வளவு நாள் பாசத்திற்காக ஏங்கியவளுக்கு வள்ளி மற்றும் மஞ்சுளாவின் அரவணைப்பு கிடைக்கவும் மனது சற்று மகிழ்ந்து இருந்தது.ஆனால் இன்று வள்ளியின் பேச்சு அவள் மனதில் ஆறிய காயங்களை மீண்டும்...
தனது அலுவலக அறையில் தீவிர யோசனையில் இருந்தான் கலையரசன்.அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ந கேசவன்,
"என்ன மாப்பிள்ளை...என்ன யோசனை பலமா இருக்கு.."
"ஒண்ணுமில்ல மாமா... ஒரு டீல் பேசியிருக்கேன்…அது முடிய நமக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது...அதான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்..."என்றான்.
கேசவனும் யோசனைக்கு செல்ல அப்போது அவரது கைபேசி ஒலியெழுப்பியது,அதில் ஒளிரும் நம்பரை பார்த்தவர் முகம் பிராகாசமானது.அவர் கைபேசியை எடுக்காமல்...
வேந்தனின் வீட்டில் திருமண வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன.ராமலிங்கத்துக்கு மகனின் திருமணத்தை விமர்சியாக செய்வதில் ஏக மகிழ்ச்சி அதனால் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக்கொண்டிருந்தார் மனிதர்.வள்ளியோ தன் செல்ல பேரனின் கல்யாணம் முடிவானதிலிருந்து இளமை திரும்பியது போல ஆட்டம்,பாட்டமாக பொழுதை கழித்தாலும் திருமண வேலைகளை பார்பதிலும் தவறவில்லை.வேந்தனே வள்ளியிடம்,
"ஏய் கிழவி கொஞ்ச நேரமாவது படுத்து...
அருள்வேந்தன் வெட்ஸ் ரம்யா என்று பொன்னிற எழுத்துக்கள் பொரிக்க பட்ட பெயர் பலகையை சரி செய்து கொண்டிருந்தார் ராமலிங்கம்.
"எலேய் ராமு என் புள்ள பேர நேர வைய்யு டா...மருமக பேருக்கு மேல நேரா இருக்கனும் புரியுதா...."என்று மிரட்டிக்கொண்டிருந்தார்.ராமலிங்கத்துக்கு தன் ஒரே மகனின் திருமணத்தில் எந்தவித தவறு நடக்ககூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.ராமுவும்...