Sunday, April 28, 2024

    Santhathil Paadaatha Kavithai

    அத்தியாயம் பத்து :   கிருஷ்ணாவின் அந்த பேச்சை கேட்ட பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வெறியாகவே மாறிவிட்டது. எப்படி? எப்படி அவனை பார்க்க? மண்டை குடைந்தது! காலையில் எழுந்ததும் முதலாக எல்லாம் தூக்கி ஏறக் கட்டி ரேணுவிற்கு அழைத்தாள். “ரேணு” என காவ்யாவின் குரல் கேட்டது தான், அப்படி ஒரு அழுகை ரேணுவிற்கு! “என்னடி? என்னடி?”...
    அத்தியாயம் நான்கு : ஸ்கூல் சென்று நல்லவிதமாகவே ஹெட் மாஸ்டரிடம் வேலைக்கு இனி வரப் போவதில்லை எனச் சொல்ல, “இங்க மாதிரி உனக்கு வொர்கிங் அட்மாஸ்பியர் கிடைக்காது” என ஆரம்பிக்க, “எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி, என்னை விட நல்லா வேலை செய்யறவங்க உங்களுக்கு கிடைப்பாங்க” என ஒரு வணக்கம் சொல்லி நன்றி தெரிவிக்க, மேலே பேச...
    அத்தியாயம் பதினொன்று : காவ்யா ரேணுகாவிற்கு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பார்ட் டைமாக சில ஆர்டிக்லஸ் கரக்ஷன் பார்க்கும் வேலை ஒன்றை பார்த்துக் கொடுத்தாள். சொல்லப் போனால் அதில் பணம் பெரிதாக ஒன்றுமே இல்லை. அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்குமே என தான் அதனை சொன்னாள். ரேணுகாவும் உடனே ஒத்துக் கொண்டு சரி என, இதோ இப்போது...
    “என்னடா? வந்த சாப்பிட்ட தூங்கப் போயிட்ட. இன்னும் நாலு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு, என்ன வேலை பாக்கின்னு பார்க்க மாட்டியா?” என, “நாளைல இருந்து லீவ் போட்டிருக்கேன் மா, பார்த்துக்கறேன்!” என்று திரும்ப உள்ளே போகப் போக, “எத்தனை நாள் லீவ் போட்டிருக்க” என்று அப்பா கேட்கவும், “ஒரு வாரம்” என்றான். “நாளைக்கு காலையில ஊர்ல இருந்து...
    அத்தியாயம் மூன்று : வீடு வரவுமே கிருஷ்ணாவின் பைக் அரவம் கேட்டு,  அவனின் வீட்டில் இருந்தும் எட்டிப் பார்த்தனர், காவ்யா வீட்டினில் இருந்தும். ரத்னா வாயிலிற்கு வர, அப்போது தான் நவீனும் பிரவீனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். நொடியில் காவ்யா அவனின் பைக்கின் பின் புறமிருந்து இறங்கிவிட்டாள். அதனால் அப்போது பார்ப்பவருக்கு எல்லோரும் நின்று பேசுவது...
    அத்தியாயம் எட்டு : உள்ளே வந்தவரால் இந்த விஷயத்தால் சந்தோஷப்பட முடியவில்லை. அவர்கள் எப்படியோ ரத்னா சுமுகமாகவே இருந்து விட முயன்றார். அதனால் தான் வரன் வீட்டினில் இப்படி சொல்லியிருப்பது தெரிந்தும், என்னவோ காவ்யாவை பிடிக்கவில்லை என்றுணர்ந்து அவளை மன்னிப்பு கேட்க வைத்து, “இனி இப்படி செய்யாதீர்கள்” என்று சொல்ல தான் சென்றார். அவர்கள் நடந்து கொண்டது,...
    அத்தியாயம் ஐந்து :   வீட்டின் வாசலில் நின்றிருந்த ரேணு “வா வா” எனக் கை பிடித்து அழைத்து போனாள். அங்கே ஹாலில் உறவுகள் நிறைய பேர் இருக்க “வாம்மா” என அவளை வரவேற்கவும் செய்ய, சசிகலா அவளை வரவேற்றாரா இல்லையா எனக் கூட அவளுக்கு தெரியவில்லை. கிருஷ்ணா முன் அவள் நின்ற தோற்றம் வேறு மனதினில் ஓட,...
    அத்தியாயம் ஆறு : திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருக்க, கிருஷ்ணாவின் வீட்டினில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது. ஆனால் காவ்யா கிருஷ்ணாவின் கண்ணில் படவேயில்லை. திருமண அன்று பார்தது தான் மொட்டை மாடியில் அவளின் ரூமின் கதவு திறக்கப் படவேயில்லை. உண்மையில் காவ்யா திருமணத்தில் எப்போதும் தன் பார்வை கிருஷ்ணாவை சுற்றியே இருந்தததினால், தவிர்க்க நினைத்தாள். சில முறை...
    அத்தியாயம் ஏழு : மிக அழ்ந்த மௌனம், “மா, பேசு” என்று காவ்யா  பேசமாட்டேன்” என காவ்யா சொல்லவும், அது அவளின் அம்மாவிற்கு புரிந்ததோ இல்லையோ கிருஷ்ணாவிற்கு புரிந்தது, நடுவில் பேசமாட்டாள் கடைசியில் பேசுவாள் என்று. “ஏன் இப்படி பண்ணுனீங்க, என் பொண்ணுக்கு வந்த வரன் வீட்ல இருந்து காவ்யாவைப் பத்தி பக்கத்துக்கு வீடுன்னு உங்க கிட்ட...
    அத்தியாயம் பன்னிரண்டு : இதோ வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சோர்ந்திருந்த நால்வருக்குமே எந்த பிரச்சனைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்திருந்தது. எல்லாம் விட இத்தனை நாளாய் இல்லாத ஒரு உறக்கம் கிருஷ்ணாவிற்கு. இரண்டு நாட்களாக தூங்கி தூங்கி எழுந்தான். இன்னம் மாடியில் இருக்கும் அவனின் ரூம் போகவில்லை. போகும் தைரியமும்...
                         கணபதியே அருள்வாய்                      சந்தத்தில் பாடாத கவிதை   அத்தியாயம் ஒன்று : “டீ சாப்பிடுங்க காவ்யா” என்று சொன்ன ஹெட் மாஸ்டரிடம், “இட்ஸ் ஓகே சர் தேங்க்யு” என்று சொல்லி, கையில் இருந்த கோப்பைக் கொடுக்க, “நான் பார்த்துட்டு சொல்றேன்” என அவர் பதில் சொல்லவும், நேரம் பார்த்தால், அப்போதே மணி ஆறு. அவள் நேரம் பார்ப்பதை உணர்ந்தும்...
    error: Content is protected !!