Nenjil Saainthida Vaa Vennilaavae
Episode 20
கடவுளே இன்று பொண்ணு பார்க்க வருகிறேன் என்று பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்,அவர்கள் வரவே கூடாது’.என நினைத்தவாறு ரோயிங் எல்லாம் பிழையாக பிறின்ட்ற் எடுத்து சைன் வாங்குவதற்கு அனுப்பி வைத்தாள்.சற்று நேரத்தில் ஆபிஸ் பையன் வந்து அவளை அழைத்தான்.
“தியா மிஸ் உங்களை சீவ்ப் எஞ்ஜினியர் செந்தூர் சேர் அவசரமாக வரட்டுமாம்.” என்றான்.
“ஓகே இதோ வருகின்றேன்.”...
Episode 19
“தியா.... ப்ளீஸ் தியா… என்னை மன்னித்துக்கொள் தியா.எனக்கு என்ன தண்டனை வேணும் என்றாலும் கொடு.ஆனால் உன்னை வருத்திக்கொள்ளாதே… நான் பண்ணியது மன்னிக்க முடியாத தப்பு,அதற்காக என்னை மன்னிக்காது விட்டுவிடாதே…! நீ தான் என்னுடைய கடைசி வரையான உறவு.என்னை கைவிட்டு விடாதே தியா.எனக்கு மறுபடியும் ஒரு சான்ஸ் கொடு தியா.என வேதனையில் வார்த்தைகள் குழறின.தியா...
Episode 18
அவள் அழுது தீர்த்த கண்ணீரெல்லாம் அவன் நெஞ்சில் ஒரு நீர்த்தேக்கத்தையே உண்டாக்கியது.
“தியா ப்ளீஸ்டா அழாேதே… உன் கோபம் தீரும் வரை என்னை அடி,வேணுமென்றால் என்னை கொன்று புதை. ஆனால் உன் கண்ணில் இருந்து இனிமேல் கண்ணீர் வருவதை என்னால் தாங்கவே முடியாதுடா?” என அவன் குரல் கரகரத்தாலும் அவன் விழிகளில் இருந்தும் கண்ணீர்...
Episode 17
மதிலேறி குதித்த செந்தூரின் மனநிலை இலகுவாயிருந்ததனால், அவன் தன் வீட்டுக்கு குறுக்குப்பாதையினூடாக நடராஜா சர்விஸ் மூலம் வீட்டருகில் வந்தவனுக்கு ‘அடடா அதற்குள் வீடு வந்து விட்டதே.’ என்றிருந்தது.
செந்தூரின் அண்ணா கதிரவன், செந்தூரை முதல் நாள் இரவு தியா வீட்டுக்கு முன் இறக்கி ‘விட்டுவிட்டு’ வந்தவன் மறுபடியும் ஏற்றி வர ஃபோன் பண்ணுவான் என...
Episode 16
அருகில் அமர்ந்தவனது கையை பிடித்து முறுக்கி,அவள் தனது கைமுட்டியால் அவனது முதுகில் நாலைந்து குத்துக்களை வழங்கிய பின்னரே ஓய்ந்தாள்.
“ஏய் எதுக்கடி இந்த அடி அடிக்கின்றாய். மனுஷியாடி?” நீ என கூறிக்கொண்டு தனது முதுகை தடவி விட்டான்.
“என்னை பார்த்து மனுஷியா? என்று கேட்கிறாயா? முதலில் நீ மனுசனா? அதைச்சொல்லடா?” என்று அவள் அவனை பிடித்து...
Episode 15
கவிமதி காட்டிய போட்டோவை பார்க்காது, “என்னக்கா இது.” என்றான்.
“ம் போட்டோ.” என்றாள் தமக்கை.
“அது தெரிகிறது.அதை ஏன் என்னிடம் காட்டுகிறாய்.உனக்கு கண் தெரியாதா? அக்கா.”
“இல்லடா, அக்காவுக்கு கண் தெரியும்.உனக்கு கண் தெரியுமா என்று செக் பண்ணி பார்க்கின்றேன்.” என்றாள் தமக்கையும் விட்டுக் கொடுக்காது.
அக்கா ப்ளீஸ் நானே செம ரென்சன்ல இருக்கின்றேன். நீ வேற இன்னும்...
Episode 14
“சரி அக்கா எதுவாக இருந்தாலும் கேட்கணும் என்று முடிவு பண்ணி விட்டீர்கள். கேளுங்கள் என்னால் முயன்ற வரை பதில் சொல்கின்றேன்.”
“நான் சுற்றி வளைக்காது நேரடியாகவே கேட்கின்றன் தியா.என்றவள், உன் மேல் ஒரு லவ் என் மச்சினனுக்கு இருக்கும் போல, அவனை நீ கல்யாணம் பண்ணி எங்கள் வீட்டுக்கே வந்திடு தியா.அப்படி என்றால் உன்னை...
Episode 13
வீட்டுக்குள்ளே உறக்கம் வராது ‘புரண்டு புரண்டு’,படுத்தும் தூக்கம் வராது எழுந்து உட்கார்ந்து இருட்டை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்த தியாவின் மனம் ‘படபட’ என்று இருந்தது.மறுபடியும் அவள் வாழ்வில் ஏதோ குழப்பம் நடைபெறப்போவது போல இருந்தது. செந்தூர் அவளது வாழ்வில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடுமோ? என நினைத்து அவள் மனம் நிலை கொள்ளாது தவித்தது.
அவன்...
Episode 12
அவனது மாளிகையில் ராணியாக இருந்திருக்க வேண்டியவள். பஞ்னையில் உறங்கியிருக்க வேண்டியவள்.அவனது சொத்துக்களிற்கெல்லாம் சரிபாதி உரித்துடையவள்.இன்று கட்டாந்தரையில் படுத்துறங்குவதை நினைத்தால் அவன் படுத்துறங்கும் மெத்து மெத்துதென்று இருக்கும் பஞ்சணை முட்படுக்கை போல் தோன்றியது.அவளது வறுமை அவனது செல்வந்த நிலையை அடியோடு விழுத்தியது.
என்ன செய்தால் இந்நிலமை மாறும் என்று தெரியவில்லையே என மண்டையை போட்டு...
Episode 11
காரை வீட்டுக்குள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு,இறங்கி கதவைச் சாத்தும் போது தான் உள்ளே இருந்த மருந்து வகைகளுடன் இருந்த பொலுத்தீன் கவரை கண்டவன் அவளது மருந்து வகைகளை அவளிடம் கொடுக்கவில்லை என உணர்ந்து இப்போது எப்படிப் போய் இதைக் கொடுப்பது என யோசித்துக் கெண்டே
அகிலுக்கு போன் பண்ணி அவளது போன்...
Episode 10
வரமாட்டேன் என்று முறாய்ப்பாய் நின்றவளை அவனும் விடாது “தியா நீ இப்போது வரவில்லை என்றால் உன்னை குண்டுக்கட்டாக கடையிற்குள் தூக்கிக் கொண்டு போவது மட்டுமில்லாது ஊட்டிவிடவும் வேண்டி வரும். நான் செய்ய மாட்டேன் என்று நினைக்காதே…!” என்றான்.
“நான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன் என்னடா செய்வாய்.” என்றாள்.
“நீ ஹொஸ்பிட்டலிலும் இந்த வசனத்தை சொன்னதாக எனக்கு...
Episode 09
அவன் கூறுவதை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து “காயம் ரொம்பவும் ஆழமாக பட்டுவிட்டதா….” என்றவளின் குரல் உள்ளே போயிருந்ததுடன் அவள் கண்களும் கலங்கியிருந்தது.
“இட்ஸ் ஓகே தியா தப்பு என் பேரிலும் தான்.”என்றான்.
“தையல் போட்டிருக்கா என்றவள் எத்தனை..” எனக் கேட்டாள்.
“ஏழு என்றவன் சரி விடு தியா நடந்தது நடந்து விட்டது இனி...
Episode 08
அவன் கையிலிருந்து வழிந்த இரத்தத்தை கண்ட அகில் பதறி எழுந்து வந்து “சேர் என்னாச்சு… பிளட் ஏகப்பட்டது வெளியே போகுது.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செந்தூர் தனது ஜீன்சில் இருந்த தனது கைக்குட்டையை எடுத்து கையை சுற்றிக் கட்டினான். அதையும் தாண்டி இரத்தம் வழிந்தது.
அதைக் கண்டு மற்ற மூவரும் பதறிக் கொண்டே….....
Episode 07
ஆபிசுக்குள்ளே இருந்தவன் திடீரென எழுந்து கண்ணாடி ஜன்னல் கதவுகளை மூடியிருந்த திரைச்சீலைகளை விலக்கி ஒதுக்கி விடும் போதே அலுவலகத்திற்குள் ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். ‘ஐ சூப்பர்... தியா இப்போது வருகின்ற நேரம்’ தான் என மனதுக்குள் நினைத்தவன் நாற்காலியில் இருப்புக் கொள்ளாது எட்டி எட்டி பார்த்துக் கொண்டவனுக்கு சாதுவாக கழுத்து வலியே ஆரம்பித்திருந்தது.’என்ன இன்னும்...
Episode 06
ஏதேதோ எண்ணங்கள் தோன்ற விரைவாக காரை வீட்டை நோக்கி செலுததியவன்.பதினைந்து நிமிடங்களில் வீட்டை வந்தடைந்தான்.கார் அவன் வீட்டு வாசலில் வரும் சத்தம் கேட்டதுமே அவனது தாயார் ஓடி வந்து அந்த பெரிய கேற்றை திறந்து விடவும், அவன் காரை கொண்டு போய் போா்டிகோவில் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி ஓட்டமெட்ரிக் லொக்...
Episode 05
வேலையில் ஆழ்ந்து போயிருந்தவர்களை அவர்களது காபினுக்குள் இருந்த ரெலிபோன் மணி அடிக்கவும்,வேலையிலிருந்து கலைந்த அகில் போனை ஆன்சர் பண்ணினான்.எதிர் பக்கம் இருந்து என்ன தகவல் வந்ததோ “ஓகே ஓகே சேர் உடனடியாய் வருகின்றேன்.”
என்றவன் தனது கைப்பேசியையும்,பென்ட்ரைவையும் எடுத்துக் கொண்டு கிளம்பியவனை “அகில் ரொம்ப தூரமாய் போகிறாயா?” என்றாள்.
“இல்லை சுஜா நம்ம செந்தூா் சேர்ட...
Episode 04
மேசையருகே இருந்த தொலைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டு கையில் இருந்த உணவை வைத்து விட்டு,யாா்? என்பது போல பாா்க்க,வினோதினி எடுத்திருந்தாள்.
“ச்சே….. நிம்மதியாக ஒரு கவளம் உணவைக் கூட உண்ண முடியவில்லையே’ என நினைத்துக் கொண்டு, போனை ஆன்சா் பண்ணினாள் தியா.
“ஹலோ வினோதினி நான் கன்ரீன்ல சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்…..” என்று இழுத்தவளை…....
EPISODE 3
“தம்பி கண்ணா எழும்புப்பா..? இன்னும் ரெஸ்லெஸ்சாக இருக்கிறியா..?” என்று முதுகில் கைவைத்து எழுப்பிய அன்னையின் மடியில் தலையை வைத்து படுத்தான். நிா்மலா, காா்த்திகேயனின் கடைசிப் புதல்வன் கதையின் நாயகன் செந்தூரன்.
“நோ மம்மி கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டு படுக்கிறேன்” என்றான்.
“இல்லை நீ எழும்பு, முதல்ல பிரஸ் பண்ணு” அப்புறமாய் அப்பா வெளியில...
Episode 02
யாழ்ப்பாணத்தில் தனியார் கம்பனிகள் கைவிட்டு என்றும் அளவே இருந்தது. இருக்கின்றது, என்கின்ற நிலையில் யாழ்ப்பாண தமிழர்கள் பெரிதும் கல்விப்புலமுடையவர்களாகவும், அரசவேலை வாய்ப்பை விரும்பிச் செய்பவர்களாகவும் எப்போதும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தியாவும் இன்று செல்லப் போகும் இன்ரவியூவும் அரசாங்கமும், தனியாரும் சேர்ந்து செமிகவர்மென்டுக்குள்ளே உள்ள நிறுவனம் ஒன்றில் தான் வேலை...
EPISODE 1
புலரும் காலைப் பொழுதில் ஆதவன் தன் பொற்கதிர்களை அள்ளி மெதுவாக வானையும், பூமியையும் நோக்கி எறிந்து கொண்டிருந்தான். இவனைக் கண்ட பனித்துளிகள் கூட்டம், மெது மெதுவாக தமது உயிரை கரைக்கத் தொடங்கின. 'சடசட'என இறக்கையை தட்டி விடியலும் நன்றாக விடிந்தது.
எப்பொழுதும் போலவே இயற்கை தன் வேலையை தங்குதடை இன்றி சுழலும் சக்கரம்...