Advertisement

Episode 18
 
அவள் அழுது தீர்த்த கண்ணீரெல்லாம் அவன் நெஞ்சில் ஒரு நீர்த்தேக்கத்தையே  உண்டாக்கியது.
 
“தியா ப்ளீஸ்டா அழாேதே… உன் கோபம் தீரும் வரை என்னை அடி,வேணுமென்றால் என்னை கொன்று புதை. ஆனால் உன் கண்ணில் இருந்து இனிமேல் கண்ணீர் வருவதை என்னால் தாங்கவே முடியாதுடா?” என அவன் குரல் கரகரத்தாலும் அவன் விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிந்து  கொண்டு தான் இருந்தது.
 
அழுது ஒய்ந்து அவனது நெஞ்சில் இருந்து தன் முகத்தை எடுத்த தியா தன் சுடிதார் துப்பட்டாவினால் முகத்தை துடைத்துக்கொண்டு அவனது இறுகிய அணைப்பில் இருந்து விலகியவள் “நான் இப்போது என் றூமுக்கு போக வேண்டும் என்னை கொண்டு போய் விடு.” என்றாள். 
 
“உன் றூமுக்கு வேண்டாம் என் கம்பனி கெஸ்ட்ஹவுசுக்கு போகலாம். உன்னிடம் நிறைய பேச வேண்டும்.” என்றான்.
 
“எதுக்கு?  நான் அங்கேயெல்லாம் வரமாட்டேன்.என்னை தனியாக கூட்டிக்கொண்டு போய் மறுபடியும்……?” என கூறியவளின் கண்களில் இருந்து ‘பொலபொல’ என கண்ணீர் வழிந்தது.
 
“என்ன? தியா? என்னை நம்பவில்லையா? நீ? இரண்டு நாட்களுக்கு முன் கூட உன்னை பார்க்க வந்தேனேடா…! அப்போதெல்லாம் நீ பயந்ததே இல்லையே? இப்போதும் அதே போல நீ எந்த வித பயமும் இல்லாமல் வா. உன்னை பாதுகாப்பாக உன் றூமில் கொண்டு போய் விடுவது என் பொறுப்பு ஓகேயா?” என்று கூறி காரை ஸ்ராட் செய்து அவனது கம்பனி ஹெஸ்ட்ஹவுசுக்கு கிளப்பினான்.
 
அவன் சொன்ன இடத்தில் கார் போய் நின்றதும் காரில் இருந்து இறங்கிய இருவரும் உள்ளே செல்ல எத்தனிக்கும் சமயம் அங்கே வேலை செய்யும் வாட்ச்மேன் ஓடி வந்து “வணக்கம் ஐயா,வணக்கம் அம்மா. என்றவன்
ஐயா, அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்.இன்றைக்கு தான் மகாலஷ்மி வீடு தேடி வந்த களை தெரிகிறது.என்று கூறிக்கொண்டு, அம்மா வலது காலை எடுத்து உள்ளே வைத்து வாருங்கள் என கூறவும்,வாட்ச்மேன் மனைவியும் உள்ளிருந்து  ஒருவயது கைக்குழந்தையுடன் ஓடி வந்து வாங்க அய்யா,வாங்க அம்மா என அழைத்தவள் கையிலிருந்த குழந்தை சினுங்கவும் அதை சமாதானப்படுத்தினாள்.
 
அவர்கள் இருவருக்கும் பதில் வணக்கம் கூறிய தியா.அழுத குழந்தையை பார்த்து  “குட்டி பேபி ஆன்ரிகிட்ட வருவீங்களா? என கை நீட்டவும் குழந்தை தனது இரண்டு குட்டிப்பற்களை காட்டி சிரித்த வண்ணம் அவளிடம் தாவியது. குழந்தையை அணைத்து முத்தமிட்டவள் குழந்தையின் தாயைப்பார்த்து, நான் கொஞ்ச நேரம் பாப்பாவை வைத்திருக்கட்டுமா?” என்றாள்.
 
“சரிங்கம்மா…. வைத்துக்கொள்ளுங்கள்.பாப்பா அழுதால் என்னைக்கூப்பிடுங்கள் என்றவள், என் பெயர் செவ்வந்தி.” என்றவள் தன் இருப்பிடத்திற்கு திரும்பினாள்.
 
தியா குழந்தைையை கொஞ்சியவாறு நிற்க, “தியா உள்ளே போகலாம் வா.” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் செந்தூர்.
 
அவன் உள்ளே அழைத்துச்சென்று அவனது அறைக்குள் நுழைந்தான். அங்கே அவனது அறையின் செழுமையை கவனிக்காது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 
 
“அம்முக்குட்டிக்கு என்ன? வேணும்?”
 
………
 
“ஆப்பிள் வேணுமா?” என மேசையில் இருந்த பழத்தட்டை கவிழ்த்து விட்டாள்.
 
“அம்முக்குட்டி வளர்ந்து என்னவாக வரப்போறிங்க…”
 
…….
 
எஞ்ஜினியராகவா? ஓகே… ஓகே…. என தானே கேள்வியும் கேட்டு, பதிலையும் சொல்லிக்கொண்டாள். வெறும் ஒரு வயது குழந்தை தன் இரண்டு பற்களையும் காட்டி சிரித்தவாறு,அவள் கேள்விகளுக்கு வெறுமனே “ம்மா….. ம்மா…” என மழலை மொழியில் நூறு தடவைகள் கூறியிருக்கும்.
 
குழந்தை அவளை “ம்மா…ம்மா…” என அழைக்கும் போதெல்லாம்  அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அதை தன் கைகளால் துடைத்தபடி தன்னை மறந்து,தான் இருக்குமிடம் மறந்து ஒரு பக்கம் அழுகையும்,இன்னொரு பக்கம் சிரிப்புமாக இருந்தவளை அவனும் கண்கொட்டாது பாரத்துக்கொண்டிருந்தான்.இத்தனை உணர்ச்சிகளையும் இந்த குழந்தையின் மேல் கொட்டுகின்றாளே…!
இன்று தான் பார்க்கின்றான் அவளது உணர்வின் வெளிப்பாட்டை இந்தக் குழந்தையில் அப்படி என்ன? இருக்கின்றது.என நினைத்த படி குழந்தையுடன் அவள் விளையாடுவதை பார்த்தவனிற்கு மனதில் என்னென்னவோ கற்பனைகள் தோன்றின.அவை அனைத்தும் அவனுக்கு மனதுக்கு இனிமையாகவே இருந்தது.
 
விளையாட்டு நீண்டு சென்றதால் சற்று நேரத்தில் குழந்தை பசியால் அழத்தொடங்கவும் கொஞ்சநேரம் அதை இதைக்காட்டி பராக்கு காட்டியவள் குழந்தை இன்னும் பலமாக அழத்தொடங்கவும் அவள் என்ன? செய்வதென்று அறியாமல் ‘திருதிரு’ விழித்தாள்.
 
அவளின் செய்கையை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, எழுந்து வந்து குழந்தையை அவளிடம் இருந்து வாங்கினான். அதை அவளிடம் இருந்து வாங்குவதற்கு பட்டபாடு. “தியா குழந்தை அழுகிறது.அதுக்கு பசிக்கும். நீ இப்படியே குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தால் அது அழும் தானே…..” என ஆயிரம் விளக்கங்கள் சொல்லித்தான் குழந்தையை வாங்கினான்.
 
“இங்கே உன்னிடம் குழந்தைக்கு சாப்பாடு எதுவும் இல்லையா?”
 
“இல்லையேடா …. அது அதோட அம்மாகிட்ட பால் தானே குடிக்கும்.” என்றான்.
 
“நீ என்னையும் பாப்பாவையும் பிரிக்கப் பார்க்கின்றாய்.சரி சீக்கிரம் கொண்டு போய் பாப்பாவை செவ்வந்தி கிட்ட கொடுத்து சாப்பாடு சீக்கிரம் கொடுக்கச்சொல்லி, பாப்பா சாப்பிட்ட பிறகு அதை நின்று வாங்கிக் கொண்டு வருகின்றாயா?” என்றாள்.
 
“ம்ம் சரி…” என்றவன் குழந்தையை வெளியே கொண்டு சென்று செவ்வந்தியின் கணவனிடம் கொடுத்து “ கனகு இந்தா குழந்தைக்கு பசி,அத்தோடு தூக்கமும் கண்ணை சுழற்றுகின்றது. சாப்பாடு கொடுத்து விட்டு தூங்க வை.” என்று கூறி குழந்தையை கொடுத்தான்.
 
அறைக்குள் திரும்பிய செந்தூரை முறைத்துப்பார்த்த தியா, “பாப்பா எங்கே?” என்றாள்.
 
“பாப்பா சாப்பிட்டு விட்டு தூங்குகின்றது. தூங்குகின்ற பாப்பாவை எழுப்பினால் அழும் அது தான் கொண்டு வரவில்லை.” என்றான்.
 
அவள் முகம் சோகமாகவும், “தியா உனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியமோ?”
 
“முன்பெல்லாம் அப்படியில்லை.இப்போது ரொம்ப பிடிக்கும்.” என்றாள்.
 
“ஓஓஓஓ…  ஏன்? தியா உனக்கு உன் குழந்தை குட்டிகளோடு வாழ வேண்டும் என்று ஆசையில்லையா?”
 
“அந்த ஆசையில் தான் மண் அள்ளி போட்டு விட்டாயே….! இப்போது எதற்கு இந்த விசாரிப்பெல்லாம்” என்றவளின் கண்கள் குளமாகின.
 
“நான் என்ன? பண்ணினேன் எனக்கு புரியவில்லை தியா.புரியும் படியாக சொல்லு..”
 
“நீ தான் என் குழந்தையை கொன்றாய்.”
 
“எ…என்ன? நான்…..புரியவில்லைடி என்ன? தான் நடந்தது சொல்லுடி.” என அவன் பதறினான்.அவன் உடம்பிலிருந்து வியர்வையாறுகள் தோன்றி அவன் உடலை நனைத்தன.
 
“உனக்கு எதுவும் தெரியாத மாதிரி நடிக்க வேண்டாம் சரியா? உன் வீட்டில் எல்லோருக்கும் தெரியும்.உனக்கு தெரியாதா? ஆச்சரியமாய் இருக்கிறதே…!” என்றாள்.
 
தியா ப்ளீ்ஸ் என்ன? நடந்நது.எப்போது நடந்தது. என்று எதுவுமே எனக்கு தெரியவில்லை.நீ சொல்லும் விடயம் எனக்கு புதிது.எனக்கு சத்தியமாக எதுவும் தெரியவில்லை.நீ சொல்லும் செய்தி புரியவில்லை. நான் எப்படி உன் குழந்தையை கொன்றேன் என்கிறாயே அப்படி எனில் அது எனக்கு எவ்வாறு தெரியாமல் போயிருக்கும்.எனக்கு தெரிந்திருந்தால் நான் உன்னை பாராது போயிருப்பேனா? சொல்லு தியா.நீயா என்னை கொரைகாரன் என்று சொல்கின்றாய். அது உன் குழந்தை மட்டுமல்ல என்னுடையதும் தான்.அது நம்ம இரண்டு பேருடைய குழந்தையும் தான்.அதை நான் எப்படி…. என்றவனின் குரல் தளுதளுத்தது.
 
“உன் குழந்தையா? அப்படியா? சொல்கிறாய்.என் வயித்தில் இருந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நீ சொன்னதாகவும்,அதனால் ஹொஸ்பிட்டலில் சைன் பண்ண நீ வர மாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்லி உன் அக்காவும்,அம்மாவும் சொன்னார்கள்.அது நீ சொல்லி விட்டது தானே பிறகு எப்படி ? ஓஓஓ… ஒரு வேளை உன் அக்காவும்,அம்மாவும் பொய் சொல்கிறார்கள் என்று நினைக்கிறாயா?”
 
“தியா… எனக்கு எதுவும் தேவையில்லை.நான் எப்படி நம்ம குழந்தை இல்லாமல் போக காரணமானேன்.அதை மட்டும் சொல்லு தியா.ப்ளீஸ் தியா.”என கெஞ்சினான்.
 
நீ உன் காதலியை நினைத்து என்னைத் தொட்டாயே அந்த நாள் உனக்கு நினைவிருக்கோ..? இல்லையோ? அன்று தான் நான் உயிரோடு இறந்த நாள்.அன்றைக்கு பிறகு என்னை பார்க்கவே பிடிக்காது உன்னுடைய இதே கெஸ்ட்ஹவுசில் வந்து மூன்று மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்தாய்.உன் அப்பா உனக்கு பிடிக்காத என்னை கல்யாணம் செய்து வைத்த காரணத்தால் அப்பா, அம்மா என உன்னுடைய எந்த சொந்தகார்ரகளோடும் கதைக்கவில்லை.
அதனால் அவர்களுக்கு எவ்வளவு மனக்கஸ்ரம் தெரியுமா? அதற்கு பிறகு உனக்கு ஒரு லவ் இருந்ததை உன் அக்கா கண்டு பிடித்தார்கள். என்னோடு சகஜமாக பேசும் உன்  அம்மாவும்,அக்காவும் என்னை கண்டால் விலகத் தொடங்கினார்கள். பேசுவதையே தவித்தனர்.
உன் அம்மாக்கு உன்னை நினைத்தே உடம்புக்கு முடியாது போனது.அப்போது தான் உன் அண்ணாவின் நிச்சயம் நடைபெற்றது.அதற்கு வந்து விட்டு நிற்காது நீ கிளம்பவும் தான் உன் அம்மா றூமிற்குள் இருந்து அழுதார்கள்.அவர்களை சமாதானப்படுத்துவதற்காக கிளம்பி உன்னை கூப்பிடுவதற்காக வந்தேன்.
நீ.காரில் ஏறுவதற்கு ரெடியாகவும், நீ கிளம்ப போகின்றாய் என்று பதறி ஓடிக்கொண்டு வந்து உன் கையை பிடித்தேன். நீ என்னை ஏன்? இங்கே வந்தாய் என பிடித்து உலுக்கினாய்.நான் என்ன சொல்ல வருகின்றேன் என கூட கேட்க விருப்பமில்லாது என்னை பிடித்து தள்ளி விட்டு காரில் ஏறி போய் விட்டாய். தள்ளி விட்ட வேகத்தில் அரிந்து வைத்திருந்த கல் குவியலுக்கு மேலே போய் விழுந்து விட்டேன்.
 
வயிறு அடிபடுமாறு விழுந்ததால் வயிறு நன்றாக வலித்தது.முழங்கை, முழங்கால் எல்லாவற்றிலும்  சிராய்ப்பு காயங்கள். கத்தி யாரையாவது உதவிக்கு கூப்பிட நினைத்தேன் ஆனால் என் உடல் வலி கத்தக்கூட முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் என் கீழ்பக்க ஆடை ஈரமாவது போல் இருக்க, என் சுடிதாரில் கை வைக்கின்றேன் கை முழுவதும் இரத்தம்.
அப்போது கூட எனக்கு எதுவும் புரியவில்லை.கற்குவியல மேல் விழுந்த வேகத்தில் என் வயிற்றில் கல் அமத்தியதால் வயிறு வெடித்து விட்டதோ? என்று கூட நினைத்தேன்.எந் நேரமோ? என்னவோ? அந்த பக்கத்திற்கு யாரும் வரவில்லை. என் சாவு என் கண் முன்னாடி வருவது போலிருக்கவே அப்படியே அரை மயக்கத்துக்கு போய் கொண்டிருக்கும் வேளையில் தான் உன் அண்ணா.கதிர் அண்ணா என்னை கண்டு விட்டு தியா என கத்திய சத்தம் மட்டுமே என் காதில் கேட்டது.
இரண்டு நாள் கழித்து ஹொஸ்பிட்டலில் கண்விழித்தால் எங்கே இருக்கின்றேன் என்று தெரியவில்லை. என்னருகில் கூட யாருமில்லை? எழுந்திருக்க முடியவில்லை வலி உயிரை தின்றது.அதன் பிறகு வோஸ்றூமிற்கு போவதற்கு கூட அங்கிருந்த நர்ஸ் ஹெல்ப் பண்ணினார்கள். மற்றநேரமெல்லாம் தூக்கம் தான். நாலைந்து நாட்களில் ஒரளவு ப்ளீடிங் குறைந்திருந்தது. அப்போது கூட எனக்கு எதுவும் புரியவில்லை.
றவுணட்ஸ் வந்த டாக்டரிடம் கேட்ட போது தான் அவர்கள் சொன்னார்கள்,என் வயிற்றில் இருந்த நான்கு மாதக்கரு கலைந்ததால் அபோர்சன் பண்ணியதாக.
என்னால் இதை நம்பவே முடியவில்லை தெரியுமா? டாக்டர் சொன்ன பிறகு தான் நான் ப்ரக்னென்ட் ஆக இருந்தேன் என்றே தெரியும்.உன் அம்மா கூட நான் ப்ரெக்னெட் ஆனது ஏதோ? தப்பு வழியில் தான் என்கிற மாதிரி பேசினார்கள்,
உன் அக்காவும் உன்னையும் உன் காதலியையும் சேர்த்து வைக்கப்போவதாகவும், என்னை விலகிப்போகுமாறும் ஜாடை மாடையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அப்படியும் உள்ளூர ஒரு நம்பிக்கையில் நீ வருவாய்…. வருவாய்… என்று பத்து நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.நீ வரவேயில்லை.”
 
“எனக்கு இப்படியொரு விடயம் நடந்ததே தெரியாது.” தியா.
 
“உனக்கு தகவல் அறிவித்ததாக உன் அம்மாவும்,அக்காவும் சொன்னார்கள். இது கூட எனக்கு வருத்தமில்லை.டாக்டர் சொன்னார் பார் ஒரு செய்தி.இனிமேல் எனக்கு குழந்தைய பிறக்காதாம்.ஏனென்றால் நான்கு மாத கருவோடு கற்குவியல் மேல் விழுந்ததால் கர்ப்பப்பை ஈய்ந்து  விட்டது என்று கூறியதனால் நானே உன் வீட்டில் இருந்தால் உனக்கும்,உன் வீட்டுக்கார்களுக்கும் பாரமாக இருக்கும் என நினைத்து டிவோர்ஸ் பேப்பரில் உன் அக்கா கேட்ட இடத்தில் சைன் போட்டு விட்டு தாத்தா வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.
நான் போய் கொஞ்ச நாளில் தாத்தாவும் இறந்து விட்டார். அதன் பின் தான் என் படிப்பு,பட்டம்,வேலை என செல்ல செல்லுமிடமெல்லாம் மானத்தை காப்பாற்ற உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டிய நிலை.இப்போது வரை அதே நிலை தான்.உன்னில் இருந்து ஆரம்பமாகிய பிரச்சனை மறுபடியும் உன்னிடமே வந்து நிற்கின்றது.”எனக்கூறி இமைகளை மூடினாள் மூடிய இமைகளிற்கிடையால் கண்ணீர் வடிந்தது.
 
“தியா…” என்று கூவிக்கொண்டு அவன் இருந்த ஷோபாவில் இருந்து எழுந்து வந்து, அவளிருந்த ஷோபாவினடியில் அமர்ந்து அவளை இழுத்து அணைத்து அவளது வயிற்றில் முகம் பதித்து அவன் கதறியழுத அழுகையில், அவள் வயிற்று பகுதி சுடிதார் ஈரமாகியது.






Advertisement