Advertisement

Episode 25
கதவு தட்டும் சத்தம் அவளது முதுகை பிளப்பது போல் இருக்கவே எழுந்து தள்ளாடியபடி வந்து கதவை திறந்தவள் அதிர்ந்து போய் நின்றாள். ஏனெனில் வெளியே நின்றவன் செந்தூர். அவளை விலத்திக்கொண்டு உள்ளே வந்தவன் அவளது முகத்தை பார்த்த வண்ணம் “அழுதியாடி. இனிமேல் உன்னை அழக்கூடாது என்று சொல்லியும் அழுதியா…? அதுசரி என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இங்கே இருந்து எதுக்குடி அழுதுகிட்டு இருக்கிறாய்.” என்று அவன் ‘படபட’க்கவும் அவளுக்கு இன்னும் கண்ணீர் துருத்திக் கொண்டு கீழே சிந்தவா? வேண்டாமா? என விழிகளை நிறைத்தது.
அவளை அருகே இழுத்து கண்கள் இரண்டையும் துடைத்து விட்டவன். “உன்னை நீயே வருத்தி கொள்ளை வேண்டும் என வேண்டுதல் ஏதும் வைத்திருக்கிறாயா…?”
“…..”
அவள் பேசாதிருக்கவும், “தியா ப்ளீஸ் ஏதாவது பேசு…”
“என்ன? பேசனும்… நமக்குள்ளே பேச எதுவும் இல்லை.என்னை தனியாக இருக்க விடுங்கள்…” என்றவளது குரல் தேய்ந்து போனது.
“தியா… நமக்குள்ளே எதுவுமே இல்லையா? உன் மனசை தொட்டு சொல்லு?” என அவன் அவளை பிடித்து உலுக்கினான். 
“ப்ளீஸ்… விடுங்க என்னை.நமக்குள்ளே அப்படி என்ன? தான் இருக்கிறது. சும்மா நீங்களாகவே ஏதும் கற்பனை பண்ணிக்கிட்டு ஏதாவது உளறிக்கொண்டு இருக்க வேண்டாம். போங்கள் போய் வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். இனி என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். ” என அவனை விட்டு விலகி நின்றாள். 
அவளை இழுத்து அணைத்தவன் நெஞ்சு பந்தயக்குதிரை போல துடித்ததை அவளால் உணரமுடிந்தது. “தியா உன்னை விட்டு போக மாட்டேன். நீ இல்லாமல் உன்னை பார்க்காமல்…இனி என்னால் இருக்க முடியாது. நீ இல்லாத வாழ்க்கையை நினைக்கவே முடியாதுடி. என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை நீ என்னை தண்டித்துக்கொண்டேனும் என்னருகில் இரு தியா…” என கதறியவன் விழிகள் நிறைந்து வழிந்தது. 
“மாட்டேன்…  மாட்டேன்” என அவனது நெஞ்சில் முகம் புதைத்து அவனுக்கு மேலாக அவள் அழுதாள். 
“என்னை மன்னிக்கவே முடியாதா?” தியா. 
அவள் பதிலேதும் பேசாது அழுதபடியே… “இனிமேல் இதுபோல ப்ரண்ட்ஸ் ஆக இருக்கலாம் ஆனால்… .”
ஆனால்… என்ன? சொல்லு?
“உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன்.” என்று இன்னும் கதறி கதறி அழுதாள். 
“சரி நீ வரமாட்டேன் என்று சொல்வதற்கான சரியான காரணத்தை சொல்லு…?அதற்கு பிறகு முடிவு பண்ணலாம்.” என்றான். 
“….”
“பேசாமல் இருந்து என்னை கொல்லாதேடி இப்போது சொல்கிறாயா… ?இல்லையாடி?”  என பொறுமை இழந்து கத்தியவனைக் கண்டு நடுங்கியபடி நின்றாள். 
ஒன்று ‘பேசி பேசி’ கொல்லு,இல்லையென்றால் பேசாமல் இருந்தே கொல்லுவது உனக்கு பழக்கமாகி விட்டது இல்லடி… ” என்றான். 
“என்னை தொந்தரவு பண்ணாமல் கொஞ்ச நேரம் விடுங்கள்.” என்றாள். 
“தொந்தரவு… தொந்தரவு… நான் உனக்கு தொந்தரவு தான் இல்லையா… ? தியா நீ என்ன? தான் சொன்னாலும் நான் உன்னுடைய விளக்கத்தை கேட்டுக் கொண்டு தான் நான் இங்கிருந்து போவேன்.” என்றவன் அருகிலிருந்த திவானில் இருந்து காலை தூக்கி காலுக்கு மேல் போட்டுக்கொண்டு தலைக்கு கையை முட்டுக்கொடுத்தபடி குனிந்து அமர்ந்திருந்தான்.
“நீங்க இப்போது கிளம்பி போறீங்களா? இல்லையா?” என அவள் கத்தினாள். 
“அடச்சீ…போடி.” என தலை நிமிராது சொன்னான்.
அவள் மறுபடியும் அவனருகில் வந்து கத்தவும் எரிச்சல் தாங்காது விருட்டென்று எழுந்து “என்னடி? இப்போது எதற்கு கத்துகின்றாய் என்று கூறவும் அவள் திறந்த வாயை மூடாது அப்படியே நின்றாள். 
அவளது கோலத்தை கண்டவன் ‘இவளை இப்படியே விட்டால் அராத்து பண்ணிக்கொண்டு தான் இருப்பாள் என மனத்திற்குள் நினைத்தவன் அவளை பார்த்து “இந்த வாய் தானே பேசுகின்றது.” என கூறிய வண்ணம் தனது பெருவிரல்களால் அவளது அழகிய அதரங்களை அழுத்தமாக வருடியவன் அவள் எதிர்பாரா வண்ணம் அவளது உதடுகளை கவ்வி தனது உதடுகளுக்குள் எடுத்து கொண்டவன் நீண்ட நேரமாக அதனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் அவள் முதலில் திமிறிப்பார்க்கவும் அவன் பிடி அசைய முடியாதவாறு இருக்கவே அவளும் அதற்கு மேல் அடம்பிடிக்காது அடங்கியவள்,அவனது கைகள் அத்துமீறி அவள் உடலில் அழுத்தவும் அவள் மொத்தமாக மோனநிலைக்கு சென்று அவனது செய்கைகளை இரசித்தவண்ணம் அவன் மேல் மொத்தமாக சாய்ந்து அவனது முதுகை தழுவவும் அவன் அதை அவள் அழைப்பாக ஏற்று அவளை கைகளில் ஏந்தி அந்த ஒற்றை படுக்கை அறைக்குள் தூக்கிச் சென்று தன்காலால் உதைத்து கதவை சாத்தி விட்டு, அவள் விரித்து வைத்திருந்த பாயில் அவளை படுத்தி அவள் மீது படர்ந்தவன் ஆறுதலாக அவள் நெற்றி,கண்,மூக்கு,கன்னம்,உதடு என முத்தமிட்டு கீழே நகர்ந்து அவள் கழுத்துக்கடியில் முகம் புதைத்து,கழுத்தடியில் பற்தடம் பதித்து முத்தமிட்டபோது அவள் இரத்தம் முழுவதும் சூடாகி,அவள் மொத்த உயிரும் ஓர் இடத்தில் உறைந்து நின்றது. 
அப்படியே அவனது வலிய கரமானது இறங்கி அவளது உடல் வருடி, வளவளப்பான அவளது இடையில் தவழ்ந்து இடையில் இருந்த சுடிதார் பொட்டத்தின் நாடவை உருவிய போதே அவள் அவனை இறுக்கமாக அணைத்து அவன் மீசை முடியை பற்களால் கடித்திழுத்து அவனது உதடுகளில் தன் உதடுகளை அழுத்தமாக பதித்து தன்னை முழுமையாக ஒப்படைத்தாள்.அதற்கு பின் நடை பெற்ற அனைத்திற்கும் இருவரும் சமமாக பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.இவர்களது இந்த இன்பமாக கூடலை அந்த மன்மதன் கண்டிருந்தால் அவன் மதி கலங்கி போயிருக்ககூடும். 
அவளை அவனும், அவனை அவளும் மொத்தமாக அறிந்து ஒருவருடன் ஒருவர் பின்னிபிணைந்து இருஉடல் ஒரு உயிராய் மாறி இருந்தனர். 
அவளது கலைந்து கிடந்த தலையை கோதி தன் நெற்றியால் அவள் நெற்றியில் செல்லமாக மோதி அவளது கன்னங்களை எச்சில் படுத்தியவன் மறுபடியும் அவளது இதழ்களில் ஒரு கவிதைப்போரை நிகழ்தி விட்டு, அருகிலே கண்களை மூடி படுத்திருந்தவளை தன் இருகரங்களாலும் அவனது மார்பில் அள்ளி போட்டுக்கொண்டு ஒரு கையால் இடையை அணைத்தவன் மறுகை அவள் உடலில் சில்மிசங்களை செய்யவும், அவள் உதட்டில் சிறு புன்னகையோடு அவன் கைகளோடு தன் கைகளையும் கோர்த்து அவனது சேட்டைகளை நிறுத்தினாள்.
அவன் அதற்கு அவளது காதுக்குள், “கையை ஒரு கையை நகர விடாது ஆக்கினால் சரியா?” என்று கூறிவிட்டு அவள் காது மடல்களை கடித்து அதில் ஒரு முத்தத்தை பதித்து மேலும் முன்னேற அவள் அவனது உதட்டை விரல்களால் மூடி “பொறுக்கி… ” எனக் கூறி அவனது நெஞ்சில் சுருண்டு படுத்து கண்களை மூடினாலும் உறங்கவில்லை. 
அவன் சிரித்து விட்டு “அப்படியா நான் பொறுக்கி,என்றால் நீ… .” என்று அவன் சொல்ல முன் அவனது உதடுகளை மூடியவள் அவனை முறைக்கவும்,அவன் அவளை பார்த்து கண் சிமிட்டவும் அவள் நாணத்தில் மறுபடியும் அவனது நெஞ்சில் முகத்தை மறைத்து கொண்டாள்.
அவன் மார்பில் கிடந்தவளை வருடியபடி அவள் காதுக்குள்ளே…  ” அம்மு… டேய்… இப்போதே இன்றைக்கே என்னுடன் கிளம்புடா… இனியும் உன்னை ‘விட்டு விட்டு’ என்னனால் தனியே இருக்க முடியாது. இனி எதுவானாலும் நீ என் கைகளுக்குள்ளே தான் இருக்கனும். இரண்டு பேரும் இது நாள்வரை இழந்தது எல்லாம் போதும்.முக்கியமாக நம்ம பேபி. முதல் இல்லாததற்கும் சேர்த்து இப்போது ட்டுவின்ஸ் பேபி பெத்துக்கலாம்.” என அவன் சொல்லிக்கொண்டே போகவும் அவள் உடல் இறுகியது.
“நோ…” என்ற கத்தலுடன் எழுந்தவள் உடலில் உடைகள் இல்லாமல் இருக்கவே அருகிலிருந்த போர்வையை எடுத்து தன் தலை வரை போர்த்தவள் உடல் நடுங்கியது.
அவளது நடுக்கத்தை கண்டவன் “அம்மு என்னடா… ? உன் உடம்பு ஏன்?  இவ்வளவு நடுங்குகின்றது. என எழுந்தவன் அவன் ஏற்கனவே விட்டுச்சென்ற அவனது லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு அவளருகில் அமர்ந்து “தியா… தியா” எனவும் அவளது உடல் குளிரவும் அவன் பயந்து பேய் அவள் உள்ளங்கை உள்ளங்கால் இரண்டையும் சூடுபறக்க தேய்த்து அவளை அவனுடன் சேர்த்தனைத்து கொண்டு சுவரோடு சாய்ந்து அமர்ந்தான்.
சற்று நேரத்தில் அவனது நெஞ்சு பகுதி ஈரமாக அவள் முதுகு குலுங்க விம்மி அழுது கொண்டிருந்தாள். 
அவளை சிறிது நேரத்திற்கு அழவிட்டு அவளது முதுகை ஆறுதலாய் வருடியவன். “தியா அழுதது போதும் என்னைப்பார்.” என்றான் இறுகிய குரலில்.அவனது குரலுக்கு கட்டுப்பட்டவள்  “எதுக்காக அழுகிறாய் என்னை பிடிக்கவில்லயா? இல்லை இப்போது நான் உன்னை தொட்டது பிடிக்கவில்லையா?”என்றவனது குரல் வலியைக்காட்டவும் அவள் பதறிப்போய் அவனது வாயை தன் விரல்களால் மூடி இல்லை என்பது போல் தலை அசைத்தாள். 
அவளது கைகளை அவன் உதடுகளில் இருந்து  விலக்கியவன், “அப்படி என்றால் உன் பிரச்சனை தான் என்னடி. ” 
அவனை இறுக்கமாக அணைத்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து “நான் உங்களோடு உங்கள் வீட்டுக்கு வரமாட்டேன்.” என்றாள். 
“சரி… நான் இங்கே வரட்டுமா?” என்றான். 
“இல்ல… இல்லை நீங்கள் இங்கே வரவேண்டாம் வேற நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுங்கள்.” என்றவள் இன்னும் அவனை இறுக அணைத்துக்கொண்டு அழுதாள். 
“அம்மு ஏற்கனவே உன்னை காயப்படுத்தி அழ வைத்திருக்கின்றேன் என்பதால் பார்க்கின்றேன் இல்லை என்றால் இப்போது நடக்கிறதே வேற…” என உறுமியவன் அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவளை பார்த்து முறைத்தவன். 
“என்னை வேற பெண்ணுக்கு தாரை வார்ப்பவள் எதற்காக இப்போது என்னுடன் குடும்பம் நடத்தினாய் பதில் சொல்லு என கத்தியவன் தன் கைகளை பக்கவாட்டில் உள்ள சுவரில் ஓங்கி குத்தினான்.
அவள் பதறிப்போய் அவனது கையை பற்றவும் அவளை தள்ளியவன், ” போடி இதை விட கொஞ்சம் விஷம் இருந்தால் குடு செத்து தொலைகின்றேன்.” என்றவன் முகத்தில் கடும் கோபம் தாண்டவமாடியது. 
அவள் இயலாமையுடன் “உங்கள் நல்லதுக்கு தான் சொன்னேன். 
“பின்னே என்னோடு பின்னிபிணைந்து படுக்கைக்கு வர முன் இதை சொல்லியிருந்தால் பரவாயில்லை…. எனக்கு அத்தனை இன்பத்தையும் கொடுத்து விட்டு இப்போது என்னை தூக்கி எறிகின்றாய்… துரோகிடி…நீ.” என்று கத்தினான்.
அதிர்ந்து விழித்தவள் அவனைப் பார்த்து “இது தான் உங்களது இன்பமா?  என்றவள் இதற்கு பிறகு நம் வாழ்வில் குழந்தை வேண்டும் என்கிறீர்கள் அதற்கு இங்கே வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டே உங்களை ஏமாற்றி உங்களோடு வர வேண்டும் என்கிறீர்களா? நான்… நான் உங்களை விட்டு விலகி தானே போனேன்.நீங்கள் தான் என் பின்னாலே துரத்தி…துரத்தி வந்து என் மனதில் உங்கள் மீதிருந்த வெறுப்பை விருப்பமாக மாற்றியது.”என்று அழுதாள். 
“அப்போது விருப்பம் இருக்… இருக்கா…” என்றவனை முறைத்தவள் உங்கள் மீது ரொம்ப விருப்பம் தெரியுமா? என அவள் கூறவும் இவ்வளவு நேரமும் செந்தழலாய் கொதித்தவன் 
சாந்தமாகி அவளை மறுபடியும் தன் கைகளுக்குள்ளே கொண்டு வந்து அவள் முகம் பார்த்து சிரித்தான். 
அவனது சிரிப்பில் அர்த்தம் கண்டு பிடித்தவள் அவனைப்பார்த்து “நீங்கள் என்ன?  செய்தாலும் நான் உங்களோடு வரமாட்டேன்.” என்றாள்.
“அப்போது நீ எனக்கு பொண்ணு பார்க்கிறாயா?. தியா என்றவன் அவள் முகம் போன போக்கை பார்த்து வலிக்குதா… ? உனக்கு நன்றாக வலிக்கட்டும் அப்படி என்றால் தான் மற்றவர்கள் வலி உனக்கு புரியும்.இப்போது குழந்தை இல்லை என்றால் அதை தீர்க்க எத்தனை வழி இருக்கின்றது அதை எதையும் என்னால் செய்ய முடியாது என்று நினைத்து தானே என்னை தள்ளி வைத்தாய் என்றவன், சரி…  சொல்லு உனக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொன்னது யார்?”
“….”
“சொல்லடி… யார்? அது? டாக்டர் சொன்னாரா?”
“இல்லை”
“அப்போது  உனக்கு குழந்தை பெற இஸ்ரமில்லை அதனால் என்னை சமாளிக்க சும்மா சொல்கிறாயா? என் மீது கொள்ளை விருப்பம் வைத்திருப்பவளுக்கு என் பிள்ளையை சுமக்க விருப்பமில்லையா? “
 

Advertisement