Melliya Kaathal Pookkum
அத்தியாயம் 3
மெதுவாக கண்விழித்த பிரதீபன் தன் முதுகில் மென்மையாக ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர ஸ்ரீராம் தான் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு தூங்குகின்றான் என்றெண்ணி புன்னகைத்தவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.
மெதுமெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக இரவு நடந்தவைகளும், புது மனைவியின் நியாபகமும் வர கண்களை பட்டென்று திறந்தவன் தன் முதுகோடு ஒட்டி...
அத்தியாயம் 4
"இதோ இப்பொழுது இந்த மருத்துவமனை அதிபர் ஸ்ரீவத்சன் அவர்கள் கீதாராணி அவர்களிடமிருந்து காசோலையை பெற்றுக் கொள்வார்" அறிவிப்பாளர் சொல்லி முடிக்கவும் கீதாராணியும், அதிபர் ஸ்ரீவத்சனும் காசோலையை பற்றியவாறு போட்டோவுக்கு சிரித்தவாறே போஸ் கொடுத்து விட்டு தங்களது கதிரைகளில் அமர்ந்தனர்.
"இந்த பச்சிளம் பாலகர்களுக்கு உதவிய நல்ல உள்ளம் கொண்ட மாதர்குல மாணிக்கம் கீதாராணி அவர்களை...
அத்தியாயம் 11
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி ஷாப்போ அமுதனின் சூப்பர்மார்க்கட்டின் முன்னால் இருந்தது.
அமுதனின் அறையில் இருந்து பார்த்தால் காபி ஷாப்பின் உள்ளே இருப்பவர்கள் நன்றாக தெரியும் என்பதால் அவளின் முகம் அவனுக்கு நன்றாக தெரியும் படி...
அத்தியாயம் 16
மலர்விழி வந்ததிலிருந்து அவளை முறைத்துக் கொண்டிருந்த அமுதனோ அவள் ரிஷியை கட்டிப் பிடிக்கவும் கோபம் தலைக்கேற அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவும் முடியாமல் நிற்க, தந்தையின் நெஞ்சின் மீது சாய்ந்து கதறுபவளை ஆறுதல் படுத்த உள்மனம் கட்டளையிட்டாலும் அவள் மீதான கோபமோ! "எல்லாம் நடிப்பு" என்று சொல்ல வைக்க ஒரு ஓரமாக இருந்து...
அத்தியாயம் 27
கைது செய்யப்பட்ட ரத்னவேல் உடனடியாக சென்னைக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கீதாராணியின் உடல்நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு பின்னே விமானம் மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.
உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர் குழு கூறி இருந்த பொழுதும் கீதாராணி பயணம் செய்யும் நிலைமையில் இல்லாதபடியால் அவளை கைது செய்ய முடியாமல்...
அத்தியாயம் 14
தூங்கும் மலர்விழியையே பார்த்திருந்தான் பிரதீபன். அமுதனின் விரல் அடையாளம் கூட அவளின் கழுத்தில் நீலமும், ஊதாவும் கலந்த நிறத்தில் பதிந்திருந்தது. அமுதனுக்கு எவ்வளவு கோபமிருந்திருந்தால் அவ்வளவு அழுத்தமாக மலர்விழியின் கழுத்தை நெறித்திருப்பான். மலர்விழியும் திமிராமல் அவனையே வெறித்து பார்த்திருந்தது இன்னும் ப்ரதீபனின் கண்களுக்குள் வந்து போக அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது...
அத்தியாயம் 7
"ஹேய் செல்ல குட்டி ஸ்கூல்ல இருந்து வந்துட்டீங்களா?"
"தியா... நீ இன்னைக்கி லெந்து நிமிசம் லேத்" இடுப்பில் கைவைத்து தியாவை முறைத்தான் ஸ்ரீராம்.
வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடித்துக் கொண்டு ஸ்ரீராம் ஸ்கூல் செல்லும் முன் அவனை பார்த்து செல்லம் கொஞ்சாவிடில் தியாவுக்கு அன்று நாளே நல்ல இருக்காது. ஸ்ரீராமின் மாலை பொழுது...
அத்தியாயம் 2
உடன் பிறப்பாக பழகிய கயல்விழியிடம் மறுத்து பேச முடியாமல் தான் ப்ரதீபனை மிரட்டினாள் தியா. அவளின் ஒரே எதிர்பார்ப்பு பார்வதி பாட்டி என்றாகிப் போக அவர் ஊட்டியை விட்டு வர சம்மதித்தது அவளுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியையும் கொடுத்தது. அவளுடைய பூக்கள், வீடு, கடை எல்லாவற்றையும் விட்டு விட்டு தொலை தூரத்துக்கு செல்ல...
அத்தியாயம் 12
அழைப்பு மணி அடித்துக் கொண்டே இருக்க கோபமாக கண்விழித்த பிரதீபன் கதவை திறக்க கையில் உணவு பாத்திரங்களோடு நின்று கொண்டிருந்தாள் மலர்விழி.
தான் எங்கே இருக்கோம், யார் இவன் என்று தூக்க கலக்கத்தில் பிரதீபன் இருக்க
"யார் நீ? நந்தி மாதிரி குறுக்க வந்து நிக்குற? தள்ளு..." என்றவாறு ப்ரதீபனை தள்ளி விட்டு உள்ளே வந்த...
அத்தியாயம் 13
அடுத்து நாம பாக்க போறது மும்பையில் பெருகி வரும் எச்.ஐ.வியும் விபச்சாரமும். மும்பை...... சனத்தொகையில் இரண்டாவது இடத்தை பிடித்து வேடிக்கை, காளியாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் விளங்கும் நகரம். அது மட்டுமா? அரசு அனுமதி பெற்று சிவப்பு விளக்கு பகுதியும் சிறப்பாக நடைபெறும் நகரம். பெண்களை பலவந்தமாக பாலியலில் ஈடுபடுத்துவது போய் இன்று கல்லூரி மாணவிகளும்,...
அத்தியாயம் 9
தியா ப்ரதீபனை முரடன் என்றே முத்திரை குத்தி இருக்க, அதன் பின் அவனை நெருங்கவோ பேசவோ முயற்சி எடுக்கவில்லை. ஆனால் பிரதீபன் அவளை மனதளவில் நெருங்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தான். மாலை வீட்டுக்கு வரும் பொழுது எந்தநாளும் அவன் கையில் பூ இருந்தது.
ரிஷி அழைத்து "தேன்நிலவுக்கு எங்க போக போற"...
அத்தியாயம் 30
கல்யாணத்துக்கு அத்தனை சொந்தபந்தங்களையும் அழைத்திருந்தமையால் ரிஷப்சனை மும்பாயில் சிறிதாக வைத்துக்கொள்ளலாம் என்று அமுதன் சொல்லி விட, கனியும் தன் நண்பர்களை மாத்திரம் அழைத்து ஒரு பார்ட்டி கொடுப்பதாக கூறி விட மெதுவாக அதை செய்து கொள்ளலாம் கல்யாணத்தை சிறப்பாக செய்யலாம் என்று இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருந்தனர்.
கல்யாண மண்டபமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு...
அத்தியாயம் 28
ரிஷி ஏன் கீதாராணியை அந்த கோலத்தில் பார்த்து கதறி அழுதான் என்று அவனுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் அன்னை என்ற பாசம் இருந்ததால் தான் மனம் விட்டு அழுது விட்டானே ஒழிய கீதா செய்தவைகளை அனைத்தையும் அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனுக்கு செய்தவைகளை அவன் மறந்து வாழ முயற்சித்தாலும் சில நேரம் கனவாக அவனை...
அத்தியாயம் 5
மும்பையில் ரிஷியின் வீட்டில் கயல் ரிஷியை திட்டிக் கொண்டிருந்தாள்.
"உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? என்ன வேல பண்ணி வச்சிருக்கிறீங்க? சின்ன குழந்தை போல? முதல்ல உங்கள போடணும்" என்றவாறே சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அவனை அடிக்க குச்சி எதுவும் கிடைக்காததால் கட்டிலில் இருந்த தலகணையை அவன் மேல் வீச
அதை லாவகமாக கைப்பற்றியவன் "வார்...
அத்தியாயம் 17
தியா படபடவென பேசினாலும் கணவனுக்கும் தனக்குமான பிரச்சினையை மற்றவர்கள் அறிந்துக் கொள்ள விரும்பாமல் அனைவரின் முன்பும் கணவனோடு பேசாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீராம் தூங்கி வாழியவே அவனை தூங்க வைக்கவென உள்ளே வந்தவள் தூங்க வைத்து விட்டு வெளியே வர பார்வதி பாட்டி, திலகா சரவணகுமரன், சிவரஞ்சனி, அகல்யா என...
அத்தியாயம் 26
அமுதவள்ளியின் சிறகுக்குள் பொத்திப் பொத்திப் வளர்த்ததினாலையே மலர்விழிக்கு தந்தையின் குணமோ அத்தையின் குணமோ ஒட்டவில்லை. ரிஷியை அத்தையின் வீட்டில் முதன் முதலாக பார்த்த போது அவனின் உடையும், தோற்றமும் அவன் அங்கு வேலை செய்யும் ஒரு சிறுவன் என்றே எண்ணினாள்.
அமுதவள்ளி அவனிடம் பாசம் காட்டுவதும், செல்லம் கொஞ்சுவதும் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்த அன்னையிடம்...
அத்தியாயம் 21
சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்த மலர்விழியின் சிந்தனையில் ரத்னவேல் பாத்திருக்கும் மாப்பிளையை எப்படி துரத்துவதென்பதில் இருக்க, அவனை பற்றின தகவல்களை திரட்ட மும்பாயில் இருக்கும் பொழுதே உத்தரவிட்டிருக்க, அவள் விமானம் ஏறு முன் அவனை பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்திருந்தது. அதை படிக்க மனம் வராமல் தந்தையையும், அத்தையையும் காணும் போது கொதிக்கும்...
அத்தியாயம் 10
காசு, பணம் இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவித்து வாழலாம். அதை சம்பாதிக்க எவ்வழியிலும் செல்லும் ரகம் தான் மதுரிகா. அந்த எண்ணத்தோடுதான் ரிஷியின் பி.ஏ வாக பணிபுரிய ஆரம்பித்தாள். ரிஷியை விட ப்ரதீபனின் அழகும், கம்பீரமும் அவளைக் கவர ப்ரதீபனை பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்களோ அவளுக்கு பாதகமாகவே இருந்தது.
அவன் பெண்களை ஏறிட்டும்...
அத்தியாயம் 18
வீட்டுக்குள் வந்த ப்ரதீபனின் கண்கள் மலரை தேட வழக்கமாக இந்த நேரத்தில் அவள் பாட்டியுடன் அமர்ந்திருக்க இன்று அவளைக் காணவில்லை. வழக்கத்துக்கு மாறாக இன்று அவள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை. கண்கள் அவளை அலச உள்ளமும் அவளுக்காக ஏங்க கால்கள் சமையலறையை நோக்கி நடந்தன.
அவன் உள்ளே வந்ததிலிருந்து அவனின்...
அத்தியாயம் 6
வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை காண ஆவலோடு வந்தவன் கண்டது பார்வதி பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு தன்னையே மறந்து தொலைக்காட்ச்சியில் லயித்திருக்கும் மனைவியை.
"வண்டி சத்தம் கேட்டு வெளியே வருவானு பாத்தா கண் சிமிட்டாம டிவி பாக்குறா அப்படி என்ன பாக்குறா?" என்ற எண்ணத்தோடு அவர்கள் அமர்ந்திருக்கும் சோபாவின் பின்னால் சென்று நின்றுக்...