அத்தியாயம் 21
வெற்றியும் விக்ரமும் கமிஷனரை சந்தித்து நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்கள். முதலில் அவருக்குக் கூடப் பெரிய இடம் இவர்கள்தான் எதுவும் செய்திருப்பார்களோ என எண்ணம். அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர், இப்போதுதான் புதிதாக மாற்றலில் இங்கே வந்திருக்கிறார். அதனால் அவருக்கு இவர்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் ஆதாரத்தை எல்லாம் பார்த்த பிறகு திட்டமிட்டே வெற்றியை இதில் சிக்க வைத்திருப்பது புரிந்தது.