அத்தியாயம் 4
பதினோரு மணி பேருந்து என்பதால்… நிதானமாகக் கிளம்ப முடிந்தது. பிரயாணத்திற்குத் தோதாக ஆதிரை சுடிதார் அணிந்திருந்தாள். வீட்டை ஒதுங்க வைத்து, வீட்டு காவலுக்கு ஆள் வைத்து எனக் கிளம்பும் வரை வேலை சரியாக இருந்தது. வேலைக்கு நடுவே இரவு உணவையும் முடித்தனர்.
சிறிது நேரம் சென்று விக்ரம் பார்த்த போது வனிதா உறங்காமல் இருக்க, வேறுவழியில்லாமல் எழுந்து சென்று அவன் ஓட்டுனரிடம் கேட்க, ஓட்டுனர் சரி சார் பார்க்கிறேன் என்றான். ஆனால் பேருந்தை நிறுத்தவே இல்லை.
அவன் வீம்புக்குப் பேசுகிறான் எனப் புரிந்து ஆதிரை அமைதியாக இருந்தாள்.