அத்தியாயம் 10
வீட்டிற்கு வந்ததும் ஆதிரை வெற்றியை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டாள்.
“நிஜமாவே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்குப் புரியலை. ஆனா இப்ப புரியுது. விடு பார்த்துக்கலாம்.”
மருத்துவமனை சென்ற சில நிமிடங்களிலேயே ஆதிரைக்கு அழகான பெண் குழந்தை பிறந்து விட… இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால்… வீட்டிலேயோ அல்லது வழியிலேயோ குழந்தை பிறந்திருக்கலாம் என்பதை நினைத்து பார்க்கவே ஆதிரைக்கு அச்சமாக இருந்தது.