இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 10
வீட்டிற்கு வந்ததும் ஆதிரை வெற்றியை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டாள்.
“நீங்க என்ன உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட்டா?”
“அவன் பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அவனும் என்ன தான்டி பண்ணுவான்?”
“அப்ப நான் சரியில்லைனா நீங்களும் வேற ஒன்ன பார்த்துபீங்க, அப்படியா?”
“வேற ஒன்னு பார்க்கிறாங்க. உனக்கே நாலு அறை விட்டு வழிக்குக் கொண்டு வர மாட்டேன்.”
“அடிப்பியா என்னை? சரியான காட்டான்.”
“என்ன டி இப்படிச் சொன்னாலும் சண்டைக்கு வர… அப்படிச் சொன்னாலும் சண்டைக்கு வர…” என வெற்றி விழிக்க, ஆதிரை அதைக் கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை.
“ஒரு மனைவியோட கவுரவம் எது தெரியுமா? கணவன் பெரிய வேலையில இருக்கிறதோ, நகையோ, பணமோ, அந்தஸ்த்தோ இல்லை. கணவன் மனதில் மனைவிக்கு இருக்கும் இடம்தான்.”
“சில பேர் என் மனசு ரொம்பப் பெரிசுன்னு ரெண்டாவது, மூணாவதுன்னு போனா… போறது மனைவியோட கவுரவம் தான்.”
“அது எப்படி அந்தப் பெண்ணோட கவுரவம் போகும். அந்த ஆணோட மானம் தான் போகும்.” வெற்றி சொல்ல,
“ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கிறவனை, இந்தச் சமுதாயம் கேவலமா பார்க்குதோ இலையோ, அவன் மனைவியை இவளுக்குப் புருஷனை ஒழுங்கா வச்சுக்கத் தெரியலை… அதுதான் அவன் வேற ஒருத்தியை பார்த்துகிட்டான்னு அப்பவும் பழியை அந்தப் பெண் மீது தான் போடும்.”
“ஒரு மனைவியா தன்னுடைய கடமையை ஒழுங்கா செய்யலையா… அவருக்கு என்ன குறை வச்சோம்ன்னு தான் மனைவியும் யோசிப்பா…”
“மனைவிக்கு மட்டுமான அன்பை வேற ஒருத்தர் கூடப் பகிர்ந்துக்கும் போது, ஒரு மனைவியா அவ தோற்று போயிடுறா. அப்ப அந்தப் பெண்ணோட மனசு எவ்வளவு அடிவாங்கும் தெரியுமா?”
“புரியுது டி, விடு ரொம்ப வருத்திக்காத.”
“விக்ரம் பண்றது சரியே இல்லை. இன்னைக்கு நம்ம முன்னாடியே உனக்காக இல்லை பொண்ணுக்காகச் சொல்றார். அப்ப மனசுல அந்தப் பெண்ணை எந்த இடத்தில வச்சிருக்கார்?”
“வனிதா பிறந்து வளர்ந்த சுழல் வேற… அவளுக்கு இங்க இருக்கிற நிலையைச் சொல்லி அவர்தானே புரியவைக்கணும். அதை விட்டு நீ எப்படியும் போ, நான் எப்படி வேணா இருப்பேன்னு இருந்தா எப்படி?”
“அவன் எதோ கோபத்தில பேசுறான். அப்படி எல்லாம் வனிதாவை விட்டுட மாட்டான்.” என்றான் வெற்றி.
வீட்டிற்கு வந்த விக்ரமும் வனிதாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
மகனைப் பார்த்ததும் தெய்வா குழம்பு எடுத்துக் கொண்டு வர, “நானும் இந்தக் குழம்புதான் வச்சிருக்கேன். வேண்டாம்.” என்றவள், விக்ரமிற்கு உணவை சூடு செய்து பரிமாறினாள்.
விக்ரமிற்குப் பருப்பு சாம்பார் எல்லாம் அலர்ஜி. அவனுக்கு உணவு காரசாரமாக இருக்க வேண்டும். அவனுக்குப் பிடித்தது போலக் காரக்குழம்பும் உருளைக் கிழங்கு பொரியல் செய்து இருந்தாள். சுஜிக்குத் தனியாகப் பருப்பு வேறு…
“என்னடா இது உலக அதிசயமா இருக்கு.” என நினைத்தபடி விக்ரம் உணவருந்தினான். உணவு நன்றாகவே இருந்தது. வனிதா நன்றாகவே சமைப்பாள். ஆனால் என்ன செய்வதற்குச் சோம்பேறித்தனம்.
அதை வைத்துத்தானே ஆனந்தி உள்ளே நுழைய முனைந்தாள். அந்தப் பயம் நன்றாகவே வேலை செய்தது. கணவனுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.
மாலை மில்லுக்கு வந்த வெற்றி, “விக்ரம் இப்படி இருக்காத டா.. கல்யாணம் பண்ணிகிட்டோமேன்னு வனிதாவோட நீ குடும்பம் நடத்துற மாதிரி இருக்கு. நீ விரும்பித்தானே கல்யாணம் பண்ண. ஆதிரை ரொம்பக் கவலைப்படுறா டா…” என்றவன், ஆதிரை சொன்னதையும் ஒன்று விடாமல் சொன்னான்.
“எங்க ரெண்டு பேர்குள்ள இடைவெளி வந்தது என்னவோ உண்மைதான். நான் பார்த்து நடந்துக்கிறேன். நீ ஆதிரையைக் கவலைப்படாம இருக்கச் சொல்லு.” என்றான் விக்ரம். அதன்பிறகே வெற்றிக்கு நிம்மதி ஆனது.
இரவு வீட்டிற்கு வந்த விக்ரம் வீட்டைப் பார்த்து வியந்து போனான். அவர்கள் பகுதியை எப்போதும் வனிதா நன்றாகவே வைத்துக்கொள்ள மாட்டாள்.
ஒரு பக்கம் அழுக்கு துணி சேர்ந்து போய் இருக்கும். இன்னொரு பக்கம் துவைத்த துணிகள் மடிக்காமல் கிடக்கும். சுஜியின் விளையாட்டுச் சாமான்கள் அங்கங்கே இறைந்து கிடக்கும். அதை அப்படியே போட்டு வைத்திருப்பாள். ஆனால் இன்று எல்லாம் அதன் இடத்தில் சரியாக இருந்தது.
எதோ கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது. பார்ப்போம் இப்படியே தொடர்கிறதா என நினைத்தவன், முகம் கைகால் கழுவி உடைமாற்றி வர… சூடாக இட்லி தேங்காய் சட்னியோடு கார சட்னியும் இருந்தது.
விக்ரம் வந்ததும் தான் இட்லி ஊற்றி இருப்பாள் போல… ஆறு இட்லிகளை உள்ளே தள்ளிய விக்ரம், “ரொம்ப நல்லா இருக்கு வனிதா.” என்றான். கணவன் பாராட்டியதும் மனைவியும் குளிர்ந்து போனாள்.
“இன்னும் ரெண்டு இட்லி சாப்பிடுங்க.”
“ஐயோ இதே அதிகம்.”
“நீங்க இருக்கிற உயரத்துக்கு இதெல்லாம் எந்த மூலைக்கு. இன்னும் ரெண்டு சாப்பிடுங்க.”
“அம்மாடி நீ ஒரேடியா என்னைக் குண்டாக்கிடுவ போலிருக்கே… போதும் மா.. நாளைக்கும் வரும் வனிதா. அப்பவும் சாப்பிடத்தான் போறோம். ஒரே நேரத்தில அடைக்கக் கூடாது.” என்றவன், எழுந்து கைகழுவ சென்றான்.
வனிதா சாப்பிட்டு விட்டு வர… விக்ரம் அவளுக்காக ஹாலில் காத்திருந்தான்.
“இங்க வா…” என்றவன், அவளை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டான்.
“என் மேல கோபமா?”
“இல்லை என் மேலதான் கோபம். நீங்க சொன்னது சரிதான். எனக்கு ஒன்னும் தெரியலைன்னுதான், நீங்க மில்லுக்கு வர வேண்டாம்னு சொன்னீங்க. நான்தான் தப்பா நினைச்சிட்டேன். ஆதிரையால முடியும் நம்மால முடியாதான்னு நினைச்சிட்டேன்.”
“ஆதிரை அக்கா இன்னைக்குக் கெத்தா உட்கார்ந்து ஆனந்தியை விளாசின மாதிரி என்னால கண்டிப்பா முடியாது. நான் அவகிட்ட கெஞ்சிட்டு இருந்தேன்.”
“யார்கிட்ட எப்படிப் பேசணும்னு அவங்களுக்குத் தெரியுது. எனக்கு அது தெரியலை. ஆனந்திகிட்ட மட்டும் இல்லை. மாணிக்கத்தை என்ன அதிகாரமா வேலை வாங்கினாங்க. எனக்கு அதெல்லாம் வராது. அதுதான் எனக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இல்லை.”
“நான் அவங்களை மாதிரி ஆக முடியாது. என்ன ஒரு கம்பீரம். அவங்கதான் அந்த இடத்துக்கு பொருத்தம்.”
“வனிதா நீ ஏன் ஆதிரை மாதிரி ஆகணுமுன்னு நினைக்கிற. நீ உன்னைப் போல இரு. அதுதான் எனக்கும் பிடிக்கும்.”
“என்னைப் பிடிக்குமா உங்களுக்கு.”
“ஆமாம் பிடிக்காமத்தான் லவ் பண்ணி கல்யாணம் பன்னிகிட்டங்க.”
“அப்ப பிடிச்சது இப்படிப் பிடிக்குதா?”
“உன் மேல கோபம் இருக்கு, வருத்தமும் இருக்கு, இல்லைன்னு சொல்லலை. அதுக்காக உன்னைப் பிடிக்காம இல்லை.”
“வெற்றி இன்னைக்கு வந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான். என் மேலேயும் தப்பு இருக்குன்னு சொல்றான். நான் உன்னை ஒழுங்கா நடத்தலைன்னு ஆதிரைக்கு என் மேல கோபம். தப்பு உன்மேல மட்டும் இல்லை. என்மேலேயும் தான். நான் இப்ப அதை உணர்றேன்.”
“நீங்க என்ன பண்ணீங்க? என் மேலத்தான் தப்பு.”Advertisements
“நிஜமாவே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்குப் புரியலை. ஆனா இப்ப புரியுது. விடு பார்த்துக்கலாம்.”
Advertisements