அத்தியாயம் 11
மறுநாள் காலை ஆதிரையின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இருப்பதாக வந்து மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல… அப்போது அறையில் வெற்றியும் ஆதிரையும் மட்டுமே இருந்தனர்.
ஆதிரை இருப்பதைப் பார்த்த வெற்றிக்கே, இந்த அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கலாமோ என இருந்தது.
வெற்றி வேலையெல்லாம் முடித்து வந்து, இரவு உணவையும் உண்டுவிட்டுத்தான் ஆதிரையைக் கைப்பேசியில் அழைப்பான்.