இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 11
மறுநாள் காலை ஆதிரையின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இருப்பதாக வந்து மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல… அப்போது அறையில் வெற்றியும் ஆதிரையும் மட்டுமே இருந்தனர்.
கட்டிலில் படுத்திருந்த ஆதிரை வெற்றியைப் பார்த்து, “கண்டிப்பா பண்ணிக்கணுமா?” எனக் கேட்க,
“என்னைக் கேட்கிற உனக்கு இஷ்ட்டம் இல்லையா?” என்றான்.
“இன்னும் ஒன்னு மட்டும் பெத்துக்கலாமே?”
“அடியே, அடங்க மாட்டியா நீ?”
“இந்தத் தடவை பிரசவம் ஈஸியா தான இருந்துச்சு.”
“என்னது ஈஸியா இருந்துச்சா? நீ மாசமானதுல இருந்து பிள்ளை பெத்துகிற வரை… என் மனசு அடிச்சிட்டு இருந்தது எனக்குத்தான் தெரியும். போதும் மா என்னால திரும்ப டென்ஷன் ஆக முடியாது.”
“வலிச்சு பெத்துகிற நானே பயப்படலை… சும்மா பார்த்திட்டு இருக்க உங்களுக்கு என்ன?”
“அதுதான் பிரச்சனையே… சும்மா பார்த்திட்டு தானே இருக்க முடியுது. அவ்வளவு பெரிய வயிறை வச்சிகிட்டு நீ நடக்க உட்கார சிரமப்பட… நான் பார்த்திட்டு தான் இருந்தேன். அதோட நீ வலியோட கஷ்ட்டப்படும் போதும் பார்த்திட்டு தான் இருந்தேன்.”
“நீ கஷ்டப்படுவதைப் பார்த்திட்டும் ஒன்னும் செய்ய முடியாம இருக்கிறது எவ்வளவு வேதனைன்னு எனக்குதான் தெரியும்.”
“என்னவோ நாட்டில நான் மட்டும் தான் பிள்ளை பெத்துகிற மாதிரி.”
“அவங்களை எல்லாம் ஏன் இழுக்கிற? எனக்கு நீ மட்டும் தானே பொண்டாட்டி.”
ஆதிரை கணவனை முறைக்கும் போதே உள்ளே வந்த ஆதிரையின் அம்மா, “பிள்ளையைப் பெத்துகிட்டா போதுமா, அதை நல்லபடியா வளர்க்க தெம்பு வேண்டாமா… உங்க பாட்டியும் தான் அந்தக் காலத்தில ஆறு பெத்தாங்க. என்னால முடிஞ்சுதா? இந்த வயசில உங்க பாட்டி எப்படி இருக்காங்க நான் எப்படி இருக்கேன்.”
“இந்தக் காலத்திற்கு ரெண்டே அதிகம். ஒழுங்கா மாப்பிள்ளை சொல்றதை கேளு.” எனச் சொல்ல… ஆதிரை உறங்குவது போலக் கண்ணை மூடிக்கொள்ள… வெற்றி சிரிப்புடன் விடைபெற்றான்.
மறுநாள் காலை அறுவை சிகிச்சை முடிந்து வந்த ஆதிரைக்கு வலியும் இருக்க… பேச கூடச் செய்யாமல் கண்ணை மூடி படுத்தே இருந்தாள்.
ஆதிரையின் தந்தை சிவமணி. மகளின் க்ளுகோஸ் போட்ட கையைத் தடவி விட்டபடி இருந்தார். அவர் கண்ணே மணியே என மகளைக் கொஞ்சி வளர்க்கவில்லை என்றாலும், பாசத்திற்கு ஒன்றும் குறை இல்லை.Advertisements
ஆதிரை இருப்பதைப் பார்த்த வெற்றிக்கே, இந்த அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கலாமோ என இருந்தது.
Advertisements