அத்தியாயம் 5
விக்ரம் இரவு வெகு நேரம் கழித்துதான் வந்திருந்தான். அதனால் காலையில் எழுந்து கொள்ளவும் நேரம் ஆகி இருக்க, வனிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சுஜி எதாவது கேட்டாலும் கோபப்பட்டாள். மனைவியின் எரிச்சல் எதனால் என விக்ரம் அறியாதவன் அல்ல…அவள் மனதில் இருக்கும் ஆசைகள் புரியாமலும் இல்லை.
மறுநாள் காலை ஏழு மணிக்குதான் வீடு வந்து சேர்ந்தனர். ஆதிரை விறுவிறுவென அருணை பள்ளிக்கு கிளப்ப… வெற்றி அவளுக்கு உதவினான்.
விக்ரம் குளித்துவிட்டு வந்ததும், அவனுக்குத் தோசை ஊற்றி வைத்தவள், அவன் வெளியே சென்றதும் எழுந்த மகளைக் குளிக்க வைத்துவிட்டு, ஊரில் இருந்து கொண்டு வந்த அழுக்குத் துணிகளில் கையில் துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு சென்று, துவைத்து முடித்துப் பிறகு அவள் குளித்துவிட்டு வர பத்தரை மணியாகி இருந்தது.