அத்தியாயம் 9
வனிதா கேட்டதற்கு அலட்சியமாகப் பார்த்துவிட்டு ஆனந்தி சென்றுவிட, தன் வாழ்க்கை தன் கையை விட்டு போய் விடுமோ என வனிதாவுக்கு அச்சமாக இருந்தது.
நண்பனின் அருகே சென்று நின்று கொண்ட விக்ரம், ஆனந்தியைப் பார்த்து போ என்றான். வனிதா இருக்கத் தான் போவதா என ஆனந்திக்கு இருந்தாலும், மறுத்து சொல்ல முடியாமல் வெளியே சென்றாள்.
“நீ வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்ப அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. போடி.” என்றான் வெற்றி.