புயல் காற்றில் விளக்காகவே
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 75
யாக்கூப் சுட்டதால் கீழே விழுந்து மயங்கிய ஆர்யனின் கன்னம் தட்டி “கண்ணை திறங்க! திறங்க!” என ருஹானா கண்ணீர் விட, அவனிடம் சற்றும் அசைவில்லை. “இல்ல.. அல்லாஹ்! இப்படி நடக்காது.. ப்ளீஸ் எழுந்திருங்க” என அவன் முகத்தை பிடித்து ஆட்டினாள். ஆர்யன் தலை தொய்ந்துவிழ தன் தலை மேல்...
பெண் மனம் மென்மை குணம்
எச்சரிக்கையும் மீறி மதிகெட்டவன் மீது
இயல்பாய் இரக்கம் கொண்டு
சுழலில் சிக்கி உயிருக்கு தவிக்க,
காலம் தப்பிய புரிதல்
மன்னிப்பை யாசிக்க
வருந்த விடுவானா
உள்ளம் கவர்ந்தவன்,
உயிராய் இருப்பவன்?
“அவன் உன்னை அடிச்சானா? உன்னை தொட்டானா?” அதற்குள் அவன் சிந்தை வேறு இடம் பாய்ந்துவிட்டது.
“இல்ல” என அவள் சொல்லவும் நிம்மதியடைந்தவன் “சரி! கவனமா கேளு. அந்த பைத்தியக்காரன் வர்றதுக்குள்ள நாம...
அவள் கன்னத்தில் கரீமா பளாரென அறைந்தாள். அவள் அடித்த அடி சல்மாவை லண்டனுக்கே அனுப்பியிருக்கும். “வாயை நீ திறந்தே உன்னை கொன்னுடுவேன். இது போல நடக்கும்னு எனக்கு எப்படி தெரியும்? இப்போ நம்மால எதும் செய்ய முடியாது. இதை உன் மண்டைக்குள்ள ஏத்திக்கோ. அமைதியா இரு”
கன்னத்தில் கை வைத்தபடி ஓடிய சல்மா எதிரே காபியுடன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 74
யாக்கூப்பை ஏமாற்றி தப்பி ஓடிவந்த ருஹானா தனது போலீஸ் சகோதரனையோ, மிஷாலையோ போனில் அழைக்கவில்லை. ‘நீங்கள் திருந்தவேயில்ல. உங்களை நம்பிய நான் ஒரு முட்டாள். நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன்’ என குற்றம் சாட்டிவிட்டு வந்த ஆர்யனையே உதவிக்கு அழைத்தாள்.
ஆனாலும் அவள் இருக்கும் இடத்தை அவனுக்கு தெரிவிக்கும்முன்...
யாக்கூப் ஜன்னலைப் பார்த்து நின்று கட்டைகளை அகற்றிக்கொண்டிருக்க, பூனை போல நடந்து வந்த ருஹானா, நாற்காலியில் மாட்டியிருந்த அவனது கோட்பையில் கை விட்டு சாவியை தேடினாள்.
சிலநிமிடங்கள் சென்றும் அது அவள் கைகளுக்கு அகப்படவில்லை. அதற்குள் யாக்கூப் திரும்பி பார்க்க அதற்கு முன் நிமிர்ந்துக்கொண்ட ருஹானா பயத்தில் கால்கள் வேரோட நின்றாள்.
“என்ன ஷெனாஸ்?” என அவன்...
“ஷெனாஸ்! நீ சாவை ஜெயிச்சி என்கிட்டே வந்துட்டே! இப்போ நாம ஒன்னா நடப்போம். இனி துக்கம் இல்ல. துயரம் இல்ல. அந்த இருட்டு சாலைல சேர்ந்து போகலாம்” என அவன் கனவில் மிதப்பவன் போல பேச, ருஹானா இடிந்து போனாள்.
“இப்போ நாம நல்லா சாப்பிடுவோம், வா. இது நம்மோட கடைசி உணவு” என அவன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 73
யாக்கூப் இழுத்து பிடித்ததால் அதிர்ச்சியா, அவன் ஷெனாஸ் என்று அவளை அழைத்ததால் அதிர்ச்சியா என உணர முடியாத ருஹானா அவனை தள்ளிவிட்டாள்.
“என்ன!! என்ன சொல்றே? நான் ஷெனாஸ் இல்ல”
“நீ ஷெனாஸ் தான். அது உனக்கும் தெரியும். இப்போ லேசா உனக்கு குழப்பம். ஆனா சீக்கிரம் சரியாகிடுவே”
அவன் கண்களில் தெரிந்த...
நீரூற்று குளத்தில் மோட்டார் படகை விட்ட இவான் அது மிதந்து செல்வதை பார்த்து சந்தோச கூச்சலிட்டு கை தட்டினான்.
“பெரியப்பா! பாருங்க என் கப்பல் எப்படி போகுது?”
“ஆமா செல்லம்! உன் ஆர்யன் சித்தப்பா கப்பல் கடல்ல போறது போலவே போகுதே!”
அங்கே வாசல் பார்த்து நின்றிருந்த ஆர்யனை இந்த ஆர்ப்பாட்டங்கள் இழுக்கவில்லை.
அவனுடைய காந்தம் ஏன் கத்தி சென்றது?...
கட்டிலில் விரிப்பை சரிசெய்து கொண்டிருந்த ருஹானா செல்பேசியில் யாக்கூப் அழைக்கவும் யோசனையுடனே அழைப்பை ஏற்றாள்.
“ருஹானா மேம்! அவன் கிட்டே இருந்து தள்ளி இருங்க”
எடுத்தவுடன் அவன் இப்படி சொல்லவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“மிஸ்டர் யாக்கூப்! என்ன ஆச்சு? யாரை பத்தி சொல்றீங்க?”
“நான் சொல்றதை மட்டும் கேளுங்க. நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கறது அந்த அரக்கனுக்கு தெரியக்கூடாது....
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 72
சங்கிலியிலிருந்து கூந்தலை விடுவித்தபின்னும் இருவரின் பார்வை வீச்சுகளும் விடுபடவில்லை.
ருஹானாவால் நெடுநேரம் ஆர்யனின் கண்களின் கூரியக் கணைகளை தாங்கமுடியாமல் தலை தாழ்த்த, அதன் பிறகே பச்சை கண்களின் காந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டான் ஆர்யன்.
வந்த வேலை நினைவு வர “சோசியல் சர்வீஸ் பேப்பர்ஸ்ல நீ ஓய்வா இருக்கும்போது கையெழுத்து போட்டு வச்சிடு”...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 71
கதவு மூடிய சத்தத்தில் பயந்து போன ருஹானா அதே இடத்தில் அசைவற்று நின்றாள்.
அப்போது அவள் கைப்பையில் இருந்த செல்பேசி ஒலிக்க, அந்த நிசப்த பிரதேசத்தில் அதன் ஒலி ஓங்கி ஒலித்தது.
பயத்தை உதறி செல்பேசியை பார்க்க, அது நஸ்ரியாவின் அழைப்பு. வாசற்கதவை இழுத்து பார்க்க, காற்றில் மூடியிருந்த அது திறந்து...
“நான் வாசிக்கிறது சரியா, மாஸ்டர்?”
எதிரே ருஹானா போனை பார்த்து அமர்ந்திருக்க, அவளை கோபமாக பார்த்திருந்த யாக்கூப்பிடம் கேட்டான் இவான்.
“சரி தான் இவான். ஆனா இன்னும் உன் உடம்போட ஒட்டி வச்சிக்கோ” என கிட்டாரை சரியாக வைத்தான்.
“அச்சோ! நான் மறந்து மறந்து போறேன் மாஸ்டர்”
இது எதையும் கவனிக்காமல் ருஹானா செல்பேசியில் ஆர்யனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
‘சோசியல்...
வெள்ளை மாளிகையில் வெளிச்சம் வந்த சிறு துளைகளையும் கட்டையை வைத்து ஆணியடித்து மூடிய யாக்கூப், செல்பேசியின் ஒலியில் ருஹானாவின் அழைப்போ என ஆவலாக பார்த்தான்
மருத்துவரின் பெயரை பார்த்ததும் “ஏன் டாக்டர் என் உயிரை வாங்குறீங்க?” என கத்தியவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை
ஒரு பெட்டியை திறந்து அதிலிருந்த ஒரு வெள்ளை நிற திருமண ஆடையை எடுத்து...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 70
இவானுக்கு ஏற்பட இருந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அனைவர் முன்னும் மாமனிதனாய் யாக்கூப் நிற்க, அவனை மனிதனாக கூட மதிக்காத ஆர்யன் சந்தேக கண்ணோடு பார்க்க, யாக்கூப் இவானை பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டான்.
இவான் எதிரே மண்டியிட்டு அமர்ந்திருந்த ருஹானா “உனக்கு ஒன்னுமில்லயே, ஆருயிரே?” என கேட்க, அவன்...
“இன்னைக்கு நீ சொன்னது உண்மையா இருக்கலாம். ஆனா அதுக்கும் மேலயும் ஏதோ இருக்கு. கண்டிப்பா நீ எதையோ மறைக்கிறே. நல்லவன் மாதிரி நடிக்கிறே”
‘அப்படியே உண்மையை பிட்டுபிட்டு வைக்கிறானே’ என அதிர்ந்து போன யாக்கூப் திகைப்பை மறைத்துக்கொண்டு “ஆர்யன் சார்! அப்படியெல்லாம் இல்ல. நான் எல்லாமும் சொல்லிட்டேன். என்னோட காதலிய கார் விபத்துல...” என சொன்னவனை...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 69
ஆர்யன் கிட்டார் சரத்தை கையில் வைத்துக்கொண்டே ருஹானாவின் அறையை விட்டு வெளியே வந்தவன், அதை போல மற்றொன்று இவான் அறைவாசலில் கிடப்பதை கண்டான்.
அதையும் அவன் குனிந்து கையில் எடுக்க, அறையினுள் விளையாடிக்கொண்டிருந்த இவான் “சித்தப்பா! என்கிட்டே இன்னும் நிறைய இருக்கு. மாஸ்டர் கொடுத்தார்” என பல வண்ணங்களில் இருந்த...
அலுவலக வேலையில் முயன்று மனதை செலுத்தி பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை செல்பேசி அழைத்தது.
“ஹல்லோ ரஷீத்! என்னாச்சு? மியூசிக் டீச்சர் பத்தி வேற எதும் கண்டுபிடிச்சியா?”
“ஆமா ஆர்யன்! நீங்க சந்தேகப்பட்டது சரிதான். அவன் ஆஸ்திரேலியா பக்கமே போனதில்ல. அவன் சொன்ன அந்த நேரங்கள்ல காணாம போயிருக்கான். ஆள் அட்ரெஸ் தெரியல”
ஆர்யன் கையிலிருந்த பேனா நசுங்க, அவன் விழிகள்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 68
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் முழுமனதாக ஈடுபட முடியாமல் ருஹானா மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருக்க, அவள் செல்பேசி அடித்தது.
அவளை கணினி திரையில் பார்த்துக்கொண்டே யாக்கூப் பேசினான்.
“இரவு நேரத்தில் உங்களை தொல்லை செய்றதுக்கு மன்னிச்சிடுங்க”
“பரவாயில்ல, சொல்லுங்க”
“என்னோட கைக்கடிகாரத்தை நான் அங்கயே வச்சிட்டு வந்துட்டேனான்னு தெரியல. உங்களுக்கு சிரமம் இல்லன்னா இவான் ரூம்ல பார்க்க...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 67
மனநல மருத்துவரிடம் ‘தன் காதலி கிடைத்துவிட்டாள்’ என ருஹானாவை மனதில் நிறுத்தி பேசிவிட்டு உள்ளே வந்த யாக்கூப் “என்னோட மாணவன் ஒருத்தன் வகுப்புக்காக பேசினான்” என்று ருஹானாவிடம் சொன்னான்.
ருஹானா தலையசைக்க, இவான் அருகே அமர்ந்தவன் “பாடம் ஆரம்பிக்கலாமா?” என கேட்க இவானும் தலையாட்டினான்.
“முதலில் ஒரு பாட்டுல இருந்து ஆரம்பிக்கலாம்....
யாக்கூப் சுவரை பார்த்தபடி யோசித்துக்கொண்டு இருக்க, கிட்டாரை தட்டிக்கொண்டிருந்த இவான் “நான் செய்றது சரியா?” என கேட்டான்.
தலையாட்டிய யாக்கூப் “இப்போ இதையே மாத்தி செய்யணும்” என சொன்னவன் “அதுக்கு முன்னே நான் பாத்ரூம் போயிட்டு வரேன்” என்றான்.
“சரி மாஸ்டர்” என இவான் சொல்ல, எழுந்து கதவருகே வந்த யாக்கூப் “உன் சித்தி ரூம் எங்க...