Thursday, April 25, 2024

    Sirpiyum Aval Sirpamum Aval

                மறுநாள் அகில் அவள் பக்கம்கூட திரும்பிப் பார்க்கவில்லை.             ஒரு நாள் கவி தனது கைபேசியை எங்கோ வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். ஆலோசனை அறையில், அகிலும், கௌஷிக்கும் அவள் அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கவியின் தேடும் படலத்தைப் பார்த்து கௌஷிக் கேட்டான். "என்ன கவி முக்கியமானது ஏதும் காணலயா?"                         "ஆமாம் கௌஷிக்,...
    சுதாவுக்கு இன்ஜினியரிங் முடித்தவுடன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. கவிக்கு எப்போதும் காலாவதியாகாத ஏ.டி.யம் கார்ட் அவள். கவி நல்ல சாப்பாட்டு பிரியை. மதுரையின் சிறந்த ஹோட்டல் அனைத்திலும் தண்ணீராவது குடித்துவிடுவாள். சுதாவும் கவியும் எங்கு சென்றாலும் 'பல்லவன்' தான். 'பல்லவன்' புகாத இடங்களுக்கு ஷேர்...
    வருண் மூச்சுக்காற்று. . . .             அனைவரும் சோதனைக் கூடத்தை விட்டு கிளம்பிப் போயாச்சு. கவியும் மதுவும் தவிர. இருவரும் சேர்ந்து கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுவிட்டு வருவதற்குள் அனைவரும் கிளம்பியாச்சு.             சோதனைக் கூடத்தின் வாயிலில் கவி மதுவிடம் கேட்பதாக எண்ணி  சத்தமாகக் கத்தினாள், "ஏய் மது உன் அனாடமி புக் என்னிடம் இருக்குதுப்பா.. உனக்கு...
    சோதனைக் கூடத்தில் சுதர்சன் சார். . .  கை உறைகளைப் போட்டுக் கொண்டதும் சுதர்சன் சார் சொன்னார், "நான் இப்ப உங்களுக்கு இந்த காடிவரில் (cadaver – body of a dead person) இருந்து ஒரு லங்ஸ் டிசக்ட்(desect) செய்து காட்டப்போறேன். இரத்தம் எல்லாம் உறைந்து போய்விடும், இரத்தம் எப்படி உறைந்து இருக்குன்னு பாருங்க....
     கல்லூரியின் முதல் ஆண்டு. . . .             கவியின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரந்து விரிந்த கல்லூரி வளாகம். எவ்வளவு உழைப்பு? இந்த தருணத்திற்காக! எத்தனை தியாகங்கள்! அனைத்தும் இந்த கல்லூரிக்குள் நுழைவதற்காக.. அனைத்து உழைப்புகளும் நிச்சியம் அதன் பயன்களைப் பெற்று விட்டன என்று எண்ணிக் கொண்டாள். கல்லூரியின் அலுவலக அறைக்குச் சென்று...
    மறுநாள் விடிந்ததும் கவி தன் வேலைகளை துரிதமாகச் செய்தாள். இரவு முழுவதும் கவி மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆச்சி தன் வேலைகளை முடிக்கும் வரை பொறுமை காத்து, அவர் ஓய்வாக அமர்நதபிறகு கேட்டாள்.             "ஆச்சி உங்களுக்குத் தெரியுமா இப்போது அவன் என்ன செய்யிறான்னு?"             "மாதம் இருபதினாயிரம் சம்பாதிக்கும் நல்ல வேலையில் இருக்கான்...
                "கவி இங்க என்னிடம் வாயேன்"             "ஆச்சி எனக்கு பசிக்கலை. நான் தூங்கப் போறேன்."             "சரி தூங்கு, எனக்கு தூக்கம் வரலை அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு நினைத்தேன்."             கவிக்கு ஆச்சி தன்னை தேற்ற நினைப்பது புரிந்தது. எதுவானாலும் சாப்பிடக் கூடாது, அப்போதுதானே அம்மா பார்க்கும்போது மெலிந்து கன்னம் வற்றித் தெரியும், என்று மனதுக்குள் தீர்மானம்...
    உயிருடன் நகக் கண்ணை பிய்ப்பார்களாம், போர்களத்தில் தோற்றவனுடைய நகக் கண்ணை…. அப்படி யாரும் ஸ்வேதாவின் நகங்களை வேறோடு பிய்த்துவிட்டார்களா? 'கவி ராஜாத்தி' “கவிக்குட்டி” "என் அறிவுக்கிளி' என்று கொஞ்சியவள் எப்படி ஊமையானாள்?             ஸ்வேதாவின் இதயம் அதன் கூட்டை விட்டு உலாவப் போனதோ? சுடுகாட்டில் உலாவுகிறதோ? இல்லை, அவள் கணவனை வழியனுப்பும் முன் அவனுடன் சென்ற...
                கவியின் அருகில் வந்தவள் கவியின் கன்னம் வீங்க மாறி மாறி அறைந்தாள். உதடு தடித்து மேல் உதட்டிலிருந்து இரத்தம் வடியத் துவங்கியதும் அடிப்பதை நிறுத்தினாள். ஸ்வேதா டைனிங் டேபிலில் இருந்த சாமான்களை சுவரில் அடித்து நொறுக்கினாள். கவி வேதனையில் சுருண்டு சோபாவில் உட்கார்ந்தாள். ஆனால் துளி கூட அசரவில்லை. அம்மாவிடம் இவ்வளவு கோபத்தை எதிர்பார்த்தாள்...
    கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது.. ஸ்வேதா கத்தினாள். கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது கோபத்தை அடக்க ஸ்வேதா இரண்டு முறை காபி குடித்தாள், மூன்று முறை ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினாள், அப்படிக் குறைந்த கோபம் மீண்டும் அதீத உச்ச நிலை அடைந்தது எப்போது? கவி கைகளில் பேனாவால் ஒரு மெகன்தி டிசைன் போட்டபோது! "கவி, என்ன செய்யிற?...
                2006 ஆம் வருடம் முடிவில்.. கணவனைக் காண ஸ்வேதா ஆஸ்திரேலியா செல்கிறாள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் கணவனின் நினைவுகள் அவளை வாட்ட, அவளே தனது சொந்தச் செலவில் ஆஸ்திரேலியா செல்கிறாள். ஷ்யாம், ஸ்வேதா ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில். . . .             ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில் ஸ்வேதாவின் கணவன் ஷ்யாம் அவளை அழைக்க வந்தான்.            ...
                     போட்டி நாள். . .             ஜாஃபர் பரபரப்பாக வேலை செய்தான். கலீம் அவனிடம், "தேவையில்லாமல் எதற்கு பெட் வைப்பானேன்? பிறகு இப்படி அல்லாடுவானேன்?" என்று கேட்டான். "கலீம் நல்லா படிச்சியா?" என்று ஜாஃபர் கேட்டான். "எதுக்கு?" "எதுக்கா? இன்றுதான்டா போட்டியே!" "ஓ.. படிச்சாச்சு! படிச்சாச்சு!”  என்று ஜாஃப்ரை சமாதானம் செய்தவன் அகிலிடம் திரும்பி, “அகில் நீ படிச்சிட்டியா? உனக்கென்ன உன்...
        திருமணப் பேச்சால் கோபம் கொண்ட கவி மீண்டும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். ஒரு உள்நோயாளியின் டிஸ்சார்ஜ் சம்மரி தயார் செய்து கொண்டிருந்தார்கள். சுதாவிடம் பேசிவிட்டு கௌஷிக்கும் அவளுடன் இணைந்துகொண்டான். கவி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள். அவளுக்கு அந்தத் திருமணப்பேச்சில் அத்தனைக்கோபம். அகிலைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதால் அவளுக்கு கோபம்...
    அகில்                    "அம்மா…. எனக்கு இரண்டு சப்பாத்தி போதும்" என்று கூறிக் கொண்டே அகில் அவன் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் வர நினைத்தான். ஓமம் கலந்த பன்னீரின் நறுமணம் அடுக்களையிலிருந்து அவன் எழுந்த நொடியில் இருந்து வந்து கொண்டிருந்தது. மணி எட்டு, இனி ஒவ்வொரு நிமிடமும் அவன் கடிகாரம் காண்பிக்கும் முன்...
    சிற்பமும் அவள் சிற்பியும் அவள்   பல வருடங்களுக்கு முன்பு... எந்த வருடம்???? அது ரகசியம்... ஆனால் பின்னால் வருடத்தின் விபரம் தரப்படும். "கவி, கவி உனக்கு எத்தனை தடவை சொல்வது, கூப்பிட்டதும் சாப்பிட வர முடியாதா?" – ஸ்வேதா, கவியின் அம்மா. கவிக்கு தாயின் குரலைக் கேட்டதும் வியர்த்துக் கொட்டாத குறை. அம்மாவிடம் என்ன பொய் சொல்வது?             "நான் பிரேமிடம்...
    error: Content is protected !!