Ithazh Thiravaai
இதழ் 12
அன்று ப்ரனிஷா உயிரியல் ஆய்வகத்தில் தனியாக ஏதோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது “அம்மா” என்ற மகளின் குரலில் ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் திரும்பியவளின் பார்வை முதலில் மகளின் உடம்பை ஆராய்ந்தது. குழந்தை நன்றாக இருக்கிறாள் என்றதும் நிம்மதியுடன் மகளிடம் சென்றவள் மண்டியிட்டு அமர்ந்தபடி மகளின் இரு தோள்களையும் பற்றி, “என்ன குட்டிமா!...
இதழ் 11
ப்ரனேஷ் மருத்துவமனையில் தன் அறையில் அமர்ந்திருந்த போது சர்வேஷ் அவனை அழைத்தான்.
ப்ரனேஷ் அழைப்பை எடுத்து, “சொல்லுங்க சார்! எங்களிடம் பேசக் கூட நேரம் இருக்கிறதா?”
“நான் கேட்க வேண்டியை நீ கேட்கிற”
“திறப்பு விழாவிற்கு கூட வர முடியாத வி.வி.ஐ.பி நீங்க”
“நான் தான் சொனேனே! இன்னும் கோபம் போகலையா?”
“..”
“அதான் அம்மா வந்தாங்களே! நான் என்ன வேணும்னா...
இதழ் 10
உயிரியல் ஆய்வகத்தில் (Biology Lab) அமர்ந்திருந்த ப்ரனிஷா தன் அருகில் அமர்ந்திருந்த அன்பரசியின் கையின் மீது தன் கையை வைத்து ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடி, “அன்னைக்கு என்ன நடந்தது?” என்று வினவினாள்.
அன்பரசி தன் அழுகையை கட்டுபடுத்தியபடி, “முந்தாநேத்து சாயுங்காலம் லேபில் தான் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினேன்.. ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து ஸ்டுடென்ட்ஸ் கிளம்பியதும்...
இதழ் 9
அமுதா பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டு வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தார்.
ஆனந்தன் மனைவியின் கையை பற்றி அமர செய்து, “எதுக்கு இவ்ளோ பரபரப்பு! ப்ரனேஷை தானே பேட்டி எடுக்க வராங்க!!!!”
“ப்ரனு என்ன பண்றான்?”
“அவனுடைய ஜிம்மில் இருக்கிறான்”
“என்ன! மணி எட்டு.. ஒன்பது மணிக்கு....................”
“ஜிம் என்ன வேறு ஏதோ கிரகத்திலா இருக்குது! அவனோட அறைக்கு அடுத்த அறை...
இதழ் 8
ப்ரனேஷ் மருத்துவ முகாமிற்கு சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
இந்த முகாமின் மூலம் விதி தன் வாழ்வில் விளையாட போவதை அறியாமல் தீவிரமாக நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்.
அன்று மாலை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையில் இருந்து இனியமலரை பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு புது எண்னில் இருந்து அழைப்பு...
இதழ் 7
தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த சர்வேஷை பார்த்த அவனது ஆச்சி பழச்சாற்றை உறிஞ்சி குடித்தபடி, “என்ன பேராண்டி எதுக்கு முறைக்கிற?”
“ஏய் கிழவி.. வேணாம்.. நானே கடுப்புல இருக்கிறேன்”
“கடுப்பை அடுப்பில் போட்டுட்டு இங்க வந்து உட்காரு”
“ஏன் அதை வைச்சு சோறாக்க போறியா?” என்று வினவியவன் அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த தாத்தாவிடம், “எப்படி தாத்தா இந்த...
இதழ் 6
கோபத்துடன் நின்ற சர்வேஷ், “உனக்கென்ன பெரிய கிளியோபேட்ரா னு நினைப்பா! இந்த உலகத்தில் இருக்கும் கடைசி பெண் நீ தான் என்ற நிலை வந்தாலும் என் மனம் உன் பக்கம் சரியாது.. இந்த உணவை குழந்தைக்கு கொடு” என்றவன் அருகில் இருந்த பெஞ்சில் ஒரு கிண்ணத்தை வைத்துவிட்டு, அலறிய தனது கைபேசியை அவள்...
இதழ் 5
சர்வேஷ் அவளை சாப்பிட அழைத்ததும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். அவன் முகம் இயல்பாக தான் இருந்தது ஆனால் அவள் மனதினுள் தான் ஒரு பிரளயம் நிகழ்ந்தது. ‘இனி எந்த ஆணின் அக்கறையோ கரிசனமோ எனக்கோ என் மகளிற்கோ வேண்டாம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் இறுகிய முகத்துடன், “உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சார்...
இதழ் 4
சாரதா ப்ரனிஷா கிளம்பியதும் மகனை தான் அழைத்தார் ஆனால் அவன் அப்பொழுது வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருக்கவும் அவர் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து விஷயத்தை கூறினார். பிறகு மீண்டும் சர்வேஷை அழைத்த போது அழைப்பு போகவில்லை. அதன் பிறகு அவரது கணவரின் அன்னை உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் சாரதாவை...
இதழ் - 3
நேர்காணல் அறையினுள் சென்றதும் ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “குட் அப்ட்டர்-நூன்” என்றபடி தனது கோப்பியத்தை நடுவில் அமர்ந்திருந்த நபரிடம் கொடுத்தாள். அங்கே மூவர் அமர்ந்திருந்தனர். நடுவில் அவள் வயதை ஒத்த இளைஞன் அமர்ந்திருக்க அவனுக்கு வலதுபுறம் நாற்பதைந்து வயதில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்க, இடதுபுறம் ஐம்பத்தியெட்டு வயதில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்.
இரண்டே...
ப்ரனேஷின் மனம் எப்பொழுதும் போல் அன்றும் ‘உன் கண்கள் என்னை கண்டதும் மின்னியதே! அதில் என் மீதான பிடித்தம் கண்டேனே! அது பொய்யா! எப்படி என்னை விட்டு செல்ல மனம் வந்ததடி?’ என்று புலம்பியது.
உறங்க மறுத்த மனதை தான் அறுவை சிகிச்சை செய்ய விருக்கும் குழந்தையை முன் நிறுத்தி அடக்கினான். ஒருவாறு தூங்கி...
தடதட என்று ஓடிக்கொண்டிருந்த ரயிலின் இரைச்சலுக்கு இணையாக அதனுள் இருந்த மக்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மடியில் அமர மறுத்து திமிறிக் கொண்டிருந்த மகளை அடக்க முயற்சித்து தோற்ற ப்ரனிஷா மெல்லிய குரலில், “அபி குட்டி சமத்தா உட்கார்ந்து இருந்தால் அம்மா சாக்லேட் தருவேன்”
“சாத்தி(சாக்கி) தா பாப்பா உத்தார்(உக்கார்)” என்று மழலை குரலில்...