Ithazh Thiravaai
இதழ் 16
ப்ரனேஷின் கணிப்பு மிகவும் சரியே! ப்ரனிஷா மகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்த போது, வண்டியில் இருந்து இறங்கிய ப்ரனேஷை பார்த்தாள். பார்த்த நொடியே அவனை அவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. முன்பு அவனை ஒருமுறையாவது பார்க்க முடியாதா என்று ஏங்கிய அவளது மனம் முதலில் அடைந்தது மகிழ்ச்சியே. அவனிடம் போய் பேசலாமா என்று...
ப்ரனேஷின் மனம் எப்பொழுதும் போல் அன்றும் ‘உன் கண்கள் என்னை கண்டதும் மின்னியதே! அதில் என் மீதான பிடித்தம் கண்டேனே! அது பொய்யா! எப்படி என்னை விட்டு செல்ல மனம் வந்ததடி?’ என்று புலம்பியது.
உறங்க மறுத்த மனதை தான் அறுவை சிகிச்சை செய்ய விருக்கும் குழந்தையை முன் நிறுத்தி அடக்கினான். ஒருவாறு தூங்கி...
இதழ் 9
அமுதா பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டு வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்தார்.
ஆனந்தன் மனைவியின் கையை பற்றி அமர செய்து, “எதுக்கு இவ்ளோ பரபரப்பு! ப்ரனேஷை தானே பேட்டி எடுக்க வராங்க!!!!”
“ப்ரனு என்ன பண்றான்?”
“அவனுடைய ஜிம்மில் இருக்கிறான்”
“என்ன! மணி எட்டு.. ஒன்பது மணிக்கு....................”
“ஜிம் என்ன வேறு ஏதோ கிரகத்திலா இருக்குது! அவனோட அறைக்கு அடுத்த அறை...
இதழ் 28
ப்ரனிஷா அவள் வீட்டில் விழி பிதுங்கியபடி அமர்ந்திருக்க, அவள் அருகே அவந்திகா பாவம் போல் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த கீதா ப்ரனிஷாவை விடாமல் திட்டிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் ப்ரனிஷா ‘அப்பாடா தப்பிச்சேன்’ என்ற எண்ணத்துடன் எழ போக,
சுட்டு விரலை நீட்டி, “எழுந்த கொண்ணுடுவேன்” என்று மிரட்டிய கீதா...
சுகுணா, “ஏதோ ஒன்னு! தொடர்பு இருப்பதை நீங்களே ஒத்துக்கிறீங்க! அப்பறம் என்னை ஏன்......................”
“அது எப்படி! நேர்வழி தொடர்பும் கள்ளத் தொடர்பும் ஒன்றா?”
“அப்படியே என்ன தொடர்பு என்பதை சொல்ல வேண்டியது தானே!” என்று சுகுணா இகழ்ச்சியுடனும் நக்கலுடனும் கூற,
ப்ரனேஷ் புன்னகையுடன், “கணவன் மனைவி என்ற தொடர்பு தான்”
“என்னது!!!” என்று சுகுணா அதிர்ச்சியடைய, மற்றவர்கள் தங்களுக்குள் ஏதோ...
இதழ் 12
அன்று ப்ரனிஷா உயிரியல் ஆய்வகத்தில் தனியாக ஏதோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது “அம்மா” என்ற மகளின் குரலில் ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் திரும்பியவளின் பார்வை முதலில் மகளின் உடம்பை ஆராய்ந்தது. குழந்தை நன்றாக இருக்கிறாள் என்றதும் நிம்மதியுடன் மகளிடம் சென்றவள் மண்டியிட்டு அமர்ந்தபடி மகளின் இரு தோள்களையும் பற்றி, “என்ன குட்டிமா!...
“அண்ணா! அண்ணா.. என்னை விட்டுட்டு போகாத ணா.. என்னை ஏன் ணா தள்ளிவிட்ட! என்னையும் உன்னுடன் கூட்டிட்டு போயிருக்கலாமே! ஏன் ணா இப்படி பண்ண! நீ இல்லாம தனியா நான் எப்படி இருப்பேன்? ஏன் இப்படி பண்ண!” என்று உயிரற்ற உடலை உலுக்கியபடி கதறி அழுதாள். அவளது கதறலை பார்த்து அந்த நண்பன் கண்களில்...
இதழ் 13
வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர் அறை செல்ல மனமில்லாமல் உயிரியல் ஆய்வகத்தில் அமர்ந்திருந்த ப்ரனிஷா அருகே அமர்ந்த அன்பரசி, “ஹாட் அண்ட் டாப் டாபிக் நீ தான்”
“தெரிந்தது தானே!”
“யாரும் உன் பர்சனல் விஷயம் பேசலை..”
ப்ரனிஷா சிறு ஆச்சரியத்துடன் நோக்க, அன்பரசி புன்னகையுடன், “நிஜம்.. சுகுணாவிற்கு நீ கொடுத்த அரை பற்றியும் சர்வேஷ் சாரிடம்...
இதழ் 17
வீட்டிற்கு சென்ற இனியமலர் என்ற ப்ரனிஷாவின் மனதினுள் அலை அலையாக கடந்த கால நினைவுகள் எழுந்து அவளை மூழ்கடித்தது.
எவ்வளவு நேரம் பழையதை நினைத்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்தாளோ! அவளது சிந்தனையை கலைப்பது போல் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
கதவை திறந்தவள் வெளியே நின்றுக் கொண்டிருந்த அன்பரசியை பார்த்ததும், “அபி எங்க?”
“இப்போ மணி என்ன?”
“என்ன?”
“மதியம்...
இதழ் 19
அசோக்கின் அன்னை சரிந்ததும் மீண்டும் கூட்டம் பரபரப்பாக, மருத்துவர் பரிசோதித்து அவரும் உயிருடன் இல்லை என்று கூறவும் அசோக்கின் தந்தை இடிந்து போய் அமர்ந்தார்.
ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருப்பான் என்று கூறிய மகனின் திடீர் மரணம் அசோக்கின் அன்னையை வெகுவாக தாக்க அவரின் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தியது.
அசோக்கின் உடல்...
இதழ் 30
வரவேற்ப்பு விழாவிற்கு அவர்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்களையும் ஆனந்தனின் நட்பு வட்டாரத்தையும் ப்ரனேஷின் நட்பு வட்டாரத்தையும் அழைத்திருந்தனர். கூடவே சில மிக நெருங்கிய உறவுகளையும் அழைத்திருந்தனர். கீதா மற்றும் விமல் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
ப்ரனிஷா லண்டனில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்ற போது ப்ரனேஷும் ப்ரனிஷாவும் லண்டனில் காதல் திருமணம் செய்துக் கொண்டதாகவும் சில...
இதழ் 18
இனியமலர் குனிந்த தலை நிமிராமல் கலங்கிய கண்களுடன் வந்திருந்தவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு தன் அறைக்கு செல்ல திரும்ப நாகேஸ்வரி அவள் கையை பிடித்து நிறுத்தினார். முதல் முறையாக அவர் கையை தட்டிவிட்டு சென்றாள்.
நாகேஸ்வரி, “சின்ன பெண் இல்லையா! வெக்கப் படுறா” என்று சமாளித்தார். அவளை பெண் பார்க்க ப்ரனேஷின் நண்பன் அசோக்கும் அவனது...
அபி, “நீங்த(நீங்க) என் துடவே(கூடவே) இருத்தியா(இருக்கியா) ப்ளீஸ்? திச்சா(கிச்சா) தச்சு தாம்(ராம்) எல்லாம் அப்பா பாத்தி தாத்தா எல்லா இருத்தா(இருக்கா).. அபி பாப்பா யாரும் இல்ல”
ப்ரனிஷா வேதனையுடன் கண்களை மூடி திறக்க, குழந்தையின் ஏக்கத்தை கண்டு மற்றவர்கள் மனமும் வருந்தியது.
அமுதா கண்ணில் கண்ணீருடன் மண்டியிட்டு அமர்ந்து குழந்தையை வாரி அணைத்து, “தங்கமே!” என்றார்.
பிறகு குழந்தையை...
இதழ் 22
சர்வேஷ் அறைக்கு சற்று தள்ளி இருந்த மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்த ப்ரனிஷா சர்வேஷ் அறைக் கதவை தட்டினாள். அவனது அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றாள்.
என்ன தான் அவள் தண்ணீர் குடித்து தன் மனதை சமன் செய்திருந்தாலும் அவளது முகத்தை கண்டு ‘ஏதோ சரி இல்லை’...
இதழ் 10
உயிரியல் ஆய்வகத்தில் (Biology Lab) அமர்ந்திருந்த ப்ரனிஷா தன் அருகில் அமர்ந்திருந்த அன்பரசியின் கையின் மீது தன் கையை வைத்து ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடி, “அன்னைக்கு என்ன நடந்தது?” என்று வினவினாள்.
அன்பரசி தன் அழுகையை கட்டுபடுத்தியபடி, “முந்தாநேத்து சாயுங்காலம் லேபில் தான் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினேன்.. ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து ஸ்டுடென்ட்ஸ் கிளம்பியதும்...
இதழ் 21
அடுத்த நாள் காலையில் ப்ரனிஷா தெரு வாசலில் கோலம் போடுவதற்காக கதவை திறந்த பொழுது வெளியே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரனேஷை கண்டு கனவோ இல்லை பிரம்மையோ என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “கனவில்லை நிஜம்.. குட் மார்னிங் பேபி”
அவள் கண்களை விரித்து பார்க்கவும், அவன், “உன் வாயை...
இதழ் 4
சாரதா ப்ரனிஷா கிளம்பியதும் மகனை தான் அழைத்தார் ஆனால் அவன் அப்பொழுது வேறு ஒருவருடன் பேசிக் கொண்டு இருக்கவும் அவர் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து விஷயத்தை கூறினார். பிறகு மீண்டும் சர்வேஷை அழைத்த போது அழைப்பு போகவில்லை. அதன் பிறகு அவரது கணவரின் அன்னை உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் சாரதாவை...
இதழ் 25
தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த ப்ரனிஷா கண்டது தன் எதிரே கன்னத்தில் கை வைத்தபடி தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அன்பரசியை தான்.
ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “என்ன?”
கன்னத்தில் இருந்து கையை எடுத்தபடி, “அப்ப்ப்பா ட்ரீம்ஸ் விட்டு வெளியே வந்துட்டியா! அவந்தி போடுறதை ரெண்டு காபியா போடு! உன் அக்கா கனவு கண்டு டயர்டா...
இதழ் 8
ப்ரனேஷ் மருத்துவ முகாமிற்கு சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
இந்த முகாமின் மூலம் விதி தன் வாழ்வில் விளையாட போவதை அறியாமல் தீவிரமாக நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்.
அன்று மாலை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையில் இருந்து இனியமலரை பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு புது எண்னில் இருந்து அழைப்பு...
கீதா அவந்திகாவை பார்த்து, “உன் பிளான் என்ன?”
“மற்ற டாக்டர்ஸ் கூட சேர்ந்து இன்னைக்கு கிளம்புறதுக்கு எனக்கு ட்ரெயினில் டிக்கட் இருக்குது கா”
“சரி” என்றபோது அங்கே வந்த ப்ரனிஷா, “நான் அவரை பார்த்துட்டு வரேன்” என்றாள்.
கீதா, “சரி” என்றதும் கிளம்பியவள் வெளியே சென்றதும் கைபேசியில் ப்ரனேஷை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்து, “நான் இப்போ வீட்டில் தான்...