Ennithayam Keta Aaruthal
அத்தியாயம் –19
எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இளம்பரிதி நினைத்துக் கூட பார்க்கவில்லை, தனக்கு வாழ்வில் இப்படியொரு சூழல் வரும் என்று. தானுண்டு தன் வாழ்வுண்டு என்று வாழ...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2
“என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’
என்றுதான் பார்த்தான் அருண்.
இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை.
கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு இவ்விசயமே தெரியாது, இவனுக்கோ உடன்
பாடு இருப்பதாய் தெரியவில்லை.
இதில் வீட்டினர் சொல்லி கேட்காதவன் தான் சொல்லி கேட்பானா?!!
அப்படி என்ன இந்தத் திருமணம்...
அத்தியாயம் - 25
கிட்டத்தட்ட இரண்டு மாதம் கடந்திருந்தது...
அனைவரும் எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், யாருமே எதிர்பாராத சில கசப்புக்களும் நடந்தது நிஜமே..
கோபி, ரேணு மற்றும் நிகிலோடு வெளிநாடு சென்றுவிட்டான். ஆஸ்திரேலியா. அங்கே அவரின் நண்பர் குடும்பம் பல வருடங்களாக ஹோட்டல் தொழில் நடத்தி வர, அவரிடம்...
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 7
அருணுக்கு துணிந்து எந்தவொரு
முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை.
அவனின் மனது வேண்டாம் என்ற பக்கமே வேகமாய் சென்றுகொண்டு இருக்க, வீட்டிலோ இவனின்
மௌனம் கண்டு நல்லமுடிவாய் சொல்லப் போகிறான் என்றெண்ணி
சரோஜா, ரேனுவிடம் “ஆள் விட்டு
வீடெல்லாம் கொஞ்சம் சுத்தம் செய்யணும்... தட்டு மாத்துறது அவங்க...
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 15
இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.
சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட.
தயக்கமும் கூட.
“வா... வாங்கத்தை... வாங்கக்கா...”
என்றவளுக்கு அதை தாண்டி பேச்சு வரவில்லை.
பிருந்தா முன்னிலையில் இளம்பரிதியோடு
பேசவே அவளுக்கு மனதில் ஓர் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்ததுதான். என்ன
இருந்தாலும் அருண் அவளின் தம்பி அல்லவா.. தம்பியை மணக்க இருந்தவள்,...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 12
இளம்பரிதியின் கரத்தினை வானதி இறுகப்
பற்றியிருக்க, அது அவள் தெரிந்து செய்தாளோ, இல்லை அவளையும் அறியாது நடந்த ஒன்றோ
தெரியாது. ஆனால் இது தெரிந்த இளம்பரிதிக்கோ சற்றே திக்கென்று தான் இருந்தது.
முதலில் வானதி திருமணத்திற்கு, அதாவது
இளம்பரிதியை திருமணம் செய்ய சரி என்பாள் என்றே அவன் நினைக்கவில்லை. எப்படியும்
அவள் மாட்டேன் என்பாள்...
அத்தியாயம் – 29
பறவைகளின் ஒலியைத் தவிர அங்கே வேறெதுவும் இல்லை. அப்படியொரு நிசப்தம். நால்வரின் மனதிலுமே கலவையான எண்ணங்கள். வானதிக்கு தான் கேட்டது எல்லாம் நிஜம்தானா என்பது போல இருந்தது.
‘இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?!’ என்று தோன்ற, அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.
ஆம்! சரோஜா எல்லாம் சொல்லியிருந்தார் அவளிடம்.
“தப்பு பண்ணது கோபி.. அதை மூடி மறைச்சது...
அத்தியாயம் - 26
இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல யாருமே எதிர்பாரா ஒன்று.
அதுதான் இளம்பரிதி – வானதி இருவருக்கும் நடந்தேறிய பிளவு...!
ஆம்..! பிளவு தான்....
பிரிவு என்பதனை தாண்டி அதை...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3
“வானதிம்மா...” என்றபடி ராதா
வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி...”
என,
“அடடா என்ன வரவேற்பு எல்லாம் பலமா
இருக்கே.. விட்டா மாலை மரியாதை எல்லாம் செய்வீங்க போல...” என்று சொல்லி சிரிக்க,
மற்றவர்கள் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன இப்போ.. நான் இப்படி வாசல்லயே
நிக்கனுமா இல்லை...”...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 11
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை…”
தூரத்தில்
எங்கோ இந்த பாடல் வரிகள் கேட்க, இளம்பரிதிக்கு இவ்வரிகள் செவியில் விழுந்த நொடி
மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் ‘எத்தனை நிதர்சனம் இது...’ என்று
பின்னே
நடந்தவைகள் அனைத்தும் யாரும் நினைத்திராதவை அல்லவா...!
தன்
புறங்கையை நெற்றி மீது வைத்து கொட்ட கொட்ட முழித்து படுத்திருந்தான். அவனுக்கு
அருகே...
அத்தியாயம் – 27
இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான்.
மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு கிளம்பினாள்தான். என்ன பிருந்தாவிடம் முகம் கொடுத்து பேசிட முடியவில்லை. அதெப்படி முடியும் அவளுக்கு?!
இளா ஆவலாய் அவள் முகம் பார்க்க, அவளோ...
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 4
அருண் மட்டும் இப்போது இளாவின் முன்
இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு.
அப்படியொரு கோபம் அவன் மீது வந்தது. இப்படி இவனால் தான், தற்போது தனகிந்த
தர்மசங்கடம் என்று இளா எண்ண, அவன் கையில் கார் படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தது.
வானதியைக் கொண்டு போய் வெற்றிவேலன் வீட்டில்...
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 9
ஒருபக்கம் நிச்சய வேலைகள்
பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக
மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது.
வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு
சரோஜா வேறு “அருண் வேற இளா வேறன்னு நாங்க நினைக்கல.. என்னவோ.. இளாக்கு அங்க வேலை
செய்ய பிடிக்கல.. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா...
மறுநாள் காலை உணவு வேலை
முடிந்து, அனைவரும் கோவில் கிளம்பிட,
திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர்
காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு இருந்தார்.
அவனோ “ம்மா இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு
என்ன.. இப்போ கிளம்பிட்டு சொன்னா எப்படிம்மா??!!” என்று சொல்ல,
“இப்போதான்டா நியாபகம் வந்துச்சு..”
என்று சரோஜா சொல்ல,
வெற்றிவேலனோ “சொல்றதை...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6
வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி
பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா
என்ன?!! எப்படியும் பிருந்தா அடுத்து இளாவிற்கு தான் அழைப்பாள் என்று தெரியும் ஆக,
அவள் பேசும் முன்னம் தான் பேசிவிட வேண்டும் என்று அருண் நினைக்க,
இளம்பரிதிக்கு விடாது பிருந்தாவும்,
அருணும் அழைப்பு விடுக்க, ‘அட...
என்னிதயம் கேட்ட
ஆறுதல் - 10
சுற்றி இருக்கும் ஆட்கள்
பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை
எனில், வேறெங்கிலும் செல்லலாம். ஆனால், நமக்குள்ளே தோன்றும் எண்ணங்களே நமக்கு
பிடிக்கவில்லை எனில்?
என்ன செய்திட முடியும்??!!
எங்கு சென்று ஓடி ஒழிய முடியும்??!!
வானதி ‘ஜிங்கிள்ஸ்...’லும்,
இளம்பரிதி ‘மருந்துக்கள்’ ன் பின்னேயும் சென்று தங்களை புகுத்திக்கொண்டனர்..
நேரம் காலம்...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5
‘வானதியா??!!!’ என்று அருணின்
உள்ளம் திடுக்கிட, “அ..!! அ... சொல்லுங்க...” என்றான் தன் பதற்றம் மறைக்க
பெரும்பாடு பட்டு.
இருந்தும் அது வானதிக்கு நன்கு
தெரிந்து விட “கூல்...” என்றாள் மெதுவாக.
அருணோ இதற்கு தான் என்ன பதில் சொல்ல
என்பதுபோல் விழித்து நிற்க “ஆக்சுவலி... உங்களோட நான் கொஞ்சம் பேசணும்...” என்று
அடுத்து வானதி...
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8
இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம்
என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான்
நினைவில் வந்து அவனை இம்சித்தது.
“நான் செய்றேன்...” என்று அவனின்
திருமணத்தையும் அவர் முன் நின்று நடந்த முயல, அது அவனுக்கு கசக்கத்தான் செய்தது.
இருக்காதா பின்னே..!!
எத்துனை பெரிய பாவம் அவனை செய்ய
வைத்திருக்கிறார்..
என்ன புரண்டு படுத்தாலும், அவனால்
முடியவில்லை..!!
எழுந்து...
அத்தியாயம் – 18
கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று என்றால்?!
மகன் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்த நொடியில் அவனை கண்டித்திருந்தால், தண்டித்திருந்தால் இப்போது கோபிக்கு இப்படியான சிந்தனை வந்தே...
“ஷ்..!! சத்தம் போடாதே...” என்று
ஹஸ்கி வாய்சில் சொன்னவன், “கொஞ்ச நேரத்துல உனக்கு அப்படியா பறக்குற மாதிரி
இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று கண்களை சொருகவிட்டு சொல்ல,
பயமாகிப் போனது வானதிக்கு.
இவன் சீரழிந்தது போதாது என்று,
என்னையும் இதற்கு பழக்கம் செய்யப் பார்க்கிறானா??!!
நானா..??!!
நோ....
அவன் சொன்ன அந்த ‘கொஞ்ச நேரம்...’
அது வருவதற்குள், இவனிடம் இருந்து வெளி செல்ல வேண்டும் என்று துரிதமாய்
நினைத்தவள்,...