நெஞ்சம் பேசுதே
நெஞ்சம் பேசுதே 08
வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல் அமைதியாக உணவை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.
அவன் சென்றதும் தானும் அமர்ந்து உண்டவள் தனது அறைக்கு சென்று...
நெஞ்சம் பேசுதே 13
மழை அடித்து ஓய்ந்த இடம் போல மயான அமைதியைச் சுமந்திருந்தது விசாலத்தின் வீடு. திருமகள் அழுது சோர்ந்து போனவளாக, வீட்டின் பின்கட்டில் சென்று அமர்ந்திருந்தாள். விசாலம் முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, வாசுதேவகிருஷ்ணன் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
காலையில் திருமகளின் வீட்டிற்கு சென்றிருந்த ராகவன்...
நெஞ்சம் பேசுதே 14
சட்டென்று தலைதூக்கிய கோபத்துடன் மனைவியை உறுத்தவன் உறங்கி கொண்டிருந்தவளை பூவாக கையில் அள்ளிக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். திரு அரைகுறை உறக்கத்தில் இருந்ததால், அவன் தொடுகையில் பட்டென விழித்துக் கொள்ள, அவன் கையிலிருந்து விடுபட முயன்றாள் அவள்.
அவள் மறுப்பை அலட்சியம் செய்து வெகு சுலபமாகவே அவளை அறைக்குள் தூக்கி வந்திருந்தான்...
ஆனால், அதே மனோகர் எந்த இடத்திலும் அவன் தாய் தந்தையையும் விட்டு கொடுத்தது இல்லை. திருமணம் முடிந்த நிமிடம் நேராக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான் அவன். அவன் வீட்டிலும் ஆயிரம் ஏச்சு பேச்சுக்கள் இருந்தாலும், இவர்களை வெளியே துரத்தாமல் வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள, புகுந்த வீட்டை நினைத்து பெருமைதான் அந்த நேரம்.
அப்போதுகூட...
காலை நன்கு விடிந்தபின்னும் அவள் அப்படியே அமர்ந்து தலையை கால் முட்டியில் புதைத்திருக்க, விசாலம் மருமகளுக்காக காத்திருந்தவர் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்திருந்தார். திருமகள் அமர்ந்திருந்த நிலையே இரவு நடந்ததை எடுத்து கூறிட, "நாச்சியா.." என்று வேகமாக அழைத்துக் கொண்டே அவளை நெருங்கியவர் "என்னம்மா.. ஏண்டி இப்படி இருக்க. என் கண்ணு என்னடி ஆச்சு.....
நெஞ்சம் பேசுதே 22
எப்படியோ ஒருவழியாக திருமகள் நாச்சியாரை சரிகட்டி, வாசுதேவன் தன்னுடன் அழைத்து வந்துவிட, வீட்டை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத அச்சம் வியாபித்துக் கொண்டது திருமகளை.
விசாலத்திடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறியது இந்த நிமிடம்தான் உரைத்தது அவளுக்கு. கால்கள் தயக்கத்துடன் தந்தியடிக்க, உள்ளே செல்வதா.. இல்லை, இப்படியே ஓடிவிடுவோமா என்று ஏககுழப்பம் பெண்ணுக்கு.
விசாலத்தின் வாய்...
நெஞ்சம் பேசுதே 02
திருமகள் நாச்சியார் வீடு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க, அவசரமாக தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவள் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள். அங்கே சற்று விஸ்தாரமாக விரிந்திருந்தது அந்த மாட்டுத் தொழுவம். அவள் வந்த வேகத்தைப் பார்த்து "நாந்தேன் இருக்கேன்ல.. நீ ஏன் தாயி இப்படி...
நெஞ்சம் பேசுதே 07
மூன்று நாட்களுக்கு முன்பாக ஊர்சபையில் நடந்ததை முற்றிலும் மறந்தவளாக திருமகள் நாச்சியார் வலம்வர, நடந்த எதையும் மறக்க முடியாமல் அறைக்குள் அடைந்திருந்தான் முரளி. மூன்று நாட்களுக்கு முன் பஞ்சாயத்து முடிந்து வீடு வந்த நிமிடமே அவன் அண்ணி அவளது பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.
இந்த மூன்று ஆண்டுகளாக பரமசாது என்று பெயர்...
நெஞ்சம் பேசுதே 16
வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.
அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, "இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது." என்று முடிவெடுத்துக்...
வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.
"ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது. பஞ்சாயத்துக்கு வரவும் தான் நிதானமா பேசிட்டு இருக்கேன். இல்ல, உன்னையும் உன் மகனையும்...
திருமகளை கேட்கவா வேண்டும்... அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது.
இருவரும் உள்ளே சென்று மீண்டுமொருமுறை வணங்கி முடிக்க, இம்முறை அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை வாசுதேவனிடம் நீட்டினாள் திருமகள். வாசுதேவன் அவள் செயலில்...
வந்தவுடன் "என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்க.." என்று அவள் கேட்டதை மறக்க முடியவில்லை திருமகளால். அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தமாக கோதையை ஒதுக்கியிருந்தது அவள் மனம்.
அவள் அமைதியாக விசாலத்தின் அருகில் வந்து நிற்க, விசயத்திற்கு ஏகத் திருப்தி அவளது செயல். கோதையை பார்த்து நொடித்துக் கொண்டவர் "வா.." என்று மருமகளின் கையைப்...
நெஞ்சம் பேசுதே 15
திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக பதில்களையும் வேண்டி நிற்கவில்லை அவள்.
அவன் தேவைகளை அழகாக கவனித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க மட்டும் மறுத்தாள். வாசுதேவகிருஷ்ணனும்...
“நீ முடிவேடு திரு.. என் பொண்டாட்டி எந்த விஷயத்துலயும் தப்பு பண்ணமாட்டா.. நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான்.. ஆனா, என்னை வச்சு முடிவெடுக்காத..”
“ஒருவிதத்துல உன் அக்கா எனக்கு செஞ்சது நல்லதுதான். அவளாலதான் திரு கிடைச்சிருக்கா எனக்கு. அதுக்காகவே நான் அவளை மன்னிச்சுட்டேன்..”
“நீயும் எனக்காகன்னு யோசிக்காம, உன் அக்காவை யோசி..”...
நெஞ்சம் பேசுதே 11
வாசுதேவகிருஷ்ணனும் திருமகள் நாச்சியாரும் இருவர் ஒருவராக கலந்து ஒரு வாரம் கடந்திருக்க, வழக்கம் போல் ஒரு அவசரமான காலை வேளை தான் அது. முதல் நாளுக்கு பிறகு காலையில் தாமதமாக எழுவதை தவிர்த்து விட்டிருந்தாள் திரு. தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டவள் வாசுதேவகிருஷ்ணனுக்கு அலைபேசியியில் அழைக்க, எடுக்கவே இல்லை அவன்.
...
நெஞ்சம் பேசுதே 20
திருமகளை அவள் வீட்டில் விட்டு வாசுதேவகிருஷ்ணன் தன் வீட்டை அடைய, விசாலமும், ராகவனும் விழித்தே இருந்தனர். மகன் வீட்டிற்குள் நுழையவும் "கண்ணா... நாச்சியா எங்கே? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?" என்றார் ராகவன்.
விசாலம் அதே கேள்வியை விழிகளில் தாங்கி மகனைப் பார்த்திருக்க, "அவ்வ வ்வ்வீட்ல இருக்காப்பா.. ஆஅங்கே இஇஇஇருக்கட்டும்.." என்றான்...
நெஞ்சம் பேசுதே 09
அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால், அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் தன் மௌன கவசத்தை அணிந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமகள் நாச்சியார் ஏக்கத்துடன் பார்த்து நின்ற போதும்,...
நெஞ்சம் பேசுதே 06
வீட்டின் முற்றத்தில் காலை நீட்டி திருமகள் அமர்ந்திருக்க, அவள் கால்களில் தலைசாய்த்து படுத்திருந்தான் ரகுவரன். திருமகள் காலையில் முரளி தன் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், விசாலத்தின் எதிர்வினை, தனது திடீர் திருமணம் வரை ஒன்றுவிடாமல் நிதானமாக கூறி முடித்தாள்.
முழுதாக கேட்டு முடித்தவன் "இப்பவும் இது அத்தையோட...
நெஞ்சம் பேசுதே 04-1
விசாலம் அறைந்ததில் கீழே விழுந்த நாச்சியாளுக்கு "இனி இவர் வார்த்தைகளை வேறு கேட்க வேண்டுமா.." என்ற எண்ணமே துயரத்தைக் கொடுத்தது. எப்போதும் அவளை வலிக்க வைக்கவே பேசுபவர் தானே. இன்று இத்தனை இலகுவாக சந்தர்ப்பம் கிடைத்திருக்க விட்டு விடவா போகிறார் என்று நினைக்கையிலேயே தனது நிலையை மிகவும் கீழாக உணரத்...
வாசுதேவகிருஷ்ணன்- திருமகளின் நிறைவான வாழ்வு ஐந்தாண்டுகளை கடந்திருக்க, அவர்கள் அன்புக்கு சாட்சியாக நான்குவயதில் திருமகளின் மறுஉருவமாக வந்து பிறந்திருந்தான் வம்சி.. வம்சி கிருஷ்ணா.. பேச்சு, செயல், நடவடிக்கைகள் என்று அத்தனையிலும் திருமகள்தான் அவன்.
அதனால் தானோ என்னவோ விசாலத்திற்கும் அவனுக்கும் ஒத்துபோவதே கிடையாது. எப்போதும் விசாலத்திடம் சரிக்கு சரி நிற்பான் பேரன். "அப்படியே அவளை...