Sunday, May 26, 2024

    கட்டி முத்தமிடு

    அத்தியாயம் 1 தனது சைக்கிளுக்கு புது ஸ்டான்ட் போடுவதற்காக சைக்கிள் கடைக்கு காலை 8 மணிக்கெல்லாம் நிஷா வந்துவிட்டாள். "என்னமா? ஒரு வழியா ஸ்டான்ட் போட முடிவு பண்ணிட்டியா? ஒரு வருஷமா ஸ்டான்ட் மாத்தாமலேயே கடத்திட்டியே? சைக்கிளுக்கு காத்தடிக்கும்போது எத்தனை நாள் புது ஸ்டான்ட் போடுன்னு கேட்டுருப்பேன்… இன்னிக்கி தான் நல்ல நாளா?" "நேரமாகுமாண்ணே?" "அரை மணி நேர வேலை...
    "வீட்டுக்குள்ள வாங்கன்னு பாலண்ணா கூப்பிடுறாரு... ஆனா ஜனா உள்ளேயே நுழைய மாட்டேன்னு சொல்லிடுச்சு. அவர் மனசுல என்ன நினைப்பாரு? பாலண்ணாவோட ரெண்டாவது பையனுக்கு ஒரு வயசு தான் ஆகுது… எனக்கு அவன் கூட விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு. இந்த ஜனா தான் எங்களையும் பிடிச்சி இழுத்துட்டு வந்துருச்சு.." ப்ரதீபா நிஷாவிடம். "ப்ரதீபா போதும்... இந்தப் பேச்சை...
    அத்தியாயம் 9 நிஷா வேலவன் சூப்பர்மார்கெட்டில் பணிக்குச் சேர்ந்து அன்றோடு சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஜனாவை 'சார்' என்று அழைப்பதை அடியோடு விட்டுவிட்டாள் நிஷா. இந்த ஒரு மாத காலத்தில் ஜனா, நீ, வா, போ... என்று கூட அழைத்துப் பழக கற்றுக்கொண்டாள் நிஷா. செல்வலட்சுமி ஏதோ விவரம் கேட்பதற்காக ஜனாவை அழைக்க, தனது கைபேசியில் கஸ்டமருடன் பேசிக்கொண்டு...
    இரவு 10 மணிக்கு ப்ரதீபாவை தனது பைக்கில் ஜனா அழைத்துச்சென்றபோது, "ஜனா அண்ணா என் மேல கோபமா இருக்கியா?" என்று ப்ரதீபா கேட்டதற்கு பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தான் ஜனா. சைலன்ட்டில் இருந்த  கைபேசி வைப்ரேட் ஆனதும் யார் அழைப்பது என்று எடுத்துப் பார்த்தான். ஜனாவின் அண்ணன்தான் அழைத்தது. உடனே அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டே பைக்கை...
    அத்தியாயம் 7 நிஷாவை நந்தினி பேக்கரியில் பார்த்தப்பிறகு குமார் அண்ணனிற்கு மனமே கனத்துவிட்டது. குமார் அண்ணன் அன்று முதல் வேலையாக நிஷாவைப் பார்க்க நந்தினி பேக்கரிக்குத் தான் சென்றார். "என்னமா நிஷா? நீ எதுக்கு இங்க வேலை பார்க்கிற?" என்று குமார் அண்ணன் கேட்டுக்கொண்டிருந்தபோது ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் நந்தினி பேக்கரிக்குள் நுழைந்தனர். அவர்கள் குமார் அண்ணனைப் பார்த்து திருதிருவென...
    அத்தியாயம் 10 "காசிம் எங்க போய்ட்டான்?" - ஜனா கேட்டான். "அருண் கூட மகாலட்சுமி மஹால்ல கல்யாண சரக்கை இறக்கி வைக்கப் போயிருக்கான்." என்றாள் ப்ரதீபா. "சரி அப்ப நானும் மண்டபத்துக்குப் போறேன். அவங்க ரெண்டு பேரும் தனியா அவ்வளவு சாமானையும் இறக்கிட்டு இருப்பாங்க." என்ற ஜனா தனது பேட்டரி வண்டியை ஸ்டார்ட் செய்தான். நேராக மண்டபத்திற்குச் சென்ற ஜனா...
    சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக…. ******* காலை ஏழு மணி: காய்கறி மார்கெட்... ப்ரதீபாவின் அன்னை தேவியும் செல்வலட்சுமியின் அன்னை திலகமும் இருவரையும் அழைத்துக் கொண்டு அன்று ஒரே ஆட்டோவில் காய்கறி மார்க்கெட் சென்றார்கள். வாரம் ஒருமுறை மொத்த மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்று மொத்தமாக காய்கறி வாங்குவது அவர்களது பழக்கம். ப்ரதீபாவின் அன்னை தேவி அங்கு எல்லோருக்கும் நல்ல பழக்கம். அவரைத்...
    வேகமாக அருணிடம் வந்த அவனது அன்னை, "மஹாவுக்கு தீட்டு பட்டிருக்கு. இப்பவே ஆஸ்பத்திரி போகணும்டா. ஒரு ஆட்டோ பிடி." என்றார். ஜனாவும் அருணும் ஓடிச் சென்று ஆட்டோ பிடித்தனர். அருண்  தான் ஆட்டோவிற்கு 200 ரூபாய் பணம் கட்டினான். மருத்துவமனைக்குள் நுழைந்த நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவனது கையில் மெடிக்கல் பில் ஒன்று ...
    அத்தியாயம் 11 அருண் திருமணம்... திருமணத்திற்கு சென்ற ஜனாவிற்கு அன்று தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அருணின் மனைவி மகாலட்சுமி ஜனாவிற்கு தூரத்து உறவு முறையில் உறவு என்ற விஷயமே ஜனாவிற்கு திருமணத்தன்று தான் தெரிந்தது. இன்னும் சற்று போனஸ் தகவலாக நிஷாவும் அவனுக்கு தூரத்து உறவு தான் என்று அன்று தெரிந்துகொண்டான். ஜனாவின் அன்னையுடன் பிறந்தவர்கள்...
    அடுத்த டிராலியை நிஷா எடுத்துக்கொண்டு வந்தாள். "இப்ப நான் வாசிக்கிறேன். நீ சாமான் எடு." என்று கூறி நிஷாவின் கையில் இருந்த பில்லை வாங்கிக்கொண்டான் ஜனா. "அச்சோ... எனக்கு பலசரக்கோட பேருகூடத் தெரியாதே?" "பழகிக்கோ. வா நான் சொல்லித் தர்றேன். தினம் இது மாதிரி ஒரு பத்து லிஸ்ட்க்கு சரக்கு எடுத்தீனா கடையே உனக்கு அத்துப்படி ஆகிடும்." "சரி ஜனா...
    அத்தியாயம் 13 வேன் காலை 8 மணிக்கு குற்றாலம் வந்தடைந்தது. அனைவரும் ஐந்தருவிக்குச் குளிக்கச் சென்றபோது அங்கு ஜனக்கூட்டமே இல்லை. அருணும் ஜனாவும் அருவியில் ஆண்கள் பிரிவில் மணிக்கணக்காக குளித்துக்கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாம் பேயாட்டம் என்று கூறுவதுபோல அருவியில் பேய் ஆட்டம் போட்டனர். உண்மையைச் சொல்லப்போனால் அந்த அருவியில் பேய்களின் கூட்டத்தை இறக்கிவிட்டிருந்தால் அவைகள் கூட சற்று குறைவாகவே ஆட்டம்...
    "சிக்னல்ல இருந்து ஹார்ன் அடிச்சுகிட்டே வர்றேன்.... வண்டியை ஸ்லோ பண்ணி நிறுத்துறியாடா?" என்று கோபமாக கேட்டபடியே தனது வண்டியை சைட் ஸ்டாண்ட் மட்டும் போட்டு நிறுத்திவிட்டு வேகமாக இருவரின் தலைக்குள்ளும் இருந்து ஏணியை உயர்த்தினான் ஜனா. "நீ தானா அது? செம்ம டிராஃபிக்கா இருந்ததா... என்னால திரும்பிப்பார்க்க முடியல... சாரிண்ணா…" – காஸிம். "உனக்கு அறிவு இருக்காடா?...
    அன்று மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. வேலவன் சூப்பர்மார்கெட்டிற்கு விடுமுறை நாள். ஆனால் பணியாட்களுக்கு விடுமுறை இல்லை. அன்று தான் புது சரக்குகளுக்கு ரேட் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். கடையில் ஒட்டடை எடுத்து ஒழுங்கு படுத்துவார்கள். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை, வேலை, வேலை மட்டுமே இருக்கும். அனைவரும் புது சரக்குகளுக்கு ஸ்டிக்கர்...
    அத்தியாயம் 6 ஒரு வருடத்திற்கு முன்பாக… மதியம் 2 மணி. வாடிக்கையாளர்களே இல்லாமல் கடைவெறிச்சோடிக் கிடந்தது. சூப்பர்மார்கெட்டின் லான்ட்லைன் போன் அடித்தது. ப்ரதீபாவும் செல்வலட்சமியும் பில் போடும்போது அடுத்தடுத்த கணினியில் தான் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து தான் கல்லாப்பெட்டி இருக்கும். அதாவது அவர்களுக்கு அடுத்ததாகத் தான் கேஷ் கவுன்டர் (cash counter) இருக்கும். பாலன் கேஷ் கவுன்டரில் தான் அமர்ந்திருப்பார். மூவருக்கும்...
    அத்தியாயம் 12 3 மணி நேரம் கழித்து தான் வருவேன் என்று சொன்ன ப்ரதீபா தான் சொன்னபடியே 3 மணி நேரம் கழித்து தான் கடைக்குள் வந்தாள். முகத்தை கழுவிக்கொண்டு தலையை பிண்ணிக்கொண்டு வந்த ப்ரதீபாவைப் பார்க்கும்போது ஜனாவிற்கு சிரிப்பாக இருந்தது. "பவுடர் பூசி கோபத்தை மறைச்சிருக்கியா ப்ரதீபா?" என்று கேட்டு அவளிடம் ஒரு இடியும் குத்தும்...
    அத்தியாயம் 2 15 அரிசி மூடைகளை குடோன் வாசலில் வைத்தப்பிறகு தான் ப்ரதீபா இன்னொரு கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். ப்ரதீபா சடச்சடவென குமார் அண்ணன் சொன்ன சரக்குகளுக்கு பில் போட, செல்வி அக்கா அவரது சரக்குகளை எடைபோட்டு அவரிடம் கொடுத்தார். "தவுடு, புண்ணாக்கு எல்லாம் விற்கிறது இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே பில் போட்டுக்கொண்டிருந்த ப்ரதீபாவிடம் குமார் அண்ணன் கேட்க, "எங்க...
    அத்தியாயம் 16 அன்று ஜனா நிஷாவின் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல நிஷாவிற்குத் தோன்றியது. எத்தனை நாட்கள் இந்த அற்ப சந்தோஷம் நிலைக்கும் என்று நிஷாவிற்குத் தெரியாது. ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அதை அனுபவிக்கவே விரும்பினாள் நிஷா. "ஜனா இந்த பில்லைப் பாரேன்... இதுல கிஸ்ஸான் டோமேட்டோ கெட்ச்அப்னு போட்டிருக்கே? அது எது?"...
    அன்று: வேலவன் சூப்பர்மார்கெட்டில் நிஷாவின் முதல் நாள்: நிஷாவின் முதல் நாள் வேலை அவளுக்கு சற்று கடினமாக இருந்தது. பலசரக்கு சாமான்களின் பெயர்களைப் படிக்கவும், அவற்றின் அளவுகளைத் தெரிந்து கொள்ளவும் அவள் கொஞ்சம் சிரமப்பட்டாள். முதல் இரண்டு நாட்கள் பாக்கெட் போடும் செக்ஷனில் சிறிது நேரம் பாக்கெட் போடச் சொன்னார் பாலன். அடுத்த இரண்டு தினங்களில் அவளுக்கு சரக்குகளுக்கு...
    மறுநாள்... மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. விடுமுறை தினம். ஆனால் அன்றைய தினத்தில் அவர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குகூட பாலன் விடுமுறை அளித்திருந்தார். "நாளைக்கு வெளியூருல முக்கியமான கல்யாண வீடு இருக்கு. நான் கண்டிப்பா போகணும். அதனால நாளைக்கு கடைக்கும் லீவு உங்க எல்லாருக்கும் லீவு... அடுத்த வெள்ளிக்கிழமை ரேட் அடிச்சி சரக்கேத்திக்கலாம்..." என்று பாலன் சொல்லவும்...
    அத்தியாயம் 8 "ப்ரதீபா, வாட்ஸ் ஆப் ஆர்டர் பில்லுக்கு சரக்கெடுக்கறேன்... ஏதாவது டவுட் வந்தா கேட்கறேன்..." என்றபடியே கையில் இருந்த பில்லிற்கு சாமான்களை எடுத்துக்கொண்டிருந்தாள் நிஷா. "சரி நிஷா." – ப்ரதீபா. அப்போது ஒரு உப்பு பாக்கெட்டை கையில் எடுத்தபோது, "ஆஹ்..." என்று பலமாகக் கத்திவிட்டாள் நிஷா. "என்ன ஆச்சு?" என்று கேட்டு கம்ப்யூட்டரில் இருந்து எழுந்து வந்தாள் ப்ரதீபா. "நேத்து...
    error: Content is protected !!