Vizhiyin Mozhi
அத்தியாயம் 43
ஜெயந்திக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து ஜெயந்தியையும் அழைத்து மனையில் அமர வைத்தனர். முதலில் நாத்தனார் தான் வெள்ளிக்காப்பு இட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, விக்னேஷை பார்த்தாள்.
விக்னேஷிற்கு சகோதரிகள் இல்லை என்பதால் திருமணத்தின் போது கயல் தான் நாத்தனார் முடிச்சிட்டாள். இப்போதும் கயலை தான் அவள் மனம் தேடியது.
அவள்...
அத்தியாயம் 07
எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு, ஒருபுறம் மல்லிகைச் சரத்தை முன்புறத் தோளில் சரிய விட்டுக் கொண்டு கிளம்பினாள்.
அவன் வெளியே கிளம்பி விடுவானோ என்ற எண்ணத்தில் அன்னையையும்...
அத்தியாயம் 36
கயல் இன்னும் அந்த அதிர்விலிருந்து வெளிவரவில்லை. உடல் சோர்ந்து விட, மீண்டும் தலை சுற்றலாகத் தோன்றியது. அன்புவின் தோளில் தலை சாய்த்து விழி மூடியிருந்தவள், "மாமா பாப்பாவுக்கு எதுவும் ஆகாது தானே?" என மென்குரலில் கேட்டாள்.
மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் அவளிடமிருந்து, அப்போது தான் அவனும் உணர்ந்தான். மருத்துவமனைக்குக் கிளம்பும்...
அத்தியாயம் 19
அதிகாலையிலே துயிலேந்த ஆதவன் கண் கூசும் படியான பிரகாச ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவன் வேகத்திற்கு அசைந்து கொடுத்து பறவைகளும், காகமும் கரைந்தவாறு புதிய விடியலில் புத்துணர்வோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருந்தன.
ஆதவன் வெளிச்சத்தோடு சிறு உஷ்ணத்தையும் கலந்து பரப்பிக் கொண்டிருக்க, அதிலும் அசராது உறங்கிக் கொண்டிருந்தான் சந்திரன்.
நள்ளிரவிற்குப் பின் உறங்கினாலும் அதிகாலையில் எழுந்துவிட்ட...
அத்தியாயம் 25
பஞ்சாயத்திலிருந்து கிளம்பியதும் கல்யாணம் நின்றதில் துக்கம் போல் சில உறவுகள் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினர்.
மேலும் சிலர், "உடனே பண்ணனும்னு அவசரப்படா இப்படி தான் ஆகும். எதுவும் பொருத்தம் பார்த்து முடிவு பண்ண வேண்டாமா? அதுவும் அந்த புள்ளைக்கு விரும்பமில்லாம, கட்டிட்டாயப்படுத்தியா பண்ணுறது?" என்பது போல் பேசிச் சென்றனர்.
சந்திரன் வீட்டில் யாரும் பதில் சொல்லும்...
அத்தியாயம் 35
ஜெயச்சந்திரன் உள்ளே வர, அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் ஸ்வேதா. அதைக் கவனிக்காதவன், “மாட்டை கட்டிட்டேன் நீ போலாம்” என்றான்.
அவ்வளவு தான் அதீத கோபத்தில் எழுந்து நின்றவள் கீழே இருந்த செம்பை தூக்கி எறிந்தாள். சற்று சுதாரித்தவன் சரியான நேரம் விலகிக் கொள்ள செம்பு கீழே விழுந்து உருண்டது.
“அடியே செம்புல இருந்த கள்ளேங்க,...
அத்தியாயம் 37
அன்றைய விடியலில் வெகு சீக்கிரமே மேல் எழுந்து விட்ட ஆதவன் என்றுமில்லா பிரகாஷத்தில் ஒளிர்ந்தான். வானிலையில் கூட அத்தனை மாற்றம் விடியலில் கூடல் மறந்து ஜோடி பறவைகள் கூட இரை தேடி பிரிந்தோடின!. விரைந்து வந்தது அந்த விடியல்.
பூங்கோதை, சந்திரன், செல்வா, ஸ்வேதா என அனைவரும் வெவ்வேறு எதிர்பார்ப்பின் எண்ணங்களோடு எழுந்தனர். ஆனால் அவர்கள் யாரும் அறிந்திருக்க...
அத்தியாயம் 14
விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர்.
நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின் அருகே வர, "ஏய் கயலக்கா நில்லு, மாங்கா பறிச்சுட்டுப் போவும்" என்றான் குமார்.
"வேண்டாலே. இருட்டிருச்சு, வீட்டுக்குப் போவோம். நேரம்மாச்சுனா எங்க...
அத்தியாயம் 42
இராஜமணிக்கம் ஜாமினில் வெளியில் இருந்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஸ்வேதாவும் விடாது வழக்கை நடத்திக்கொண்டு இருந்தாள்.
அன்புவின் மேல் நடந்த கொலை முயற்சியை விட்டுவிடும் படி அன்பு கூறியதாலும், அன்பு புகார் கொடுக்காததாலும் ஸ்வேதா அதை விட்டு விட்டாள். இராஜமணிக்கமும் அவராகக் கூறி மாட்டுக்கொள்ள விரும்பவில்லை. அதில் செல்வான தன் மருமகன் மாட்டி விடக்கூடாது...
அத்தியாயம் 34
இருவீட்டிலும் திருமண ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் இராஜமாணிக்கம் தன் ஒற்றை மகளின் திருமணத்தை ஊர் பிரமிக்கச் செய்து கண்குளிர காணும் ஆசையிலிருந்தார்.
திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் இருக்கும் நிலையில், உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, ஊரில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர்.
இரவு பால் கிளாஸ் எடுத்துக் கொண்டு...
அத்தியாயம் 16
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.
அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு அவளிடம் வம்பு பண்ணினான். அதன் பின் சிறுவனிடம் காதல் கடிதம் கொடுத்தனுப்பினான். இன்று கல்யாண வீட்டில் அனைவரும் இருக்கக் கயலை...
அத்தியாயம் 24
அன்று கயல் தன் காதலைச் சொல்லிய பிறகு அதீத சந்தோஷத்தில் சுற்றினான் அன்பு. அவன் கல்லூரியிலும் வெளியிலும் சுற்றும் காதலர்களை பார்க்கும் போதெல்லாம் கயலின் ஞாபகம் தான்.
இதில் அவன் ரூம்மெட் மனோஜ் வேறு மொபைலில் இரவெல்லாம் அவன் காதலியோடு ஓயாது பேசிக்கொண்டே இருந்தான். காதல் தரும் சந்தோஷத்தை கயலோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும்,...
அத்தியாயம் 11
இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்க, மெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது.
நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை தான்.
அவளை அணைத்தபோது பற்றிய தீ இன்னும் உள்ளே எரிவது போன்றிருந்தது. அவள் வாசம், அணைப்பு, முத்தம், இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் ஏங்கியது. ஆனால்...
அத்தியாயம் 32
வர தாமதமாகும் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிடுவான். அவசர வேலை என்றால் தகவலாவது சொல்லி விடுவான். ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை, என்றும் இப்படி நடந்து கொண்டதுமில்லை.
விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. சிவகாமி பூஜை அறைக்குள் வேண்டுதலில் அமர்ந்து விட்டார். கயல் வெளிவாசல் திண்ணையில் இரும்புக்கேட்டை...
அத்தியாயம் 06
அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.
அவள் அருகில் வர, அவன் கோபப் பார்வையின் அனல் வீச்சு மேலும் கூடியது. "இங்கன உனக்கு என்ன வேல? வேண்டாதவங்க இடத்துல ஆகாத...
அத்தியாயம் 18
ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடைகள் ஒருபுறம் அமைந்திருக்க, மைக் செட், ரேடியோக்களில் அம்மன் பாடல்கள் அதிரும் படி ஒலிபரப்பினர். கோவில்...
அத்தியாயம் 08
ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.
"ஜெயந்தி.." என அழைத்தவாறு அவள் முன்பு ஒரு சாக்லெட்டை நீட்ட, நிமிர்ந்து அவன் புன்னகை முகம் பார்த்தாள்.
அவள் தயக்கம் அறிந்தவன், "நானும் உனக்கு அண்ணன் தான்,...
அத்தியாயம் 02
"ம்ம்.. கிளப்பிட்டோம்.. கிளப்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" என மொபைலில் கணீர் குரலில் பேசியவாறு வேக நடையோடு படிகளில் இறங்கி வந்தான் ஜெயச்சந்திரன்.
உணவுண்ண அமர்ந்தவன் மெல்லிய சிரிப்பொலி கேட்கத் திருப்பி பார்த்தான். அவன் தங்கை ஜெயந்தி மொபைலில் தன் வருங்கால கணவரோடு மெல்லிய வெட்க புன்னகை மின்ன பேசிக்கொண்டு இருந்தாள். அவன்...
அத்தியாயம் 20
டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது.
டிரவல்ஸ் ரிஜெஸ்டரில் இருந்து தங்கராசுவின் புக்கிங் பதிவுகளை வழக்கறிஞர் கூறியபடி கவனமாக நீக்கினர். நீக்கவில்லை எனில் தங்கராசுவும் சந்திரனும் திருட்டில்...
அத்தியாயம் 38
சற்று நேரத்திலே கோவிலில் எங்கும் சலசலப்பும், பேச்சுக் குரலிலும் மட்டுமே கேட்க, மேள வாத்தியங்களின் இன்னிசை நின்று விட்டது. முதலில் இராஜமணிக்கத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது பேசவும் இயலாது நின்றனர்.
இராஜமணிகத்தின் மச்சான், "ஏய் யாருடி நீ? எந்த ஊருக்காரி? நீ வந்து என் மாமா மேல பலி சொன்னா நம்பிடுவோமா? உன்னையெல்லாம் சும்மா விடலாமா?" என்றவாறு ஸ்வேதாவின் மீது கையோங்கினான்.
சட்டென ஓங்கிய அவன் கையை...